வெள்ளி, 29 செப்டம்பர், 2017

நவராத்திரி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நவராத்திரி  வாழ்த்துக்கள்.
எல்லோரும் நலம் தானே? நாங்கள்  மகன் ஊருக்கு வந்து இருக்கிறோம்.
இங்குதான்  இந்த முறை நவராத்திரி பண்டிகை.
மகன் இருப்பது அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ். போனவாரம் இங்கு வந்தோம்.

Image may contain: indoor

                                                மகன் வீட்டுக் கொலு

திடீர் பிரயாணம். யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. காணோம் என்று தேடினீர்களா?

எல்லோர்  பதிவுகளையும் படிக்க நிதானமாய் வருவேன். பண்டிகை என்பதால் கொலு பார்க்க நண்பர்கள், உறவினர்கள் வருகிறார்கள்.
எங்களையும் கொலுப் பார்க்க சில நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

Image may contain: indoor
இந்த கொலுவில் காய்கறி கல்யாணம் சிறப்பு.

No automatic alt text available.
கத்திரிக்காய் பரங்கிகாய் கல்யாணம்.



No automatic alt text available.
சின்ன மலைக் கோயில் , பார்க், தெப்பக்குளம்.
Image may contain: one or more people and indoor
ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலில்  விளக்கு பூஜை செய்யும் பொம்மை இந்த வீட்டில் நன்றாக இருந்தது.

Image may contain: flower, table and indoor
பார்வதி திருமணம், கார்த்திகை பாலன் பிறப்பு, மற்றும் பூலோக மக்கள்
திருமணக் காட்சி.

Image may contain: 2 people, people standing
உழவுக்கு செல்லும் கணவனுக்கு உணவு எடுத்து செல்லும்
உழவனின்  மனைவி பழையக் கால பொம்மை  அழகு.

Image may contain: indoor
கொலுவிற்கு வரும் கிரிகெட் ரசிகர்களுக்கு  பிடித்த பொம்மை.

Image may contain: 1 person, shoes
மற்றொரு வீட்டில் :-

 கோலம் போடுதல், சாதம் வடித்தல், அம்மி அரைத்தல், ஆட்டுக்கல்லில் அரைத்தல், திருவையில் திரித்தல், முறத்தில் புடைத்தல் சிறப்பு பொம்மை .
உரலில் இடிப்பது விட்டு போனது போல!




அயல் நாட்டில் இருந்தாலும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். எல்லா குழந்தைகளும் கர்நாடக இசை பயின்று பாடுவது மிகவும் மகிழ்ச்சியாக் இருக்கிறது.

நவராத்திரி பார்க்க வந்த குழந்தைகள் பாட சொன்னவுடன் உடனே பாடுவது மிக சிறப்பு. நன்றாக பாடுகிறார்கள். சில குழந்தைகள் ஆங்கிலத்தில் பாடலை எழுதி வைத்துக் கொண்டு பாடினார்கள். அரிசோனா தமிழ் பள்ளியில்  படிக்கும் குழந்தை தமிழில் எழுதி வைத்து இருந்த திருப்புகழ் பாடினான்.

விழாக்கள் எல்லாம் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சி. வேலை வேலை என்று ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் நாள். குழந்தைகள் தனியாக விளையாடிக் கொண்டு இருந்தவர்களுக்கு கூடி விளையாட கிடைத்த நாள். அம்மாக்கள் குழந்தைகளை வீட்டுக்கு போகலாம் வா என்று கூப்பிட்டால் மனசே இல்லாமல் இன்னும் கொஞ்ச நேரம் அம்மா என்று விளையாட கெஞ்சும் குழந்தைகள். மொத்ததில் மகிழ்ச்சியை தரும் விழாதான்.

தூரத்திலிருந்து வருவதால் தினம் கலவை சாதங்கள் சுண்டல் உண்டு எல்லோர் வீடுகளிலும். சில சமயம் நண்பர்கள் நாங்கள் இந்த பிரசாதம் கொண்டு வருகிறோம் என்று சொல்லி ஆளுக்கு ஒன்று கொண்டு வந்து எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக விழாவை சிறப்பிக்கிறார்கள்.

நலங்கள் நல்கும் நவராத்திரி 2013 ல் நியூஜெர்சி யில் கொண்டாடிய  கொலு சுட்டி படிக்கலாம்.

பொளச்சுக் கிடந்தா வரேன் தாயி!

