திங்கள், 1 ஜூலை, 2013

நாலும் ஐந்தும் !


மாமனார் அவர்கள்


அம்மாவீடு - புதுப்பொலிவுடன்


எங்கள் வீடு

தற்காலிக பூஜை அறை

தங்கை கொடுத்த  மாவில்   தோசை

சாதம் குக்கரில்






என்ன ஆளையே காணோம் என்று நினைத்தீர்களா?

 இந்தப் பதிவு, நான் பதிவுலகிற்கு வந்து நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது ஆண்டு துவக்கத்தில் வருகிறது.. 

2009 ஜுன் 1ஆம்  தேதி என் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. 

ஊர்ப்பயணங்களால் ஆண்டு நிறைவையும் , ஆரம்பத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

கோவை,  மதுரை,  திருச்செந்தூர், திருநெல்வேலி, என்று பயணங்கள். அதனால் தான் வலைப் பக்கமே  வரவில்லை.  கோவையில் மாமனார் அவர்களைப் பார்க்கப் போனோம்.  பின் அங்கிருந்து மதுரையில் எங்கள் சொந்தவீட்டில் கொஞ்சம் புதுக் குடித்தனம். 

புதுக்குடித்தனமா? என்று கேட்பவர்களுக்கு -

1986 ல்   நாங்கள் மதுரையில் வீடு வாங்கினோம்.  வாங்கியதிலிருந்து வாடகைக்கு விட்டு விட்டதால்   அதில் இருந்ததே இல்லை. மாடியில் ஒரு அறை எங்களுக்கு என்று கட்டி வைத்து இருப்பதால், மதுரை போனால் அதில் தங்கிக் கொள்வோம். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எனது தம்பி, தங்கைகள், அண்ணன் வீடுகளில்  நன்றாக மகிழ்ச்சியாக சாப்பிட்டுக் கொள்வேன்.

இந்த முறை மழை பொய்த்துப் போனதால் வீட்டில் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லை, கார்ப்பரேஷன் தண்ணீரும் வரவில்லை. நாங்களே தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் தொட்டியில் ஏற்றி பயன்படுத்தினோம்.   அதனால் வாடகைக்கு விட வேண்டாம், பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம்.    வீடு காலியாக இருக்கும்போது நாம் போய் சமைத்து சாப்பிடலாம் என்று முடிவுசெய்தார் என் கணவர்.  எனக்கு அதிர்ச்சி! பின் இத்தனை நாளும் ,ஊரிலிருந்து வந்து இருக்கிறேன் என்றால்   உறவினர்கள் எல்லாம் ஆளுக்கு ஒவ்வொரு நாள் என் வீட்டில் இன்று சாப்பாடு என்று முறை வைத்துக் கொண்டு நம்மை உபசரிப்பது வழக்கம். நானும் ஜாலியாக இருப்பேன் அது முடியாமல் என்னை அங்கு போயும் சமைக்க சொன்னால் அதிர்ச்சி வராதா?

 பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று , போனவுடன் இரவு உணவு நம் வீட்டில் என்று சொல்லி விட்டார்கள். அவசரத்திற்கு தண்ணீர் சுடவைக்க  என்று  இண்டக்ஷன் ஸ்டவ் வாங்கி வைத்து இருந்தேன். அதில் முதலில் பால் காய்ச்சினோம். சாமி படம் ,விளக்கு என்று கொண்டு போனதை வைத்து வணங்கினோம். ஒரு தங்கை கோலம் போட்டாள். ஒரு தங்கை விளக்கு ரெடி செய்தாள்  முன்பே தங்கை, வீட்டைச் சுத்தம் செய்து வைத்து இருந்தாள்  நல்ல முறையில் பால்காய்ச்சி எல்லோருக்கும் கொடுத்து, பிள்ளையார் சுழி போட்டு விட்டேன், என் சமையலுக்கு. கரண்ட் அடுப்புக்கு இலவசமாய்,ஒரு தோசைக்கல், குக்கர், ஒரு வாணலி கொடுத்து இருந்தார்கள்   அதுபோக  ரைஸ் குக்கர் மற்றும் கொஞ்சம் தட்டுமுட்டு  சாமான்கள் எடுத்து சென்று இருந்தேன். பலசரக்கு சாமான்கள் வேறு வாங்கி  ஆரம்பித்து விட்டேன், வெற்றிகரமாய் என்  நளபாகத்தை.

இரவு தேங்காய் சட்னி , தோசை சுட்டு கொடுத்து விட்டேன்.பழைய மிக்ஸி ரிப்பேர் செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.

அண்ணி,தங்கைகள் எல்லாம் ஊரிலிருந்து வந்த என்னை  ஏன் சிரமப்படுத்துகிறீர்கள் ஜாலியாக இருந்து விட்டு போகட்டுமே! என்று என் கணவரிடம் கேட்ட போது,   புன்சிரிப்பாய் எப்போதும் தான் உங்கள் வீடுகளில் சாப்பிடுகிறோமே! இப்படி  ஒரு மாறுதலுக்கு என்று சொல்லி விட்டார்கள்,  என்னால் தப்பிக்க முடியவில்லை.

கரண்ட் கட் ஆகுமே !  கரண்ட் அடுப்பை மட்டும் நம்பி பயனில்லையே  ! என்று என் தங்கை, கையில் எடுத்து செல்லும்  சிலிண்டர் அடுப்பை  கொண்டு வந்து தந்தாள். அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கரண்ட் இல்லாத போது அதில் இட்லி செய்தேன்.

இப்படி இரண்டு நாள் போயிற்று என்  மேல் கருணை வைத்த மின்சாரம், ஒரு நாள் எங்கள் வீட்டில் மட்டும் போய்விட்டது!  பியூஸ்!-- 

 வீட்டிற்குள் என்றால் என் கணவரே பார்த்து விடுவார். அது கம்பத்தில் போய் விட்டது. அன்று  சனிக் கிழமை இரவு. மின்துறையில் இருந்து யார் வருவார்கள்? அடுத்த நாள் ஞாயிறு -யாரும் வரமாட்டார்கள். எதற்கும்   வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் எழுதி வைக்க வேண்டும் என்றார்கள். அப்போது தான் பழுது பார்ப்பவர்கள் வந்து பார்ப்பார்கள் என்றார்கள்.   

