செவ்வாய், 29 மார்ச், 2011

என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்

பெயர்க் காரணம் சொல்லும் தொடர் பதிவுக்கு (சுயதம்பட்டம்) வல்லி அக்கா அழைத்து இருந்தார்கள். சரி என்று நானும் எழுதி விட்டேன். படியுங்கள் தொடர்ந்து.


இப்போது போல் நட்சத்திரப்படி ,எண் கணிதப்படி எல்லாம் அப்போது பெயர் வைப்பது இல்லை. முன்னோர்கள் பெயர், கடவுள் பெயர், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள்பெயர், என்று அப்போது வைப்பார்கள். இப்போது தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் பெயர், நடிகர், நடிகை பெயர்கள் எல்லாம் வைக்கிறார்கள். தமிழ்ப் பெயர் வேண்டுமா? சமஸ்கிருத பெயர் வேண்டுமா ? எல்லாவற்றிற்கும் இப்போது வசதி உள்ளது. எத்தனை எத்தனை பெயர்கள் அழகான, அறிவு பூர்வமான பெயர்கள் என்று தேடித் தேடி தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள்.

முன்னோர்கள் சிலர் இறைவன் பெயரையே குழந்தைகளுக்கு வைப்பார்கள், எப்போதும் இறைவனை நினைத்துக் கொள்ள. நடராஜன் என்று வைத்து விட்டு ,நட்டு என்றும், கிருஷ்ணசாமி என்று வைத்துவிட்டு, கிட்டு என்றும் பட்டாபிராமனை, பட்டா என்றும், சுப்பிரமணியனை, சுப்பா என்றும், நாராயணாவை ,நாணா ஜானகியை ஜான் என்றும், பத்மாவை பத்து என்றும், மீனாட்சியை மீனுகுட்டி என்றும் காமாட்சி காமு என்றும் பார்வதி பாரு என்றும் - லட்சுமியை லட்சா என்றும் எதற்கு பேர் வைக்கப்பட்டதோ
அந்த நோக்கம் அறியாமல் இப்படிக் கூப்பிடுவதால் பயனில்லாமல் போய் விடுகிறது என்று சொல்பவர்கள் உண்டு. சிலர் பெரியோர்கள் வைத்த பெயரை மாற்றுங்கள் அந்த பெயரினால் கஷ்டபடுகிறீர்கள் என்று பெயர் மாற்றம் செய்து தருகிறேன் அந்தப்புது பெயரை தினம் இத்தனை தடவை எழுதுங்கள் உங்கள் தலைஎழுத்தே மாறிவிடும் என்று சொல்லி பொருள் சம்பாதிக்கிறார்கள். பெயருக்கு அப்படி ஒரு மவுசு.


எங்கள் குடும்பங்களில் முதல் நான்கு குழந்தைகளுக்கு பேர் வைப்பதில் எந்த குழப்பமும் கஷ்டமும் இருக்காது. முதல் குழந்தை ஆணாக இருந்தால்
அப்பாவின் அப்பா பேர். பெண்ணாக இருந்தால் அப்பாவின் அம்மா பேர். இது வழக்கம். பிறகு மூன்றாவது குழந்தை ஆணாய் இருந்தால் அம்மாவின் அப்பா
பேர். பெண்ணாய் இருந்தால் அம்மாவின் அம்மா பேர். இது தான் வழக்கம். பெரும்பாலும் இதைத்தான் எங்கள் பக்கம் கடைப்பிடிப்பார்கள். அதற்கு மேல் பிறந்தால்தான் வேறு பெயர் வைப்பார்கள்.

’என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்? சின்ன சின்னக் கண்ணைக் காட்டிச் சிரிக்கும் எங்கள் பாப்பாவிற்கு ’என்று யாரும் குழம்பவில்லை, நான் பிறந்த போது.

