( LAKE PLEASENT ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
( LAKE PLEASENT ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 பிப்ரவரி, 2018

அந்தி வானமும் ஏரியும்

அந்திவானம்

மகனுடைய ஊரில் தினமும் 
காலை மாலை வானத்தின் அழகைப் பார்ப்பது மிகவும் பிடித்த பொழுது போக்காய் இருந்தது . காலைக் கதிரவனின் தோற்றத்தையும், மாலை சூரியன் மறையும் போது வானம் செவ்வானமாய் மாறுவதையும் கண்டு மகிழ்ந்தேன் . அதில் சில உங்கள் பார்வைக்கு.

இங்கே கொடுக்கப் பட்டு இருக்கும் படங்கள் எல்லாம் மாலையில் எடுத்த படங்கள்.
சிறு பறவைகள்   கூடு திரும்புது
சிவக்கத் தொடங்கி விட்டது
நடைப்பயிற்சி செய்யும் போது எடுத்த படம்


காரில் போகும் போது எடுத்த படம்

மகன் வீட்டுக்கு எதிபுறம் உள்ள வீடு


மஞ்சள் வெயில்  மாலை

கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைக் கண்டு
மலை வாயில் சூரியன்
அந்தி வானமும் அந்தி விளக்கும்

இருளும் ஒளியும்
உதிக்கிறதா? மறைகிறதா ? என்ற மாயத் தோற்றம் தருகிறது

மஞ்சளும் கறுப்பும் சேர்ந்த இருட்டு ,நடைபாதையை  ஆக்கிரமித்த காட்சி.



கடை வளாகத்தின் அருகில் இருந்த மலையையும் அந்தி வானத்தையும் நான் ரசிப்பதைப் பார்த்த என் மகன்  பக்கத்தில் ஒரு இடம் இருக்கு . அங்கு சென்று
சூரியன் மறைவதைப் பார்க்கலாம் என்றான். உடனே லேக் ப்ளெசெண்ட்
 ( LAKE PLEASENT ) என்ற இடத்திற்குச் சென்றோம்

இந்த இடம்  பீனிக்ஸிலிருந்து 35 மைல் தூரத்தில் இருக்கிறது.

சூரியன்  மறைவதைப் பார்க்கவே அந்த இடம் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. மக்கள், குடும்பத்துடன் நட்புகளுடன் வந்து இருந்தார்கள். நாங்கள் கொஞ்சம் தாமதமாய்ப்போய் விட்டோம். சூரியன் மறைய ஆரம்பித்து விட்டது.      சூரியன் மறையும் நேரம் ஏரியைச் சிவப்பாய்க் காட்டுமாம். நாங்கள் தாமதமாய்ப் போனதால் கொஞ்சம் சிவப்பபாய்
இருந்தது.

இங்குள்ள எரி 10,000 ஏக்கர் நீர்ப் பரப்பு  உள்ளது. கொலராடோ ஆற்றிலிருந்து நீர் திருப்பிவிடப்பட்டு  அணைகட்டித் தேக்கி வைத்து இருக்கிறார்கள்.
260 அடி ஆழம் இருக்கிறது. 700 வண்டிகள் (கார்கள்) நிறுத்த வசதி உள்ளது.

365  நாளும் திறந்து இருக்கும் . 24 மணி நேரமும் உண்டு . குடும்பத்துடன்
 பிக்னிக் போக  ஏற்ற இடம்.வேகமாய் மோட்டார்ப் படகு ஓட்டுபவர்களுக்கு இந்த ஏரி மிகவும் உற்சாகம் தருமாம். காரில்  படகைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.  சொந்தப் படகு இல்லாதவர்களுக்கு வாடகை போட் கிடைக்கும். மீன் பிடிக்கலாம், பிடித்த மீனை அங்கே சமைத்து சாப்பிடுவார்களாம்.பாதுகாப்பான இடம் என்பதால் கூடாரம் அமைத்து அங்கே தங்குவார்களாம். இரவு நிலவொளியில் படகு சவாரி செய்வார்களாம்.

காலை முதல் மாலை வரை அங்கு இருக்க ஒரு காருக்கு 6 டாலர் வசூல் செய்கிறார்கள்.

கழுகு போன்ற பறவைகள் நிறைய இருக்கிறது என்கிறார்கள் . நாங்கள் போனபோது பறவைகளைப் பார்க்க வில்லை,  கூடு திரும்பும் நேரம் ஆகி விட்டதால் போலும்.


 .அங்கு எடுத்த படங்கள் அலை பேசியில் எடுத்த படம். காமிரா கொண்டு போகவில்லை, திடீர் என்று போனதால்.





குடும்பத்துடன் வந்து இருந்தார்கள் 
ஏரியின் அழகு, நீலவானம், செவ்வானம், நிலவும் தெரிய ஆரம்பித்து விட்டது.
மலை, செவ்வானம், ஏரி

இருட்ட ஆரம்பித்தவுடன் வீடு திரும்பினோம்.
                                                                           வாழ்க வளமுடன்.