என் கணவர் பழனியில் பழனி ஆண்டவர் கல்லூரியில் இந்தியப் பண்பாடு பி.ஏ படித்தார்கள். இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் போது வட இந்தியாவிற்கு கல்விச்சுற்றுலா போய் இருந்தார்கள். போய் வந்த பயண அனுபவங்களை ஒரு நோட்டில் அவர்கள் கைப்பட எழதி வைத்து இருந்தார்கள் அந்தப் பயணக் கட்டுரை இங்கே பகிர்வதாக சொல்லி இருந்தேன். தொடர் கட்டுரையாக பதிய எண்ணம். படிக்க சிரமம் இல்லாமல் இருக்கும்.