நான் திருவனந்தபுரத்தில் என் தாத்தாவின் பெயர் கொண்ட ’மார்த்தாண்டபவனத்தில் ’ பிறந்தேன். தாத்தா தன் 16 வயதில் திருவனந்தபுரம் வந்து நகைக் கடை வைத்து, வீடு வாசல் வாங்கி இருந்தார்கள். ஆரியசாலையும் பழைய சாலையும் இணைக்கும் பெரிய வீட்டில்( ஆரியசாலை முன் பகுதி ; பழையசாலை பின் பகுதி) பின்பகுதியில் 40 தென்னைமரமும், நடுவில் வீடும், கார் செட்டும், மாட்டு வண்டிக் கொட்டகையும் இருக்கும் அப்போது . இப்போது ஆரிய சாலை முன் பகுதி இல்லை .பழையசாலை சிறிய பகுதி தாத்தா வீடு அழகாய் வேறு அவதாரம் எடுத்து இருக்கு. தென்னை மரங்கள் 40லிருந்து 20 ஆகி இருக்கிறது. சுயதம்பட்டம் அடிக்க வாருங்கள் என்று அழைத்தார்கள் வல்லி அக்கா, அப்புறம் தம்பட்டம் அடிக்க வில்லை என்றால் எப்படி?

இப்போது சின்ன மாமா அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

எனக்கு பெயர் வைக்க எந்த கஷ்டமும் இல்லை. எனக்கு முன் பிறந்த அக்காவிற்கு என் அப்பாவின் அம்மா பேர். அண்ணனுக்கு என் அப்பாவின் அப்பா பேர். அப்புறம் எனக்கு என்ன பேர் வைத்து இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும், முன் பத்தியை படித்தவர்களுக்கு. எனக்கு என் அம்மாவின் அம்மா பேர் - கோமதி - என்று வைக்கப்பட்டது. கோலாகலமாய் .

நல்ல சுருட்டை முடியும், நல்ல கரு வண்டு கண்ணுமாய் செக்க சேவேல் என்று இருந்தேனாம். இது கதைகள் ,சினிமாவிற்கு வசனங்கள் என்று எழுதும் என் சின்னமாமாவின் வருணிப்பு. அவர்களுக்கு தன் அம்மாவின் பெயரை வைத்து இருப்பதால் அலாதி பிரியம் என் மேல். தன் பெண்ணிற்கும் தன் அம்மாவின் பெயரை வைத்து இருக்கிறார்கள் அவள் பெயர் கோமதி பிரபா.

என் அம்மா ,அப்பா, வாய் நிறைய கோமு என்றும், என் ஆச்சி கோமா என்றும், என்றும் அழைப்பார்கள் . உறவினர்களும் கோமு என்று தான் அழைத்தார்கள். பள்ளியில், கல்லூரியில் எல்லாம் கோமதி என்று அழைத்தார்கள்.


திருமணத்திற்கு பின் என் பேர் என் கணவரின் வேலையைக் கருத்திற்கொண்டும் இனிஷியலைக்கருத்திற்கொண்டும் ‘ட்யூட்டர் சார் ஒய்ப்’,’A.T சார் ஒய்ப்’, ’புரபஸர் சார் ஒய்ப்’ என்று பல பேர்களில் அழைப்பார்கள் .

 கணவர் என்னைக் கோமதி, கோமு என்று எல்லாம் அழைக்க மாட்டேன், மதி என்று அழைப்பேன் என்றார்கள். அப்படி அவர்கள் என்னை அழைத்த நேரத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். பேர் சொல்லி அழைத்ததே இல்லை. அது எனக்கு பெரிய குறை தான்.

 ஒரு முறை வளைகாப்புக்கு என்னை ரயிலில் ஊருக்கு அழைத்து போகும் போது இருவருக்கும் ரயிலில் ஒரே பெட்டியில் இடம் கிடைக்கவில்லை. நான் மகளிர் பெட்டியில் இருந்தேன் கோவைக்குப் போக அதில் ஏறி இருந்தோம். ஈரோடு ரயில் நிலையத்தில் என் பெட்டியில் மிகவும் கூட்டம் இருந்ததால் நான் எங்கு இருக்கிறேன் எனத் தெரியாமல் ’ மதி மதி ’என்று இரண்டு முறை’ நீ எங்கு இருக்கிறாய் ’என்று கேட்டார்கள் அவர்கள் மதி என்று கூப்பிட்ட உடன் மகிழ்ச்சியில் தலை கால் தெரியவில்லை.உட்கார இடம் கிடைக்காமல் சூட்கேஸ் மேல் உட்கார்ந்து இருந்த நான் வேகமாய் எழுந்த போது பக்கத்தில் நின்றவர்கள் ,மெள்ள மெள்ள பிள்ளைதாச்சி இப்படியா அவசரமாய் எழுந்து கொள்வது ’என்று கடிந்து கொண்டார்கள். அநத அற்புத தருணத்தை என்னால் மறக்க முடியாது.