யாரும் வரவில்லை அப்படியும். மறுநாள் போய் கேட்டால், இப்போது எல்லாம் இந்த கடைக்கு வந்து பார்க்க வருவதே இல்லை  என்றார் கடையில் இருந்த  ஒரு பணியாள்.

 மின்சார அலுவலகத்திற்கு சென்று எழுதி வைத்து விடுங்கள் என்று சொன்னார்கள் .எனக்கு வழியே தெரியாது. ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டு போனால், ”மேல் மாடியில் நோட்டு இருக்கும் அதில் என்ன கோளாறு  என்று எழுதி வைத்து விட்டுப் போங்கள்” என்றார்கள். நோட்டை எடுத்துப் பார்த்தால், அதில் பலர் , ”எங்கள் வீட்டில் மின் இணைப்பு தடை பெற்று மூன்று நாட்கள் ஆகி விட்டது,  தயவு செய்து  மின்சாரம்  இயங்க உதவ வேண்டும்” என்று எழுதி  முகவரி போன் நம்பர் எல்லாம் கொடுத்து  இருந்தார்கள். அதைப்பார்த்து நானும் காப்பி அடித்து அதேபோல் எழுதி வைத்து விட்டு வந்தேன்.  அப்படியும் அதற்கு மறுநாள் வந்து தான் சரி செய்தார்கள். 


மின்துறையில் இருந்து வந்தவர் ”எல்லாம் பழைய காலத்து ஒயர். அதை எல்லாம் மாற்ற வேண்டும். அப்போது தான் போஸ்டில் மின்தடை ஏற்படாது ”என்றார்.  புது ஒயர் போடப்பட்டது. பியூஸ் போனதும் ஒரு நன்மைக்குத்தான். அதனால் தான் புது ஒயர் மாற்றப்பட்டது.

அப்புறம் என் சமையல் என்னாயிற்று என்று கேட்டீர்களா? அது அவ்வளவுதான். மறுபடியும் ஜாலியாக அண்ணி வீடு, தங்கை வீடு , தம்பி  வீடுதான்.

அண்ணி  அம்மா வீட்டை வாங்கி  மறுபடியும் கொஞ்சம்  ரிப்பேர் செய்து மாடி கட்டி இருக்கிறார்கள். பின்னால் உள்ள பரண் அறையில் அம்மாவின் பழைய சாமான்கள் , பழைய போட்டோக்கள், பழைய மர்பி ரேடியோ எல்லாம் இருந்தது. நாங்கள் விளையாடிய பழைய இரும்பில் செய்த விளையாட்டு சாமான்கள்,   நிறைய இருக்கும்.  ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தான் இருக்கிறது. செப்பு சாமான்கள்  இருந்தன.  எல்லோரும் எடுத்துக் கொண்டது போக மீதி இருந்தன.  அது என் பெரிய தம்பிக்குரிய  பங்கு.  அவன் வேறு ஊரில் இருப்பதால் அண்ணி அதைப்  பின்கட்டில் ஒரு அறையில் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள். அதை எல்லாம் அந்த அறை வெள்ளை அடிக்கப் படுவதால் வெளியே எடுத்து வைத்தார்கள் . அதை எல்லாம் போட்டோ எடுத்துக் கொண்டேன். அம்மாவின் அந்தக்கால  இலட்சுமி படம் போட்ட தகர உண்டியல்,  அதில் சேமித்து வைத்து இருந்த பழைய நாணயங்கள், பழைய டெலிபோன், பழைய விளக்குகள், அம்மா பயன்படுத்தும் தட்டு, சீனிச்சம்புடம், டபரா , கிண்ணங்கள் என்று அவற்றை போட்டோ எடுத்துக் கொண்டேன்.  என் அப்பாவின் அலுவலக போட்டோக்கள், தாத்தா, பாட்டி, போட்டோக்களை எல்லாம்  எடுத்துக் கொண்டேன் எனது கேமராவில் .

ஒவ்வொருவரும் அவர்களுக்கு வேண்டியதை நினைவாக  வைத்து இருக்கும் போது நாம் அதை எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லவா ?  எனக்கு தேவையானதை அம்மா இருக்கும் போதே  ஆலபத்திலிருந்து கேட்டு வாங்கி கொண்டேன்.  அவரவர்கள் (தம்பி,தங்கைகள்) அம்மா அப்பாவுடன் இருக்கும் போட்டோக்களை ,அம்மா முன்பே அவரவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்..


அப்புறம் திருந்செந்தூருக்கு  என் கணவரின் தம்பி பேரனுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவிற்கு போய் இருந்தோம்.  அங்கு உள்ளதை தனிப் பதிவாய் போடலாம் என நினைத்திருக்கிறேன்.. கடற்கரை அனுபவம் மிக அதிகம்  இந்த முறை.அங்கு செப்பறை  கோவில் , இராஜவல்லிபுர அகிலாண்டேஸ்வரி கோவில்  எல்லாம் போனோம் .  அழகிய கோவிலகள்.  இயற்கை வனப்பு மிகுந்த இடம்.

இப்போது மீண்டும் கோவை பயணம் - ஒரு  மணிவிழாற்கு போகப் போகிறேன். அதற்கு இடையில் உங்களுடன் இந்த சந்திப்பு. 

                                      அம்மாவின் பொக்கிஷங்கள்.

இரும்பு விளையாட்டு  சாமான்கள் நாங்கள் சிறு வயதில் விளையாடியது

அப்பா கீழ் வரிசையில் முதலில் அமர்ந்து இருக்கிறார்கள்



எங்கள் வீட்டு பழைய ரேடியோ பெட்டி




மரத்தில் செய்த பாத்திரம் திருவனந்தபுரத்தில் தாத்தாஅம்மாவுக்கு கொடுத்தது, மரவை என்று பேர்


அம்மா வைத்து இருந்த விளக்குகளில் கொஞ்சம், தம்பியின் பங்கு

அம்மாவின் கூஜா
அம்மா பயன்படுத்தும் தட்டு, சீனிச்சம்புடம், டபரா , கிண்ணங்கள் 
அப்பா நாலாவது வரிசையில்  நாலாவதாக நிற்கிறார்கள்


அப்பாவின் அப்பா
அப்பா

அப்பாவின் அப்பா, அம்மா

தம்பி வைத்து இருந்த உண்டியலில்  பழைய நாணயங்கள்

உண்டியல்

மதுரையில் எங்கள் பகுதி முழுவதும் தண்ணீர் கஷ்டம் . எங்கு பார்த்தாலும் காணப்படும் காட்சி.





