திங்கள், 20 மே, 2019

சின்னத் தோட்டம்



என் வீட்டு சின்னத் தோட்டம் என்று முகநூலில் பகிர்ந்த படங்கள் இங்கு.

பெரிய தோட்டம் வைக்க முடியவில்லை என்றாலும் இந்த சின்னத் தோட்டம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அதில்  மலரும் பூக்களும் அப்படித்தான்  என்னை மகிழ்விக்கிறது. அப்பார்ட்மென்ட் பால்கனியில் இவ்வளவுதான் வளர்க்க முடியும்.
காலையில் இந்த செடிகளைப் பார்க்கும் போது அது தரும் மனதுக்கு மகிழ்ச்சி.

புதன், 1 மே, 2019

சாமானியரின் குரல்




ஒரு பொருள் உற்பத்தி ஆகி அது சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்குள் அவர்கள் படும்பாடுகள், விற்பனைக்கு வரும்போது மக்கள் ஆதரவு இல்லை என்றால் அதனால் அவர்கள் படும் வேதனைகள், இவைதான் இந்தப் பதிவில்.

புதிய தலைமுறையில்  ஞாயிறு மாலை சாமானியரின் குரல் என்று பாடுபடும் தொழிலாளிகளைப் பற்றி வைப்பார்கள். அதில் ஒரு நாள் பனை ஓலையில் விசிறி செய்யும் தொழிலாளிகள் பற்றி பார்த்த காட்சிகளின் தொகுப்பு.
சிறு குழந்தைகளும் இந்த தொழில் செய்கிறார்கள்.