பின் என் மகள் பிறந்தபின் என் பெயர் ’கயல் அம்மா’ ஆயிற்று. பிறகு மகன் பிறந்தபின் சிலருக்கு ’காசி அம்மா’ ஆனேன். என் பெண் இருக்கும் ஊருக்கு போனால் என் பேத்தி, பேரன் நண்பர், தோழிகளுக்கு நான், நானிம்மா. மகனது ஊருக்கு போனால் அங்கு இருக்கும் என் பேரனிடம் உன் கிராண்ட்மா வந்து இருக்கிறார்களா என்பார்கள். இப்படிப் பல பல பெயர்கள்.

இது தான் என் பெயர் வரலாறு. எங்கள் அப்பாவிற்கு நெல்லை (பாளையங்கோட்டை) சொந்த ஊர் . எங்கள் பக்கம் கோமதி, கோமதி நாயகம் என்ற பெயர்கள் இருக்கும்.

சங்கரன் கோவில் அம்மன் பேர் கோமதி அம்மன். என் பெயரை வைத்து நிறைய பேர் நீங்கள் நெல்லையா? என்று கேட்ப்பார்கள் உங்களுக்கு அந்த அம்மன் பெயர் வைத்து இருக்கிறார்களா என்று கேட்பார்கள் . நான் எனக்கு என் ஆச்சியின் பெயர் என்று சொல்வேன்.

இப்போது பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் வலைத் தளத்திற்கு அரசு என்ற பூவை கோமதி என்ற நாரில் கட்டிக் கொண்டேன். கணவர் பெயர் சேர்த்து கோமதிஅரசு என்று வைத்துக் கொண்டேன்.

பின் குறிப்பு:- வல்லி அக்கா தன் பெயர்க்காரண தொடர் பதிவை மீள் பதிவாக பகிர்ந்து இருந்தார்கள்.   அவர்கள் என்னை அழைத்து இருந்தார்கள் என் பெயர் காரணத்தைப் பகிர. அதனால் நானும் எழுதினேன்.

அதை இப்போது இங்கு மீள்பதிவாக்கி விட்டேன்.


                                                          வாழ்க வளமுடன்.

31 கருத்துகள்:

  1. ஓ..ஒரு பெயரில் இவ்வளவு சங்கதிகளா? அருமை..


    டைம் இருந்தால்...
    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html
    பரா்க்கவும்..

    பதிலளிநீக்கு
  2. பெண்களுக்கு இப்படி பையன்/பெண் பெயருடன் அம்மா சேர்த்துச் சொல்லும் பெயர்கள் தான் அக்கம்பக்கத்தில்! பாட்டியானாலுமா?!!

    சுவாரஸ்யமாக இருந்தது!

    பதிலளிநீக்கு
  3. அநத அற்புத தருணத்தை என்னால் மறக்க முடியாது.//

    :)) interesting to know!

    பதிலளிநீக்கு
  4. மதி என்ற சுருக்கம் வெகு அழகு. அற்புத தருணத்தை நினைவு கூர்ந்த விதம் அதை விட அழகு:)!

    சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. அட அட தூள் கிளம்பிட்டிங்கம்மா ;)) சூப்பர் ;)

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் :)

    //Thekkikattan|தெகா said...