நல்ல மழை பெய்து மதுரையில் தண்ணீர் கஷ்டம் நீங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு திருநெல்வேலிப் பயணம் தொடர்ந்தோம்.


                                                வாழ்க வளமுடன்

89 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான பதிவு.

    உங்கள் வீட்டுக்கே நேரில் வந்து போனது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது.

    >>>>

    பதிலளிநீக்கு
  2. மனிதர்கள், பாத்திரங்கள், பண்டங்கள், சமையல் அறை, தோசை, தோசை மாவு, ஸ்டெளவ் என ஒவ்வொன்றும் அழகோ அழகு.

    அதுவும் அந்த கூஜா ;) மிகவும் தேவையான ஒன்று தான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. அம்மாவின் பொக்கிஷங்கள், அந்தக்கால போட்டோக்கள், நாணயங்கள் என எல்லாமே ஒரே அசத்தல் தான்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன்...

    அனைத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. கோவைப்பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்.

    மேலும் பல அனுபவப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. ஐந்தாவது ஆண்டும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    அனைத்து படங்கள் அருமை... முக்கியமாக பொக்கிசப் படங்கள்...

    பதிலளிநீக்கு
  7. //இந்தப் பதிவு, நான் பதிவுலகிற்கு வந்து நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது ஆண்டு துவக்கத்தில் வருகிறது.. //

    மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். மிகவும் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  8. நேரில் வீட்டைப்பார்ப்பது போலிருந்தது
    படங்களும் பதிவும்
    நாங்களும் மதுரைதான் தகவல் தெரிந்திருந்தால்
    வந்து நேரடியாகச் சந்தித்து மகிழ்வு கொண்டிருப்போம்
    பயணங்களும் பதிவும் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. பதிவுலகில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்
    பயனுள்ள பதிவுகள் மட்டுமே கொடுத்து
    வெளிச்சத்திலேயே இருப்பது என்பது
    சாதாரண விஷயமில்லை
    தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. //இந்தப் பதிவு, நான் பதிவுலகிற்கு வந்து நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது ஆண்டு துவக்கத்தில் வருகிறது.. //

    5ம் ஆண்டிற்கு வாழ்த்துக்கள்.. பொக்கிசங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  11. புதுக் குடித்தனத்திற்கும் ஆண்டு நிறைவுக்கும் எங்களன்பான இனிய வாழ்த்து(க்)கள்.

    அம்மா....... உண்மையில் பொக்கிஷமே!!!

    குழிப்பணியாரக் கல்லா அது? நாலே நாலு குழி இருக்கே!!!!!

    சொப்பு எல்லாம் பார்க்கவே பரவசமா இருக்கு!

    பதிலளிநீக்கு
  12. எத்தனை வயதானாலும் சின்ன வயது நினைவுகளும் பழைய காலத்து பொக்கிஷங்களும் எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடியவை! அதுவும் நம்மிடம் அன்பு கொண்ட சொந்த பந்தங்கள் சுற்றி இருக்கையில் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்!! நெகிழ்வான பதிவு!

    பதிவுலகில் 4 ஆண்டுகள் பூர்த்தியானதற்கும் ஐந்தாவது ஆண்டு மகிழ்வுடனும் சிறப்புடனும் தொடரவும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. அன்பு கோமதி,மனம் நிறைந்த வாழ்த்துகள் மா. புது வீட்டி வாழ்க வளமுடன். படங்களா இவை . பொக்கிஷங்கள். அங்கயே இருக்கப் போகிறீர்களா. இதோ ஆடி சரல் வந்துவிடுமே. தண்ணீர்க் கஷ்டம் கேட்க வருத்தமாக இருக்கிறது. உங்கள் அக்கா தங்கை பற்றி அறிய மிக்க மகிழ்ச்சி. கூஜா ரயில் பயணங்களை நினைவூட்டியதுமாமனார் மாமியாருக்கு வணக்கங்கள். பேரன் காதுகுத்தல் வைபவம் இனிதே நடைபெற வாழ்த்துகள் மா. வாழ்கவளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. ஐந்தாவது ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துகள்..

    பொக்கிஷங்கள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அட.. ப்ளாக்குலகில் 'எங்களு'க்கு 27 நாள் சீனியர் நீங்கள்!

    வாழ்த்துகள்.

    மதுரைப் படம் பார்த்து எந்த ஏரியா என்று யூகிக்க முயன்றேன். ஊ..ஹூம்!

    பதிலளிநீக்கு
  16. //மதுரையில் வீடு வாங்கினோம். //

    எங்கோ...?

    பதிலளிநீக்கு
  17. அனைத்தும் அற்புதம்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. ஆமாங்க அம்மா வீட்டுக்கு போன மாதிரி அவ்வளவு சந்தோஷத்துடன் காட்சிகள் கண் முன்பு வந்தன. அதிலும் மிகவும் படித்துப் போனது. அம்மாவின் பொக்கிஷங்கள். நானும் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவள் அதனால் அக்கா தங்கைகள் பற்றிய பகிர்வு மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்றது. 5ஆம் வருடம் தொடக்கப்பதிவே அசத்தல். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. எத்தனை தகவல்கள்?.. எவ்வளவு புகைப்படங்கள்?..

    ஒன்று விடாமல் அத்தனையையும் எழுத வேண்டுமானால் ஆரம்பிக்கும் பொழுதே மலைப்பாக இருக்காதா?.. இல்லை, இதெல்லாம் எழுத வேண்டும் என்று குறிப்புப் புத்தகம் வைத்திருப்பீர் களா?..

    உணவோ, விஷயங்களோ எதையும் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகமே அலாதிதான்.

    முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியது. வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்ததில் மறந்தே போனேன்.

    ஐந்தாம் ஆண்டு தொடர்ச்சிக்கு வாழ்த்துக்கள், கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  20. புதுக்குடித்தனத்திற்கும், 4 ஆண்டு நிறைவிற்கும் வாழ்த்துகள்.

    பொக்கிஷங்களைப் பார்க்கும்போது ஆசையாக இருக்கிறது. :-)))

    // நாம் போய் சமைத்து சாப்பிடலாம் என்று முடிவுசெய்தார் என் கணவர். எனக்கு அதிர்ச்சி//

    படிச்ச எனக்கே அதிர்ச்சியாருக்கு. உங்களுக்கு இருக்காதா!! :-)))

    பதிலளிநீக்கு
  21. வாங்க வை, கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன். முதலில் வந்து அழகான , அருமையான கருத்துக்களை சொல்லியதற்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்களை அள்ளி வழங்கியதறகும் நன்றிகள் முதலில்.

