செவ்வாய், 27 ஏப்ரல், 2021

ஆன்டிலோப் கான்யன் (Antelope Canyon, Arizona)









அரிசோனா அருகில் உள்ள  ஆன்டிலோப் கான்யன் என்ற இடத்திற்கு 2017ல் டிசம்பர் மாதம்  நாங்கள் மகன் வீட்டுக்கு போய்  இருந்த போது இந்த ஆற்றுக்குடைவு  பள்ளதாக்கிற்கு அழைத்து போனான். மகன்  குடும்பத்துடனும்   குடும்ப நண்பர் குடும்பத்துடன்  சென்று வந்த இனிய பயணம். 

(கணவரும் அப்போது உடன் இருந்தார்கள் அந்த நினைவுகள் மனதில்.)

இந்த இடம் அமெரிக்க பூர்வகுடியினர்   நவஹோ பழங்குடியினரின் நிலத்தில் அமைந்து இருக்கிறது. அவர்கள் ஆறுகளின் அருகில் தான் தங்கள் குடியிருப்பை வைத்து இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு (இரண்டு, மூன்று இடங்கள்.)  அழைத்து போனான் மகன்  முடிந்த போது அவைகளை பகிர எண்ணம் உள்ளது. இறையருள் ஒத்துழைக்கவேண்டும்.

(அமெரிக்க செவ்விந்திய குழுவில் பழங்குடியினர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர்கள் இந்த நவஹோக்கள்.  பேசும் மொழி நவஹோ அதை வைத்து அவர்களை அவ்வாறு அழைக்கிறார்கள். இன்றும் அந்த மொழியை பேசுகிறார்கள். இரண்டாம் உலக போரில் ரகசிய தகவல் பரிமாற்றம்   செய்ய நவஹோ  மொழியினர்  உதவினர். பழங்குடியினர் பேசிய மொழியால் அமெரிக்கா இரகசிய தகவல் பரிமாற்றம் தயாரித்தது.   பழைமையான மொழிகளில் நவஹோ மொழியும் ஒன்று. முத்து காமிக்ஸ், லைன்  ரசிகர்களுக்கு நவஜோ என்று தெரிந்து இருக்கும். நவஹோவை நவஜோ என்று அந்த கதையில் வரும்.)

இரண்டு தனி கான்யன்கள் உண்டு . மேல், கீழ்  கான்யன்கள் என்று. நாங்கள் மேல் கான்யன் போய் பார்த்து வந்தோம்.

 பள்ளதாக்கு பகுதிக்குள் போக குறுகிய பாதை அமைப்பு  இதன் வாசலிலிருந்து உள்ளே சில நூறு அடி தூரம் செல்ல வேண்டும்.  

வியாழன், 22 ஏப்ரல், 2021

பறவைகள் பலவிதம்


                                                          கருஞ்சிட்டு
"பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்"  வீட்டுத்தோட்டம் மற்றும் நடைப்பயிற்சியின் போது எடுத்த படங்கள்  இந்த பதிவில் இடம்பெற்று இருக்கிறது.

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வசந்த காலம்





                                          வசந்த கால மலர்கள். 

அரிசோனா எங்கும் இந்த கலர் காகிதப்பூ  மலர்கள்தான்  அலங்காரமாக  வீதி ஓரங்களில் மற்றும் வீட்டின் முன்புறம், பின்புறம் எல்லாம் வளர்க்கப்படுகிறது.
 
வெயில் வந்து விட்டால் மனிதன் மட்டும் தான் "என்ன வெயில், என்ன வெயில்  கொடுமை" என்கிறான். ஆனால் தாவரங்கள், மரங்கள் அதை நம்பி வாழும் உயிரினங்களுக்கு மகிழ்ச்சியான காலம். அவைகளுக்கு தண்ணீரும், உணவும் கிடைத்து விட்டால் அவை மேலும் மகிழும். தாவரங்களுக்கு உணவு தயார் செய்ய  சூரியஒளி வேண்டி இருக்கிறது.

இந்த இளவேனில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதம் இயற்கை தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்கிறது.
இன்பமலர்கள் பூத்து குலுங்கும் சிங்காரத்தோட்டமாக மாறிவிடுகிறது. 

குளிர்காலம் முடிந்து  கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த இளவேனில் காலத்தில் கண்களுக்கு  குளிர்ச்சியை மனதுக்கு மகிழ்ச்சியை  இயற்கை அள்ளி தருகிறது. பார்த்து மகிழ்வோம்.

இலையுதிர்காலமும் இலைகள் வண்ணமயமாக மாறி ஒரு அழகை கொடுத்து உதிர்ந்தது  இங்கு . அது  முடிந்து இளவேனில் காலம் சித்திரையில்   மரங்கள், செடிகள் துளிர்த்தது.  இப்போது  பலவிதமான மலர்கள் பூத்து குலுங்குகிறது.

திங்கள், 12 ஏப்ரல், 2021

சின்னக் குழந்தைகள் போல் விளையாடி


 சின்ன வீடு கட்டி சிங்கார வீடுகட்டி

பேரன் கட்டிய  வீடு. மேல் கூரை போட்டால் உள்ளே இருப்பதை காட்ட முடியாது என்று  இப்படி  மேல் கூரை இல்லா வீடு. குழந்தைகள் உலகத்தில் நம்மை சேர்த்துக் கொண்டார்கள் என்றால் அது ஆனந்தம் தான்.சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்து இருப்போம் . பாட்டில் வருவது போல் பேரனுடன் அவன் கற்பனை விளையாட்டில்  கவலைகளை மறந்து களித்து இருக்கிறேன்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தேன் சிட்டு




இந்த தேன் சிட்டு மகன் வீட்டு தோட்டத்தில் உள்ள  காய்ந்த மரத்தில் அமர்ந்து இருந்தது. எளிதில் படம் எடுக்க முடியாதபடி பறந்து கொண்டே இருக்கும்.  என்னமோ தெரியவில்லை ஓய்ந்து அமர்ந்து இருந்தது மரக்கிளையில். எனக்கு படம் எடுக்க வசதியாக இருந்தது. தோட்டத்திற்கு  வரும்  பறவைகளுக்கு பிடித்த  மரம்.

                     

பறவைகளின் அன்பால் மரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது. கீழ் இருந்து துளிர்த்து கொண்டு இருக்கிறது., நிறைய கிளைகள் , துளிர் இலைகள் வந்து விட்டது.