புதன், 26 அக்டோபர், 2016

தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் !   பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள்   இருக்கும்.  அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம்  பார்ப்போம்.

சிறுவர் சிறுமியாக இருக்கும்போது புத்தாடை எதிர்பார்ப்பு,  வாண வேடிக்கைக்கு என்ன புது மாதிரி மார்க்கட்டுக்கு வந்து இருக்கிறது என்று பார்த்து வாங்குவது என்று ஆண்டு தோறும் தீபாவளி வருவதற்கு முந்திய மாதமே ஏற்பாடுகள் நடக்கும். சக வயது தோழி, தோழர்களிடம் நான் அது வாங்கப் போகிறேன், இது வாங்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்வது. கேப் வெடிக்க புது மாதிரி துப்பாக்கி , தூக்கத்திலும் கனவில் அதைப்பற்றிய நினைவுதான்.

பத்திரிக்கைகளில் தீபாவளி சமயத்தில் வரும் சிரிப்புகளில் முக்கியம், ”சட்டையைக் கொஞ்சம் பெரிதாகத் தையுங்கள் . வளரும் பிள்ளைகள் !”என்று தையல்காரர்களிடம் சொல்வது தான். எங்கள் வீட்டில் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  பெரியவளுக்குப்  பத்தாமல்  போனால் சின்னவள் போட்டுக் கொள்ளலாம்., பெரியவனுக்குப் பத்தாமல்  போனால் சின்னவன் போட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பா பொருத்தமான  அளவில் தான் வாங்குவார்கள் எல்லோருக்கும். வித விதமாக ரெடிமேட் உடைகள் தான் வாங்குவார்கள்.பாவாடை, தாவணி போடும்போது மட்டும் தைக்கப்பட்டது. அதை அக்கா அழகாய்த் தைத்துத் தருவார்கள். இப்போது அதுவும் ரெடிமேட் கிடைக்கிறது.

 இப்போது போல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு இல்லை என்றாலும்  வார, மாத இதழ், தீபாவளி  சிறப்பிதழ்  மூலம் நமக்குக் கிடைத்து விடும். வானொலியிலும் தீபாவளிச் சிறப்புத் தேன் கிண்ணம், தீபாவளிப் பாடல்கள் என்று  தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கேட்கலாம்.

இப்போது மாதிரி எப்போது வேண்டுமென்றாலும் (நினைத்தபோது எல்லாம்) துணி எடுக்கும் வழக்கம் எல்லாம் அப்போது இல்லை. தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் மட்டும்தான்.  ஏதாவது துணி அதிகப்படியாக எடுத்தது இருந்தால் அது கார்த்திகைக்கும் கிடைக்கும். அதுபோல் தான் வெடிகள் மத்தாப்பு, மற்றும் பூச்சட்டி எனும் புஸ்வாணம், இதைக் கொஞ்சம் கார்த்திகை தீபத்திற்கு என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் அம்மா.( எல்லாவ்ற்றையும் ஒரே நாளில்கொளுத்திக் கரியாக்காதீர்கள் என்பது அம்மாவின் கருத்து) அப்பா,” குழந்தைகளை திருப்தியாக வெடிக்க விடு! கார்த்திகைக்கு வேறு வாங்கிக் கொள்ளலாம் ”என்பார்கள். பூஜையின் போது சரவெடி வெடிக்கப்படும்.

 10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் தயார் செய்வார்கள் அம்மா. பிஸ்கட் டின்கள், மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள்.

தீபாவளிக்கு முன்பே ,தினமும் பலகாரங்கள் சாப்பிடுவது, தீபாவளிக்கு வாங்கிய துணிமணிகளை  வீட்டுக்கு வந்தவர்களிடமும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வது என்று மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது தீபாவளித் திருநாள்.

தீபாவளி அன்று வீட்டில் சாமி கும்பிட்டபின் புத்தாடைகளைக்கட்டிக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, உறவினர்களுக்கு என்று பலகாரம் கொடுத்து வரச் சொல்வார்கள் அம்மா . இந்த வெடிகளை வெடித்து விட்டு கொஞ்சநேரம் கழித்துச் செல்கிறோம் என்றால் விட மாட்டார்கள் . ”முதலில் கொடுத்து விட்டு வந்து, சாப்பிட்டு விட்டு,அப்புறம் போய் நிதானமாய் வெடிகளை வெடிக்கலாம் ”என்பார்கள்.

சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான். அப்பா திட்டுவார்கள்,” விதவிதமாய் வெடிகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன், இதை எங்கு இருந்து வாங்கினான்? காதை அடைக்கிறது” என்று. அப்போதெல்லாம்  எல்லாப் பையன்களும் அப்படி வெடிப்பார்கள். அப்புறம் அது தடை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

 வட்டமாய் நட்டு போன்ற அமைப்பில் பொட்டுவெடிகளை வைத்து, தரையில் ஓங்கி அடிக்கும் உத்தி வந்தது. ஓலை வெடியை தனித் தனியாகப் பொருத்திப் போட, ஆளுக்கு ஒரு பாக்கெட் உண்டு.  ஊசி வெடியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உண்டு.. அதுவும் ஆளுக்கு ஒரு பாக்கெட்,

பட்டர்பிளை, பாம்புமாத்திரை, என்று தனித்தனியாக எடுத்துக் கொண்டு அவரவர்களுடைய  நண்பர்களுடன் கதைகள் பேசி மகிழ்ந்து வெடிப்போம்.  ஒன்று ஒன்றாக வெடிக்கச் சோம்பல்பட்டும் சத்தம் அதிகமாய் கேட்க ஆசைப்பட்டும் ஆறு ஏழு ஊசி வெடியின் திரிகளை  ஒன்றாகச் சுற்றி வைத்து வெடித்து  மகிழ்வோம்.

ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து
கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.

பெரிய வெடிகள், லட்சுமிவெடி, பெரிய சரம் , தரை சக்கரம், புஸ்வாணம் எல்லாம்  அப்பா பக்கத்தில் இருக்கும் போது தான் வெடிக்க வேண்டும் என்பது கட்டளை. அது எல்லாம் இரவுதான். எல்லோரும் பார்த்து ரசிப்பதற்கும் பாதுகாப்பை உத்தேசித்தும்.

’பார்த்தால் நிறைய பகிர்ந்தால்  கொஞ்சம் ’என்பது போல்  அம்மா செய்த பலகாரங்கள்  மட மட என்று குறைந்து விடும், டின்களில்,  ”என்னம்மா! பலகாரம் கொஞ்சம் தான் இருக்கு போல”  என்றால், ”மறுபடியும் செய்துகொள்ளலாம்.” என்பார்கள் . கொஞ்சத்தை வேறு பாத்திரத்தில் முன்னதாகவே எடுத்து வைத்து இருப்பார்கள் . டின்களில் உள்ளதை காலி செய்தபின் அவை வெளியே வரும்.  கார்த்திகை வரை இந்த பலகாரம் ஓடும் அடுத்து கார்த்திகைக்கு அவல்பொரி, நெல்பொரி, அரிசி பொரி உருண்டைகள் அப்பம் என்று வந்து விடும்.

அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஆனந்தமாகக் கொண்டாடிய தீபாவளி
எப்போதும் மனதை விட்டு நீங்காத மகிழ்ச்சியான தருணங்கள்.. இப்போதும் தம்பி, தங்கைகள் கூப்பிட்டார்கள் ,”  உங்களுக்கு இந்த வருடம் தீபாவளி கிடையாதே! இங்கு  வாருங்கள்  எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்” என்று.

திருமணம் ஆனவுடன், தலை தீபாவளியைப் புகுந்த வீட்டில் கொண்டாடியதும் மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் பக்கம் பண்டிகை விழாக்கள் எல்லாம் கணவன் வீட்டில் தான்!  பெண்வீட்டார் , வரிசைகளைக் புகுந்த வீட்டில் கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள்.

