ஞாயிறு, 31 டிசம்பர், 2023

மலர்கள் தரும் ஆனந்தம்





லில்லி மலர்கள்


மலர்கள் தரும் ஆனந்தம் சொல்லி முடியாது. மார்கழி மாதம் காலை வேலையில் இறைவழிபாடு, இளம் குளிரில்  மலர்களின் ஆனந்த காட்சி மனதுக்கும் உடலுக்கு புத்தண்ர்வு கொடுக்கும்.

காலை எங்கள் வளாகத்தில் உள்ள பிள்ளையாரை வணங்கி அப்படியே எங்கள் குடியிருப்பு மலர்களை பார்த்து கொண்டு (ஒரு வலம் வந்து) வீட்டுக்கு வந்து விடுவேன்.

மார்கழி மாதம் கோவில்களுக்கு போய் வருவேன் முன்பு. இப்போது வளாகத்தில் இருக்கும் பிள்ளையாரை மட்டும் வணங்கி வருகிறேன் மார்கழி ஆராதனையாக.

இந்த பதிவில் வளாகத்தில் கீழ் வீட்டில் இருப்பவர்கள்  வைத்து இருக்கும்  செடிகளில்   மலர்ந்து இருக்கும்  மலர்களின் படங்கள் இடம்பெறுகிறது.

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!





மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் புனிதர் வடிவம் பெறுகிறார்

ஏழைத் தொழுவில் வந்த இறைமகனே

       தாலேலோ!

- கண்ணதாசன்.


மார்கழி மாதம்   சிறப்பான மாதம். பக்தியுடன் இறைவனை மட்டுமே நினைந்து  போற்றி துதிக்கும் மாதம். 
இறைவனை பாமாலை, பூமாலையுடன் மாதம் முழுவதும் துதிக்கும் மாதம்.  இறைவன் நினைவாக இருப்பதே இந்த மாதத்தின் சிறப்பு. 


 பெத்லகேமில்   இயேசுவின் பிறப்பும் மார்கழி மாதம் தான். கிறித்துவ அன்பர்கள் டிசம்பர் 25ம் தேதி அன்று இயேசுவின் பிறப்பை மகிழ்வுடன் கொண்டாடும் மாதம்.

இந்த பதிவில் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துகளும் , அரிசோனாவில் மகன் வீட்டுக்கு வந்து இருந்த   கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள்" பாடிய அன்பர்கள் படங்களும் இடம்பெறுகிறது.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

கார்த்திகை தீபமும் சொக்கப்பனையும்




மார்கழி பிறக்க போகிறது அதனால் வலையேற்றி வைத்த கார்த்திகை தீபத்திருநாள்   படங்களை பதிவாக்கி விட்டேன். இந்த பதிவில் கார்த்திகை தீப திருநாள், எங்கள் வீட்டில் நடந்தது, மகன் வீட்டில் நடந்தது,  மற்றும் கோவிலில் நடந்த சொக்கப்பனை படங்கள்  இடம்பெறுகிறது.

திங்கள், 11 டிசம்பர், 2023

பறவைகளின் தேடல்


திணைக்குருவிகள் கூடு தேடி  வந்தன.  எங்கள் வீட்டுக் கொடி கம்பியில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தது. 10 நாள் முன் வீட்டுக்கு வந்தது.  இந்த பதிவில்  பறவைகளின் தேடல் இடம் பெறுகிறது. 

வெள்ளி, 8 டிசம்பர், 2023

புறாக்களின் தவிப்பு



பல நாட்கள் ஆகி விட்டன  பறவைகள்   பதிவு போட்டு.   ஜன்னல் வழியே, மற்றும் பால்கனி வழியே பறவைகளை பார்த்து பதிவு செய்வேன். நிறைய பறவைகளை படம் எடுத்தும் வைத்து இருக்கிறேன், அவைகளை போட வேண்டும்.   இந்த முறை  பறவைகளின் படங்கள் எல்லமே  ஒரு தேடலை சொல்கிறது.

கூட்டை தேடி, தனக்கு உணவு அளித்த தோட்டத்தை தேடி என்று.

 சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வீட்டில்  புறாக்கள் கூடு கட்ட முயற்சி செய்து வெற்றிகரமாக கட்டி விட்டது. அவர்கள் துணி எல்லாம் காய போட்டு இருக்கும் இடத்தில் இப்படி தைரியமாக கூடு கட்டுகிறதே! என்று  நினைத்து கொண்டு இருந்தேன்.

அந்த பறவைகளை படம் எடுத்து இருந்தேன்.  இந்த பதிவில் பறவைகளின் வீடு(கூடு என்னவாயிற்று என்று பாருங்கள்.)

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்





                       இம்மையிலும் நன்மை தருவார் கோயில் 

மதுரை நகரின் நடுப்பகுதியில் தெற்குமாசி வீதி- மேலமாசி சந்திப்பில் அமைந்துள்ள   கோயில். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கோயில். மதுரை மீனாட்சி கோயில், மற்றும் கூடலழகரை தரிசனம் செய்து விட்டு  அந்த கோயில்களுக்கு பக்கம் இருக்கும் இந்த பழமையான கோயிலுக்கும் மக்கள் வருவார்கள் அதிகமாக. பேரூந்து நிலையம் அருகில் இருக்கிறது.