வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மூத்தோர் சொல் அமுதம்

வாழ்க்கையில் நமக்கு உயர்ந்த குறிக்கோள் இருக்க வேண்டும். அவ்வாறு உயர்ந்த குறிக்கோள்களை அடையப் பாடுபடும் பொழுது அவ் உயர்ந்த இலக்குகளை அடைய முடிய வில்லை என்றாலும் முயற்சியாவது செய்த திருப்தி கிடைக்கும். பெரியவர்கள் எப்போதும் எல்லோருக்கும் பயன் அளிக்கும் சொற்களையே சொல்லி வந்து இருக்கிறார்கள்

//சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.//


மூத்தோர் சொல் அமுதம் என்பார்கள். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் ஏதாவது காரண காரியம் இருக்கும். நாம் முழுக்க கடைப்பிடிக்கிறோமா இல்லையோ கொஞ்சமாவது கடைப்பிடிக்கலாம்.

சேது அம்மாள் என்ற எங்கள் குடும்ப நண்பர், தான் எழுதி வைத்த குறிப்புகளை என்னிடம் கொடுத்தார்கள். அதில் அவர்கள் நல்ல விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



1. ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு திருக்குறள் உரையுடன் இருத்தல் வேண்டும்.

2. ஒரு நாளைக்கு ஐந்து குறட்பாக்களையாவது படித்து உணர்ந்து நடத்தல் வேண்டும்.

3. கூடியவரை பிறருக்கு உதவும் வகையில் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளல் வேண்டும்

4.வாழ்வை இனியாதாக்குவது அன்பு. கஷ்டங்களிலிருந்து மீளச் செய்வது அன்பு. குடும்ப வாழ்க்கையை செம்மைப் படுத்துவது அன்பு.

5. ஊக்கமானது இடையறாது உள்ளத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இடையறாது செடி வளர்வது போன்று ஊக்கமுடையவரது உள்ளம் வளர்கிறது.

கூட்டு வழி பாட்டின் நன்மைகள்:
------------------------------


கூட்டு வழிபாட்டின் போது எல்லோருடைய மனமும் ஒன்றி விடுவதால் மனதில் சலனங்கள் - தீய எண்ணங்கள் தோன்றுவதில்லை. கூட்டு வழிபாட்டின் மூலம் இறைவனை வேண்டுதல் செய்கையில் கருணை மழை பொழியக் காத்திருக்கிறான் இறைவன்.

கூட்டு வழிபாட்டின் மூலம் பக்தி செய்ய இறைவன் திருவருள் பெற்ற பரமஞானிகளின் பாடல்கள் துணை செய்யும்.

நடைமுறை வாழ்வில் கூட்டுறவின் மூலம் செயல் பட்டால் நிச்சயம் பலன் உண்டு.
தனி மரம் மழையைக் கொண்டு வருவதில்லை. மழைக்குத தேவையானது பல மரங்கள், அடர்ந்த காடுகள்.

கூட்டு வழிபாடு செய்ய இறைவன் திருவுள்ளம் இரங்கும்.

வேண்டுதல்:
----------

1. எல்லாம் வல்ல பேரா இயற்கை பெருந்தெயவமே! உன்னையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். உலக உயிரினம் வளமுடன் வாழவும் மனித குலம் உடன் பிறப்பாக எண்ணி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவும் அருள்புரிவாய் இறைவா!

2. வானமழை பொழியவும் பயிர்கள் செழிக்கவும் உயிர்க்கூட்டம் பசியாறவும் அறநெறிப்பட்ட உலகமாய் வையகம் வாழ அருள் தருவாய் இறைவா!

3. பொய், பொறாமை, புறங்கூறல்கள், களவு, காமம், சூது, வாது, வஞ்சனை நீக்கி அன்பு, அறிவு, அருள், அறம், உண்மை, உதவி, உயர்வு, ஒற்றுமை, பகுத்துண்ணும் பண்பு, எடுத்துத்தரும் இயல்பு, கனிமொழி உரைக்கும் உணர்வு, சான்றோரைப் போற்றும் சால்பு, தெய்வத்தைப் பராவும் கடமை உணர்வு இவையாவும் பெற்றவர்களாய் வாழ வழி செய்வாய் இறைவா!

4. நிலவினிடத்திலே உள்ள அருளையும் (குளிர்ச்சி) உலகங்காக்கும் உத்தமப் பண்பையும் வளரும் தன்மையையும் நான் பெற அருள்புரிவாய் இறைவா!

5.கதிரவனிடத்திலே உள்ள பேரொளியையும் கதிர் வீச்சையும் பேராற்றலையும் நான் பெற அருள் புரிவாய் இறைவா!

6.நட்சத்திர மண்டலத்திலே உள்ள எல்லா சக்திகளையும் நான் பெற அருள் புரிவாய் இறைவா!

