மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து,
தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே
கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். காலை
கண்விழித்தவுடன் இநத மங்கல பொருட்களைப் பார்த்தால் ஆண்டு
முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள். எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம்
செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள்.