வியாழன், 26 பிப்ரவரி, 2015

தேடி வந்த பறவைகள்


                                                                            மணிப்புறா


புல் புல் பறவைகள்
செண்பகப் பறவை
செண்பகப் பறவை 
பெண்குயில்
பெண்குயில்
மணிப்புறா

கருங்குயில்
பெண்குயில்
கருங்குயில்
காகம்
கருங்குயில்கள்
பெண்குயில்


மணிப்புறா
வளைத்து வேப்பழத்தை தின்ன முயல்கிறது
உண்டு களித்து  பறக்க தயார்

                  வேப்பழத்தை தின்று இனிமையாகபிங் பிங் என்று பாட தயார்.

சிறு வயதில் வாரம் ஒருமுறை வேப்பம் கொழுந்து அரைத்து அம்மா ஒரு சின்ன 
உருண்டையாகக் கொடுத்து எங்களை விழுங்கச் சொல்வார்கள்.(அதிகாலையில் வெறும்
 வயிற்றில்) அப்போது கசப்பு பிடிக்காது . முகத்தை சுளித்து வேண்டாம் என்று அழுது 
அடம் செய்து இருக்கிறேன். அதன் நன்மைகள் தெரிந்து என் குழந்தைகளுக்கு கொடுக்கும்
 போது அவர்கள் வேண்டாம் என்று மறுத்தபோது வேப்பம்கொழுந்தின் மகிமைகளைச் 
சொல்லிஅவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

அதுபோல் இந்தப் பறவைகளுக்கும் தெரிந்து இருக்கிறது. அதிகாலையில் வேப்பமரத்தில்
 வந்து அமர்ந்து வேப்பம் பழங்களை வளைத்து வளைத்து 6மணியிலிருந்து 7மணி வரை
 சாப்பிடுகிறது, அனைத்து பறவைகளும். (புல் புல், கருங்குயில், புறா, செண்பகப்பறவை, 
பெண்குயில், காகம்.) எங்கள் ஊருக்குச்சென்று இருந்த போது என் வீட்டு ஜன்னல் 
வழியாக தெரியும் வேப்பமரத்தில் அமர்ந்த பறவைகளை எடுத்தவை.

வேப்பம் காற்று உடலுக்கு நன்மை அளித்து பலநோய்களைக் குணமாக்கிறது.. வேப்பம்
 மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் உடையது. உடல்
 ஆரோக்கியத்திற்கு வேப்ப மரம் மருந்தாகிறது. வேப்பமரக்காற்று உடலுக்கு நல்லது 
என்று கிராமப்புறங்களில்  மரத்தின் அடியில் கட்டிலைப்போட்டுப் படுப்பார்கள்.
 குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டி அதில் படுக்கவைத்து விட்டுப் பெண்கள் 
வயல்வெளியில் வேலைபார்ப்பார்கள்.

 பூச்சிக் கடி, மற்றும் மனநோய்க்கு வேப்பிலை அடித்தலும் உண்டு.  வேப்பிலையால்  வீசி
 வீசி மந்திரிப்பார்கள். அந்தக் காற்றுஉடலுக்குள் சென்று நரம்புத் தளர்ச்சியை 
குணமடைய செய்யுமாம்.
  



வேப்ப மரத்தை வீட்டின் முன் வளர்த்துத் தெய்வமாய் வணங்குகிறார்கள் சிலர்.

                                                            வாழ்க வளமுடன்
                                                      ===========================

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

தாய்மை

இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் தெரு நாய்  நான்கு குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளை போட்டோ எடுக்கச் சென்ற போது அழகான காட்சி கிடைத்தது , தன் நாக்கால் தன் குட்டிகளை நாவால் நக்கி அன்பு பாராட்டும் தாய்மை!
கண்களை மூடி உருகும் தாய்மை
அம்மாவைத் தொடரும் குட்டிகள்

வீதியில் செல்ல முயலும் குட்டியைத் தன் வாயால் கவ்வி  பாதுகாப்பாய் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லல்


நேற்று போட்டோ எடுக்க நாய் குட்டிகள் இருக்கும் சாலைஎதிர்புறத்திற்கு போய் நின்று கொண்டு எடுத்தேன். ஒரு நாய்க்குட்டி  சாலையைக் கடந்து என்னிடம் வந்து நின்றது,  அப்போது திடீரென்று சாலைக்கு நடுவில் நடக்க ஆரம்பித்தது குட்டி. இரண்டு பக்கமும் கார், ஆட்டோ வந்து விட நான் பதறி இரண்டு பக்கமும் கை காட்டி நிறுத்தி குட்டியைத் தூக்கி அதன் அம்மா அருகில் விட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு வேர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது.. காரோட்டி வந்தவரும், ஆட்டோ ஓட்டி வந்தவரும் சிரித்துக் கொண்டு கை அசைத்துச் சென்றார்கள். நாயும் தன் குட்டியை தூக்கிவிட்டாளே என்று என்னைக் குதறாமல் விட்டது.   உடனே தாய் நாய் வீதியில் சென்ற குட்டியை முதலில் சாக்கடையின் கீழ்ப்பகுதிக்குப் பாதுகாப்பாய் கொண்டு விட்டு வந்தது. அப்புறம் ஒவ்வொரு குட்டியாய் கொண்டு வைத்து விட்டது(மழை நீர் மட்டும் போகும் சாக்கடை- அதனால் அதில் தண்ணீர் இல்லை) மேலே வரப் பார்த்த குட்டிகளை இழுத்து உள்ளே வைத்துக் கொண்டது.   என் கணவரிடம் வந்து சொன்ன போது  நாய் உன்னை சும்மா விட்டது  பெரிய விஷயம் என்றார்கள். தாய் நாய்க்குத் தெரிந்து இருக்கும், நான் குட்டியை காப்பாற்றத்தான் தூக்கினேன் என்று.

வெவ்வேறு ஊர்களில் எடுத்த படங்கள். கீழே வருவது :-

எல்லோரும் சமத்தாய் பால் குடித்துவிட்டு விளையாடப் போவீர்களாம்
அம்மா கொஞ்சம் நில்லு எனக்கு  பசிக்குது
போனமாதம் நடைபெற்ற  ’தாய்மை’   என்ற தலைப்பில் போட்டோ கேட்ட தமிழில் புகைப்படக்கலை போட்டிக்கு அனுப்ப பட்ட படம் ஆல்பத்தில் இடம்பெற்று மகிழ செய்தது
அம்மா கொஞ்சம் நில்லு எனக்கு  பசிக்குது
சகல ஜீவராசிகளுக்கும் தாய்மை உணர்வு உண்டு தானே! 
அன்பை அனைத்து ஜீவராசிகளும் ஒவ்வொரு வழியில் வெளிப்படுத்துகிறது. அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று வாழ்வோம்.

வாழ்க வளமுடன்!
-----------------

புதன், 11 பிப்ரவரி, 2015

புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்

மலைக்கோவில்
இரண்டு பக்கம் நாகங்களுடன்   சித்தி விநாயகர்

பாலதண்டாயுதபாணி
ஆறு தாமரைகளில் ஆறு முருகன்
மூன்று தூவாரங்களிலும் குரங்கு எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது. நான்  போட்டோ எடுக்கப் போகும்போது ஒன்று மட்டும்- அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது.


மதுரைக்கு பஸ்ஸில் போகும் போதெல்லாம் இந்தக் கோவிலைப் பார்ப்போம்.
இந்த முறை காரில் மதுரை போனதால்  மதுரையிலிருந்து மயிலாடுதுறை திரும்பும் போது இறங்கி முருகனைக் கும்பிட்டு வந்தோம். 

40 படிகள் கொண்ட சிறிய கோவில். நடுவில் பாலதண்டாயுதபாணி, அவருக்கு வலது பக்கம்  சித்தி விநாயகர் இருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லை குரங்குகளின் இருப்பிடமாய் இருக்கிறது. கோவிலுக்கு வெளியே அமர்ந்து இருப்பவரிடம் குரங்குகள் தொந்திரவு செய்யுமா? குச்சி ஏதாவது எடுத்துப் போக வேண்டுமா ? என்று  என் கணவர் கேட்டபோது, ஒன்றும் செய்யாது போங்கள் என்றார்.


படிகளில் அமர்ந்து இருந்த குட்டிக் குரங்கு ஒன்று நாங்கள் படி ஏறியதைப்பார்த்து  முறைத்து விட்டு  மதில் மேல் இருந்து உற்றுப்பார்த்தது. 

பூட்டிய கம்பிக் கதவுக்குள் முருகனைக் கண்டோம். கண்மலர் , ராஜகிரீடம் அணிந்து, எலுமிச்சை மாலையுடன் இருந்தார் சிறிய அழகிய முருகர்.  முந்திய நாள் தைப்பூசத்திற்குச் செய்த அலங்காரம் கலைக்கப்படாமல் இருந்தது. பக்கத்திலிருந்த  சித்திவிநாயகரையும்  பூட்டிய கம்பிக் கதவு வழியாகத் தரிசனம் செய்து விட்டு நிமிர்ந்தால்  தாயும் சேயும் இரண்டு குரங்குகள் கொஞ்சிக் கொண்டு இருந்தன. மல்லாந்த நிலையில் குட்டி, அதன் வயிற்றில் வாயை வைத்து அதைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தது, தாய்க் குரங்கு.
 அழகிய காட்சி எடுக்கப் போனபோது கணவர், ”மேலே வந்து விழுந்து காமிராவைப் பிடுங்கப் போகிறது வா” என்று அழைத்தவுடன் வேகமாய் எடுத்த காரணத்தால் தெளிவில்லாத தாய், சேய் படம்.
என் கணவர் கூப்பிட்ட சத்தம் கேட்டு குட்டி குரங்கு என்னை திரும்பி பார்த்தது.

இருந்தாலும் அதையும் விடாமல்   பதிவில் இடம்பெறச் செய்து விட்டேன்.  விளையாடுவது அழகாய் இருக்கிறது அல்லவா?

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். இப்படி சிறிய குன்றில் முருகன் கோவில் கட்டியது மகிழ்ச்சியான விஷயம். அந்த மலை பிழைத்தது. இப்படி மலை மீது கோவிலை கட்டினால் மலைகள் கால காலமாய் இருக்கும். 
                                                             வாழ்க வளமுடன்.
--------------------------------------------------

சனி, 7 பிப்ரவரி, 2015

மாற்றம் ஒன்றே மாறாதது

மதுரையில்  டெம்பிள் சிட்டி என்ற ஓட்டலில்,  காலம் மாறும்போது நம் உணவு  உண்ணும் முறை மாறியதை  வருடங்கள் போட்டுப்   படம் வரைந்து பிரேம் போட்டு  மாட்டி  வைத்து இருந்தார்கள்.

எளிமையாக இருந்த உணவு பரிமாறும் முறை, இப்போது ஆடம்பரமாய் மாறி விட்டது. நாளை என்ன, எப்படி இருக்கும் உணவுப் பழக்கம் என்ற  கேள்வியை  வேறு  முன் வைக்கிறது.

கீழே அமர்ந்து சம்மணம் இட்டு உணவு உண்ணும் முறை  இப்போது ஓட்டல், கல்யாண கூடங்கள் எங்கும் இல்லை. ஏன்?  வீடுகளிலும் இல்லை. எல்லாம் மேஜை, நாற்காலி தான். வாழ்க்கை முறை மாறி விட்டது. நகர்ந்து போய் எடுக்ககூட வேண்டாம் என்று சுழலும் மேஜை எல்லாம் வந்து விட்டது.

இந்த ஓட்டலில் 1975ல்  உணவு, மேஜைச்சாப்பாடாக மாறியது என்று சொல்கிறது. உண்மைதான் என்று நினைக்கிறேன். என் சகோதரிக்கு 1969ல்,  கீழே அமர்ந்துதான் விருந்து உண்ணல்.  எனக்கு 1973  பிப்ரவரி 7 ல் திருமணம்  நடந்த போதும் கீழே அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் தான் இருந்தது. 


மின்சாரம் இல்லை போலும் விசிறியைக் கொண்டு வீசும் இளம்பெண். கண்ணாடிக் கூட்டுக்குள்  விளக்கு 
மின்விசிறி, மேஜை, நாற்காலி சாப்பாடு
குளிர்சாதன வசதி  சொகுசு இருக்கைகள் 
 குடும்பத்தினர்களுக்கு மட்டும்  வசதியான  தனி அறை
தாங்களே தங்களுக்கு விருப்பமான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி.
அடுத்து என்ன மாற்றம் வரும்? சொல்லுங்களேன்.

கால்களை  தொங்க வைத்து  அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் முதல் படத்தில் காட்டியது போல் கீழே அமர்ந்து சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதே சிறந்தது என்கிறார்கள்.
                                       
                               நல்ல கருத்துக்கள் சுவர்களை அலங்கரித்தன.
                                           
விழுந்தாலும் எழுந்து முயற்சி செய்ததால்   கிடைக்கும் வெற்றி  வாழ்க்கையில் உயர்வு தரும் .  விட்டுக் கொடுத்தலும்  வாழ்க்கைக்கு தேவையான ஒன்று தானே!.

                    ஓட்டலில் உள்ளே வந்து விட்டு சாப்பிடாமல் போனால் எப்படி?

                       
                                                 வடை, கேசரி, பூரி உருளைக்கிழங்கு 
                                                                                                                                               
அடுத்து, தோசை வேண்டும் என்றால் அதற்கு சாம்பார்  வேண்டும் அல்லவா?

                                         மூன்று வகை சட்னி, மிளகாய்ப் பொடி


அப்புறம் மதுரையின் சிறப்புப் பானம்


                                                                 வாழ்க வளமுடன்.

                                        -------------------------------------------------------------