    கூஜாக்குள் அழகிய கிண்ணம் இருக்கும் முன்பு ரயிலில் போகும் போது எடுத்து போவோம் அம்மா அந்த கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி தருவார்கள்.
    அது போலவே வெள்ளி கூஜா அம்மாவின் கல்யாணத்திற்கு தாத்தா கொடுத்தது இருந்தது. கடைசி தங்கைக்கு அதை கொடுத்து விளக்கு செய்தார்கள் அம்மா.
    வெண்கல உருளி போல் இருக்கும் மரவை திருவனந்த புரத்திலிருந்து வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுத்தார்கள். வெங்காயம் போட்டு வைத்து இருப்பார்கள். ஒவ்வொன்றும் அம்மாவின் நினைவுகளை சொல்லும். நாங்கள் வாங்கிய வீடும் அம்மாவுடையது தான். அம்மாவின் நினைவுகளை கொடுத்துக் கொண்டே இருக்கும்.



    பதிலளிநீக்கு
  22. "வாழ்க வளமுடன்" உங்க வீட்டிற்கும் இதையே பேரா வெச்சுருக்கீங்க ஜூப்பர்.

    இந்தக் கூஜாவை திருக்குச்செம்புன்னும் நாங்க சொல்லுவோம்.

    குட்டிக்குட்டியா அகலெல்லாம் என்னமா இருக்கு. அந்தக்கால நாணயங்களில் இப்பக் காணாமப்போன மூணு பைசாவும் இருக்கு. அத்தனையும் அருமை கோமதிம்மா.

    ஆண்டு நிறைவுக்கும் லேட்டஸ்டான புதுக்குடித்தனத்துக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. எத்தனை விவரங்கள்! எத்தனை படங்கள்! டைம் மெஷின்.

    மாமனார் படத்தில் சுவரில் தொங்கும் சர்தார் என்ன செய்கிறார்? என்ன பொருளுக்கான காலன்டர்?

    (ஷ்.. ஒரு ரகசியம், கிட்ட வாங்க சொல்றேன்.. அதாகப்பட்டது தம்பி தங்கைகள் வீட்டுலந்து வந்த சாப்பாடை அப்படியே நாம சமைச்சதா சொல்லி நைசா தள்ளி விட்டுறணும்..)

    தனுஷ்கோடி இப்போ இல்லை இல்லே?

    பதிலளிநீக்கு
  24. திருகுசெம்பு - அமைதிச்சாரல் திருநெல்வேலிப் பக்கமா?

    பதிலளிநீக்கு
  25. ஐந்தாம் வருட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. ஐந்தாம் ஆண்டுக்கு மீண்டும் என் வாழ்த்துகள் கோமதிம்மா. புதுக்குடித்தனம் சாதனைதான்:)! படங்களும் பகிர்வும் மிக அருமை.

    பித்தளையில் கூஜா இதைவிடப் பெரியதாய், நீங்கள் சொல்கிற மாதிரி உள்ளே கிண்ணத்துடன் எங்கள் வீட்டில் இருந்தது. தூக்கிச் செல்ல செளகரியமானது. தகடாய் இருக்கும் பித்தளை அகல்விளக்கும் பார்த்திருக்கிறேன்.

    நினைவுகளை எழுப்பும் பொருட்களை அவரவரிடமே இருக்கட்டுமெனப் படமாக்கிக் கொண்டது நல்ல செயல். பழைய நிழற்படங்களைப் பார்க்கும் போது இன்று என் வலைப்பூவில் பகிர்ந்திருக்கும் தமிழாக்கக் கவிதை நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  27. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க கவிதைவீதி செளந்தர், வாழ்க வளமுடன். உங்கள் ரசிப்புக்கும் மனம்மார்ந்த இனிய நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க ரமணிசார், வாழ்க வளமுடன்.
    நீங்களும் மதுரை தானா? அடுத்த முறை மதுரை வரும்போது சந்திப்போம் எங்கள் வீட்டில்.
    நான் 5 வருடம் ஆனாலும் கொடுத்த பதிவுகள் குறைவு. எங்கள் குடும்பம் பெரிது அடிக்கடி ஊருகளுக்கு போய் விடுவதால் பதிவுகள் எழுத முடிவது இல்லை.
    உங்கள் வரவுக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும், தமிழ்மண ஓட்டுக்கும் மிகவும் நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க சங்கவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. "திருமதி பக்கங்களுக்கு " ஐந்தாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    மதுரைக்கு உங்கள் புது குடித்தனத்திற்கு வந்து தோசை சாப்பிட்ட அனுபவம் ஏற்படுத்திவிட்டீர்கள்.

    வாழ்த்துக்கள்.தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  32. வாங்க துளசி, வாழ்கவளமுடன், உங்கள் வாழ்த்துக்களுக்கு முதலில் நன்றி.
    அம்மாவே பொக்கிஷம் தான்.
    //குழிப்பணியாரக் கல்லா அது? நாலே நாலு குழி இருக்கே!!!!!//

    அது இட்லி தட்டு என்று அந்தக்காலத்தில் விளையாடி இருக்கிறோம் அம்மா அதற்கு குட்டி குட்டியாய் இட்லி, தோசை எல்லாம் செய்து தருவார்கள் உண்மையில் சில நேரம் அழகாய் பேப்பரில் இட்லி போல் கட்செய்து தருவார்கள் அதை வைத்து விளையாடுவோம், நிறைய உண்டு எல்லா தம்பி, தங்கைகளிடமும் உள்ள இரும்பு பாத்திரங்களை கொண்டு வரச் சொல்லி ஒரு போட்டோ எடுக்க வேண்டும். எல்லோரும் மேலே பரணில் தூக்கி போட்டு இருக்கிறார்கள். தோசைக்கல் , இருப்புச்சட்டி இருப்பு வாணலி கரண்டிகள், தோசை திருப்பி, குழிக்கரண்டி எல்லாம் உண்டு, பித்தளை, மாக்கல் விளையாட்டு சாமான்கள் உண்டு அது எல்லாம் யார் வைத்து இருக்கிறார்கள் என தெரியவில்லை. பதிவு போடும் பழக்கம் முதலில் இருந்தால் எல்லாம் காமிராவில் சிறைபட்டு இருக்கும்.
    இப்போது என் பேரன் விளையாடும் கிச்சன் செட்களை பார்த்தால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஒரு முறை பதிவு போடுகிறேன்.
    அம்பாசமுத்திர மரசெப்புக்கள் மிக அழகாய் இருக்கும் அவையும் அம்மாவிடம் உண்டு அதை காணவில்லை. உங்கள் வரவுக்கும்அருமையான கருத்துக்கும் நன்றி துளசி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க மனோசாமிநாதன், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் மலரும் நினைவுகள் எல்லாம் பொக்கிஷம் தான்.உறவுகள் மகிழ்ச்சிதான்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி..

