சனி, 22 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் , புதுவருட வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களின் வீடுகளில் இயேசு பிறந்த மாட்டுக்  கொட்டகையை அப்படியே அமைத்து,  பெத்லகேமில் பிறந்த இயேசுவின் இருப்பிடத்தை  அவரவர் வீடுகளில் கொண்டு வந்துவிடுவார்கள். இந்த குடில் வைக்கும் பழக்கம் 1223 -ம் ஆண்டு இத்தாலி நாட்டின் பிரான்சிஸ் அச்சி  என்ற புனிதரால்  தொடங்கி வைக்கப்பட்டதாம். 

சிறு வயதில் கிறிஸ்துவர்கள் வீடுகளுக்கு இந்த குடில் அமைப்பைப் பார்க்க  ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்த்து வருவோம்.  ஒவ்வொரு வீட்டில் மிக எளிமையாக, சில வீடுகளில்  வெகு அலங்காரமாய் எல்லாம் வைத்து இருப்பார்கள்.
                               
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் போய் இருந்தோம் மாமாவீட்டு பக்கம்  உள்ள படக்கடையில் அனந்தபத்மநாபன் படமும், இயேசுவின் குடிலும் விற்பனைக்கு வைத்து இருந்ததைப் படம் எடுத்தேன்.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்

Image may contain: one or more people, people standing and outdoor

தம்பி மகள் வளைகாப்பு விழாவிற்கு தென்காசி போனோம் 12ம் தேதி.  அப்போது போகும் வழியில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் உள்ள அனுமன் கோவில் போனோம்.

கடையநல்லூர்  தாலுகாவில் இருக்கிறது. தென்காசியிலிருந்தும் சங்கரன் கோவிலிலிருந்தும் போகலாம்.

திங்கள், 17 டிசம்பர், 2018

இறை அருள் கிடைக்கும் மார்கழி

மார்கழி அதிகாலையில் குளித்து, தன் வீட்டிலும் கோலம் போட்டுவிட்டு ஐயனார் கோவிலிலும் வந்து கோலம் போடும் கோதையர்கள்
சிறு பெண்கள் இப்போது  இப்படி காலையில் எழுந்து கோவிலுக்கு வந்து கோலம் போடுவதைப் பாராட்டவேண்டும். நான் பாராட்டினேன். அவர்களுக்கு மகிழ்ச்சி, வெட்கம் கலந்த புன்னைகையுடன் அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். அவர்களிடம் கேட்டுக்கொண்டு அவர்கள் கோலம் போடுவதைப்  படம் எடுத்தேன்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சனி, 1 டிசம்பர், 2018

சிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது


எங்கள் வீட்டில்  முனியா குருவி  கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து இருந்தது. நலமே எல்லாம் பறந்து சென்று விட்டன இன்று.

புள்ளிச்சில்லை (முனியா பறவை)  

இந்த பறவை எங்கள் வீட்டில் கூடு கட்டியது பற்றி எழுதிய  பதிவுக்கு  ஸ்ரீராம் கொடுத்த பின்னூட்டம்.

//பறவைகளுக்கு தெரிந்திருக்கிறது.. தங்களுக்கு பத்திரமான இடம் எது என்று! நன்றாய் கூடுகட்டி, அழகாய் பிள்ளை பெற்று சௌக்கியமாய்க் கிளம்பட்டும்.//

ஸ்ரீராமின் வாக்கு படி அழான பிள்ளை செளக்கியமாய்  கிளம்பி பறந்து போனது . (ஒன்று மட்டும் இன்று பறந்து போனது.)