என் அப்பா தீபாவளிக்கு முன் கோவைக்கு என் மாமனார் வீட்டுக்கு வந்து, சீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.. வைலட் கலரில் இளம் மஞ்சள் கலர் பார்டர்-  உடல் முழுவதும் நட்சத்திர ஜரிகை வேலைப்பாடு- கொண்ட பட்டுப்புடவை மற்றும் தேன்குழல், நெய் உருண்டை, காரசேவ், சோமாசி எல்லாம் கொடுத்து விட்டிருந்தார்கள் அம்மா.

எங்கள் மாமனார் வீட்டில் ஒவ்வொரு தீபாவளிக்கும் போட்டோ ஸ்டுடியோவுக்குச்  சென்று குடும்பப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
அதை மனதில் வைத்துக் கொண்டு  சீர் கொடுக்க வந்த அப்பாவிடம் நான்,
”தீபாவளிக்கு அம்மாவுக்கு என்ன புடவை எடுத்தீர்கள்?  நீங்களும் அம்மாவும் போட்டோ  எடுத்து அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை ஊருக்கு வழி  அனுப்பி வைத்தேன்.  (அப்பா என் கண்ணில் இருந்து மறையும் வரை
பார்த்துக் கொண்டு இருந்தேன். அது தான் அவர்களைக் கடைசியாக நான் பார்ப்பது என்று அப்போது தெரியாது ,) அப்பாவும் ஊருக்குப் போய்  போட்டோ எடுத்து அனுப்பினார்கள். கார்த்திகை சோமவாரத்தில் இறந்து போனார்கள் அப்போது  அவர்களுக்கு வயது 51. தீபாவளி வரும் போதெல்லாம் அப்பாவின் வருகையும் நினைவுக்கு வரும்.
                            

இப்போது ஒரு வெடி டப்பாவில் இருந்து பலவெடிகள் வெடித்துக் கொண்டே இருப்பது போல், எங்கள் தலைதீபாவளியின் போது   ’டபுள்ஷாட் " எனும் வெடிகள் வந்திருந்தது. கணவர் அதை வாங்கி வந்தார்கள். கீழே ஒரு வெடி வெடித்து விட்டு, மேலே போய் இன்னொரு வெடி வெடிக்கும். இலட்சுமி வெடி, சரவெடிகள், அணுகுண்டுகள், ராக்கெட், சாட்டை, பென்சில், வித வித  மத்தாப்புகள்,  என்று வாங்கிவந்தார்கள்.

இப்படி தீபாவளிக்கு வெடித்து  வந்ததில் ஒரு மாற்றம்- நானும் அம்மா ஆனவுடன். குழந்தைகள் நிறைய வெடிக்க வேண்டும் என்பதால் நான் வெடிப்பதைக் குறைத்துக்கொண்டேன்.  அவர்கள் வெடிப்பதைப் பார்த்து ஆனந்தம் அடைவதுடன் நிறுத்திக் கொண்டேன். இருந்தாலும் என் பிள்ளைகள் கொஞ்சமாவது என்னை வெடிக்க வைப்பார்கள்.

:”வெடி ரோக்கா ”(வெடியின் பெயர், விலை விபரம் உள்ள சீட்டு) வாங்கி வந்து ,
என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று குறித்துக் கொண்டு அப்பாவும் மகனும், மகளும் கடைக்குப் போவார்கள்.  அதன்படி வாங்கி வருவார்கள்.
இப்போது தங்கள் ஊரில் வெடிக்க முடியாது என்பதால், மகன் இங்கு தீபாவளிக்கு வந்தால் இஷ்டம் போல் விதவிதமாய் வெடிகள் வாங்கி வெடித்து மகிழ்வான்.

சிறுவயதில், எங்கள் மகன் பகலில் சாட்டை வைக்க வேண்டும் என்று
”சாட்டை! சாட்டை” என்று அழுதான். அவனது அழுகையைக்  டேப் செய்ய ஆசைப் பட்டு சாட்டையை கொடுக்காமல் பகலில் சாட்டை வைக்க கூடாது என்று சொல்லி மேலும் அழ வைத்து டேப் செய்தார்கள். எல்லோரும் எதுக்கு அழுகிறாய் என்று கேட்டால் மறுபடியும் ஆரம்பிப்பான் ”சாட்டை சாட்டை” என்று  இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து கலாட்டா செய்ததை  டேப்பில் பதிவு செய்து வைத்து இருந்தோம்.   அடிக்கடி போட்டுக் கேட்டு மகிழ்வோம்.

என் மகன் வெகு நாட்களுக்கு அப்பா மாதிரி சட்டை தான் வேண்டும் என்பான். இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்துத் தைக்கக் கொடுப்போம். கல்லூரி சென்றபின் தான் ”அப்பாவுக்கு வேறு வாங்க வேண்டும். எனக்கு வேறு வாங்க வேண்டும். அப்போதுதான்  இரண்டு சட்டைகளையும் நான்  போடலாம்” என்பான்.

என் பெண்ணுக்கு நான் எடுத்துக் கொடுக்கும் துணிகள் பிடிக்கும். அம்மா
செலக்ட் செய்தால் மிக அருமையாக இருக்கும் என்பாள். இப்போது காலம் மாறுது கருத்துகளும் மாறுது . இப்போது சேலை மட்டும் தான் என் தேர்வு. மகள் மருமகளுக்கு எல்லாம்,   மாடல் உடைகள் அவர்கள் தேர்வு.

அத்தையும் அம்மாவைப் போலவே ருசியாக  நிறைய பலகாரங்கள் செய்வார்கள்.  கை முறுக்கு, தட்டை,  மைசூர்பாக், பாதாம் ஸ்வீட் , நெய் உருண்டை என்று எல்லாம்  செய்வார்கள்..

அம்மாவைப் போல நானும் தீபாவளி சமயம்  பலகாரங்கள் நிறைய செய்தகாலம் உண்டு. இப்போது  ஏதோ கொஞ்சம் செய்கிறேன்.  புதிது புதிதாக
செய்த  ஆர்வம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் தீபாவளி அன்று புதுவகையான இனிப்புதான் ஒவ்வொரு வருடமும். இறைவன் அருளால் அது நன்றாக அமைத்து விடும்.

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு  என்ற பதிவில் எங்கள் வீட்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றி ஆதவன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருப்பேன்.  எங்கள் வீட்டுத் தீபாவளி எப்படி இருக்கும் என்பதை படிக்க விரும்பினால் படிக்கலாம்.

புத்தகத்தில் படித்த  தீபாவளி கருத்துக்கள்  :-

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. துலாமாத மகாத்மியத்தில் தீபாவளியைப் பற்றி குறிப்பிடும் போது “தையலே லட்சுமி! ஜல கங்கா” என்றுவருகிறது.அன்று எந்த இடத்தில்   குளித்தாலும்  கங்கையில் குளித்த பலன் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் தீபாவளியை ”எண்ணெய்த் திருவிழா ”என்றே குறிப்பிட்டார்களாம்.

தீப ஒளி வழிபாடு நம் பண்பாடு, இறைவன் இசையால் மகிழ்பவன். இசையின் மூலம் ஒலி  இசையாக மாற்றாமல் ஒலியையே இறைவனுக்கு சமர்ப்பிப்பது வெடி வழிபாடு. ஒளி வழிபாட்டோடு  ஒலி வழிபாடும் இறைவனுக்கு உகந்ததே! கோவில் திருவிழாக்களில் வெடி வெடித்தும் பல்வண்ண வாணவேடிக்கைகளும் இடம்பெறும்.

தீபாவளி என்பது இறைவனுக்கு நாம் செய்யும் ஒளி, ஒலி வழிபாடு. எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலவித பக்ஷணங்கள், பெரியவர்களிடம்
 ஆசி பெறுதல், வெடி வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல், ஆலயம், செல்லுதல், அனைத்தும் தீபாவளி கொண்டாட்டங்களில் இருப்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் பண்டிகை..

பெரியவர்களிடம் ஆசி பெறுதல் எனும்போது என் மாமனார் அவர்களின்  நினைவு வந்து விட்டது.  முன்பு எல்லாம் அவர்கள் கடிதம் எழுதும் போது ”தீபாவளிக்கு முன்னதாக  வந்து சேருங்கள் ”என்று எழுதுவார்கள். போன தீபாவளிக்கு மகனுடன் அவனது ஊரில் கொண்டாடியதால்  கோவையில்  இருக்கும் மாமாவிடம் ஸ்கைப் மூலம்  ஆசி பெற்றோம். இந்த வருடம் தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள். அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.