    அநத அற்புத தருணத்தை என்னால் மறக்க முடியாது.//

    :)) interesting to know!//

    :) ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்

    பதிலளிநீக்கு
  7. அவர்கள் மதி என்று கூப்பிட்ட உடன் மகிழ்ச்சியில் தலை கால் தெரியவில்லை.உட்கார இடம் கிடைக்காமல் சூட்கேஸ் மேல் உட்கார்ந்து இருந்த நான் வேகமாய் எழுந்த போது பக்கத்தில் நின்றவர்கள் ,மெள்ள மெள்ள பிள்ளைதாச்சி இப்படியா அவசரமாய் எழுந்து கொள்வது ’என்று கடிந்து கொண்டார்கள். அநத அற்புத தருணத்தை என்னால் மறக்க முடியாது.

    .... So sweet!!!!! I enjoyed reading this post. Thank you.

    பதிலளிநீக்கு
  8. பேர் காரணம் இன்னும் எழுதாத அன்பர்கள் இருந்தால் இதை தொடரலாம். நான் எழுதியதே வெகு கால தாமதம்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி கருன்.

    மாதவி, பெண் திருமணம் ஆகி புகுந்தவீட்டுக்கு போன உடனயே அவள் பேர் மாறி விடுகிறது, அப்போது என் பெயர் வாத்தியார் மருமகள்.
    பின் குழந்தைகளை வைத்து நம் பேர் மாறும். அதன் பின் பேரபிள்ளைகளை வைத்து மாறும்.

    நன்றி மாதவி.

    பதிலளிநீக்கு
  10. நானும் நெல்லைதான் அமுதா.

    என்ன முத்துலெட்சுமி புன்னகை?

    பதிலளிநீக்கு
  11. அன்பு கோமதி, திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து மாயவரம் வரும் வரைக்கும் நிகழ்ச்சிகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில எழுதிட்டீங்களே.!!

    மதியும் அழகு கோமதியும் அழகுதான்.
    உங்கவீட்டுக்காரர் பேரும் உங்களோட இணைஞ்சிருக்கே.
    அரசு அவர்களின் மனைவி அரசுமதி.
    கோமதி. படு பொருத்தம்.
    ரொம்ப ரொம்ப நன்றிமா. அழகாக் கோர்வையா சுவையாவும் எழுதி இருக்கீங்க. ரசித்து ருசித்தேன்.:0)

    பதிலளிநீக்கு
  12. தெகா, வாங்க வாங்க !

    வெகு நாட்கள் ஆச்சே நீங்கள் என் பதிவுக்கு வந்து நலமா?

    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மதி நல்லா இருக்கா ?
    நன்றி ராமலட்சுமி.

    பதிலளிநீக்கு
  14. நன்றி கோபிநாத்.

    நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  15. வல்லி அக்கா ,என் பெயர் பொருத்தம்
    சொன்னதற்கும், நான் எழுதியதை ரசித்து ருசித்ததற்கும் மிகுந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மிக சுவாரஸியம் :)

    அதுவும் அந்த ரயில் சம்பவம் :)

    பதிலளிநீக்கு
  17. //சங்கரன் கோவில் அம்மன் பேர் கோமதி அம்மன். என் பெயரை வைத்து நிறைய பேர் நீங்கள் நெல்லையா என்று கேட்ப்பார்கள் உங்களுக்கு அந்த அம்மன் பெயர் வைத்து இருக்கிறார்களா
    என்று கேட்பார்கள்.//

    உங்கள் பெயர் பார்த்து நானும் அப்படித் தான் நினைத்திருந்தேன்.

    //பின் என் மகள் பிறந்தபின் என் பெயர் ’கயல் அம்மா’ ஆயிற்று. பிறகு மகன் பிறந்தபின் சிலருக்கு ’காசி அம்மா’ ஆனேன். என் பெண் இருக்கும் ஊருக்கு போனால் என் பேத்தி, பேரன் நண்பர், தோழிகளுக்கு நான், நானிம்மா. மகனது ஊருக்கு போனால் அங்கு இருக்கும் என் பேரனிடம் உன் கிராண்ட்மா வந்து இருக்கிறார்களா என்பார்கள். இப்படிப் பல பல பெயர்கள்.//

    -- இதை மிகவும் ரசித்தேன்.
    பெற்றோர் சூட்டிய பெயர்கள் எவ்வளவு மாறுதலுக்குள்ளாகிறது என்பதை ரொம்ப அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ஆதவன், இப்போது சென்னையா?

    ஆயில்யன் மாதிரி எப்போது நல்ல செய்தி சொல்லபோகிறீர்கள்?

    ரயில் சம்பவத்தை ரசித்ததற்கு நன்றி ஆதவன்.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஜீவி சார், பெற்றோர்கள் சூட்டிய பெயர் மாறிதான் விடுகிறது.


    பலபெயர்களை ரசித்தமைக்கு நன்றி சார்.
    நல்ல மனிஷி என்று பெயர் வாங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. தாத்தா/பாட்டி பெயர் வைப்பது வழக்கம்தான். ஆனால் மருமகள் அவர்கள் பெயரைச் சொல்லக் கூடாதென்று செல்லமாக ஒரு பெயர் சொல்லி அழைப்பாள். என் மாமா மைத்துனன் குழந்தைகளுக்கு பெயர் வைக்கையில் இதை சொல்லி சுபத்ரா என்றும் வாசுகி என்றும் பேத்திகளுக்கு பெயரிட்டார்.
    தொடர் எழுதாதவர்களை அழைத்தமைக்கு நன்றி. நானும் எழுதினேன். பாருங்களேன்.
    vadivelmurugan_s@hotmail.com
    //என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்// அருமையான பாட்டின் பல்லவி. தலைப்புக்கு என் பாராட்டுக்கள். சொக்கத் தங்கத்துக்கு நல்ல பெயர் தமிழ் செல்வி.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  21. வாங்க சகாதேவன், உங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    மாமியார் பேர், மாமனார் பெயர் வைத்தால் வாய் நிறைய கூப்பிடுவது மரியாதை இல்லை என்பதால் வேறு பெயர் வைத்து தான் கூப்பிடுவார்கள். எனக்கு முன் பிறந்த என் அக்காவிற்கும், அண்ணனுக்கும் என் அப்பா வழி தாத்தா, பாட்டி பேர் என்பதால் என் அம்மா வேறு பேர் வைத்து தான் அழைத்தார்கள்.

    எனக்கு அவர்கள் அம்மா பேர் என்பதால் வாய் நிறைய கோமு என்று கூப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  22. ரவிக்குமார், உங்கள் ரசிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பெயர்க்காரணம் நல்லாயிருக்கும்மா. ரயில் சம்பவம் அருமை.

    பதிலளிநீக்கு
  24. அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. நீங்க பதிவு போட்டதைவிடத் தாமதமா, பின்னூட்டம் போட வந்திருக்கேன். :-)))

    கோமு, கோமா என்பதைவிட ‘மதி’ அழகு!! ஆனால அடிக்கடி அப்பெயர் பயன்படுத்தப்படவில்லை எனற வருத்தம் புரிகிறது.

    அந்தக் காலங்களில், மனைவியிடம் மற்றவர்முன் அதிகம் பேசுவதுமில்லை; பெயர்சொல்லி அழைப்பதுமில்லை என்று சில பெரியவர்கள் இன்றைய தலைமுறையைப் பார்த்து அங்கலாய்க்கும்போது தெரிந்துகொண்டிருக்கிறேன்.

    எனக்கும், பெயரைச் சிதைத்து, செல்லப்பெயராக அழைப்பது பிடிக்காது. நல்ல அர்த்தம் தரும் பெயராக இருப்பின், அனர்த்தம் ஆகிவிடுமே?

    சுவையாக எழுதிருக்கீங்க. 40 தென்னைகள் வைத்து வீடா? வாவ்!!

    பதிலளிநீக்கு
  26. ஹீஸைனம்மா, வாங்க வாங்க வெகு நாட்கள் ஆகி விட்டது உங்களை என் பதிவில் பார்த்து.

    இன்று தான் வலைதொடர்பு வந்தது.
    ஒரு வாரம் வலைதொடர்பு இல்லாதது வெகு நாட்கள் இல்லாத உணர்வை தந்து விட்டது.

    ஊட்டி சுற்றுலா பதிவு படித்துப் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு