சில நாட்களாக மாலை நேரம் மொட்டைமாடியில் நடைபயிற்சி மற்றும், பறவைகளை கவனித்தல் செய்கிறேன்.
மொட்டைமாடியை பல வருடங்களுக்கு பின் இப்போதுதான் திறந்து வைத்து இருக்கிறார்கள். மீனாட்சி கோபுரம் தெரியுமா பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு போனேன்.
என் ஆசை ஓரளவு நிறைவேறியது. வெகு தூரத்தில் இரண்டு கோபுரம் மட்டும் கொஞ்சம் தெரிந்தது. மீனாட்சியை வணங்கி விட்டு என் நடைபயிற்சியை ஆரம்பித்தேன்.
மாலை நேரம் தண்ணீர் தொட்டி நிரம்பி அதிகப்படியான நீர் கீழே வழிந்து ஓடியதை குடிக்கவும், குளிக்கவும் பறவைகள் வந்தன. அவை இந்த பதிவில் இடம் பெறுகிறது. .