படத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூலை, 2017

படம் சொல்லும் செய்திகள்

இன்று ஆடிக் கிருத்திகை என்று பழமுதிர்சோலைக்குப் 
போன போது கண்ட காட்சி.

மூடி இருக்கும் பாட்டிலில் உள்ள தண்ணீரைக்    குடிக்க முயலும் குரங்கு வெகு நேரம் போராடி  முடியாமல் கீழே போட்டு விட்டது. நான் போய் மூடியை திறந்து வைத்துவிட்டு  நகர்ந்தவுடன் வேகமாய் மரத்திலிருந்து இறங்கி மட மட என்று குடித்து விட்டது, பாவம் அதில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது அதனால் எங்களுக்கு  வைத்து இருந்த தண்ணீரைக் கொடுத்தவுடன்  வேக வேகமாய் ஓரே மூச்சாய் குடித்து விட்டது. தண்ணீர் தாகம்   தீர்க்க தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கலாம் மலையில். ஒரே ஒரு இடத்தில் மட்டும் பிளாஸ்டிக் தொட்டி சின்னதாய் இரும்பு சங்கிலியில் மரத்தோடு இணைத்து கட்டி வைத்து இருந்தார்கள். அதில் தண்ணீர் இல்லை.


இன்னொரு குரங்கு காரில் உட்கார்ந்து கொண்டு இருந்தது
காருக்குள்ளே என்ன இருக்கு என்று பார்வை

போன மாதம் போன போது எடுத்த படம்  தாயும், சேயும்

குரங்கின் குட்டியானது தன்னுடைய  முயற்சியால் தாயின் வயிற்றைப் பற்றிக் கொள்கிறது, அதுபோல பக்தன் தன்னுடைய முயற்சியால் இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்வது 'மர்க்கட நியாயம்'   என்பார்கள். 

பிரதோஷத்தன்று கோவிலுக்குப்
போனபோது அங்கு ஒரு வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தைச் சுற்றி ஆசனங்கள் அமைத்து இருந்தார்கள் அதில் ஒரு பெண் குழந்தை செப்பு சாமான் வைத்து சமைத்து விளையாடுகிராள்.


இன்னொரு பக்கம் திண்ணை அமைத்து இருந்தார்கள். மாலை நேரம் வேப்பமரக் காற்று வாங்கிக் கொண்டு  திண்ணையில் இளைப்பாறலாம்.
என் அம்மாவின் கல்சட்டி ,  கல்சட்டியை  மூடி  வைக்கும் மரத்தட்டு
இப்போது தம்பி வீட்டில் கோலப்பொடி போடும் பாத்திரமாய்

கடைசியாக ஆசைப்பட்டு வாங்கிய வெள்ளைக் கல்லில் செய்த மருதமலை ஆட்டுக்கல், அம்மி  கோவையில் இருக்கும் போது வாங்கியது இப்போது மூலையில்- கிரைண்டர் வந்து விட்டதால்.
திருவெண்காடு கோவிலில் துவாரபாலகருக்கு அருகில் மின் விசிறியைப்
பார்த்தவுடன்
 எடுக்கத் தூண்டியது. (முருகன் சன்னதி)

கள்ளன் ஒளிந்திருக்கும் வாழைப்பூ - கிச்சன் கார்னர்


காணாமல் போன கனவுகள் என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜியின் செய்முறைப்படி செய்தேன்.  வாழைப்பூப் புட்டு. நான் துவரம்பருப்பும், கடலைப்பருப்பும் சேர்த்து  அரைத்தேன். தேங்காய்ப் பூ போட்டேன். இது தான் கொஞ்சம் மாறுதல்.

வேக வைக்கும் முன்
வெந்தபின்

புட்டு ரெடி.

பஞ்சு மிட்டாய்  பஞ்சு மிட்டாய்!
பால்கனியிலிருந்து  எடுத்த படம்

அன்பாய் தலைகோதி

'சாதம் வைத்து விட்டாயா , அம்மா'  என்று கேட்கும் காகம். (எங்கள் வீட்டு பால்கனி).

வாழ்க வளமுடன்.