புதன், 31 டிசம்பர், 2025

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்


ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டுக்கு போகும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில்.


அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

இந்த பதிவில் மார்கழி கோலமும் இடம் பெறுகிறது.

புதன், 24 டிசம்பர், 2025

அமைதியான இரவு பாலன் பிறந்த இரவு




நள்ளிரவில் மாட்டுதொழுவமதில் பிறந்த பாலகனை கொண்டாடும்  பண்டிகை

பேரன் கிறிஸ்தும்ஸூக்கு தயார் செய்த அற்புத நகரம்

உலகம் முழுவதும் உள்ள கிறித்துவ மக்கள்  அனைவருக்கும்  கிறிஸ்துமஸ் பண்டிகை நல் வாழ்த்துகள்.


ஏழை எளிய மக்களுக்கு,  குழந்தைகளுக்கு மற்றும் உற்றார் உறவுகள், நட்புகளுக்கு   பரிசு பொருட்களை வழங்கி  மகிழ்ச்சி படுத்தும்  நாளாக, சாண்டாகிளாஸ்  வருகையை எதிர்பார்க்கும் நாளாக  கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
  
 ஏசு பாலனை  வரவேற்க வீடுகளில் வண்ணவிளக்கு ,மற்றும் நட்சத்திரம் 
தொங்கவிடுவது  ,  குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்காரம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை.  மதசார்பற்ற பண்டிகையாக இப்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் மகன், மகள்  வீட்டில் அலங்கரிக்கப்பட்ட  கிறிஸ்துமஸ்மரம் மற்றும் பாடல்கள் இடம் பெறுகிறது. 

திங்கள், 15 டிசம்பர், 2025

கார்த்திகை தீபங்களும், சோமவார சங்காபிஷேகமும்



1 ஆம் தேதி மதுரை  "இம்மையிலும்  நன்மை தருவார்" திருக்கோயிலுக்கு போய் இருந்தேன். அன்று 3 வது சோமவாரம் . காலையே சங்குகள் தரிசனம் கிடைத்தது, மாலை அபிஷேகம் நடக்க  ஹோமம்   ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.