இரண்டு நாட்களுக்கு முன் பெண் புறா ஜன்னல் ஜன்னலாக மாறி மாறி உட்கார்ந்து கொண்டு இருந்தது. கொஞ்ச நேரம் ஒரு ஜன்னலில் புகுந்து உட்காரும். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஜன்னலில் அமரும்.
நான் என் அலைபேசியில் அந்த படங்களை எடுத்து முகநூலில் போட்டேன். எந்த ஜன்னல் என் தனிமைச் சிறைக்கு வசதி ? என்று கேள்வி கேட்பது போல் போட்டு இருந்தேன்.
