இரவு 9.30 க்கு மொட்டை மாடியில் எடுத்த நிலா நிலாவைச் சுற்றி பெரிதாகக் கோட்டை கட்டி இருந்தது
இதுவும் இரவு எடுத்த நிலா
காலையில் ஜன்னல் வழியாக எடுத்த நிலா
காலை 5.30 க்கு எடுத்த படங்கள் இனி வருபவை எல்லாம்.
69 ஆண்டுகளுக்கு பின் நேற்று வந்த பெளர்ணமி சிறப்பு வாய்ந்த பெளர்ணமியாம். எல்லோரும் அதைச் சிறப்பித்துப் பதிவு போடும் போது நானும் நான் எடுத்த நிலாக்களையும் போட நினைத்து போட்டு விட்டேன். அன்புப் பரிசாக வந்த கை அடக்க சின்ன காமிராவில் எடுத்த நிலாப் படங்கள். நிலவைக் காட்டிச் சோறு ஊட்டிய அன்னைக்குக் குழந்தையின் பரிசு.
அடுத்து டிசம்பர் 14ல் தெரியும் என்கிறார்கள். இது போன்ற சிறப்பு பெளர்ணமியை 2034ல் தான் இனி பார்க்க முடியுமாம்.
கடற்கரை, மரங்கள் அருகே எடுத்தால் நன்றாக இருக்கும் . மொட்டைமாடியிலும், ஜன்னல் வழியாகவும் இவ்வளவு தான் எடுக்க முடிந்தது.