பொம்மை கொண்டு வரும் தாத்தாவின் நினைவுகளை மருமகளிடம்  பகிர்ந்து கொண்டேன்.அதை நீங்களும் படித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கொலு சமயத்திலும் பொம்மை கொண்டு வரும் தாத்தா நினைவு வந்து விடும்.


நவராத்திரி வாழ்த்துக்கள்
மாயவரம் புனூகீஸ்வரர் கோயில் நவராத்திரி விழா  மலைமகள், அலைமகள், கலைமகள் அலங்காரங்கள் இந்த பதிவில்.
சகலகலாமாலை, பாடல் பகிர்வும்  இருக்கிறது.

எங்கள் வீட்டுக் கொலு  ;- எளிமையாக வைத்த கொலு.


 அம்மன் அலங்காரம்  மகன் செய்த

ஒலி, ஒளிக்காட்சி சரஸ்வதி சபத காட்சி பின்னனியில் பார்க்கலாம்.
மருமகள் அலங்காரம் செய்தாள்.

நிறைய இருக்கிறது பேசவும், சொல்லவும். நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  பதிவுகளை படித்து கருத்திட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

மனபலமும், உடல் நலமும் தெளிந்த நல் அறிவும் வேண்டும் என்று

  அம்மனிடம்  வேண்டிக் கொள்கிறேன்.

அப்பாதுரை சார் சொன்னது போல் கொலுவுக்கு முன்னாலும் உழைக்க வேண்டும், கொலு முடிந்த பின்பும் உழைக்க வேண்டும். அதற்கு  உடல் நலமு, மனபலமும்  வேண்டும். அதை அன்னை அருள்வாள்.

கொலுபடிகளை அமைத்து வைக்கும் வரை மலைப்பு,!வைத்தபின் மகிழ்ச்சி.
அது போல் பொம்மைகளை மீண்டும் அதன் அதன் இடத்தில் பத்திரமாய் எடுத்து வைக்கும் போது மலைப்பு ! எடுத்து வைத்து விட்டால் மகிழ்ச்சி.
கொலுபடிகள் இருந்த இடத்தைப் பார்க்கும் போது வெறுமை ! மீண்டும் அடுத்த வருடத்தை எதிர் நோக்கும் உள்ளம்.

அடுத்த வருடம் வரை நவராத்திரி நினைவுகளை அசைபோடும் உள்ளம்.பேரனின் ஓவியங்க்கள் அவன் விளையாட்டு சாமான்கள் என்று தனியாக அவன் அறையில் வைத்து அனைவரையும் அழைத்து சென்று காட்டி மகிழ்ந்தான்.

மருமகள் பெண்கள்,  ஆண், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பரிசு பொருட்களை தேர்ந்து எடுத்து கொடுத்து மகிழ்ச்சிப் படுத்தினாள்.

விழாக்களில்  குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் அலுப்பும், சலிப்பும் ஏற்படாது. பண்டிகைகளை அனைவரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

                                                   வாழ்க வளமுடன்.














திங்கள், 11 செப்டம்பர், 2017

மகாகவி பாரதியார் கவிதைகள்

பாரதியார் நினைவு நாளில்  பாரதியாரின்
கவிதை  விநாயகர்  நான்மணி மாலையிலிருந்து சில :-

காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு  நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனகே.




No automatic alt text available.
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல் ,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந்திட நீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம், நூறு வயது;
இவையும் தரநீ கடவாயே.


Image may contain: 1 person, indoor


கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க !
வாரணமுகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரணமுகத்தான்  அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் , பண்ணவர் நாயகன்
இந்திர குரு, எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம் ; கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும் ; அகக்கண் ஓளிதரும்;
அக்கனி தோன்றும்  ; ஆண்மை வலியுறும் ;
திக்கெலாம் வென்று  ஜெயக்கொடி  நாட்டலாம் .
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்;
அச்சதீரும், அமுதம்விளையும் ;
விந்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை  எய்தவும்
இங்கு நாம் பெறலாம் ; இஃதுணர் வீரே.

பாரதியின் கவிதைகள் புதிய சக்தியை ஊட்டும். புத்துணர்வு கொடுக்கும்.
தேசிய கவிக்கு வணக்கங்கள்.

                                                                   வாழ்க வளமுடன்.!

சனி, 2 செப்டம்பர், 2017

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.

'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலை நினைவு படுத்தியது இந்த பதிவு.  படித்துப் பாருங்களேன்.

படிப்பு மட்டும் தான் அது கிடைக்கவில்லை என்றால் தற்கொலை வரை போகும் குழந்தைகளின் முடிவு கவலை அளிக்கிறது.
கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.

விளையாட்டு விபரீதம் ஆகாமல் இருக்க  கைவினை கற்றுக் கொண்டால்  ப்ளூவேல் தூரமாகும் . குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், இந்தப் புத்தகத்தைப் பரிசளியுங்கள். என்று சொல்கிறார்கள் இவர்கள்.

காலத்துக்கு ஏற்ற பதிவு.

இன்று சனிக்கிழமை  'எங்கள் ப்ளாக் 'பாஸிடிவ் செய்தியிலும்
 இது போனற செய்தி இருக்கிறது.


குழந்தைகளை விளையாட விடுங்கள் கைவினை கற்றுக் கொடுங்கள்



//கைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு.  நம் பாட்டி-தாத்தாக்கள் கூடை முடைந்தும் பாய் பின்னியும் சும்மா இருந்த மனதை ஒருமுகப்படுத்தினார்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருளை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது தொழிற்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். நாம் எதையும் உருவாக்க தேவையில்லை என நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழிற்நுட்பங்களோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ளவோ, முயற்சித்து பார்க்கும் குழந்தைகள் மனம், தொழிற்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது.  படி, படி என சதா அவர்களை நச்சரிக்கிறோம். விளையாடவோ, அவர்களுடைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவோ சொல்லித் தந்திருக்கிறோமா? ஒரு பொருளை உருவாக்கிப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறோமா?
தொலைக்காட்சிகளின் முன் மணிக்கணக்காக அமர்ந்து தாங்களாகவே தேவையில்லாத மனசிக்கலை உருவாக்கிக்கொள்ளும் பெரியவர்களுக்காகவும் குழந்தைகளின் கற்பனைத் திறனை படைப்பாற்றலை தூண்டவும் நாங்கள் எடுத்திருக்கும் சிறு முயற்சி ‘செய்து பாருங்கள்’ இதழ்! கைவினைப் பொருட்கள் செய்முறைக்கெனவும் நல்லதொரு வாழ்வியலை அறிமுகப்படுத்தவும் தமிழில் வெளிவரும் முதல் இதழ் இது. இதோ ‘செய்து பாருங்கள்’ இரண்டாம் இதழாக ஜுலை-செப்டம்பர் இதழ் வெளியாகியிருக்கிறது. பளபள தாளின் முழுவண்ணத்தில் தயாராகியிருக்கிறது.//
கீழே வருவது என்னுரை:-

முன்பு நம் கண் எதிரே குழந்தைகள் விளையாடினார்கள். இப்போது விஞ்ஞான வசதிகள் அதிகமாக , அதிகமாக நம்மை விட்டுத் தூரப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

நாள்தோறும்வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. விளையாட்டைப் பற்றி விரிவாகக்  கலந்துரையாடுகிறார்கள்.  எல்லா துறையைச்
சேர்ந்தவர்களும்.

தெரியாத குழந்தைகளும் அதில் அப்படி என்ன இருக்கு என்று விளையாட ஆவலை தூண்டுவது போல். தீங்கு விளைவிக்கும் என்றால் முற்றிலும் தடை செய்ய வேண்டியது தானே!

சின்ன குழந்தைகள் இந்த வீடியோ பார்த்தால் தான் சாப்பிடுவான் என்று குழந்தை கையில் செல்லை கொடுத்து விட்டு உணவு  ஊட்டுகிறார்கள்.
அந்த குழந்தை அம்மாவின் அன்பையும்  உணவூட்டும் அழகையும் ரசிக்கவில்லை, உணவின் ருசியையும் அறியவில்லை.

சில குழந்தைகள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளின் செல்லை எடுத்து பார்க்கிறது டச் ஸ்கிரீன் இல்லையா? கேம் இல்லையா?  தான் பார்க்கும் கார்ட்டூன் படம் இல்லையா ? என்று கேட்டு தூக்கிப் போட்டு விடுகிறது.

உறவினர் வீட்டுக் குழந்தை உடைத்த செல்கள் எத்தனை? அவர்கள் அதைப் பெருமையாகப் பேசுகிறார்கள் அவன் பார்க்கும் வீடியோ வரவில்லை கோபத்தில் விட்டு ஏறிந்து விட்டான், உடைந்து விட்டது ரிப்பேர் செய்யக் கொடுத்து இருக்கிறோம் என்கிறார்கள்., அந்தப் பொருளின் விலையைப் பற்றிக் கவலைபடாமல்.

குழந்தை எப்படி முக்கியமோ அது போல் நாம் உழைத்துக் கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்களும் முக்கியம்.  அழும் குழந்தையின் வாயை அடைக்க என்று தற்காலியத்திற்கு கொடுக்கிறோம் என்கிறார்கள்.

ஆசிரியர், பள்ளிகளில் முன்பு பாடங்களைச் சொல்லிக் கொடுத்து  வீட்டுப் பாடங்களைக் கொடுத்தார்கள், அதைத் திருத்தும்   பணி ஆசிரியர்களுக்கும் உண்டு, இப்போது  ஆசிரியர்கள் கணினியில் வேலை கொடுக்கிறார்கள் அதைத் தேடிப்  பாடக்குறிப்புகளைத்  தயார் செய்து மாணவன்  ஜெராக்ஸ் எடுத்துப் போக வேண்டும். பிரிண்ட் செய்து கொண்டு போக வேண்டும்.

 அதனால் மாணவன் வீட்டில் பெற்றோர்களிடம்,
 "படி! படி!  என்று சொல்கிறீர்கள், வேண்டிய வசதி செய்து தாருங்கள்" என்கிறார்கள். கணினி, பிரிண்டர், எல்லாம் வாங்கித் தரச் சொல்லிக் குழந்தைகள் பெற்றோரை நச்சரித்து வாங்குகிறார்கள்.. பெற்றோர்களும் கஷ்டப்பட்டு வாங்கித் தருகிறார்கள், சிலர் கஷ்டப்படாமல் கேட்டதும் வாங்கித் தந்து விடுவார்கள். பெருமையாக எல்லோரிடமும் பாடங்களைக் கணினியில் செய்கிறான் என்று பெருமையாகச் சொல்லி மகிழ்வார்கள்.

பள்ளியில் விழா என்றால் முன்பு ஆசிரியர்தான் நடனம் சொல்லித் தருவார்.
இப்போது ஏதாவது சினிமாப் பாடலைச் சொல்லி நீங்களே வீடியோ போட்டுப் பார்த்து அதே போல ஆடப் பழகி வாருங்கள் என்கிறார்கள்.

முன்பு கல்விஅதிகாரி வரும் போது , சுதந்திரதினம், குடியரசு தினம் , 11வது மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா , ஆண்டு விழா என்று  எவ்வளவு நிகழச்சிகள்!  அத்தனைக்கும் ஆசிரியர் மேற்பார்வையுடன் தான் ஆடல் பாடல்கள் நடந்தன. பள்ளியில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர்கள் என்று பாதுகாவலர்கள் போற்றுபவர்கள் இருந்தார்கள்.

'அப்பாவுக்காக"     என்ற சினிமாவில்    சமுத்திரகனி  அவர்கள் அழகாய்ச்  சொல்லி இருப்பார்.

பள்ளியில் தாஜ்மஹால் செய்து கொண்டு வரும் வேலை குழந்தைக்குக் கொடுத்தால் எல்லோரும் கடையில் செய்து விற்பதை வாங்கிக் கொடுப்பார்கள் ஆசிரியர் குழுவும் கடையில் வாங்கி வந்து  கொடுத்ததில்  எது அழகோ அதற்குப் பரிசு அளிப்பார்கள். அதைக் கண்டித்து ஆசிரிய நிர்வாக குழுவிடம் கேள்வி கேட்பார் அதனால் உங்கள் குழந்தைக்கு இங்கு  இடம் இல்லை என்பார்கள்  வேண்டாம் உங்கள் பள்ளி என்று அழைத்து வந்து விடுவார் குழந்தையை .  அதன் பின் மனைவி,  அக்கம் பக்கத்தில் மற்றும்
உறவில்   அவர் சந்திக்கும் பிரச்சனைகள்  பின் அவருக்கு குழந்தையை வளர்ப்பில் கிடைக்கும் வெற்றியைச் சொல்லும் கதை.

குழந்தைக்குக் கொடுத்த வேலையை, குழந்தை, பெற்றோர், தாத்தா, பாட்டி, சகோதரர்கள் உதவியுடன் அவனே செய்து கொண்டு போனால் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் பெருமிதமும்  மகிழ்ச்சியும் கிடைக்கும், அவனே செய்து இருப்பதை ஆசிரியர் பாராட்டும் போது  மாணவனின் மகிழ்ச்சிக்கு  ஈடு இணை இல்லை.

விஞ்ஞானத்தால் நன்மையும், தீமையும் உண்டு. நன்மையை எடுத்துக் கொள்வோம், தீமையை விலக்குவோம்.

                                                          வாழ்க வளமுடன்.