    பதிலளிநீக்கு
  34. எதிர்பாராதவிதமாக சமையலில் சிக்கிக்கொண்டாலும் முடிவில் தப்பித்துக்கொண்ட உங்கள் அனுபவம் சிரிப்பை வரவழைத்தது... :)

    பதிலளிநீக்கு
  35. வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.
    நாங்கள் அந்த வீடு வாங்கி 25 வருஷத்திற்கு மேல் ஆகி விட்டது. எப்போது விடுமுறைக்கு போனாலும் அம்மாவீட்டில் தங்கி விட்டு வந்து விடுவோம் இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டதால் அம்மாவின் மறைவுக்கு பிறகு எங்கள் வீட்டில் மாடியில் ஒரு அறை கட்டிக்கொண்டோம் மதுரை போனால் தங்கி கொள்ள. மற்றவர்கள் வீடுகளில் சாப்பிட்டுக் கொள்வோம்.
    இரண்டு நாள், மூன்று நாள் தான் இருப்போம். இந்தமுறை எங்கள் வீட்டில் தண்ணீர் இல்லாத காரணத்தால் வீட்டில் குடி இருந்தவர்கள் காலி செய்து விட்டார்கள். அதனால் காலி யாக இருக்கும் போது போய் இருந்து கொஞ்சம் வீட்டு பராமரிப்பு செய்தோம், அப்படியே சமைத்து சாப்பிட்டோம். புது அடுப்பு, புது பாத்திரம் அதனால் புது குடித்தனம் வந்தது போல் இருந்தது அதனால் புது குடித்தனம் என்றேன். வேறு ஒன்றும் இல்லை இங்கிருந்து (மயிலாடுதுறை விட்டு நகரகிறமாதிரி இல்லை இப்போதைக்கு) திருநெல்வேலியில் நல்ல சாரல் அடிக்கிறது. மதுரையில் இல்லை. கூஜா ரயில் கூஜா தான். பேரனின் மொட்டை காது குத்தும் விழா முடிந்து விட்டது, அந்த பேரனின் தாத்தாவிற்கு தான் (கயல் சித்தப்பாவுக்கு தான் மணிவிழா)மணிவிழா. அதற்குதான் கோவை பயணம்.

    பதிலளிநீக்கு
  36. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    அட.. ப்ளாக்குலகில் 'எங்களு'க்கு 27 நாள் சீனியர் நீங்கள்!//

    ஆனால் நிறைய பதிவுகளை கொடுப்பதில் நீங்கள் தான் சீனியர்.

    மதுரைப் படம் பார்த்து எந்த ஏரியா என்று யூகிக்க முயன்றேன். ஊ..ஹூம்!//

    முடியவில்லையா? பாரதி நகர்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  38. வாங்க தருமி சார், வாழ்க வளமுடன்.எங்கள் வீடு இருக்கும் இடம் பாரதிநகர்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க சசிக்கலா, வாழ்க வளமுடன். அம்மாவீட்டிற்கு வந்தது போல் இருந்ததா? மகிழ்ச்சி.
    உங்கள் பின்னூட்டம் அருமை.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன். மனசுரங்கத்தில் இருக்கும் விஷ்யங்களை சொல்வதற்கு குறிப்புகள் எதற்கு? நீங்கள் முன் உட்கார்ந்து இருந்தால் உங்களிடம் பேசுவேன் அல்லவா ! அது போல் தான் இதுவும்.

    // உணவோ, விஷயங்களோ எதையும் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகமே அலாதிதான்.//
    ரசித்து உண்பவர் கிடைத்து விட்டால் சமையல் செய்து கொடுப்பவர்களுக்கு ஆனந்தம், விஷயங்களை காது கொடுத்து கேட்பவரிடம் பேசுவது ஆனந்தம்.
    அது போல் தான் இதுவும்.
    உங்களை போன்று ரசித்து படிப்பவர்கள் இருப்பது என் போன்றவர்களுக்கு உற்சாகம் கிடைக்கிறது எழுத.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. மெயிலுக்கு மிக்க நன்றிக்கா. சில நாட்களாகவே உங்கள் பக்கத்தில்



    வாங்க ஹுஸௌனம்மா, வாழ்க வளமுடன்.

    //புதிய பதிவுகள் இல்லையென்றபோதே இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். இவை தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல, இதுபோன்ற குடும்ப சந்திப்புகள்தானே நமக்கு உரம்.

    அப்போ, இனி பயணத்தின் இனிய அனுபவப் பதிவுகள் தருவீர்கள் அல்லவா//

    நீங்கள் கேட்டு கொண்டது போல் நான் அனுபவ் பதிவு தந்து விட்டேன்.
    குடும்ப சந்திப்புகள் என்ற உரம் பெற்று முன்னிலும் பலத்தோடு வந்து இருக்கிறேன். இன்னும் பூஸ்ட ஏற்ற இந்த மாதம் மறுபடி பயணம்.

    ஊரில் தான் நீயே சமைத்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து போய் இருப்பாய், இங்காவது வந்து நாங்கள் சமைப்பதை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு என்பார்கள் என் சொந்தங்கள். அதை கெடுத்தால் அதிர்ச்சியாக இருக்காதா?
    எங்கள் வீட்டை சுற்றி அழகாய் இடியாப்பம், புட்டு, கொழுகட்டை, போழி, வடை, குழிபனியாரம், போன்றவற்றை ருசியாக . சுத்தமாக செய்பவர்கள் வேறு இருக்கிறார்கள். நமக்கு உடம்புக்கு சங்கடம் ஏற்பட்டால் நாம் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம். மதுரை எல்லா வற்றுக்கும் வசதி. மயிலாடுதுறையில் உடம்பு சரியில்லை என்றாலும் மருந்து சாப்பிட்டு விட்டு நானே தான் செய்ய வேண்டும்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.