7.வானவெளியில் நடமாடும் சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள் அவர்களின் அருளாசியை நான் பெற அருள்புரிவாய் இறைவா!


8. வழிபடு கடவுளாம் தாய் தந்தையர், மூதாதையர் யாவரின் அருளாசியை நான் பெற அருள்புரிவாய் இறைவா!

9.உலகம் நன்றாக இருக்க அருள் புரிவாய் இறைவா!

10 நானும் என் குடும்பத்தாரும் என் உறவினரும் என் நட்பினரும் என்னை நாடியவரும், என்னால் நாடப் பட்டவரும் என்னைச் சார்ந்திருக்கும் பலவகை உயரினங்களும் நலமாக இருக்க அருள் புரிவாய் இறைவா!

அவர்கள் எழுதி வைத்த தினப்படி குறிப்புகள்:
---------------------------
காலை 4.30 துயிலெழுதல்- இறைஉணர்வு- நீதிநூல்படித்தல்
காலைக்கடன்- நடத்தல்- உடற்பயிற்சி- உடல் உழைப்பு- செய்தித்தாள் படித்தல்
ரேடியோ கேட்டல்- வீட்டுவேலை- இறைவழிபாடு- காலை உணவு.

9-1 பணி

மாலை 1-2 இறை உண்ர்வு - மதிய உணவு (முதியவர்கள் சிறிது ஓய்வு)
2-5 பணி
3- 6.30 நடத்தல்- (ஓடுதல்) - உடற்பயிற்சி- விளையாட்டு=- உடல் உழைப்பு- பொழுது போக்கு.
6.30- 8.30 படிப்பு- ரேடியோ கேட்டல் டி.வி பார்த்தல்- இறை வழிபாடு.
8.30. 9 இரவு உணவு.
9- 10 குடும்பக்கணக்கு- அளவளாவுதல் ரேடியோ- அடுத்தநாள் திட்டம்.
அறநூல் படித்தல்- இறையுணர்வு -துயில் கொளல்.

விடுமுறை நாட்களை எப்படி செலவு செய்வது என்பதை எழுதி வைத்து இருக்கிறார்கள்.

விடுமுறை நாட்கள்:
-------------------

கோயில் செல்லுதல், குடும்ப கூட்டு வழிபாடு- வீட்டு வேலைகள் அவசியமான அலுவலக வேலை- குழந்தைகள் படிப்பு- விளையாட்டு- முழு ஒய்வு. பொழுதுபோக்கு- அடுத்த் வாரத்திட்டம் -துறைத்தேர்வு -மேல்படிப்பு - திட்டமிடுதல் -வீடுகட்டுதல்- சிக்கனம் - சேமிப்பு- நல்ல முதலீடு.

அவர்கள் எந்த வீட்டு விஷேசங்களுக்கு வந்தாலும் தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்த்து மகிழச்சியோடு செய்வார்கள். அவர்கள் வீட்டுக்கு போனாலும் நமக்கு உணவு செய்து கொடுத்து, வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய் கனிகள் கொடுத்து மகிழவார்கள்.
எங்கள் மன்றத்தில் ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி நடந்தால், நடத்தும் ஆசிரியருக்கு உணவு தன் கைப்பட சமைத்து எடுத்து வந்து தானே பக்கத்தில் இருந்து தாயின் பரிவுடன் பரிமாறுவார்கள்.
அவர் ஒருத்தருக்கு மட்டும் உணவு கொண்டு வரமாட்டார்கள்- கூட நாலு பேர் உண்ணும் அளவு தான் கொண்டு வருவார்கள். எப்போதும் யாருக்கும் உதவி செய்ய காத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் வயது 80க்கு மேல். வேலை செய்ய அலுப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்களை நினைத்துக் கொள்வேன் சுறு சுறுப்பு வந்து விடும்.

அவர்கள் சொல்லும் அறிவுரை தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்தால் மருத்துவ செலவைத் தவிர்க்கலாம்.

எல்லா பக்கங்களிலிருந்தும் தூய்மையான எண்ணங்கள் நம்மை வந்து அடையட்டும் என்று நாம் தினம் வேண்ட வேண்டும் என்பார்கள். நாமும் அந்த மாதிரி வேண்டுவோம்.







34 கருத்துகள்:

  1. மூத்தோர் சொல்வார்த்தை முன் கசக்கும்.. பின் இனிக்கும்ன்னு சொல்லுவாங்க.

    பதிலளிநீக்கு
  2. சேது அம்மாளின் நாட்குறிப்பைப்பார்த்து ஆச்சரியம்தான் வருகிறது. என் நாட்க்குறிப்பைப் பார்த்தால் மலைக்கும் மடுக்கும் வித்தியாசம். :(

    பதிலளிநீக்கு
  3. மூத்தோர் சொல் அமுதம் என்பார்கள். /

    மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும்
    முன்னே கசக்கும்
    பின்னே இனிக்கும்

    என்கிற முதுமொழியை வலிமையாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பழமொழியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  5. சேது அம்மாள் வாழ்க்கை நல்ல ஆரோக்கியமான ஆன்மீகம் நிறைந்த வாழ்க்கை தான் சித்ரா நீங்கள் சொன்ன மாதிரி.

