வசந்தம் வந்ததும் புல் பூண்டுகள் நன்றாக பச்சை பசேல் என்று வளர்ந்து இருக்கிறது. மழை பெய்து புற்கள் வளர்ந்தவுடன் அதனுடன் சேர்ந்து சிறு சிறு செடிகளும் வளர்ந்து குட்டி குட்டி பூக்கள் மிக அழகாய் பூத்து இருந்தது. அட்லாண்டாவில் உள்ள மகள் வீட்டு தோட்டத்தில் .
இன்னும் புல் பெரிதாக வளர்ந்தால் வெட்டி விடுவார்கள், அப்போது இந்த அழகிய குட்டி பூக்களும் போய் விடும். அதற்குள் படம் எடுத்து விட்டேன்.