    பதிலளிநீக்கு
  43. வாங்க அமைதிச்சாரல், வாழ்கவளமுடன்.
    எங்கள் வீட்டுக்கு திருமகள் இல்லம் என்று பெயர் நான் அம்மாவீட்டை எடுக்கும் ஆவலில் எங்கள் வீட்டை சரியாக எடுக்க வில்லை, இன்னொரு பதிவில் நன்றாக் எடுத்து போடுகிறேன். ஒரு பக்கம் திருமகள் இல்லம், மறு பக்கம் வாழ்க வளமுடன்

    //இந்தக் கூஜாவை திருக்குச்செம்புன்னும் நாங்க சொல்லுவோம்.//

    உங்களை திருநெல்வேலியா என கேட்கிறார் அப்பாதுரை சார். நாகர்கோவில் பக்கம் தானே? உங்கள் ஊர்.
    விளக்குகள் எல்லாம் திருவனந்தபுரத்தில் அம்மாவின் அம்மா கொடுத்தது நிறைய வித விதமாய் இருக்கும் யானை மேல் அம்பாரி விளக்கு, யாழி விளக்கு பாவை விளக்கு, வெண்கல, பித்தளை விளக்கு என்று கார்த்திகைக்கு விளக்கு ஏற்றுவதற்குள் எங்களுக்கு போது போதும் என்று ஆகி விடும். அவை எல்லாம் அண்ணன் தம்பிகளிடம் உள்ளது.

    நாணயங்களில் ஒட்ட காலாணவை வைத்து அம்மா கம்பிளி நூலால் பர்ஸ் பின்னி விட்டார்கள். பழைய நாணயங்கள் நிறைய குழந்தைகள் விளையாட எடுத்து தொலைந்து விட்டது.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.




    பதிலளிநீக்கு
  44. ஐந்தாம் ஆண்டுக்குள் அடிஎடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூவுக்கு என் வாழ்த்துகள் அம்மா....

    படங்கள் எல்லாமே அழகு. பொக்கிஷங்கள் எல்லாமே பிரமாதம். அரிவாள்மனையும், தோசைக்கல்லும், தோசை திருப்பியும் சூப்பர்...என் அம்மாவுடைய கூஜாவும் எங்கோ உள்ளது பார்க்க வேண்டும்.

    கடற்கரை அனுபவங்களை விரைவில் பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
  45. ஐந்தாம் வருட வலைபூ பிறந்தநாள் வாழ்த்துகள். நான்கூட உங்கள் வீட்டுப்பெயர் 'வாழ்க வளமுடன்' என்று நினைத்துவிட்டேன்.

    பழைய நினைவுகளைச் சுமந்து இந்தப் பதிவு 'கம்' மென்று மணக்கிறது.

    மேலும்மேலும் பல இனிய தருணங்கள் உங்கள் வாழ்வில் வந்து அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  46. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
    எத்தனை விவரங்கள்! எத்தனை படங்கள்! டைம் மெஷின்.//

    ஆஹா! காலயந்திரம். ஒரு படத்தில் வரும் அதில் அமர்ந்து கொண்டு திருகினால் இந்த இந்த வருடத்திற்கு போ என்றால் போய் விடும்.
    அது போல் நினைவுகள் என்ற காலயந்திரம் நாம் இஷ்டபட்ட போது இஷ்டபட்ட இடத்திற்கு சென்று மகிழந்து கொள்ளலாம்.
    உங்கள் கதையில் பரண் அறையில் நன்னாரி வாசம் போல் தான்.

    //மாமனார் படத்தில் சுவரில் தொங்கும் சர்தார் என்ன செய்கிறார்? என்ன பொருளுக்கான காலன்டர்?//

    பாரத ஸ்டேட் பாங்கு காலண்டர் அது, சர்தார் என்ன டான்ஸ் ஆடுகிறார் உங்களுக்கு தெரியாதா என்ன பங்காரா டான்ஸ் ஆடுகிறார் பலே பலே உங்கள் கேள்வி என்கிறார்,
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    திருநெல்வேலி பக்கம் தான்அமைதிச் சாரல்.







    பதிலளிநீக்கு

  47. //நான்கு வருட நிறைவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்! நிறையட்டும் மேலும் பல சிறந்த பதிவுகளால் திருமதி பக்கங்கள்! //

    வாங்க ராமலக்ஷ்மி, ஸ்ரீராம் பதிவில் என் ஆண்டுவிழாவை குறிபிட்டு இருந்ததைப் பார்த்து முதலில் வந்து வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்றி.

    மீண்டும் ஐந்தாவது வருட தொடக்கத்திற்கு வாழ்த்து சொன்னமைக்கு நன்றி,
    பித்தளை கூஜா, பாளையங்கோட்டை ஆச்சி வீட்டில் இருக்கும்.
    மண் அகல் போல் கார்த்திகை மாதம் விளக்கு வைக்க எல்லோரும் புதிதாக இந்த தகடாய் இருக்கும் அகல் விளக்குகளை டஜன் கணக்கில் வாங்குவார்கள்.
    இப்போது தான் தேய்க்க கஷ்டப்பட்டு மண் அகல், அது கூட சில வீடுகளில் சட்டி மெழுகுவர்த்தியாக போய் கொண்டு இருக்கிறது.
    நிழற்பட நினைவுகளை பகிர்ந்து கொண்ட உங்கள் கவிதைகளை படிக்கிறேன்.
    நன்றி ராமலக்ஷ்மி அழகிய பின்னூட்டத்திற்கு.



    பதிலளிநீக்கு
  48. வாங்க ராஜலக்ஷமி பரமசிவம். வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. எங்கள் வீட்டுக்கு வந்தமைக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  49. வாங்க ராஜலக்ஷமி பரமசிவம். வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. எங்கள் வீட்டுக்கு வந்தமைக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  50. வாங்க enrenrum 16 வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வரவுக்கும் மகிழ்ச்சியான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  51. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும் பொக்கிஷ பகிர்வை ரசித்தமைக்கும் நன்றி.
    ரோஷ்ணி நலமா?
    கடற்கரை அனுபவங்களை கூடிய விரைவில் பகிர்கிறேன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  52. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    என் வீட்டு பெயர் தெரிந்து விட்டது அல்லாவா?
    உங்கள் வாழ்த்துக்களுக்கும் அருமையான உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  53. @அப்பாதுரை சார்,

    பூர்வீகம் திர்னேலி மாவட்டம்தான். பிறந்து வளர்ந்து ஆயுசுக்கும் அங்கேயே பந்தம் இருக்கணும்ன்னு முடிச்சு விழுந்தது கன்யாரி மாவட்டத்தில் :-))

    பதிலளிநீக்கு
  54. அப்பாதுரை சார், தனுஷ்கோடி இப்போது இல்லை. சுனாமி கொண்டு போய் விட்டதே!