    பதிலளிநீக்கு
  6. முத்துலெட்சுமியின் நாட்க்குறிப்பு குழந்தைகளை சார்ந்து அல்லவா இருக்கிறது.

    அப்போது அவர்கள் வாழ்க்கை முறை வேறு, இப்போது உங்கள் வாழ்க்கை முறை வேறு.

    பதிலளிநீக்கு
  7. முத்துலெட்சுமியின் நாட்க்குறிப்பு குழந்தைகளை சார்ந்து அல்லவா இருக்கிறது.

    அப்போது அவர்கள் வாழ்க்கை முறை வேறு, இப்போது உங்கள் வாழ்க்கை முறை வேறு.

    பதிலளிநீக்கு
  8. //மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும்
    முன்னே கசக்கும்
    பின்னே இனிக்கும் //

    நல்ல பழ மொழி.

    பெரியவர்கள் சொல்லும் அறிவுரைப் படி நடக்க முதலில் கஷ்டமாய் தான் இருக்கும். பின் அதன் சிறப்பை உணர்ந்து கொண்டால் நமக்கு நலம் பயக்கும்.

    நன்றி உங்கள் வருகைக்கு இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி இராஜாஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி இராஜாஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  11. கோமதி அரசு என் வேண்டுகோளுக்குஇணங்கி உடன் அடுத்து இரு பதிவுகளை திருமதி பக்கத்தில் பார்த்ததில் பெரு மகிழ்ச்சி.தொடருங்கள் .வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. சேதுஅம்மாள் அவர்கள் என்ன ஒரு திட்டமிட்ட வாழ்கையை அனுபவித்து வெற்றி கண்டுள்ளார்கள்.!!அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஸாதிகா ,உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல கருத்துக்களை தந்திருக்கிறார்.

    மூத்தோர் வாக்கு என்றுமே சரியாகத் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. மூத்தோர் சொல் என்றும் அமுதம். உங்கள் மூலமாக சேது அம்மாளின் சேர்த்து வைத்த அமுதம் எங்களுக்கும் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  16. மூத்தோர் சொல் அமுதம்... மிகவும் தித்தித்தது இந்தப் பகிர்வு. எவ்வளவு நல்ல விஷயங்களை எழுதி வைத்திருக்கிறார்கள் சேது அம்மாள்....

    பகிர்ந்த உங்களுக்கு நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  17. ஆம் ஆதி, மூத்தோர் வாக்கு என்றும் சரியாகத் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ராமலக்ஷ்மி, சேது அம்மாள் அவர்களின் அமுதம் வாழ்வின் அனுபவ அமுதம் அல்லவா!

    பதிலளிநீக்கு
  19. வாங்க வெங்கட்,

    உங்களுக்கு பிடித்தது அறிந்து மகிழச்சி.

    பதிலளிநீக்கு
  20. தான் அறிந்து சுகித்தது, தன்னோடு போகாமல், மற்றவர்க்ளுக்கும் உதவிட வேண்டி, விவரமாக எழுதி வைத்தது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  21. ஆம் ஹீஸைனம்மா, அவர்கள் பெருந்தன்மையானவர்கள் தான்.

    தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று வாழ்பவர்கள்.

    பதிலளிநீக்கு
  22. மூத்தோர் சொல் அமுதம் எல்லாருடனும்
    பகிர்ந்து கொண்டது நல்ல விஷயம்

    பதிலளிநீக்கு
  23. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  24. அருமையான கருத்துக்கள்.பகிர்வுக்கு நன்றி. தாங்கள் எனது தளம் வந்ததர்க்கு நன்றி .தொடர்ந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு
  25. வணக்கம்,

    புடவைவகைகள் பதிவு திரும்ப ஆரம்பிச்சிருக்கேன்.

    வந்து பாருங்க

    பதிலளிநீக்கு
  26. நல்ல எழுத்துக்கள் கட்டாயம் அங்கீகாரம் பெறும் என்பதற்கு உங்கள் இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பதே சாட்சி.

    பாராட்டுக்கள் கோமதி.

    நீங்களும் நானும் ஒன்றாக அறிமுகம் ஆகியிருப்பது இன்னும் சந்தோஷத்தை அதிகரிக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
    இன்று நம் இருவர் தளங்களும் மனோ அவர்கள் குறிப்பிட்டது மகிழ்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம்
    கோமதி அரசு
    19,01,2013 இன்று உங்களின் மூத்தோர் சொல் அமிர்தம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் மிக அருமையான படைப்பு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  29. வாங்க ரூபன், வாழ்கவளமுடன்.உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு