ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

படைப்பதும் காப்பதும் அவன் செயல் !



மகன் வீட்டில் வருடாவருடம் வசந்த காலத்தில் கூடு கட்டி முட்டையிட்டுக்  குஞ்சு பொரிக்கும் மணிப்புறா
இரண்டு முட்டைகள் இடும் 

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வீட்டுக்கு வந்த பெண்குயில்

 மதியம் வீட்டுவேலைகளை முடித்து சற்று ஓய்வாக சோபாவில் படுத்துக் கொண்டு முரசு  தொலைக்காட்சியில்  'துணைவன்' படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் . உடல் நலம் இல்லாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு குமரன் இருக்கும் ஊர்களில் எல்லாம் போய் உருக்கமாய் வேண்டிக்கொண்டு குழந்தையைக் குணப்படுத்தப் பாடிக் கொண்டு இருந்தார்கள்.

மதியம் 3.40  இருக்கும் திடீர் என்று ஒரு சத்தம்- இறக்கை 'பட பட' என்று அடிக்கும் சத்தம். (ஹாலில் இரண்டு ஃபேனில் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது ஒன்று ஓடாமல் இருந்தது)  ஓடாத ஃபேனில் வந்து அமர்ந்தது ஒரு  பெண் குயில்.நான் படுத்திருந்தவள் எழுந்ததும் அது பயந்து பறந்து ஓடிக் கொண்டு இருந்த ஃபேனில் அடிபட்டு சோபாவில் விழுந்தது. பதறிப் போனேன் "முருகா "என்று வாய் அழைத்தது.

திங்கள், 13 ஏப்ரல், 2020

மலரட்டும் மகிழ்ச்சி!

சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு. மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். காலை கண்விழித்தவுடன் இநத மங்கலப் பொருட்களைப் பார்த்தால் ஆண்டு முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள். எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள்.






திங்கள், 6 ஏப்ரல், 2020

எல்லாம் இருக்கு ஆனால் இல்லை!

கொரோனாவால் வெளியே போக முடியாமல்   இருந்தது. வெள்ளிக்கிழமை  சந்தை கிடையாது.  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருந்தது. மூன்று நாட்களுக்கு முன் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த  காய்கறி வண்டி நாங்கள் இருக்கும் வளாகத்திற்கு வந்தது.

ஒரு மூட்டை 250 ரூபாய் . யாரையும் காக்க வைக்காமல் உடனே கொடுத்து அனுப்பிவிட நல்ல யோசனை.

அவர்கள் தேவைப்படும் எல்லாவற்றையும் அருமையாகத் திரட்டிக் கொடுத்து இருந்தார்கள். நாம் வாங்கப் போனால் கூட சிலவற்றை மறந்து வந்து விடுவோம். அவர்கள் தேவையானதைக் கொடுத்து இருந்தார்கள்.

தக்காளி மட்டும் மூட்டையில் இல்லை தனியாக நம் பையில் தந்தார்கள்.
என்ன காய் இருக்கிறது என்று நீங்களே பாருங்ககள்.நான் காய் வாங்கிய வண்டியைப் படம் எடுக்க முடியவில்லை, காய் வாங்கப் போகும் அவசரத்தில்  செல்லை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்.நான் வாங்கிய வண்டியில் நிற்கவே வேண்டாம் பையைக் கொடுத்துக் காசை வாங்கி உடனே அனுப்பி விட்டார்கள். இது நல்ல யோசனை. ஸ்கூட்டரில் வண்டியை தொடர்ந்து  வந்த இரண்டு பெண்கள் அவர்கள் தன் ஆர்வலர்களாம் , உதவி செய்தார்கள். உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் காய்களைக் கழுவி உங்கள் பார்வைக்கு வைத்து இருக்கிறேன்.
இன்னொரு  காய் வண்டியை என் வீட்டு பால்கனியிலிருந்து எடுத்தேன்

இயற்கை உரம் போட்ட காய்வண்டி. தனியார் சேவை. போதுமான இடைவெளி விட்டு வாங்கிச் செல்கிறார்கள்.