முருகனைச் சிந்திப்போம் - 2
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - டி,எம் .எஸ்
அவர்கள்
பாடல்.
இன்று கந்த சஷ்டி இரண்டாவது நாள். என்ன எழுதலாம் என்று சிந்தித்துக்
கொண்டு இருக்கும்போது காலை ரேடியோ சிட்டியில் இந்தப்
பாடலையும் வைத்து சஷ்டி கவசம் இயற்றப்பட்ட வரலாறு
சொன்னார்கள். இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல். உங்களுக்கும்
பிடிக்கும்.
கந்த சஷ்டி பாடலை எழுதியவர் பாலன் தேவராய சுவாமிகள்.
இவர் சிறந்த முருக பக்தர். அவர் பிறப்பு, எங்கு பிறந்தார் என்பது
எல்லாம் சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.
இந்தப் பாடல் எழுதியது பல ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள்.
இப்பாடல் எழுதப்பட்ட இடம் பற்றிக்கூறும்போது சிலர் பழனி
என்றும் சிலர் திருச்செந்தூர் என்றும் சொல்கிறார்கள்.
வரலாறுகள் எப்படி இருந்தாலும் நமக்கு நல்லதொரு கவசம் அவரால் கிடைத்து இருக்கிறது. மக்களை உடல் துன்பம், மனத்துன்பத்திலிருந்து ஆறுதல் படுத்த.
வரலாறுகள் எப்படி இருந்தாலும் நமக்கு நல்லதொரு கவசம் அவரால் கிடைத்து இருக்கிறது. மக்களை உடல் துன்பம், மனத்துன்பத்திலிருந்து ஆறுதல் படுத்த.
ஆறுபடை வீடுகளுக்கும் கவசம் பாடல் எழுதி இருக்கிறார். அவற்றில்
திருச்செந்தூர் கவசம் தான் மிக புகழ் பெற்றது. அதற்கு முக்கிய காரணமும்
உண்டு.
பாலன் தேவராய சுவாமிகள் வயிற்று வலியால் மிகவும்
கஷ்டப்பட்டார், எந்த வைத்தியத்தாலும் அவர் வயிற்றுவலி
குணமாகவில்லை. திருச்செந்தூர் வந்தார் செந்திலாண்டவரை தரிசனம்
செய்ய.

திருச்செந்தூர் ( நான் எடுத்த படங்கள்.)
திருச்செந்தூர் ( நான் எடுத்த படங்கள்.)
அப்போது கந்தசஷ்டி விழா நடந்து கொண்டு இருந்தது, அதைப்பார்த்தவுடன் , சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்.
தெய்வம் படத்தில் சீர்காழி, கோவிந்தராஜன் அவர்களும் டி.எம்
செளந்திராஜன் அவர்களும் பாடிய பாடல். இதில் சூரசம்ஹார நிகழ்ச்சி
நடக்கிறது. இந்தப் பதிவுக்கு பொருத்தம் என்று போட்டு இருக்கிறேன்
கடலில் நீராடி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார் அப்போது
முருகப்பெருமான் அவருக்குக் காட்சி தந்து சஷ்டி கவசம் பாடும் படியும்
சொன்னார். இதற்குத்தான் இறைவன் தேவராயரை திருச்செந்தூர்
வரவழைத்து இருப்பார் போலும் வயிற்றுவலியை கொடுத்து .
பாலன் தேவராயரும் உடனே திருச்செந்தூர் சஷ்டி கவசம் பாடி விட்டார்.
அடுத்த 5 நாட்களில் மற்ற படைவீடுகளுக்கும் கவசம் பாடி விட்டார்.
இப்படி தனக்குக் கவசம் பாட வைத்து தேவராயர் வயிற்றுவலியைப்
போக்கினார்.
பாடலை எங்கு அரங்கேற்றுவது என்று சுவாமிகள் நினைத்தபோது
பாடலை எங்கு அரங்கேற்றுவது என்று சுவாமிகள் நினைத்தபோது
சென்னிமலையில் அரங்கேற்றம் செய்யச் சொன்னார் கனவில் வந்த முருகன்.
சஷ்டி கவசம் சென்னிமலையில் அரங்கேற்றப் பட்டது என்பதும்
சஷ்டி கவசம் சென்னிமலையில் அரங்கேற்றப் பட்டது என்பதும்
செவி வழி செய்திதான்.
நான் திருச்செந்தூர் சஷ்டிகவசம் மட்டுமே படித்து
நான் திருச்செந்தூர் சஷ்டிகவசம் மட்டுமே படித்து
இருக்கிறேன், மற்ற படைவீடுகளின் சஷ்டி கவசங்களைத் தேடி
இந்த கந்த சஷ்டி நாளில் படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.
மற்ற ஐந்து படை வீடுகளுக்கான கவச நூல்கள் பின்வருமாறு,
திருப்பரங்குன்றுறை திருமகன் கவசம்; பழனிப்பதி வாழ் அப்பன் கவசம்;
திருவேரகம் வாழ் தேவன் கவசம்; குன்றுதோறாடும் முருகன் கவசம்;
பழமுதிர்ச் சோலை பண்டிதன் கவசம் என்பன.
இவற்றைத் தேட வேண்டும் தேடிப் படிக்க வேண்டும்.
இவற்றைத் தேட வேண்டும் தேடிப் படிக்க வேண்டும்.
(முன்பு போட்டேன்
இப்படி படிக்க வேண்டும் என்று. )
பழனிப்பதி வாழ் அப்பன் கவசம் தேடி படித்து இருக்கிறேன்.
சஷ்டி முதல் நாள் தேடி படித்தேன். நாள் இன்னொரு கவசம் தேடி
படிக்க முருகன் அருள வேண்டும்.
மற்றவைகளை யும் படிக்க வேண்டும்.
எங்கள் மாமனார் அல்சர் வந்து வயிற்றுவலியால் துன்ப பட்டார்கள்
அப்போது அவர்கள் திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி சமயம் போய்
ஆறு நாள் அங்கு தங்கி ஒருவேளை உணவு எடுத்து விரதம்
இருந்தார்கள் . வயிற்று வலி சரியாகி விட்டது.என் கணவரின் இரு
அண்ணன்களும் திருச்செந்தூரில் நிறைய வருடங்கள்
விரதம் இருந்து இருக்கிறார்கள்.
நானும் என் கணவரும் சஷ்டி விரதம் இருப்போம். மாத சஷ்டி விரதமும்
இருப்போம். கந்த சஷ்டி விரதம் சமயம் ஒறு நாளில் 36 முறை
சஷ்டிகவசம் வாசிப்பார்கள் என் கணவர்.
இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் என்று
சொல்வார்கள்.
அப்படியே சோதனைகளைத் தந்தாலும் அதைத் தாங்கும்
மனவலிமையைத்
தரவேண்டும்.
நன்றி- கூகுள். இந்த படம் மட்டும் கூகுள்.
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய்போற்றி
முன்னியகருணையாறு முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்கா கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி
-திருச்செந்தூர்ப்புராணம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------------