பனம்பூ மாலை, விற்கொடி, சேர வம்சத்தில் புகழ்பெற்ற அரசன் சேரன் செங்குட்டுவன். நான் ஒட்டி இருக்கும் படம் கதை சொல்கிறது தெரிகிறதா? சிறு வயதில் தமிழ் பாடத்தில் படித்து இருப்பீர்கள்.
குதிரை படை, யானைப்படை என்று ஒரு குதிரை, ஒரு யானை ஒட்டி இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள்.அப்போது இப்போது போல கூகுளில் படம் தேடி போட முடியாது , அதனால் கிடைத்த படம் ஒட்டி இருக்கிறேன்.
வேப்பம் பூ மாலை, மீன் கொடி, ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் இதிலும் பெரிய காப்பியத்தின் கதை இருக்கிறது.
எவ்வளவு வருடம் ஆகி விட்டது ! அரிசிக்கு பூச்சி எதுவும் வரவில்லை நிறம் மாறி இருக்கிறது. மிளகும் நன்றாக இருக்கிறது.
இரத்தினக்கற்களும், முத்துக்களும் எங்கள் மாலைகளிலிருந்து எடுத்தவை. அப்பா எந்த ஊர் போனாலும் வித விதமாக அழகிய டாலர் உள்ள மணி மாலைகள் வாங்கி வருவார்கள். அப்போதைய நாகரீகத்தை சொல்லும் மணிமாலைகள் நீட்டமாக இருப்பதால் தங்கைகள் விளையாடும் போது மாலைகள் அறுந்துவிடும், அந்த அறுந்த மாலைகளை எல்லாம் அம்மா மீண்டும் டாலர்களை வைத்து கழுத்துக்கு நெக்லஸ்ஸாக ஆக்குவார்கள் வித விதமாக.
உதிர்ந்த மாலை சில முத்துக்களை, டாலரில் உள்ள கற்களை குட்டி கவர் செய்து அதில் போட்டு நோட்டில் தைத்து கொடுத்தார்கள் அம்மா. அப்போது நல்ல பள, பளப்பாக இருந்தது, இப்போது ஒளி மங்கி இருக்கிறது.
இறக்குமதி பொருள் குதிரை, பட்டாடைக்கு படம் வைத்து இருந்தேன் அவை காணவில்லை.
குப்தர்கள் காலம் பொற்காலம் :-
நோட்டில் ஒட்டவில்லை எடுத்து வைத்து இருந்தது
நரசிம்ம வர்மன் மாமல்ல கடற்கரை கோயிலை கட்டினார். அங்கு சிற்பவேலைபாடு அமைந்த பஞ்சபாண்டவர் ரதங்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யானை,, சிங்கம் முதலியனவும்,பகீரதன் கங்கையை கொண்டுவந்த காட்சி, அர்ஜீனன் தவக்கோலம் எல்லாம் அற்புதமானவை.
இராஜ சிம்மன் காலத்தில் காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுண்ட நாதர் கோயில் எல்லாம் சிற்பகலைக்கும், இவருடைய கலை உள்ளத்திற்கும் எடுத்துக்காட்டு
மீதி வரலாற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------
காலை வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. தொடர்ந்த மன்னர்களின் வரலாற்றை ரசித்தேன். நம்மை ஆண்ட மன்னர்களின் வரலாறு அத்தனையையும் சிறப்பாக எழுதிய நோட்டுகள், ஒட்ட வைத்த படங்களோடு பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்த பாதுகாத்தலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
"சோழ நாடு சோறுடைத்து" என்ற வரிகளுக்கு ஏற்ப சேமித்த பொருட்களில், அந்த கால அரிசியின் தரம் எவ்வளவு சிறப்பாக உள்ளது. பார்க்கவே மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருந்த தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்ந்த அனைத்தும் நன்றாக உள்ளது.
தங்கள் எழுத்துக்கள் அழகாக இருக்கிறது. இன்னமும் அத்தனையையும் பெரிதாக்கி படித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு..பதிவு அருமையாக உள்ளது. தொடர்ந்த மன்னர்களின் வரலாற்றை ரசித்தேன். //
நன்றி.
//நம்மை ஆண்ட மன்னர்களின் வரலாறு அத்தனையையும் சிறப்பாக எழுதிய நோட்டுகள், ஒட்ட வைத்த படங்களோடு பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்த பாதுகாத்தலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//
வாழ்த்துகளுக்கு நன்றி.
//"சோழ நாடு சோறுடைத்து" என்ற வரிகளுக்கு ஏற்ப சேமித்த பொருட்களில், அந்த கால அரிசியின் தரம் எவ்வளவு சிறப்பாக உள்ளது. பார்க்கவே மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. //
பூச்சி மருந்துகள் அடிக்காத அரிசியாக இருக்கும், ஏற்றுமதிக்கு என்றால் தரமானைதை தானே அனுப்புவார்கள், அதுதான் சிறப்பானதாக இருக்கிறது.
//எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருந்த தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்ந்த அனைத்தும் நன்றாக உள்ளது.//
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
//தங்கள் எழுத்துக்கள் அழகாக இருக்கிறது.//
காலையில் நல்ல பாராட்டுக்கள், வாழ்த்துகள் எல்லாம் உங்களிடமிருந்து கிடைத்தது மகிழ்ச்சி.
//இன்னமும் அத்தனையையும் பெரிதாக்கி படித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
வாங்க வாங்க மெதுவாய் இன்று தை பூசம், முருகனை வழிபடும் நாள் அதைப்பற்றி எழுதவில்லையே என்று நினைத்தேன், முருகன் இந்த பதிவில் இடம் பெற்று விட்டார். எல்லாம் அவன் அருள்.
தாயாதிகளை தாயத்தார்கள் என்று சொல்லலாமா? ஒரு வரி முடியாமல் அடுத்த வரியில் மிச்சம் தொடர்ந்தால் அங்கு ஒரு கொடு இடவேண்டாமோ!!!
பதிலளிநீக்குகோவில் வெண்ணி என்று சொல்வதைவிட வெண்ணிப்பறந்தலை என்று சொன்னால்தான் நன்றாய் இருக்கிறது!!
பதிலளிநீக்குபாண்டிய நாடு பற்றிய பேப்பரில் ஒரு சதுரம் மட்டும் பிரவுன் நிறத்தில் இருக்கிறது! எண்ணெய் பட்டிருக்கிறதோ...
பதிலளிநீக்குமுக்கிய அரசர்கள் பேபப்ரிலும் அந்த பிரவுன் தடங்கள்.
இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. அந்தந்த பாடப்புத்தகங்களிலிருந்தே எடுக்கப்பட்டவை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்கு