புதன், 19 ஜூன், 2019

கீழடி

பசுமை நடை 95 வது நடையில் கீழடிக்கு அழைத்துச் சென்றார்கள்.(23.9.2018) அங்கு போய் வந்ததைப் பதிவு போட இவ்வளவு நாளாகி விட்டது. அவர்கள் 100 வது பசுமை நடை விழாவும் கொண்டாடி விட்டார்கள். 100வது பசுமை நடையில் கலந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொண்டு விட்டேன்.

இந்த கீழடிக்கு அழைத்துச் செல்லும்போது முதல் நாள் மழை பெய்து இருந்தது அதனால் அந்த இடம் எப்படி இருக்கிறது, போகும் பாதை எப்படி இருக்கிறது என்பதை அங்கு போய் பார்வையிட்டு வந்து பின் நம்மை அழைத்துச் சென்றார்கள். மழையால் அகழாய்வு செய்யும் இடங்களை த் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து இருந்தார்கள்.  நாங்கள் அங்கு போனதும் திறந்து காட்டினார்கள்.

மிகவும் அழகான அமைதியான இடம்.

அங்கு கீழடி பற்றிக் கொடுக்கப்பட்ட கையேடு- படித்துப் பாருங்கள்.

ஞாயிறு, 9 ஜூன், 2019

மழை ! மழை!

எங்கள் வீட்டுப் பால்கனியிலிருந்து எடுத்த மழைக்காட்சிகள்.


ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழை, காற்றுடன்  நல்ல மழை.
இரண்டு நாளுக்கு முன் பெய்த மழை

மழை வருமா?மழை உண்டா?  என்று கேள்வி கேட்கப்படுகிறது.
கிடைத்த பதில் என்ன பதிவைப் படிங்கள்.

திங்கள், 3 ஜூன், 2019

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்!

நேற்று(2/6/19) பழமுதிர்சோலைக்குப் போய் இருந்தோம் கிருத்திகை என்பதால்.  விடுமுறை தினம் என்பதால்  நல்ல கூட்டம் கோவிலில்.  அழகர் மொட்டை, காது குத்து விழா என்று   அழகர் கோவில் வளாகம் முழுவதும்  கூட்டம்.