மகன், மருமகள் பேரனுடன் கொண்டாடடிய போன தீபாவளியை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம் இப்போது.   குழந்தைகள் வரும் நாளே தீபாவளிப் பண்டிகை  போல் மகிழ்ச்சி தரும் நாள்.

காலையில் இறைவனை வழிபட்டு,  தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு,  பின் பலகாரங்கள் சாப்பிட்டு,  வாணங்களைக் கவனமாய்  வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

                                                         வாழ்க வளமுடன்!

                                                                    -----------------

34 கருத்துகள்:

  1. நன்றி சகோதரியாரே
    தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார் , வாழ்க வளமுடன்.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நினைவுகள் நித்தியமானவை. நினைக்க நினைக்க அவ்வப்போது புது வர்ண்ங்களைக் கூட பூசிக்கொள்ளும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள், கோமதிம்மா.

    பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. சாட்டைபோலவே மிகவும் நீண்ட அழகான அருமையான பகிர்வு.

    நாமெல்லாம் ஓரளவு சம வயதினர்கள் என்பதால், இதனை ஒவ்வொரு வரியாகப் படித்து வரும்போது, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ......

    >>>>>

    பதிலளிநீக்கு

  5. ஸார் வரைந்துள்ள படம் அருமை. அதுவும் இருட்டினில் கலசம் (பூச்சட்டி) பிரகாசித்து எரிவதுபோல வரைந்துள்ளது அவரின் தனித்திறமையாக உள்ளது.

    அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்களைச் சொல்லவும்.

    >>>>>

    பதிலளிநீக்கு

  6. தீபாவளியை ஒட்டி (நல்ல வேளையாக தீபாவளிக்குப் பிறகு ஐப்பசி போய் கார்த்திகையில்) தங்களின் தந்தையின் மறைவுச் செய்தி எவ்வளவு தீபாவளி வந்து போனாலும் மறக்க முடியாததோர் வருத்தம் மட்டுமே.

    அவர் தீபாவளியன்று தங்கள் தாயாருடன் எடுத்துக்கொண்ட போட்டோ அனுப்பியுள்ளதில் ஓர் சின்ன ஆறுதல்.

    51 வயது என்பது மிகவும் சிறிய வயது மட்டுமே. கிருத்திகா ஸோமவாரத்தில் மறைவு என்பதால் சிவனடி சேர்ந்திருப்பார்கள் என்பதை நினைக்க நமக்குக் கொஞ்சம் கூடுதல் ஆறுதல்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "தீபாவளி வாழ்த்துக்கள்.":


    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "தீபாவளி வாழ்த்துக்கள்.":


    தீபாவளியை ஒட்டி (நல்ல வேளையாக தீபாவளிக்குப் பிறகு ஐப்பசி போய் கார்த்திகையில்) தங்களின் தந்தையின் மறைவுச் செய்தி எவ்வளவு தீபாவளி வந்து போனாலும் மறக்க முடியாததோர் வருத்தம் மட்டுமே.

    அவர் தீபாவளியன்று தங்கள் தாயாருடன் எடுத்துக்கொண்ட போட்டோ அனுப்பியுள்ளதில் ஓர் சின்ன ஆறுதல்.

    51 வயது என்பது மிகவும் சிறிய வயது மட்டுமே. கிருத்திகா ஸோமவாரத்தில் மறைவு என்பதால் சிவனடி சேர்ந்திருப்பார்கள் என்பதை நினைக்க நமக்குக் கொஞ்சம் கூடுதல் ஆறுதல்.

    பதிலளிநீக்கு
  9. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "தீபாவளி வாழ்த்துக்கள்.":


    //சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான்.//

    அதன் பெயர் வேட்டுக்குழாய் என்பது.

    இப்போது ஒரு 50 வயதுக்குள் உள்ளவர்களுக்கு இதைப்பற்றியே ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை இந்த என் பதிவின் பின்னூட்டங்கள் மூலம் அறிந்துகொண்டுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2011/03/2.html

    >>>>>

    Publish
    Delete
    Mark as spam

    Moderate comments for this blog.