    பதிலளிநீக்கு
  55. நேரே பார்ப்பது போன்ற உணர்வு
    அருமையான புகைப்படங்கள்
    அருமை

    பதிலளிநீக்கு
  56. வாங்க அமைத்ச்சாரல், அப்பாதுரை சார் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டீர்கள்.
    நன்றி.

    திருநெல்வேலி வட்டார பேச்சை பேசி அசத்தி விட்டீர்களே!
    எனக்கு பல ஊர் தண்ணீர் குடித்து திர்னேலி வட்டார பேச்சு அயத்து போச்சு.
    மனசலாச்சா!

    பதிலளிநீக்கு
  57. வாங்க முருகானந்தம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  58. ஷ்.. ஒரு ரகசியம், கிட்ட வாங்க சொல்றேன்.. அதாகப்பட்டது தம்பி தங்கைகள் வீட்டுலந்து வந்த சாப்பாடை அப்படியே நாம சமைச்சதா சொல்லி நைசா தள்ளி விட்டுறணும்..)//

    அப்பாதுரை சார் , நல்ல யோசனை சொன்னீர்கள். ஆனால் எவ்வளவு வருடம் என் சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் என் சமையல் என் தம்பி, தங்கைகள் வீட்டு சாப்பாடு எது என்று தெரியாமலா போகும்!
    வளர்ந்தது ஒரு குடும்பம் என்றாலும் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கைப்பட்ட இடத்திற்கு ஏற்ப அவர்கள் வீட்டு பாரமபரிய சமையல் முறையில் செய்கிறார்கள்.
    அதனால் எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  59. படங்களுடன் பதிவிட்டு வீட்டை நேரடியாக ஒளிபரப்பி அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  60. அம்மாவின் பொக்கிசங்கள் அருமை.

    அரிவாள்மனை, பூட்டுச்செம்பு எல்லாம் இருக்கின்றது.

    இல்லம் கண்டோம் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  61. //திர்னேலி
    அமைதிச்சாரல் பின்றாங்க. திருகுச்செம்பு அழகான தமிழ் சொல். எங்க அப்பா சைடு பாட்டி வாயைத் திறந்தா புலம்பலும் திட்டும் தான் - ஆனா அத்தனையும் செந்தமிழுல சந்தமா விழும். அவங்க கொல்லம்/செங்கோட்டை வட்டாரம்.

    ராமலக்ஷ்மி சொல்ற கூஜா ஐமீன் திருகுசெம்பு டைப் ஒண்ணு எங்க வீட்லயும் இருந்தது. எல்லாத்தையும் எங்கே தொலைச்சமோ!

    பதிலளிநீக்கு
  62. //..சாப்பாடு எது என்று தெரியாமலா போகும்!

    ரொம்ப பழக்கியிருக்கீங்க :) நாங்களும் அப்படித்தான். எங்கம்மா சமையல் சாப்பிட்டு பழகிப்பழகி.. ஒரு வேளை ஒரு ஐட்டம் கொஞ்சமா வித்தியாசமா இருந்தாலும் சட்னு தெரிஞ்சுடும். அம்மாவை நச்சரித்து விடுவோம்: "என்னம்மா.. இன்னிக்கு சமையல் நல்லா இருக்கே.. யார் செஞ்சது?"

    பதிலளிநீக்கு
  63. வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  64. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    அம்மாவின் பொக்கிஷங்களை ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  65. எங்கம்மா சமையல் சாப்பிட்டு பழகிப்பழகி.. ஒரு வேளை ஒரு ஐட்டம் கொஞ்சமா வித்தியாசமா இருந்தாலும் சட்னு தெரிஞ்சுடும். அம்மாவை நச்சரித்து விடுவோம்: "என்னம்மா.. இன்னிக்கு சமையல் நல்லா இருக்கே.. யார் செஞ்சது?"//

    வாங்க அப்பாதுரை சார், பாராட்டுவது போல் பாராட்டி நல்ல வாருரீங்களே!

    பதிலளிநீக்கு
  66. அருமையான பொக்கிஷங்கள்!
    கூடவே எனக்கும் எங்கள் வீட்டு ஞாபகங்கள்...
    எங்கள் வீட்டில் 97ல் அங்கு சென்றபோது வீடுமட்டும் யாராலும் தூக்கிச் செல்லமுடியாதாகையால் இருந்தது.
    எந்தத் தட்டுமுட்டுச் சாமன்கள் எதுவுமே இல்லை.

    உங்களின் படங்களும் பதிவும் அருமை!

    ஐந்தாவது ஆண்டில் காலடி பதித்துள்ளீர்கள் சகோதரி!

    வெற்றிநடைபோட்டு மேலும் பல பதிவுகளைத்தந்து மிளிர்ந்திட வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  67. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வீட்டு அனுபவங்கள் மனதை கஷ்டப்படுத்தியது.


    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், நன்றி இளமதி.

    உங்கள் வாழ்த்து அருமை.

    பதிலளிநீக்கு
  68. உங்கள் பெரிய குடும்பத்தின் நிகழ்ச்சிகள் வாழ்க்கை முறைகளை எல்லாம் அழகாக படம் பிடித்து காட்டுகிறீர்கள்.
    நல்லதொரு குடும்பம் பலகலைக் கழகம்தான்

    பதிலளிநீக்கு
  69. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. படங்கள் ஒவ்வொன்றும் பழைய நினைவுகளைச் சொல்கிறது....

    அருமையான படங்கள்.

    தொடர்ந்து சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
  70. வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.
    எங்களை போன்றவர்களுக்கு மலரும் நினைவுகள் தானே! உற்சாகம்.
    உங்கள் வரவுக்கும், அழகான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  71. வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
    படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும். அப்பா நம்மை போல் காமிராவும் கையுமாய் இருப்பார்கள் வீட்டில் ஆல்பங்கள் நிறைய வீட்டில் உள்ளவர்கள் அதிலிருந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்ட பின் வெற்று பேப்பர்களாய் இருப்பதை பார்க்கும் போது அப்பா நீங்கள் மறுபடியும் இந்த ஆல்பத்தை நிரப்ப வருவீர்களா என கேட்கத் தோன்றும்!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    தொடர்ந்து சந்திப்போம் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  72. வலையுலகில் ஐந்தாம் ஆண்டு பிரவேசத்துக்கு இனிய வாழ்த்துக்கள். புதுக்குடித்தன அனுபவம் அருமை. விடுமுறைக்குப் போகிற இடத்திலும் சமையலா? நினைக்கவே அலுப்பாக உள்ளது. எப்படியோ மின்சார பகவான் கருணையால் தப்பினீர்கள். அம்மாவின் நினைவுகளாய் மிளிரும் பொக்கிஷம் பார்க்கவே பரவசம். பொக்கிஷப் பொருட்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் ஒரு கதை மனத்தில் பதிவாகியிருக்கும். நினைத்துப் பார்க்க வாழ்நாள் போதாது.
    பகிர்வுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  73. வாங்க கீதமஞ்சரி,வாழ்க வளமுடன்.

    //விடுமுறைக்குப் போகிற இடத்திலும் சமையலா? நினைக்கவே அலுப்பாக உள்ளது//
    ஆம், கீதமஞ்சரி அது தான் உண்மை.
    //பொக்கிஷப் பொருட்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் ஒரு கதை மனத்தில் பதிவாகியிருக்கும். நினைத்துப் பார்க்க வாழ்நாள் போதாது.//

    ஆம், கீதமஞ்சரி உண்மை.
    ரேடியோ படத்தை எடுத்துக் கொண்டால் அம்மா அதில் காலையில் பக்தி பாடல்கள் கேட்பார்கள். அப்பா அதில் கச்சேரிகள், நியூஸ் எல்லாம் கேட்பார்கள்.
    டிரான்ஸிஸ்டர் வாங்கும் முன்பு எல்லோரும் அதை பேண்டு மாற்றி மாற்றி ரேடியோவை ஒருவழி ஆக்குவோம்.
    நினைத்து நினைத்து பார்க்கும் போது
    மகிழ்ச்சியும், வருத்தமும் இருக்கிறது.(பிரிந்த சொந்தங்களை நினைத்து)
    வருத்தங்களை உள்ளே வைத்து மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  74. கீதமஞ்சரி உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  75. படங்கள் அத்தனையும் பிரமாதம் கோமதிம்மா.உங்கள் வீட்டுக்கே நேரில் வந்து ஒவ்வொன்றையும் பார்த்தது போல் ஒரு நெகிழ்ச்சி..!

    பதிலளிநீக்கு
  76. நெகிழ வைக்கும் பதிவு
    படங்கள் அனைத்து மிக அருமை

    பதிலளிநீக்கு
  77. அந்த ரேடியோவை பார்த்ததும் எங்க அப்பா ஞாபகம் வருகிறது

    அந்த திருக்கு செம்பு ரொம்ப நாளா அம்மா வைத்து இருந்தார்கள்.

    டீ ஊற்றி வைத்தால் சூடாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  78. சின்ன சின்ன சொப்பு சாமானகள் இன்னும் பத்திர படுத்தி அதை போட்டோ எடுத்தது மிக அழகு.


    பதிலளிநீக்கு
  79. மொத்ததில் பதிவு சூப்பரோ சூப்பர் கோமதி அக்கா

    பதிலளிநீக்கு
  80. வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன்.உங்கள் வரவுக்கும், உங்கள் அருமையான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  81. வாங்க ஜலீலா, வாழ்க வளமுடன்.
    பதிவுபடித்தவுடன் உங்கள் அப்பா. அம்மா நினைவு வந்தது அறிந்து மகிழ்ச்சி.
    உற்சாகம் தரும் பின்னூட்டங்கள் கொடுத்தமைக்கு நன்றி ஜலீலா.
    ரமலான் வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  82. இட்லி, தோசைக்கு மாவுக்கு எங்கே அரைச்சீங்க?? ரெடிமேட் மாவா? அல்லது சொந்தக்காரங்க கொடுத்துட்டாங்களா? எல்லாப் படங்களும் பொக்கிஷம் தான். நல்லா இருக்கு பதிவும், படங்களும். மதுரையில் எந்த ஏரியாவில் உங்க வீடு??

    பதிலளிநீக்கு
  83. கரன்ட் இல்லாமல் ரைஸ் குக்கரும், இன்டக்‌ஷன் ஸ்டவுமானு யோசிச்சேன் அப்புறமாத் தான் சிலிண்டரைப் பார்த்தேன். :)))

    பதிலளிநீக்கு
  84. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
    மாவு தங்கை கொடுத்தாள்.
    பொக்கிஷ பகிர்வு நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு மகிழ்ச்சி.
    எங்கள் வீடு பாரதி நகரில் இருக்கிறது.
    கிருஷ்ணாபுரம் காலனி பக்கம்.
    கரண்ட் போனால் என்ன செய்வாய் என்று மாசிவீதியில் இருக்கும் தங்கை கொடுத்தது சிலிண்டர் அடுப்பு.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிக மிக மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  85. 86வது கருத்து .எல்லோர் கருத்தும் வாசித்தால் நிறைய அறியலாம். இப்போது நேரமில்லை. தங்களிற்கு ஹாய் சொல்லி ஓரு கருத்திட வந்தேன்.
    வந்த போது முன் தவற விட்ட இதை வாசித்ததும் மகிழ்வே. இனிய வாழ்த்து. பொக்கிசப் பதிவிற்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  86. வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன். நீங்கள் நலமா? நான் நலமாக இருக்கிறேன் பேரனுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், நலம் விசாரிப்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  87. மீண்டும் படித்தேன் அன்பு கோமதிமா.
    மாயவரத்தை விட்டு வருவதாக இல்லை என்றும் எழுதி இருக்கிறீர்கள்
    மிக மிக அருமையான பதிவு. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

      //மாயவரத்தை விட்டு வருவதாக இல்லை என்றும் எழுதி இருக்கிறீர்கள்//

      நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று தைத்தான் சொல்வார்கள் போலும். மாயவரத்திலிருந்து நகர்த்தி விட்டார்.

      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு