செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

நானும் என் கணவரும் கடந்த வாரம் உறவினர் திருமணத்திற்காக மதுரை போய் இருந்தோம்.
திருமண வீட்டில் மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்ய அழகான குங்குமச் சிமிழில் அட்சதை அரிசியை போட்டு தந்தார்கள். இருந்த இடத்திலிருந்து அட்சதையை போடும் போது அது மற்றவர்கள் மேல் தான் விழும். மணமக்களுக்கு பரிசு பொருள் கொடுக்க போகும் போது அட்சதையைப் போட்டு வாழ்த்திவரலாம்.இன்னொரு வீட்டுக் கல்யாணத்தில் எல்லோரும்’அப்படியே இருங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு மணமக்கள் வருவார்கள் அப்போது அட்சதைப் போட்டு ஆசிர்வாதம் செய்யுங்கள்’ என்றார்கள். இது நல்ல யோசனையாக இருந்தது. வயதானவர்கள் படி ஏறி கூட்டத்தில் இடித்துக் கொண்டு போகாமல் இருந்த இடத்தில் வாழ்த்த முடியும்.

திருமண வீட்டில் வெகு நாள் பார்க்காத உறவுகள், நண்பர்களைப் பார்த்து அன்பை பரிமாறி கொண்டபின் ’ஒரு வாரம் நீ இருந்து வா நான் அடுத்த ஞாயிறு வந்து அழைத்துப் போகிறேன்’ என்று என் தங்கை வீட்டில் விட்டு விட்டுப் ஊருக்கு போய்விட்டார்கள். எல்லோரும் 'மதுரைக்கு நல்ல மழை தான்' என்றார்கள். பின்ன, எப்போதும் விசேஷத்திற்கு வந்துவிட்டு ஒடினால், இப்படித்தான் சொல்வார்கள்.

அவர்கள் சொன்ன மாதிரி நல்ல மழை தான் பெய்தது. தல்லா குளப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஆகி மண்டல பூஜை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்கள். திருவிழா வேறு நடக்கிறது இன்று கருட வாகனம் என்றார்கள், அதற்குப் போனோம்.
மாலை 4.30க்கு போனதால் கூட்டம் இல்லை. கருட வாகனத்தில் அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் பார்க்க முடியாத படி சுற்றிலும் திரைச்சீலையால் மறைத்து விட்டார்கள்.

உள்ளே பெருமாளை பார்த்து விட்டு வரும் போது என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. தங்கைகளும் நானும் அம்மாவுடன் மார்கழி மாதம் காலை 4.30க்கு பசுவும் கன்றும் வந்து பால் கறந்து பல்லாண்டு பாடி கதவைத் திறக்கும் போது சென்று வணங்கிய நினைவு வந்தது. சுடச் சுட வெண்பொங்கல் பெரிய நெல்லிக்காய் அளவுதான் தருவார்கள். வாங்கி உண்டு விட்டு அடுத்த கோவிலுக்கு அம்மாவின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டு போவதைப்பற்றி பேசிக் கொண்டே ஆட்டோவில் ஏறினோம். அப்போது நரிமேட்டிலிருந்து நாங்கள் அம்மா,பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று பேசிக்கொண்டே நடந்தே போவோம். இப்போது ஆட்டோ,டாக்ஸி,கார் என்று போகிறோம், ஆனால் அப்போது உள்ள மகிழ்ச்சி இல்லை.

அடுத்து நாங்கள் சென்ற கோயில் ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் ஆகும்.
அந்த கோவிலில் இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள் .
கோவில் பக்கத்தில் உள்ள பழைய போலீஸ் ஓட்டுக் குடியிருப்புகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாய் மாறிவருகிறது. ஒரு சில பழைய வீடுகள் இன்னும் இருக்கின்றன. அதை அப்புறம் கட்டுவார்கள் என நினைக்கிறேன்.பக்கத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில்
மார்கழி மாதம் போகும் போது காலை போலீஸ் மார்ச்பாஸ்ட் நடக்கும்,வாத்தியங்கள்(பியூகிள்) வாசித்துக் கொண்டு இருப்பார்கள். போலீஸ் பாரேட் நடப்பதைப், பார்க்க அழகாய் இருக்கும்.
மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை வெகு சிறப்பாய் நடந்ததாம் என் தங்கை சொன்னாள்.
தினம் அன்னதானம் நடக்கிறது .

அழகர் பூ பல்லாக்குப் பார்க்க மாரியம்மன் கோவில்தான் வருவோம். அழகான பூப் பல்லாக்கு கோவில் பக்கம் வரும் போது வாடிவிடும். தல்லாகுள பெருமாள் கோவில் அருகில் எதிர் சேவையின் போது வாணவேடிக்கை மிகவும் நன்றாக இருக்கும்.வித,விதமாய் வெகு நேரம் வாணவேடிக்கை நடக்கும்.

ஒவ்வொரு முறை போகும் போதும் நேரம் இருந்தால் மதுரை மீனாட்சியைப் பார்க்க போவோம்.கும்பாபிஷேகம் ஆனபின் போக முடியவில்லை.ஒரு முறை போனபோது முதல் ராஜகோபுர வாசலிருந்து கூட்டம். எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று போனால் பொற்றாமரைக் குளம் வரைதான் போக முடிந்தது. அதன் பின் தடுப்பு மூங்கில்கழியை தாண்டி
காவலுக்கு நின்ற பெண் போலீஸ் அதிகாரியிடம் சொல்லிவிட்டு ‘சுவாமியைப் பார்க்க போகிறோம் மீனாட்சியை பார்க்க முடியாது ஒரே கூட்டமாய் இருக்கிறது’ என்றோம் அந்த பெண் போலீஸ் ’மீனாட்சியைப் பார்த்தாலும் சுவாமியைப் பார்த்தாலும் ஒன்று தான் போங்க,போங்க’ என்றார்கள்.

இந்தமுறை எனக்கு இரண்டு முறை மீனாட்சிஅம்மனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்து.
புதன்கிழமை,சனிக்கிழமை என்று ஒரே வாரத்தில் இரண்டு முறை பார்த்து விட்டேன்.

என் தங்கையின் பெண் ’செவ்வாய்,வெள்ளி,கூட்டமாய் இருக்கும் அப்போது போககூடாது பெரியம்மா! புதன்கிழமை போகலாம்.’ என்றாள். எனக்கும் அன்று பிறந்தநாள். அம்மாவிடம் ஆசி பெற்று வரலாம் என்று போனோம். இலவசமாய் செருப்பு பாதுகாக்க அழகான கட்டிடங்கள் உள்ளது. நான்கு வீதிகளிலும் சுற்றிவந்து கோபுரங்களைத் தரிசிக்க பேட்டரி கார் வசதி உள்ளது.வேறு வாகனக்களுக்கு அங்கு அனுமதி இல்லை.

அம்மன் சன்னதிக்கு முதலில் போனோம். ஊஞ்சல் பக்கம் அம்மனின் சேலைகள் ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ஏலத்தில் பத்து பத்து ரூபாயாகத்தான் ஏற்ற வேண்டுமாம். அம்மனின் பட்டுப்புடவைகள் என்னவாயிற்று? எல்லாம் பாலியஸ்டர் பட்டு புடவைகள். ஒரு புடவைக்கும் அடுத்தபுடவைக்கும் ஏலம் விட நேரம் ஆனது. கூடி இருப்பவர்கள் சீக்கிரம் ஏலம் விட சொன்னார்கள். மடி கணினியை வைத்துக் கொண்டு புடவையின் எண், விலை பார்த்து ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். நேரம் ஆகிவிட்டதால் ஒரு அம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் போலும் ஏலம் விடுபவர் மைக்கில் கன்னத்தில் இருந்து கையை எடுங்கள் அல்லது இடத்தைவிட்டு நகருங்கள் என்று அதட்டிக்கொண்டு இருந்தார்.

பிள்ளையாருக்குப் பக்கத்திலிருந்து வரிசை ஆரம்பித்து விடுகிறது. கூட்டம் அவ்வளவாய் இல்லை. விறு,விறு என்று நகர்ந்து விட்டது கூட்டம்,15ரூபாய் கட்டணம் ஒரு பக்கம்,இலவச வரிசை ஒரு பக்கம் என்று போனதால் நெரிசல் இல்லாமல் பார்க்க முடிகிறது. உள்ளே போகும் அர்ச்சகர் கொஞ்சம் விலகி நின்றால் இன்னும் சீக்கிரம் பார்க்கலாம். அம்மன் சன்னதியை விட்டு வெளியே வந்தால் என் தங்கை பெண், 'பெரியம்மா சுழலும் லிங்கம் பார்த்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டாள். ’பார்த்தது இல்லையே எங்கு இருக்கு’ என்று கேட்டேன் ’மேலே அப்படியே விதானத்தை பாருங்கள்’ என்றாள். அண்ணாந்து பார்த்தால் லிங்கம் நம்மை நோக்கி உள்ளது .நாம் எந்தப்பக்கம் நின்று பார்த்தாலும் ஆவுடையாரின் அபிஷேகத்தண்ணீர் விழும் பகுதி நம் பக்கம் நேராய்த் தோன்றுவதைப்போல் அற்புதமாய் வரைந்த அந்த ஒவியர் பாராட்டப்பட வேண்டியவரே.

அடுத்து சோமசுந்தரரைப் பார்த்தோம். நல்ல அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள், சரவிளக்கு வரிசையாக ஜெகசோதியாக பிரகாசமாய் இருந்தது. அம்மன் சன்னதியிலும் இப்படி பிரகாசமாய் விளக்கு இருந்தால் அம்மனை இன்னும் திருப்தியாய்ப் பார்த்து மக்கள் விரைவாய்க் கண்டு களித்துச் செல்வார்கள்.

புது மண்டபத்தில் எங்கள் வீட்டுக் கொலுவிற்காகச் சில அழகு பொருட்கள் வாங்கி வீடு வந்தோம், புரட்டாசி முதல் சனிக்கிழமை என் கணவர் ஊரிலிருந்து வந்தவுடன்,
’ நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேனே கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்தேன்’ என்றவுடன் அவர்களும் இன்று போகலாம் கூடல் நகர் பெருமாள் கோவிலில் தான் இன்று கூட்டம் இருக்கும்’ என்று சொன்னார்கள். கிளம்பினால் நல்ல மழை! ஆட்டோவில் போனாலும் தண்ணீர்! வண்டிக்குள்ளும்! மதுரையில் மழைபெய்தால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
கீழவாசல் எல்லாம் தண்ணீர்! வண்டிகள் தண்ணீருக்குள் மாட்டிக்கொண்டு பரிதாபமாய் நின்று கொண்டு இருந்தன. அம்மன் சன்னதிவாசலிலும் தண்ணீர் நின்றது. மழை நீர் வடிகால் வசதி சரியில்லை.

எனக்கு, கணவருக்கு சீக்கிரம் சுழலும் லிங்கத்தை காட்ட ஆசை. 15 ரூபாய் டிக்கட் எடுத்து அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து சுழலும் லிங்கத்தைக் காட்டினேன் அவர்களும் ஆச்சிரியப்பட்டு ஓவியரைப் பாரட்டினார்கள். பின் சுவாமி சன்னதிக்கு வந்தால் என் கணவர் மேலே பார்! என்று எனக்கு சுழலும் லிங்கம் காட்டினார்கள்.சுவாமி சன்னதி வாயிலில் மேல் விதானத்தில் இரண்டு ஒரங்களிலும் சுழலும் லிங்கம் வரைந்து இருக்கிறார்கள். நாங்கள் அண்ணாந்து பார்ப்பதைப் பார்த்து வெளியூர்களில் வந்த அன்பர்களும் என்ன? என்ன ?என்று கேட்டு எல்லோரும் பார்த்து பரவசப் பட்டார்கள்.

போனமுறை பார்க்க முடியவில்லை. வர வர மீனாட்சி அம்மன் கோவிலும் திருப்பதி பெருமாள்கோயில் மாதிரி ஆகிவிட்டது என்று புலம்பிக் கொண்டு இருந்தது சொக்கன், சொக்கி காதில் விழுந்து இந்த முறை நல்ல காட்சி தந்தார்கள் சொக்கனும் சொக்கியும்.

மதுரையில் தண்ணீர் கஷ்டம் உள்ளது. குடி தண்ணீருக்கு சில வீடுகளில் மோட்டார் போட்டு பிடிப்பதால் சில வீடுகளுக்கு தண்ணீர் வருவது இல்லை.புகார் செய்தால் எடுப்பது போல் எடுத்து விட்டு மறுபடியும் போட்டு கொள்கிறார்கள் என்ன செய்வது! அவர்களாய் திருந்தினால் தான் உண்டு.

இந்த மழை காலத்தில் மழை நீரை நல்ல முறையில் சேமித்து தண்ணீர் பஞ்சத்தை விரட்ட வேண்டும்.வைகையில் நீர் நிறைய வேண்டும்.மக்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று பிட்டுக்கு மண் சுமந்தவனிடம் வேண்டிவந்துள்ளேன்.

கோவில்பட்டியில் சித்தப்பாவீட்டிற்கு தங்கை,தம்பியோடு போய்வந்தேன்.சித்தப்பா வீட்டீல் துக்கம் நிகழ்ந்து இருந்தாலும்,அதை மறந்து அண்ணன் குழந்தைகளை அன்போடு உபசரித்தார்கள். சித்தப்பாவின் உருவில் என் அப்பாவை கண்டேன்.

நான் ஒரு வாரமும் அன்பு மழையில் நனைந்து வந்தேன். தம்பி, தங்கைகள்வீடு, மாமாபெண் வீடு, தங்கை மகள் வீடு, என் மகனுக்கு பெண் எடுத்த வீடு என்று போய் புது தெம்பைப் பெற்று வந்துள்ளேன். இப்போது
’பெரியம்மா!’,’அத்தை!’ என்று குழந்தைகளின் அன்புக் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

32 கருத்துகள்:

  1. மதுரை அம்மா ஊரா?
    உங்கள் பேரைப் பார்த்ததும் நெல்லை என்று நினைத்தேன். சரிதானா?

    பதிலளிநீக்கு
  2. அழகான பகிர்வு.

    போட்டோ அருமைங்க! நிறைய பழங்கால ஓவியங்கள சுண்ணாம்பு அடிச்சி அழிச்சிட்டாலும். இதுபோன்ற முயற்சிகளாலாவது உண்மையான கலைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. //இப்போது ஆட்டோ,டாக்ஸி,கார் என்று போகிறோம், ஆனால் அப்போது உள்ள மகிழ்ச்சி இல்லை.//

    Very true..

    பதிலளிநீக்கு
  4. // இருந்த இடத்திலிருந்து அட்சதையை போடும் போது அது மற்றவர்கள் மேல்
    தான் விழும்.//

    அம்மா, எனக்கென்னவோ இப்படித் தோணுது; தூஊஉரத்தில இருந்து விசிரியடிக்கும் பொழுது அது அப்படி இப்படின்னு மத்தவிங்க மேல விழும் போது எல்லாருக்கும் ஒரு மாதிரியான கனவுகளை தட்டிவிட்டுரும் போல, கவனிச்சிருக்கீங்களா எல்லாரும் மூஞ்சிலும் ஒரு வெட்கம் ஒட்டிக்கும் அப்படி விழுந்த அட்சதையை தட்டி விடும் பொழுது.

    என்னோட தியரி: ஏற்கெனவே கல்யாணம் கட்டி இருக்கவங்களுக்கு தன்னோட கல்யாண நாள நினைச்சு அப்படி ஒரு வெட்கம் கலந்த மகிழ்ச்சி -

    கல்யாணம் கட்டாதா பசங்களுக்கு -எதிர்கால நினைவ நினைச்சு இப்படி விழுந்தா அப்படித்தான் இருக்குமான்னு திளைக்க ஒரு வாய்ப்பு எனவே என்னோட ஓட்டு தூரத்தில இருந்து போடுறது :)

    பதிவின் மற்ற விசயங்கள் -walking down the memory lane நல்லாருக்கு!!

    பதிலளிநீக்கு
  5. நாலு வீதியிலும் வாகனம் போகாததால் ஊருக்காரவுங்க எல்லாம் பீச் காத்து மாதிரி குடும்பத்தோட வந்து மகிழ்ச்சியா அங்க உக்காருவது பாக்கவே
    அழகு..
    அந்த சுத்தர லிங்கம் வேற இடத்துலயும்
    இருக்கா அட அது பாக்கலையே..

    தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. :))) லிங்கம் படம் அருமைம்மா. ஒவ்வொரு வருடமும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தாலும் இதை கவனித்ததில்லை. இனி கவனிக்கிறேன்.

    நீங்க மதுரைக்கு போய் மழையை வர வச்சுட்டீங்க. சீக்கிரம் துபாய் வாங்க. இங்கயும் மழை வேணும் :)

    பதிலளிநீக்கு
  7. ஆகா...சூப்பர் கொசுவத்திம்மா ;))

    \\சுழலும் லிங்கத்தை\\

    இப்படி எல்லாம் இருக்கா!!! திருப்பதி மாதிரியா இருக்கு மதுரையும்...அய்யோ ;(

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வு.

    மூன்று முறை சென்றிருந்தும் ‘சுழலும் லிங்கம்’ பார்த்ததில்லை. ஓவியர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

    அன்பு மழை தரும் தெம்பு தனிதான்:)!

    தாமதமாய், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. //இருந்த இடத்திலிருந்து அட்சதையை போடும் போது அது மற்றவர்கள் மேல் தான் விழும். மணமக்களுக்கு பரிசு பொருள் கொடுக்க போகும் போது அட்சதையைப் போட்டு வாழ்த்தி வரலாம்.//

    அட... இது நல்ல ஐடியாவா இருக்கே... எல்லாருமே செயல்படுத்தலாமே....

    //பேசிக்கொண்டே நடந்தே போவோம். இப்போது ஆட்டோ,டாக்ஸி,கார் என்று போகிறோம், ஆனால் அப்போது உள்ள மகிழ்ச்சி இல்லை.//

    மிக சரியே... மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்... மழலைகள் ஆவோம்... இப்போது தான் நம்மை சுமக்க அனைத்து விதமான வாகனங்களும் வந்து விட்டதே!!

    //மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை வெகு சிறப்பாய் நடந்ததாம் என் தங்கை சொன்னாள். தினம் அன்னதானம் நடக்கிறது //

    அன்னதானம் மிக நல்ல விஷயம்... பசியால் வாடும் வயிற்றுக்கு அன்னமிடுவதை போன்ற ஒரு நல்ல விஷயம் இந்த உலகத்தில் எதுவுமில்லை என்பது என் எண்ணம்....

    //’மீனாட்சியைப் பார்த்தாலும் சுவாமியைப் பார்த்தாலும் ஒன்று தான் போங்க,போங்க’ என்றார்கள்.//

    என்னத்த சொல்றது.... அவ்வளவு தான் பக்திக்கு மரியாதை....

    //அம்மனின் பட்டுப்புடவைகள் என்னவாயிற்று? எல்லாம் பாலியஸ்டர் பட்டு புடவைகள்//

    பட்டுப்புடவைகள் எல்லாம் போக வேண்டிய இடத்திற்கு பத்திரமாய் போய் சேர்ந்து விட்டது மேடம்....

    //அண்ணாந்து பார்த்தால் லிங்கம் நம்மை நோக்கி உள்ளது .நாம் எந்தப்பக்கம் நின்று பார்த்தாலும் ஆவுடையாரின் அபிஷேகத்தண்ணீர் விழும் பகுதி நம் பக்கம் நேராய்த் தோன்றுவதைப்போல் அற்புதமாய் வரைந்த அந்த ஒவியர் பாராட்டப்பட வேண்டியவரே.//

    //சுவாமி சன்னதி வாயிலில் மேல் விதானத்தில் இரண்டு ஒரங்களிலும் சுழலும் லிங்கம் வரைந்து இருக்கிறார்கள்//

    கண்டிப்பாக அந்த சுழலும் லிங்கத்தை வரைந்த ஓவியர் பாராட்டப்பட வேண்டியவரே.. எங்கிருந்து கண்டாலும் கிடைக்கும் அந்த இறை தரிசனம் மகிழ்ச்சி தரக்கூடியது...

    //இந்த மழை காலத்தில் மழை நீரை நல்ல முறையில் சேமித்து தண்ணீர் பஞ்சத்தை விரட்ட வேண்டும்.வைகையில் நீர் நிறைய வேண்டும்.மக்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று பிட்டுக்கு மண் சுமந்தவனிடம் வேண்டிவந்துள்ளேன்.//

    மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது உங்களின் வேண்டுதல்..... பொதுநலம் மேலோங்கி நிற்கும் உங்களின் நல்ல உள்ளத்தின் இந்த வேண்டுதலை உங்களுடன் இணைந்து அனைவரும் செய்தால், பலன் நிச்சயம்...

    அருமையான பதிவ், பகிர்வு....

    வாழ்த்துக்கள் கோமதி மேடம்........

    பதிலளிநீக்கு
  10. //மணமக்களுக்கு பரிசு பொருள் கொடுக்க போகும் போது அட்சதையைப் போட்டு வாழ்த்தி வரலாம்.//

    அட... இது நல்ல ஐடியாவா இருக்கே... எல்லாருமே செயல்படுத்தலாமே....

    //இப்போது ஆட்டோ,டாக்ஸி,கார் என்று போகிறோம், ஆனால் அப்போது உள்ள மகிழ்ச்சி இல்லை.//

    மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்... மழலைகள் ஆவோம்... இப்போது நம்மை சுமக்க அனைத்து விதமான வாகனங்களும் வந்து விட்டதே!!

    //தினம் அன்னதானம் நடக்கிறது //

    பசியால் வாடும் வயிற்றுக்கு அன்னமிடுவதை போன்ற ஒரு நல்ல விஷயம் இந்த உலகத்தில் எதுவுமில்லை என்பது என் எண்ணம்....

    //’மீனாட்சியைப் பார்த்தாலும் சுவாமியைப் பார்த்தாலும் ஒன்று தான் போங்க,போங்க’ என்றார்கள்.//

    என்னத்த சொல்றது....

    //அம்மனின் பட்டுப்புடவைகள் என்னவாயிற்று?//

    பட்டுப்புடவைகள் எல்லாம் போக வேண்டிய இடத்திற்கு பத்திரமாய் போய் சேர்ந்து விட்டது மேடம்....

    //சுவாமி சன்னதி வாயிலில் மேல் விதானத்தில் இரண்டு ஒரங்களிலும் சுழலும் லிங்கம் வரைந்து இருக்கிறார்கள்//

    கண்டிப்பாக அந்த சுழலும் லிங்கத்தை வரைந்த ஓவியர் பாராட்டப்பட வேண்டியவரே..

    //இந்த மழை காலத்தில் மழை நீரை நல்ல முறையில் சேமித்து தண்ணீர் பஞ்சத்தை விரட்ட வேண்டும்.வைகையில் நீர் நிறைய வேண்டும்.மக்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று பிட்டுக்கு மண் சுமந்தவனிடம் வேண்டிவந்துள்ளேன்.//

    மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது உங்களின் வேண்டுதல்..... பொதுநலம் மேலோங்கி நிற்கும் உங்களின் நல்ல உள்ளத்தின் இந்த வேண்டுதலை உங்களுடன் இணைந்து அனைவரும் செய்தால், பலன் நிச்சயம்...

    அருமையான பதிவ், பகிர்வு....

    வாழ்த்துக்கள் கோமதி மேடம்........

    பதிலளிநீக்கு
  11. கோகிலவாணி கார்த்திகேயன் நினைப்பு சரியே.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சுண்ணாம்பு அடிச்சி அழித்த ஒவியங்களை மறுபடியும் வரைந்து கொண்டு இருக்கிறார்கள்.

    உண்மையான கலைஞர்களுக்கு என்றும் மரியாதை,பாராட்டு உண்டு ஷங்கர்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. தெகா, உங்கள் கருத்தும் அருமையானது.
    நானும் உணர்ந்து இருக்கிறேன்.

    மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது அங்கு சிதறி கிடக்கும் அட்சதை அரிசியை வீட்டுக்கு எடுத்து சென்று கல்யாணமாகாதவர்களுக்கு போட்டால் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

    நன்றி தெகா.

    பதிலளிநீக்கு
  14. முத்துலெட்சுமி,நீங்கள் சொன்ன மாதிரி எல்லோரும் நடை பாதையில் உட்கார்ந்து சந்தோஷமாய் பேசிக்கொண்டு இருந்ததை நானும் பார்த்தேன்.

    சுத்துர லிங்கம் சுவாமி சன்னதி வாசலில் இரண்டு புறமும் இருக்கு அடுத்தமுறை போய் பாருங்கள்.

    பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஆதவன்,கும்பாபிஷேக சமயத்தில்தான் வரைந்து உள்ளார்கள்.

    துபாயில் அக்கா பெண் இருக்கிறாள் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறாள்.

    அழைப்புக்கு நன்றி ஆதவன்.

    பதிலளிநீக்கு
  16. கோபிநாத்,கொசுவத்தியை ரசித்தமைக்கு நன்றி.

    திருவிழா காலங்களில் திருப்பதி மாதிரி ஆகிவிட்டது,கோபிநாத். 100 ரூபாய் டிக்கட் எடுத்தாலும் மணிக்கணக்கில் நிறக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ஆம் ராமலக்ஷ்மி, அன்பு தரும் தெம்பு தனி சிறப்பு தான்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  18. //மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்...மழலைகள் ஆவோம்//

    ஆம் கோபி,மழலைகள் தான் ஆகிவிடுகிறோம்.

    தண்ணீர் கஷ்டம் இல்லாத ஊரிலில் இருப்பதால்,தண்ணீருக்கு கஷ்டப்படுபவர்களை பார்த்தால் மிகவும் மனது வேதனைப் படுகிறது அந்த வேதனையின் வெளிப்பாடேப் பிராத்தனை.

    பதிலளிநீக்கு
  19. அற்புதமான பகிர்வு அம்மா. சுழலும் லிங்கம், ஓவியங்கள், படங்கள் என கோவிலை அழகாய் அளித்ததில் மகிழ்ச்சி. பிறந்த நாள் - வாழ்த்த வயதில்லை - வணங்குகிறேன்.

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  20. அன்பு கோமதி, அருமையாக மதுரையை ரசித்தேன். நரிமேட்டில் இருந்தீர்களா. எப்போது?

    இன்னும் எங்கள் சித்தி நரிமேட்டில் பார்க் ஸ்ட்ரீட்ல இருக்காங்க.மீனாட்சியைப் பார்க்கும் ஆர்வத்தை இன்னும் தூண்டிவிட்டீர்கள். நீங்கள் போனால் மழை வராமல் இருக்குமா:) மதுரைத் தண்ணீர்க் கஷ்டம் என்று தீருமோ.

    பதிலளிநீக்கு
  21. அருமையாக குடும்பத்தாரோடு நேரம் கழித்திருக்கிறீர்கள்.

    மதுரை ஓவியத்தின் சிறப்பு புதுமை.

    துபாய்க்ககும் வாங்க!!

    பதிலளிநீக்கு
  22. //நானும் அம்மாவுடன் மார்கழி மாதம் காலை 4.30க்கு பசுவும் கன்றும் வந்து பால் கறந்து பல்லாண்டு பாடி கதவைத் திறக்கும் போது சென்று வணங்கிய நினைவு வந்தது.//

    ஹ்ம்ம் நான் 2005 மார்கழி ஒரு வெறித்தனமா காலையில 4.45 -6.30 கோவில் கோவிலா அலைஞ்சேன் சூப்பர் அனுபவம் திரும்ப வாய்ப்பு கிடைச்சா விடக்கூடாது வெயிட்டிங்க் காலங்கார்த்தாலே கோவிலுக்கு போறதுங்கறதே தெய்வீக அனுபவமாச்சே :)

    பதிலளிநீக்கு
  23. வெங்கட் நாகராஜ்,வாழ்த்தலாம் தப்பில்லை.

    நன்றி வெங்கட் நாகராஜ்.

    பதிலளிநீக்கு
  24. 72,73லில் நரிமேட்டில் இருந்தோம் வல்லிஅக்கா.

    மதுரை தண்ணீர் கஷ்டம் இந்த மழை காலத்தில் தீர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. துபாய்க்கு தானே வந்து விடுவோம் ஹீஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  26. வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள் ஆயில்யன்.

    தெய்வீக அனுபவத்தை பெற்றுவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  27. இரண்டுதடவை போய் இருக்கிறேன். மிகவும் அழகிய கோவில்.

    அன்பில் திளைத்து எங்களையும் நனைய வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  28. ////மணமக்களுக்கு பரிசு பொருள் கொடுக்க போகும் போது அட்சதையைப் போட்டு வாழ்த்தி வரலாம்.//
    இது நல்ல ஐடியா.

    //எனவே என்னோட ஓட்டு தூரத்தில இருந்து போடுறது :)//
    அதே நேரம் தெகாவின் கருத்தும் நல்லாருக்கு.

    எத்தனையோ முறை மதுரைக்குப் போயிருக்கிறேன். மீனாட்சியையும் தரிசித்திருக்கிறேன், இந்த சுழலும் லிங்கம் என் கண்களில் எப்படி படாமல் போச்சு?
    அடுத்த முறை அண்ணாந்த்து பாத்துக் கொண்டே கோயிலை வலம் வரப் போகிறேன்.
    நடந்து வந்த பாதையின் சந்தோஷ ஞாபகங்கள் அருமையாயிருக்கு.
    ஆங்...பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  29. ஆயியனின் மார்கழி நினைவுகள்...எங்கோ கொண்டு சென்றுவிட்டது. சிறுமியாய் இருக்கும் போது விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்குப் போகும் போது, அதிகாளையில் கோயிலிலிருந்து வரும் டிஎம்சின் பக்திப்பாடல்கள் உறக்கத்திலிருந்து எழுப்பிவிடும். மடமடவென்று குளித்து முடித்து வாசலில் உள்ள பூவரச மரத்தின் இலையைப் பறித்துக் கொண்டு கோவிலுக்கு ஓடுவோம். ஓர் உருண்டை தயிர்சாத்த்துக்காக. அந்த ருசி.....!தனிதான்.

    பதிலளிநீக்கு
  30. நானானி, உங்கள் வருகைக்கு நன்றி.

    சுழலும் லிங்கம் கும்பாபிஷேகத்திற்கு அப்புறம் தான் வரைந்து இருக்கிறார்கள்.

    பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு