செவ்வாய், 31 ஜனவரி, 2012

திருமங்கையாழ்வார் மங்களாசாசன வைபவம்



திருமங்கையாழ்வார் மங்களாசாசன வைபவம்
(எம்பெருமான் மீது திருப்பாசுரம் பாடியருளல்)
(திருவெள்ளக்குளம்)
25. 1. 2012

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ
மாயோனை வாள் வலியால்
மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல் - (தனியன்)

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்தம்மொடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடிஉய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிநான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
– திருமங்கையாழ்வார்.

தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் சீர்காழி
அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை
நடக்கும். இந்த ஆண்டு 23.01.2012, 24.01.2012,
25.01.2012 ஆகிய நாட்களில் நடைபெற்றது. முதல்
நாள் திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து
புறப்பட்டு ஸ்ரீ நாராயணப் பெருமாளிடம் தொடங்கி,
11 திவ்யதேசங்களையும் மங்களாசாஸனம் செய்யும்
விழா நடைபெறும். அடுத்த நாள் ஸ்ரீ திருமங்கை
யாழ்வார் ஹம்ஸவாஹன உத்ஸவமும் நடக்கும்.

முதல் நாள் அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ திருமங்கை
யாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு திருக்குறை
யலூர், திருமங்கைமடம்,
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலன்.
2. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்
3. திருப்பார்த்தன் பள்ளி ,ஸ்ரீபார்த்தசாரதி
ஆகிய திவ்யதேசங்களுக்கு
சென்று மங்களாசாஸனம் செய்து விட்டு, மஞ்சள்
குளி மண்டபம் எழுந்தருளுவார்.அங்கு திருநறையூர்
நம்பியையும், ஸ்ரீ ரங்கம் அழகியமணவாளனையும்
மங்களாசாஸனம் செய்த பிறகு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும். அருகில்
இருக்கும் நதியில்இருந்து நீர் எடுத்து வந்து
திருமஞ்சனம் நடைபெறுகிறது. திருமஞ்சனம்
முடிந்த பின் திருமங்கையாழ்வார் தன் மனைவியார்
குமுதவல்லிநாச்சியாரின் வஸ்திரத்தைத்
தலையில் சூடிக்கொள்கிறார். தன்னைக் கடைத்
தேற்றிய குமுதவல்லிநாச்சியாரை உயர்த்த அந்த
வஸ்திரத்தை அணிந்துகொள்கிறார்.

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரிலிருந்து
புறப்பட்டு,
4.மணிமாடக்கோயில், -ஸ்ரீநாராயணப்பெருமாள்
5.வண்புருடோத்தமம், -ஸ்ரீவண்புருடோத்தமப்
பெருமாள்
6.வைகுந்த விண்ணகரம் - ஸ்ரீவைகுண்டநாதர்,
7.செம்பொன்செய்கோயில்,- ஸ்ரீசெம்பொன்னரங்கர்
8.திருத்தெற்றியம்பலம்-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
9.அரிமேய விண்ணகரம் -ஸ்ரீகுடமாடுகூத்தர்
ஆகிய திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களா
சாஸனம் செய்துமுடித்து இரவு மணிமாடக்கோயி
லுக்கு எழுந்தருளிய பின் அர்த்தஜாமம் நடைபெறும்.

இரண்டாம் நாள் பகலில் சுமார் 12 மணி அளவில்
மேற்கண்ட 9 திவ்யதேசத்து எம்பெருமான்களுடன்
10 திருவெள்ளக்குளம்,_ ஸ்ரீஅண்ணன் பெருமாள்
11 திருத்தேவனார் தொகை_ ஸ்ரீமாதவப்பெருமாள்
ஆக 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணி
மாடக்கோயில் முன் பந்தலில் எழுந்தருளுவர்.
அவர்களை ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்வார்.

ஸ்ரீ புருஷோத்தமப்பெருமாள் ஸந்நிதியில்
எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமணவாளமாமுனிகள்
ஸ்ரீ திருமங்கையாழ்வாரை மங்களாசாஸனம்
செய்வார். மாலை பதினொரு திவ்யதேசத்து
எம்பெருமான்களுக்கும் மற்றும்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடை
பெறும். இரவு பதினொரு எம்பெருமாளுக்கும் கருட
சேவையும், ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு ஹம்ஸ
வாஹன உத்ஸவமும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்
திருவீதி புறப்பாடும் நடைபெறும்.



நாங்கூர் மணிமாடக்கோயில்



மூன்றாம் நாள் காலை மணிமாடக்கோயிலில்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை, நடைபெறும்.பிறகு
காலையில் 11 மணியளவில் புறப்பட்டு திருவெள்ளக்
குளம், திருததேவனார்தொகை, திருவாலி ஆகிய
திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்
செய்து திருநகரி சேர்வார். இரவு திருநகரியில்
ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவையும்
ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாஸனமும்
நடைபெறும்.

***

நாங்கள் கருடசேவையை முன்பு பார்த்திருக்கிறோம்.
ஆனால் திருமங்கையாழ்வார் 11 திவ்யதேசங்களை
மங்களாசாஸனம் செய்வதைப் பார்த்தது இல்லை.
25.01.2012 அன்று திருவெள்ளக்குளத்தில் ஆழ்வார்
மங்களாசாசனம் செய்யும் வைபவத்தைப் பார்க்கப்
போனோம். மூன்றாம் நாள் உற்சவத்தைப் பார்த்து
வந்தோம்.

திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் முதலில்
திருப்பாவை படித்தார்கள். அதன் பின் சர்க்கரைப்
பொங்கல், தயிர்சாதம் பிரசாதம் தந்தார்கள். பின்
திருமங்கையாழ்வார் பல்லக்கில் மனைவியார்
குமுதவல்லி நாச்சியாருடன் புறப்பட்டார்.


பாண்டு வாத்தியம், மேளம், இவற்றோடு அண்ணன்
கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார். நாங்களும்
போனோம்




தெருவெல்லாம் வீடுகளில் கோலங்கள்
போட்டு அவரை சிறப்பாய் வரவேற்றனர்.
திருமங்கையாழ்வாரின் வடிவழகை ஸ்ரீ மணவாள
மாமுனிகள் வருணித்துப் பாடுகிறார். அப்படி ஒரு
அழகு. அவர் கையில் வைத்து இருக்கும் வேல்
போன்ற ஆயுதத்தில் சிவப்பு கற்களால் அழகூட்டப்
பட்டுள்ளது. குமுதவல்லித் தாயார் கையில் உள்ள
கிளிக்கும் சிவப்புக்கற்களால் அழகூட்டப்பட்டுள்ளது
.



பல்லக்கும் அழகு! அதைத் தூக்கி வருபவர்களுக்கு
பச்சைக் கலரில் பனியன் வழங்கி இருந்தார்கள்.
அவர்கள் உற்சாகமாய் தங்கள் பைகளை பல்லக்கின்
இரு புறமும் மாட்டி கொண்டு சந்தோஷமாய்
பல்லக்கை தூக்கி வருகிறார்கள்.



பல்லக்கு தூக்கி வரும் அடியார்களும் ஆழ்வார்கள்
தான் என்று அங்கு உபன்யாசம் செய்தவர் சொன்னார்.

***

அண்ணன் கோயில் சிறிய அழகிய கோயிலாக
உள்ளது.

திருக்கோயிலின் சிறப்புகள்

இக்கோயிலை அண்ணன் பெருமாள் கோயில்
என்பார்கள்-நாங்கூர்க்கோயில்களில் ஒன்று – இந்த
இடத்தை மேலச்சாலை என்று கூறுகிறார்கள்.

* மூலவர் திருநாமம்:
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன்,
அண்ணன் பெருமாள்.
* நின்ற திருக்கோலம்,
* கிழக்கே திருமுக மண்டலம்.
* தாயார் திருநாமம் :
ஸ்ரீ அலர்மேல் மங்கை,
ஸ்ரீ பூவார் திருமகள் நாசசியார். பத்மாவதி
* தீர்த்தம்: திருவெள்ளக்குளம்,ஸ்வேத புஷ்கரிணி
* விமானம்-தத்வத்யோதக விமானம்
* மங்களாசாசனம்- திருமங்கையாழ்வார்
1308-17(10 பாசுரங்கள்)
இத்தலத்து இறைவன் சுவேதராஜாவிற்கு இறவா
வரம் தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்துப்
பெருமாள் திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்பர்.
திருப்பதி பெருமாளுக்கான பிரார்த்தனையை இங்கும்
செலுத்தலாம் என்கின்றனர்.

நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், சேலார்
வயல்சூழ் திருவெள்ளக்குளம்,செந்தாமரை நீர்த்
திருவெள்ளக்குளம்,தேனார் பொழில்சூழ்
திருவெள்ளக்குளம் என்றெல்லாம் ஆழ்வார்
பாடுகிறார்








கோவிலுக்கு எதிரே திருக்குளம் உள்ளது. நடுவில்
நீராழி மண்டபத்திற்குரியமேடை இருக்கிறது.
மண்டபம் தற்போது இல்லை. இரை தேடும் கொக்கு
அங்கே அமர்ந்திருந்தது. உச்சி வேளை வெயிலைத்
தாங்க முடியாத எருமைகள் திருக்குளத்தில் ஆனந்த
மாய் மூழ்கி இருந்தன.



ஆழ்வார் திருவெள்ளக்குளம் திருக்கோயிலை வலம்
வருகிறார்



ஆழ்வாரை மேளதாளத்துடன் வரவேற்கிறார்கள்
திருமங்கையாழ்வார் கோயிலுக்கு முன்னே
வந்ததும் உள்ளே இருந்து ஸ்ரீ அண்ணன் பெருமாள்
சூடிய மாலை,அவர் உடுத்திக் களைந்த ஆடை
இவற்றைக்கொண்டு அவருக்குத் தந்து மரியாதை
செய்கிறார்கள். அவர் கோயிலுக்கு உள்ளே வர
நடை பாவாடை விரித்து அழைக்கிறார்கள்.





திருமங்கையாழ்வார் எழுந்தருளுவதை ‘வாங்கா’
வாத்தியம் எல்லோருக்கும் அறிவிக்கிறது


பின்னர் ஆழ்வார் திருக்கோயிலின் உள்ளே
அடியார்களுடன் எழுந்தருள்கிறார்.

அதன்பின்னர் மூலஸ்தானத்தருகே மங்களா
சாசனம் நிகழ்கிறது.

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர்
திண்ணார் மதில்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே


என்று தொடங்கி அவர் பாடிய 10 திருப்பாசுரங்களை
பட்டாச்சாரியர்களும் பிறரும் சந்நிதியில்
பாடுகிறார்கள். கேட்டு அனுபவித்தோம்.

இந்த திவ்ய தேசத்தில் பல்லக்கு மூலஸ்தானத்தின்
அருகிலேயே போய் விடுகிறது. அந்த மண்டபத்
திற்குள் அந்தச்சமயத்தில் பெண்கள் போக அனுமதி
இல்லையாம். போட்டோ எடுக்கவும் அனுமதி
யில்லையாம்.

அந்தக் காலத்தில் திருமங்கையாழ்வார் பல்லக்கில்
எப்படி வயலிலும், சேற்றிலும், ஆற்றிலும் இறங்கி
நடந்து வந்து பெருமாள் கோயில்களுக்கு வந்து
திருப்பாசுரங்கள் பாடினாரோ அப்படியே அதை
இப்போது உத்சவமாக நடத்திக்காட்டுகிறார்கள்.

திருவெள்ளக்குளத்தில் மங்களாசாசனம் முடிந்ததும்
ஆழ்வார் திருத்தேவனார் தொகை, திருவாலி ஆகிய
தலங்களில் மங்களாசாசனம் செய்து திருநகரி
அடைகிறார்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
_________

26 கருத்துகள்:

  1. //அந்தக் காலத்தில் திருமங்கையாழ்வார் பல்லக்கில்
    எப்படி வயலிலும், சேற்றிலும், ஆற்றிலும் இறங்கி
    நடந்து வந்து பெருமாள் கோயில்களுக்கு வந்து
    திருப்பாசுரங்கள் பாடினாரோ அப்படியே அதை
    இப்போது உத்சவமாக நடத்திக்காட்டுகிறார்கள்.//

    பாராட்ட வேண்டிய செயல். பாரம்பர்ய பழக்க வழக்கங்கள், இளைய தலைமுறையினரை அப்போது தான் சென்றடையும்.

    அருமையான நிறைய படங்களுடன் வியப்பளிக்கும் பல நல்ல தகவல்கள் நிறைவாகவே தந்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பகிர்வும்மா....

    நாங்களும் அழகான படங்கள் மூலமும், தகவல்களின் மூலமும் கண்டு களித்தோம்....

    பதிலளிநீக்கு
  3. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
    முதல் வருகைக்கும்,உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஆதி, நீங்களும் கண்டு களித்தது
    மிகவும் மகிழ்ச்சி.
    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  5. திருநாங்கூர் உட்பட சுற்றியிருக்கும் ஆறு திவ்ய ஷேத்திரங்கள், கருட சேவைக்கு எழுந்தருளும் பதினொன்று பெருமாள்களுக்கும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்தல், அப்படிச் செய்வித்த திருமங்கை ஆழ்வாருக்கு மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வது என்று தொன்று தொட்டு வரும் வழிபாடுகள் தொடர்ச்சியாய் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருவதை மனத்தில் படியும்படி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்தத் தடவை அங்கங்கே திருக்காட்சி தரும் படங்களுக்குள் பொருத்தமான பாடல் வரிகளும் இடம் பெற்றிருப்பது மனத்திற்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

    தங்களின் அருள் தொண்டிற்கு மனமார்ந்த வந்தனங்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான படங்கள் மற்றும் சிரத்தையுடன் தந்திருக்கும் தகவல்களுக்கு நன்றி.

    /பாண்டு வாத்தியம், மேளம், இவற்றோடு அண்ணன்
    கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார். நாங்களும்
    போனோம்

    தெருவெல்லாம் வீடுகளில் கோலங்கள்
    போட்டு அவரை சிறப்பாய் வரவேற்றனர்.
    திருமங்கையாழ்வாரின் வடிவழகை ஸ்ரீ மணவாள
    மாமுனிகள் வருணித்துப் பாடுகிறார். அப்படி ஒரு
    அழகு. அவர் கையில் வைத்து இருக்கும் வேல்
    போன்ற ஆயுதத்தில் சிவப்பு கற்களால் அழகூட்டப்
    பட்டுள்ளது. குமுதவல்லித் தாயார் கையில் உள்ள
    கிளிக்கும் சிவப்புக்கற்களால் அழகூட்டப்பட்டுள்ளது/

    ரசனையுடன் பகிர்ந்த விதமும் அருமை கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு..
    இதைப் பற்றி நானும் சில செய்திகள்(எனது அனுபவங்கள்) சொல்ல விரும்புகிறேன்.
    நேரம் கிடைக்கும்போது மறுபடியும் வருகிறேன்..

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க ராமலக்ஷ்மி, உங்கள் ஆதரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க மாதவன், மாதவனைப்பற்றி எழுதினால் தான் வருவீர்கள் போலும்!

    உங்களுக்கு தெரிந்த செய்திகளை நீங்கள் சொல்ல கேடக ஆவலாய் இருக்கிறேன்.

    நேரம் கிடைக்கும் போது வந்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஜீவியின் பதிவுகளில் உங்கள் பின்னூட்டம் கண்டு வந்தேன். இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் கண்டதுண்டு. அருமையான படங்களுடன் வர்ணனைகளும் சொல்லும் பாங்கும் அருமை பதிவுகள் பெரும்பாலும் கோவில் மற்றும் தல யாத்திரை தொடர்புடையதாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. mangalasasana vaibavam erkenave parthachu. ipo ungalukku vazthu solla vanthen.

    Hearty Greetings for your W.A. (belated) Many more Happy Returns of the Day. Sorry for the English.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஜி.எம் பாலசுப்பிரமணியம் சார்,
    உங்கள் முதல் வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி.

    ஜீவி சார் பதிவின் மூலம் வந்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க கீதா சாம்பசிவம். உங்கள் முதல் வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி. மிக மகிழ்ச்சி அடைந்தேன்.

    அப்பு டாகடர் எப்படி இருக்கிறார்?
    கண் டெஸ்ட் எப்போ?

    குழந்தைகளுடன் குழந்தையாய் இருப்பது
    மனதுக்கும், உடலுக்கும் உற்சாகம்.
    அதை நிறைய பெற்று வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான விளக்கங்களுடனும்
    படங்களுடனும்
    மிக நல்ல பகிர்வு.அன்புகோமதி அத்தனை புண்ணியமும் உங்களுக்கே.

    பதிலளிநீக்கு
  16. வாங்க வல்லி அக்கா, உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
    நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர்
    திண்ணார் மதில்சூழ் திருவெள்ளக்குளத்துள்
    அண்ணா அடியேன் இடரைக் களையாயே


    இடர்களையும் அற்புதப் பாசுரங்கள் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  18. எமது பதிவில் விருது காத்திருக்கிறது தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  19. விருது காத்திருக்கும் பதிவின் முகவரி..

    http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_3382.html

    பதிலளிநீக்கு
  20. இனிய திருமண நல்வாழ்த்துகள் அம்மா...

    உங்கள் இருவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து நல்லவற்றையும் வழங்க எல்லாம் வல்லவனிடம் பிரார்த்திக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  21. MY BEST WISHES FOR A VERY VERY HAPPY WEDDING DAY MADAM.

    தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களால் தங்களுக்கு தைப்பூசத் திருநாளாகிய இன்று விருது வழங்கப்பட்டுள்ளது தங்களைப்போலவே எனக்கும் மிகமிக மகிழ்ச்சியளிக்கிறது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  22. இராஜராஜேஸ்வரி, உங்கள் விருதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க வெங்கட், உங்கள் வாழ்த்துக்கும், பிராத்தனைக்கும் நன்றி.
    நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்,நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க, வை. கோபாலகிருஷ்ணன் சார், நீங்கள் சொன்னது போல் தைபூசத் திருநாளில் விருது கிடைத்தது மகிழ்ச்சி.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. பல்லக்கில் ஆழ்வார் தர்சனம் மனம் நிறைகின்றது.

    பதிலளிநீக்கு
  26. அருமையான, துல்லியமான வர்ணனை, நேரில் சென்று அனுபவித்தது போலவே இருந்தது. ஒரு முறை 3 நாட்கள் இருந்து சேவிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி விட்டது தங்கள் இடுகை.... இந்த அடியவர் சேவைக்கு நீவிர் இன்னுமோர் நூற்றாண்டு இரும்!
    அன்புடன்
    பாலா
    http://balaji_ammu.blogspot.in

    பதிலளிநீக்கு