    Posted by வை.கோபாலகிருஷ்ணன் to திருமதி பக்கங்கள் at October 26, 2016 at 9:17 PM

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
    நீங்கள் சொல்வது சரிதான். நினைவுகள் நித்தியமானவை.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    இந்த பதிவு மீள் பதிவு. போன தடவை போட்ட போதும்
    இரண்டு மூன்று பின்னூட்டங்கள் போட்டு உற்சாகப்படுத்தினீர்கள்
    இப்போதும் அது போல் ஐந்து பின்னூட்டங்கள் கொடுத்து இருந்தீர்கள்.
    இரவு கைபேசியில் அதை படித்தேன், அடுத்து அடுத்து படிக்கும் ஆவலில்
    சில பின்னூட்டங்களை வெளியிட மறந்து விட்டேன்.
    அடுத்து மீண்டும் பார்த்து வெளியீட முயன்றால் The comment doesn't exist or no longer exists. என்று வருகிறது.
    அதனால் வெளியிட மறந்த பின்னூட்டங்களை நகல் எடுத்து இங்கு ஒட்டி இருக்கிறேன் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் பதிவு சாட்டை போல் நீண்டுதான் போய் விட்டது.
    என் நினைவலைகள் உங்கள் அந்த நாள் நினைவுகளை கொண்டு வந்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  13. நாமெல்லாம் சிலகாலமாக பழைய தீபாவளி பற்றியே பேசுகிறோம்! வயதாவதால் சிறுவயதுக் கொண்டாட்டங்கள் இல்லாதது காரணமா? அல்லது டெக்னாலஜிகளால் கவனம் சிதைக்கப்படாத, பாதிப்பில்லாத அந்தக் கால தீபாவளியின் சுவாரஸ்யம் இனி என்றும் இந்தக் காலத்தில் வராது!

    பதிலளிநீக்கு
  14. மீள்பதிவா? ஸார் படம் ஸூப்பர். ஏற்கெனவே பார்த்த நினைவு இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    சுத்தியல் போன்ற அமைப்பில் கந்தகம் வைத்து தரையில் அடிப்பதன் பெயர்
    வேட்டுக்குழாய் என்று தெரிந்து கொண்டேன்.
    உங்கள் பழைய பதிவை முன்பும் படித்த நினைவு, மீண்டும் படிக்கிறேன்.
    தெரியதவர்கள் தெரிந்து கொள்வார்கள் உங்கள் பதிவை படித்து.
    உங்கள் பதிவு சுட்டிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    சாரின் ஓவியத்தை பாராட்டியது அறிந்து சார் மகிழ்ந்தார்கள்.
    பழைய பதிவுதானே என்று இல்லாமல், அன்றும், இன்றும் புதிதாக படிப்பது போல் பாராட்டும் கருத்தும் சொன்னத்ற்கு மிகவும் மகிழ்ச்சி சார்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    ஆமாம் சார், நீங்கள் சொல்வது போல் எத்தனை தீபாவளி வந்து போனாலும் தலை தீபாவளிக்கு அப்பா வந்து போனதை மறக்க முடியாது தான் சார்.
    அப்பா நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க படம் எடுத்து அனுப்பியது ஆறுதல்.
    கிருத்திகை சோமாவாரமும் அவர்கள் நினைவு வரும். நீங்கள் சொல்வது போல் சிவனடிதான் சென்று சேர்ந்து இருப்பார்கள்.

    அன்பான, ஆறுதலான பின்னூட்டங்கள் கொடுத்தமைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  18. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
    உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சார்.
    மீண்டும் இது போல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.
    உங்கள் கருத்துக்கள் வந்தவுடன் வெளியிட்டு விடுவேன்.
    தொடர் கருத்துக்கள் கொடுத்தமைக்கு நன்றி, நன்றி, நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மை.
    வயதான காரணமும், பழைய மாதிரி தீபாவளி பண்டிகை உறவுகளுடன் கொண்டாட வாய்ப்பு இல்லை என்ற காரணமும்தான் இப்படி நினைவுகளை பகிர வைக்கிறது.

    //டெக்னாலஜிகளால் கவனம் சிதைக்கப்படாத, பாதிப்பில்லாத அந்தக் கால தீபாவளியின் சுவாரஸ்யம் இனி என்றும் இந்தக் காலத்தில் வராது!//


    அதோடு நீங்கள் சொன்னது போல் டெக்னாலஜியும் ஒரு காரணம் தான்.
    கடல் அலை ஓய்வது இல்லை அது போல் நினைவலைகளும் ஓய்வது இல்லை.

    நாம் மட்டும் இல்லை, நம் பின் வருபவர்களும் நினைவலைகளை பகிர்ந்து கொண்டு தான் இருப்பார்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அன்றைய மகிழ்ச்சியும் உற்சாகமும் இனி மீண்டும் வருமா என்பது ஒரு கேள்விதான்..

    எனினும் - காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை...

    அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    இந்த பதிவு மீள் பதிவு தான்
    கீழே லேபிளில் மீள் பதிவு என்று போட்டு இருக்கிறேன்.

    சார் படத்தைப் பார்த்து பக்கத்தில் வீடுகளே இல்லையே ! என்று கேட்டு இருந்தீர்கள்.
    மீண்டும் வந்தைமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான். காலங்கள் மாறினலும் காட்சிகள் மாறுவதில்லைதான்.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. மீள் பதிவாக இருந்தாலும் நான் இப்போதுதான் முதல் முறையாகப் படிக்கிறேன். அழகாக எல்லா நினைவுகளையும் மலரச் செய்திருக்கிறீர்கள். கேப் என்பதைத் தானே நீங்கள் வேட்டுக்குழாய் என்று சொல்லியிருக்கிறீர்கள்?

    நம் வாழ்க்கை மாறியதுபோல தீபாவளிக் கொண்டாட்டங்களும் மாறிவிட்டன, இல்லையா?
    சாரின் படத்தை மிகவும் ரசித்தேன்.
    அவருக்கும், உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    வேட்டு குழாய் என்று சொன்னது நான் இல்லை கோபாலகிருஷ்ணன் சார். நான் சுத்தியல் மாதிரி இரும்பு குழாய் என்றேன், பைப் குடிப்பது போல் இருக்கும் பைப் குட்டையாக இருக்கும் இது நீட்டமாய் இருக்கும் . அதில் கந்தக பொடி வைத்து அடைத்து நட்டு போட்டு முறுக்கி தரையில் ஓங்கி அடித்தால் சத்தம் பயங்கரமாய் வரும்.

    நம் வாழ்க்கை முறை மாறி விட்டது நீங்கள் சொல்வது போல், கொண்டாட்டங்களும் மாறிதான் விட்டது.

    சாரின் படத்தை ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. மலரும் நினைவுகளின் மீள் பதிவு மீண்டும் வாசிக்க அருமை. மீட்டெடுக்கிறது எங்கள் தீபாவளி நினைவுகளையும்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    தீபாவளி நினைவுகளில் நீங்களும் ஆட்பட்டீர்களா? மகிழ்ச்சி.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  28. தங்களின் பதிவை படித்ததும் எனக்கும் சிறு வயதில் கொண்டாடிய தீபாவளி நினைவு வந்து போனது. வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  29. ம்ம்ம் அருமையான தீபாவளி நினைவுகள். தாமதமான தீபாவளி வாழ்த்துகள். எங்க பொண்ணுக்கும் ஒரு காலத்தில் நான் தேர்வு செய்து எடுத்துக் கொடுக்கும் துணிகள் மிகப் பிடிக்கும். அக்கம்பக்கமும் பாராட்டுவாங்க. இப்போதெல்லாம் உங்களைப் போல் நானும் புடைவை மட்டுமே தேர்வு செய்து எடுத்துக் கொடுக்கிறதோடு நிறுத்திக் கொண்டேன். காலம் மாறுகிறது அல்லவா?எனக்கும் சின்ன வயசு தீபாவளி நினைவுகள் வந்தன.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோ சாரதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு