பயணக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மே, 2020

திருக்கேதீச்சரம் திருக்கோயில்

திருக்கேத்தீஸ்வரம் thiruketheeswaram மாதோட்டம் 11.03. 2011 காலையில் நாங்கள் அனுராதபுரத்தில் இருந்து திருக்கேதீச்சரத்திற்குப் புறப்பட்டோம். திருக்கோயிலின் இருப்பிடம்: A17 பெருஞ்சாலையில் வடக்கு நோக்கிச்சென்று மகமாச்சியா என்ற ஊரில் மேற்கு நோக்கித் திரும்பி A14 சாலையில் செட்டிகுளம், முருங்கன் வழியாக மன்னார் செல்லும் வழியில் சுமார் 110 கிமீ தொலைவு செல்லவேண்டும். (மதவாச்சி என்கிற ஊர் வரையில் ரயில் வசதி உள்ளது. )பிரதான சாலையின் வடபுறம் திருக்கோயில் வளைவு உள்ளது அதன்வழியாக 4.5கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது பாலாவி அருகில் பாலாவி என்னும் தீர்த்தக் கரை அமைந்துள்ளது தூயநீர் நிறைந்த பாலாவியில் நீராடும் துறை படிக்கட்டுக்களுடன் உள்ளது.

 பெண்களுக்கென உடைமாற்றும் அறை உண்டு. கரையில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது புராண வரலாறு ஈழத்து சிவாலயங்களில் வரலாற்றுப் புகழ் மிக்கதாகவும், நாயன்மார்களால் பாடல் பெற்று, மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளைத் தாங்கி உள்ளது. ’ஈழத்துத்திருக்கோயில்கள்-வரலாறு மரபும் ’,’திருக்கேதீச்சரத் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர்’ முதலிய நூல்கள் வாயிலாக இத்தலச்சிறப்புக்கள் எங்களுக்குத் தெரியவந்தன //ஆதியில் கேதுவினால் பூசிக்கப் பட்டதால் திருகேதீச்சரம் என்றும், பின் மகா துவட்டா என்னும் தேவதச்சன் பூசித்து திருப்பணி புரிந்ததனால் ’மகாதுவட்டாபுரம்’ என்றும் பெயர் பெற்றது என்று கந்தபுராணம், தட்சிண கைலாய மான்மியம் ஆகியவை கூறுகின்றன..

 மகாதுவட்டாபுரமே காலப் போக்கில் ”மாந்தோட்டம்” ஆனது.// சிவபக்தனான் இராவணனைக் கொன்றதால், இராமன் பிரம்மகத்தி தோஷம் பிடிக்காமல் இருக்க, முன்னேசுவரத்தில் பொன் லிங்கமும், திருகோணேசுவரத்தில் இரத்தினலிங்கமும், திருகேத்தீச்சரத்தில் வெள்ளிலிங்கமும் , பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் இராமேசுவரத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார். திருக்கேதிச்சரம் இராமேஸ்வரத்திற்கு முற்பட்டது என்று வரலாறு கூறுகிறது. மேலும் இத்தலத்து இறைவனை அகத்தியமுனிவர், மண்டோதரி, அருச்சுனன் முதலியோர் வழிபட்டதாய் கூறப்படுகிறது. அருச்சுனன் தீர்த்தயாத்திரையின் போது ஈழநாட்டிலுள்ள இத்தலத்தை வணங்கி, பின் நாகர் இனப்பெண்ணை மணந்தார் என்றும் புராணம் கூறுகிறது.

 கேதீச்சரநாதனை கெளரிநாதர், கேதீச்சரர், மகா துவட்டாபுரநாதர், ஈழக்கைலாயநாதர், தென்கயிலாயநாதர், மத்யசேதுநிவசர், நாகநாதர், இராஜராஜேவரர், நித்தியமணவாளர், பெருந்துறை ஈசன், எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறார் இத்தலத்தின் புண்ணியதீர்த்தமாகிய பாலாவி ஆறு பற்றி சம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் “மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே” என்றும், சுந்தரர் அருளிய திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ”பாலாவியின் கரைமேல்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. ”பன்வினை போக்கும் பாலாவி” என்றும், ”பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி”என்றும் திருக்கேதீச்சரப்புராணம் கூறுகிறது. 

 திருக்கோயில் வரலாறு மாந்தோட்டம் முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியது.மாந்தை துறை முகமென்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது.உரோமர்,பாரசீகர், அரேபியர், சீனா, இந்தியர் முதலிய பல தேசத்தவர்களுடன் வர்த்தகத தொடர்புகள் மாந்தை துறைமுகத்துக்கு இருந்துள்ளன. //தந்தையால் நாடு கடத்தப்பட்டு மாந்தைத் துறைமுகத்திற்கு வந்த கலிங்க இளவரசன் விஜயன் ”திருக்கேத்தீச்சரர் கோயில் திருப்பணியை திருத்தமுற செய்வித்தான்” என்று மகாவம்சத்திலே கூறப்ப்டுகிறது. 

விஜயன் காலம் கிமு 543. இதிலிருந்து இக் கோயிலின் பழமை தெரியும். திருவாசகம் குயிற்பத்திலுள்ள, ”ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பளித்த பெருந்துறை மேயபிரான்” என்பது மாந்தையை குறிக்குமென்பர். கி.பி1028ல் இராசேந்திரசோழன் ஆட்சிசெய்த போது இவ்வாலயத்தில் ஏழுநாள் விழாவெடுத்து வைகாசி விசாகத்தில் தீர்த்தவிழா நடத்தியதாகவும், அவன் காலத்தில் கோயில் பெயர் இராஜராஜேஸ்வரம் என்றும், ஊர் பெயர் இராஜராஜபுரம் என்றும் வழங்கி பாதுகாப்புக்காக கோயிலை சுற்றி நன்னீர், கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தது என்றும் இராசேந்திர சோழன் கல்வெட்டு கூறுகிறது.  

கி.பி 13ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தர பாண்டியன் இவ்வாலயத்தில் சிற்பவேலைகள செய்தான், 4வது மகிந்தனின் ஆட்சிகாலத்தில் திருகேத்தீச்சுவரம் புண்ணியதலம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பின் விஜயநகர பேரரசர் காலத்திலும் திருக்கேத்தீச்சரம் சிறப்போடு விளங்கியது.// //கி.பி 1505 ஆம் ஆண்டு போத்துக்கேயர்கள் கோயிலை அழித்து பொருட்களை கொள்ளை அடித்து கோயில் மதில் ,கோபுரம் ஆகியவற்றின் கற்களை கொண்டு ம்ன்னார் துறைமுகத்தை கட்டினர். இதன் பின் மண் மாரியால் கோயில் மண்ணால் மூடப்பட்டு அடர்ந்த காடாய் மாறியது // //கோயில் நகரம் எனப் புகழ் பெற்ற பெருநகரமாகிய மாதோட்டம் என்னும் நகரமும் பாலாவியாறும் கி.பி 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீசிய பெரும்புயலால் முற்றிலும் அழிந்து சிதைந்தன.

 பாலாவி என்னும் ஆறு மேடாகி குளமாகியது போத்துக்கேயரால் அழிக்கப்பட்டபின் சுமார் மூன்று நூற்றாண்டுகளாகத திருகேத்தீச்சுர ஆலயமும், மாந்தோட்டநகரும் மக்களால் மறக்கப்பட்ட இடமாக மாறியது. // //கி.பி. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் தோன்றி ஞானபானுவாக விளங்கிய ஆறுமுக நாவலர் இலங்கை மாந்தோட்டத்தின் ஒரு பகுதியில் ‘மறைந்து போய் ஒரு மருந்து இருக்கின்றது”, ஒரு திரவியம் இருக்கின்றது”, தேன் பொந்தொன்று இருக்கின்றது” என்று திருக்கேதீஸ்வரத் திருத்தலத்திலெழுந்தருளிய் திருக்கேதீஸ்வர நாதனை இலங்கைச் சைவமக்களுக்கும் சைவ உலகுக்கும் முதன் முதலில் நினைவூட்டி, உணர்வூட்டி, பிரசாரம் செய்து, அறிக்கை ஒன்றையும், துண்டு வெளியீடுகளையும் வெளியிட்டருளினார்கள். இவ்வாறாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நினைவை மக்களுக்கு அறிவித்து உண்ர்த்திய பெருமை ஆறுமுக நாவலர் பெருமான் அவர்கட்கே உரியதாகும். அவர் சைவ அன்பர்கள் பலரையும் கூட்டி திருக்கேதீச்சரத்தை கண்டறியச் செய்தார். அன்பர்கள் நகரின் சிதைவுகளை அகற்றிக் கோயிலை புனர்நிர்மாணம் செய்தனர்.

 மறைந்தாகக் கருதப்பட்ட40 ஏக்கர் நிலம் 3100 ரூபாவிற்கு ஏலத்தில் சைவமக்கள் சார்பாக வாங்கி சைவப்பெரியார்கள் நிலத்தில் புதைந்த திருவுருவங்களை கண்டுபிடித்து திருப்பணிகள் செய்தனர். 1903ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1919 ஆம் ஆண்டு ஆரம்பித்து பலமுறை அன்பர்கள் பலராலும் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்பர் திரு. நமசிவாயத்தின் அயராத முயற்சியால் ஆலயம் சிறப்புடன் 2003ல் கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுள்ளது// //இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தர்மடம், சுந்தரர் மடம், நாட்டுக்கோட்டை நகரத்தார் மடம், அம்மன் மடம், பசுமடம், பூநகரி மடம், சபாரத்தினசாமிமடம், சிவராத்திரிமடம், திருவாசக மடம், , திருப்பதி மடம், கெளரீசர்மடம், நாவலர்பெருமான் மடம், விசுவகன்ம மடம், திருக்குறிப்புத்தொண்டர் மடம், என பல மடங்கள் 1990ஆம் ஆண்டு வரை காணப்பட்டன. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் அரசுப்படைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, ஒரு மடம்கூட மிஞ்சவில்லை அழகிய வேலைப்பாடு மிகுந்த தேரும் குண்டுவீச்சில் தப்பவில்லை. 2003லிருந்து பூஜைகள் நடந்து வருகிறது// //இலங்கையில் ஆட்சி செய்த சோழ, பாண்டிய மன்னர்களால் சிறப்புடன் விளங்கியது. திருக்கேதீச்சரத்தின் உயர்வு தாழ்வுகளுக்கேற்ப இலங்கை வாழ் மக்கள் வாழ்வும் தாழ்வும் ஏற்பட்டது//என சொல்கிறார்கள் திருக்கோயில் அமைப்பு இக்கோயில் ஐந்து நிலைகளுள்ள இராசகோபுரத்தைக் கொண்டுள்ளது. 

அதன் மேலே ஐந்து கலசங்கள் விளங்குகின்றன. இராஜகோபுரத்தின் அருகில் அமைந்துள்ள உயரமான கோபுரத்தில் இரண்டு டன் எடையுள்ள வெண்கல் ஆலயமணி காணப்படுகிறது.இது இசைக்குறிப்பில் காணப்படும் ’இ’ என்ற நாத ஒலியமைப்பில் இது உருவாக்கப்பட்டதென்கிறார்கள் கோபுரத்தின் உள் நுழையுமுன் வலதுபுறம் குணவாசல் பிள்ளையார்,இடது புறம் குணவாசல் சுப்பிரமணியர் சந்நிதிகள் உயரமாய் அமைந்துள்ளன. நடுவில் நந்திமண்டபம் பெரிதாக இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் ,கோபுரத்தின் இரு புறமும் சூரிய சந்திரர்களின் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம்,பலிபீடம்,நந்தி முதலியவை சுவாமி சந்நிதிக்கு நேரே அமைந்துள்ளன, துவார பாலகர்கள் வாயிலில் இருக்கிறார்கள். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. திருக்கேதீச்சரம் இறைவன் பெயர்- திருகேத்தீச்சர நாதர் இறைவி பெயர்- கெளரிஅம்மை, தீர்த்தம்- பாலாவி. தலவிருட்சம் - வன்னி.. கர்ப்பகிரகம்,அர்த்தமண்டபம்,மகாமண்டபம் ஆகியவை உள்ளன.மஹாமண்டபம் அஸ்பெஸ்டாஸ் கூரையோடு விளங்குகிறது. மூலவர் சிறிய இலிங்கத்திருமேனியுடன் விளங்குகிறார். 


விமானம் 3 அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.உள்ளே நுழைந்ததும் தென்பிரகாரத்தில் பதிகம் பாடிய சம்பந்தர், கேதுபகவான், சமயக்குரவர் நால்வர், சேக்கிழார், சந்தானகுரவர், திருமுறைகள் வேதாகமம், பதிகம் பாடிய சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.மேற்குப் பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், சோமாஸ்கந்தர், பஞசலிங்கம், சோமாஸ்கந்தர் ,மகாவிஷ்ணு, மகாலிங்கம், மகாலட்சுமி ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. வடக்குப்பிரகாரத்தில் தெற்கு நோக்கி ஆறுமுகர் வள்ளி தெய்வயானை உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். வடகிழக்கில் யாகசாலை,பைரவர் சந்நிதி,பள்ளியறை,நவக்கிரக சந்நிதி ,நடராசர் சந்நிதி , கருவூலம், அமைந்துள்ளன. கர்ப்பகிரகத்தின் வெளிச் சுவரின் தெற்கில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோற்பவர், வடக்கில் பிரம்மா துர்க்கா, சண்டேசர். ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.63 நாயன்மார்கள், சேக்கிழார், நால்வர், சந்தானக் குரவர்கள், நம்பியாண்டார் நம்பிகள், ராசராசன் ஆகியோருக்குச் சிலைகள் உள்ளன. ராசராசனது கையில் திருமுறை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. 

 கோயிலுக்கென தேர்கள் உள்ளன.வசந்த மண்டபம் உள்ளது திருஞானசம்பந்தர் தேவாரம்: //விருது குன்றமா மேருவி னாணரவாவன லெரியம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றறைபதி எந்நாளும் கருது கின்றவூர்க் கனைகடல் கடிகமழ் பொழிலணி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரம் கைதொழக் கடுவினை யடையாவே.// சுந்தரர் தேவாரம்: //கறையார் கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள் சிறையார்பொழில் வண்டியாழ்செயும் கேதீச்சரத் தானை மறையார்புக ழூரன்னடித் தொண்டன்னுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொல்லக் கூடாகொடு வினையே// விழாக்கள் ஐந்து பெரிய தேர்கள் வைகாசி விசாகத்தின் போது பவனி வரும். மகாசிவராத்திரி சமயம் பாலாவி நீர் எடுத்து மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இதனை தீர்த்தக்காவடி என்பர்.

அம்மனுக்குக் கேதார கெளரி விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாலாவி குளத்தில் குளித்து மக்கள் திருகேத்தீச்சரநாதரை வழிபடுகிறார்கள். நாங்கள் போன போது உச்சிகால பூசை நடந்து கொண்டு இருந்ததது அதனால் நேரே கோவில் போய் விட்டோம். பூசைசெய்யும் கட்டளைக்காரர்கள் மட்டும் தான் உள்ளே அனுமதி நாங்கள் வெளியிலிருந்து –மகாமண்டபத்திலிருந்து இறைவனை வணங்கினோம். இத்தலத்திற்குரிய தேவாரப்பாடல்களை சந்நிதியில் நின்று பாடினோம். உள்பிரகார வழிபாடு முடியவும் கோயில் நடை சார்ர்த்தும் நேரம் வந்தது.. பின் பாலாவி குளத்திற்குச் சென்று தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு அங்கு இருக்கும் பாலாவிப் பிள்ளையாரை வணங்கி வந்தோம். திருகேத்தீச்சர கோவில் வாசலில் புத்தக கடை, மாலைகள்,கலைப்பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. என் கணவர் திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சனப் பெருவிழா மலர், திருக்கேதீச்சர தலவரலாறு, புத்தகங்கள் வாங்கினார்கள். மதிய உணவுக்காக ,சைவ உணவகத்தை தேடித் தேடி போய் மன்னார் கிராண்ட் பஜாரில் உள்ள கமலா உணவகம் போய் உணவு சாப்பிட்டோம். பிறகு அன்றிரவு தம்பல்ல என்ற ஊருக்குச் சென்று தங்கினோம்.அடுத்த நாள் நாங்கள் திருக்கோணேஸ்வரம் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்..

                                                                          வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஸ்வயம்புநாத் கோயில் காத்மாண்டு


Swayampunath temple (stupa)
ஸ்வயம்புநாத் கோயில்(ஸ்தூபி)
காத்மாண்டு

நாங்கள் காத்மாண்டில் தங்கியிருந்த
போது 20.09.2011 அன்று காத்மாண்டு
நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டு அருகில்
உள்ள சுவயம்புநாத் கோயிலுக்குச்
சென்று வந்தோம்.

காத்மாண்டு பெரிய நகரமாய்
இருக்கிறது. அகன்ற சாலைகள்,
கடைவீதிகள், மால்கள், வணிக
நிறுவனங்கள், அரண்மனை, அருங்
காட்சியகம், பூங்காக்கள், கோயில்கள்
என ஒரு தலைநகருக்கு உரிய எல்லா
அம்சங்களும் பொருந்தியுள்ளது.












சுறுசுறுப்பாக மக்கள் இயங்குகிறார்கள். நேபாளத்
துக்கே உரிய அந்த வித்தியாசமான தொப்பிகளை
ஆண்கள் அணிகின்றார்கள். பல வண்ணங்கள்,
டிசைனில் அந்தத்தொப்பிகள் இருக்கினறன. பேருந்து
களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிலசமயங்களில்
பேருந்தின் மேற்கூரைகளில் கூடப் பயணம் செய்
கிறார்கள்.



வாடகை கார்கள், டெம்போக்கள் உள்ளன.
வாடகைக்கார்களில் அதிகமாக மாருதி 800 கார்களே
உள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளைப் பார்த்த
வாறே சென்றோம்.


தர்பார் மார்க் (durbar marg)
ஒரு முககியப் பகுதியாக விளங்குகிறது. இப்பகுதி
யில் நிறைய வங்கிகள் உள்ளன. ஸ்டேட் பாங்க்
ஆப் இந்தியாவின் கிளை, ஏடிஎம் ஆகியவை இங்கு
உள்ளன. இதில் நேபாள ரூபாய்க்கு ஒரு நாளைக்கு
அதிகபட்சம் பத்தாயிரம் , ஏடிஎம்மில். நம் கார்டை
வைத்து எடுக்கலாம். நேபாள ரூபாய் இந்திய
ரூபாயைவிட மதிப்பு குறைவு. நகரில் கடைக்
காரர்கள், சைக்கிள் ரிக்க்ஷாகாரர்கள், இந்திய
ரூபாயைக் கொடுத்தாலும் விகிதத்தைக் கணக்கிட்டு
வாங்கிக் கொள்கிறார்கள். பணமாற்றம் செய்யும்
கடைகள் இங்கு நிறைய உள்ளன. அமெரிக்க டாலர்,
இந்திய ரூபாய், நேபாள ரூபாய், சீன யுவான்
இவற்றை ஒன்றிலிருநது மற்றொன்றிற்கு மாற்றிக்
கொளளலாம். பணமாற்ற விகிதத்தை கடைக்கு
வெளியே பட்டியலிட்டு வைத்திருக்கின்றனர்.

கலைப்பொருட்களை விற்கும் கடைகள் நிறைய
உள்ளன. எச்சரிக்கையாக இல்லாவிட்டால் சிலர்
ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். ஒரு கடையில் கலைப்
பொருள் வாங்கியபோது, கடைக்காரர் நாங்கள்
கொடுத்த பணத்தில் ஒரு நூறு ரூபாயை மறைத்து
வைத்துக் கொண்டு குறைவாய் கொடுத்து இருப்ப
தாகக் கூறி இன்னும் ஒரு நூறு கொடுக்கவேண்டும்
என்றார். உடன் வந்த திரு. ராஜேந்திரன் அவர்
களுக்கு இந்தி நன்கு தெரியும். அவர் ’நாங்கள்
இவ்வளவு செலவு செய்து உங்கள் ஊருக்கு வந்து
இருக்கிறோம். நூறு ரூபாய் ஏமாற்ற வேண்டிய
அவசியம் இல்லை. எங்கள் ரூபாய் உன் பெட்டியில்
இருக்கும் பார்’ என்ற பின் கடை முதலாளி பார்த்து
விட்டு சரி சரி என்றார். தன் தவறுக்கு மன்னிப்புக்
கோரவில்லை. இப்படியும் சில மனிதர்கள்!

காத்மாண்டு நகரின் மேற்குப் பகுதியில் ஒரு மலை
மீது அமைந்துள்ளது, சுயம்புநாத் கோயில்.
கோவிலுக்குச் செல்ல நுழைவுக்கட்டணம் உண்டு.
அடிவாரத்தில் புத்த ஸ்தூபிகள் சிறிய அளவில்
உள்ளன. கண் உருவம் ஓவியமாக வரையப்
பட்டுள்ளது.



தோரணங்கள் நிறையக் கட்டப்பட்டுள்ளன. கீழே ஒரு
தடாகம் கட்டப்பட்டுள்ளது. உலக அமைதியின் அடை
யாளமாக இது உள்ளது.




மேலே கோவிலுக்குச் செல்ல இரண்டு வழிகள்
உள்ளன. ஒன்று வலது புறமாகப் படிப்பாதையாக
உள்ளது. மற்றொரு பாதை கார் செல்லும்படியாக
இடது புறமாகச் செல்லுகிறது. நாங்கள் படிப்
பாதையில் சென்றோம். பழனிப்படிக்கட்டுகள் போல
உள்ளன. படிகளில் யாசிப்பவர்கள் உட்கார்ந்திருக்
கிறார்கள். அவர்களிடம் பன்னாட்டு கரன்சிகள்,
நாணயங்கள் உள்ளன. அவர்களிடமும் நாணயத்தை
மக்கள் மாற்றிக் கொள்கின்றனர்

படிகள் மொத்தம் 365. மலைமீதேறிக் கோயிலை
அடைந்தோம். இக்கோயிலை குரங்குக்கோயில் என்று அழைக்கிறார்கள்
முதலில் வஜ்ராயுதம் நம்மைக் கவர்கிறது/அச்சுறுத்து
கிறது? தங்க நிறத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.
ஒரு மேடையின் மீது வைக்கப்பட்டுள்ளது.



கோயில் பரப்பின் நடுவில் மிக உயர்ந்து ஸ்தூபி
விளங்குகிறது. புத்தரின் இரு அருட்கண்கள் மேலே
உள்ள சதுரப்பகுதியின் நான்கு பக்கங்களிலும் அழகாக
வரையப்பட்டுள்ளது. ஸ்தூபியின் மீது மஞ்சளால்
அபிஷேகம் பண்ணுகிறார்கள். ஸ்தூபியின் நான்கு
புறங்களிலும் புத்தருக்கு தங்க நிறத்தில் சந்நதிகள்
உள்ளன. அங்கு விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.
ஊதுவத்தி வைக்கிறார்கள்









மிகுந்த வேலைப்பாட்டுடன் உள்ளன. சிங்கம்
போன்ற விலங்குகளின் வெண்கல உருவங்கள்
உள்ளன. வெண்கலமணிகளும் நிறைய உள்ளன.

கோயில் வரலாறு கூறும் பெரிய கல்வெட்டு ஒன்று
உள்ளது. பலகடவுள் உருவங்கள் உள்ள சிறு சிறு
கோயில்கள் இங்கே உள்ளன.



இக்கோயிலின் ஒருபுறத்தில் சீதளாதேவி அம்மன்
கோயில் உள்ளது. இங்கே நிறைய இந்துக்கள்
வந்து வழிபடுகின்றனர். பூசைக்குத்தேவையான
பொருட்களை விற்கும் சிறிய கடைகள் பக்கத்தி
லேயே உள்ளன. வலமாகச்சுற்றி வரும்போது
புத்தருக்கான ஒரு சந்நிதி மிகப்பெரிதாக உள்ளது.
பெரிய புத்தர் சிலை உள்ளது.




பெளத்த பிக்‌ஷுக்கள் அங்கு வழிபாடு
முதலியவற்றை நிர்வகித்து வருகிறார்கள்.
சுயம்புநாத் கோயிலில் இருந்து பார்த்தால்
காத்மாண்டு நகர் கீழே அழகாகத் தெரிகிறது.





தரிசனம் முடிந்து மலையைவிட்டுக் கீழே
இறங்கினோம்.அங்கே வாயில் அருகே கலைப்
பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன. சில
கலைப்பொருட்களை வாங்கினோம் புத்தரின்
முகங்கள், அம்பாளின் முகங்கள்(தாரா தேவி),
பசுபதிநாத் கோயிலில் உள்ள இறைவனின் சிறிய
உருவச்சிலைகள், மணிகள் இன்னும் பலபொருட்கள்
இங்கு கிடைக்கின்றன.

தாராதேவியின் சிலைகள் (வெண்கலத்தில்) வீணை
வாசித்துக் கொண்டிருப்பது போல் விடுதிகளின்
வரவேற்பறைகளில் அழகாய்க் கொலுவீற்றிருக்கிறது.

பின்னர் டாக்சியில் ஏறி காத்மாண்டு திரும்பினோம்.
சுயம்புநாத் கோவில் வழிபாடு இப்படி இனிமையாக
நிறைவேறிற்று.
_____________________________________

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

ஸ்ரீ தக்ஷிணகாளி கோயில் - நேபாளம்





ஸ்ரீ தக்ஷிணகாளி கோயில் - நேபாளம்
Shri Dhakshina Kali Temple - Nepal


திருக்கயிலாய யாத்திரை சென்றிருந்த நாங்கள் திரும்பும்
போது காத்மாண்டிலிருந்து முக்திநாத் சென்றுவந்தோம்.
21.09.11 அன்று தான் காத்மாண்டிலிருந்து டெல்லி
திரும்ப விமானடிக்கட் வாங்கியிருந்தோம். எனவே
19ஆம் தேதியுடன் நாங்கள் திட்டமிட்ட இடங்களைப்
பார்த்து முடித்து விட்டபடியால் அங்கு இருக்கவேண்டிய
ஒரு நாளாகிய 20.09.11 அன்று எங்களில் நால்வர்
மட்டும் ஏதாவது இடங்களை சுற்றிப் பார்க்க விரும்பி
தனியாக டாக்ஸி ஏற்பாடுசெய்து போய் வந்தோம்.
அப்படிச்சென்ற இடங்களில் தட்சிணகாளி கோயிலும்
ஒன்று.

இக்கோயில் நேபாளத் தலைநகர் காத்மாண்டில் இருந்து
தென்கிழக்கில் 22 கி.மீ தொலைவில் உள்ளது.

அழகிய மலைப்பாதை. ஆங்காங்கே கிராமங்கள். அழகிய
பாரம்பரிய வீடுகள். வாழைத்தோட்டங்கள், மக்காச்
சோளத்தோட்டங்கள் காணப்படுகின்றன.






வீடுகளில் பரண்
அமைத்து சோளக்கதிர்களை நிறையக்கட்டிக் காயவைக்
கிறார்கள். சிறிய வீடாக இருந்தாலும் மாவிலை கட்டு
வதைப்போல கட்டிவைக்கிறார்கள். அழகழகாய் கட்டிக்
காயவைக்கிறார்கள்.சோளக்கதிரின் மேல் தோலியை
அழகாய் விரித்து மூன்று மூன்றாய் பூ கட்டுவது போல்
கட்டி அதைத் தோரணமாய் கட்டி இருப்பது அழகாய்
இருக்கும். டாக்ஸி வேகமாய் போனதால் சிலவற்றை
போட்டோ எடுக்க முடியவில்லை.அன்னாசிப் பழங்களை
வெட்டிக்காய வைக்கிறார்கள்.

தூரம் அதிகமில்லை என்றாலும் மலைப்பாதையில்
செல்ல ஒருமணி நேரம் ஆகின்றது. கோயில் ஒரு
தனிமலை மீது அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடல்
மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்
கிறது. அடிவாரத்தில் பார்ப்பிங் (Pharping) என்ற
சிற்றூர் உள்ளது. பேருந்துகள் காட்மாண்டுவில்
இருந்து இங்கு வந்துபோகின்றன.

நாங்கள் அங்கு சென்றதும் நல்ல மழை பிடித்துக்
கொண்டது. ஒரு சிறிய உணவகத்தில் ஒதுங்கினோம்.
இன்னும் நீண்டதூரம் போகவேண்டுமே. நல்லவேளை
யாக அங்கிருந்த சாது ஒருவர் எங்களுக்குக் குடை
கொடுத்து உதவினார்.

அரை கி.மீ மலையேற வேண்டும்.வழியில் பூக்கடைகள்,
மணிகள் விற்கும் கடை, உணவகங்கள் என்று நிறைய
கடைகள் இருக்கின்றன. மலையில் சிறிது தூரம் ஏறிச்
சென்ற பின் நடுவில் சுமார் 100 படிகள் இறங்கி ஆற்றுப்
பகுதியை அடைந்து மீண்டும் சுமார் 275 படிகள் மேலே
ஏற வேண்டும்.

கீழே இருந்து இந்த இடத்திற்கு வர சுமாரான சாலை
உள்ளது. சாலை வேலை நடை பெறுகிறது. பஸ்,
டாக்ஸிகளை கீழேயே நிறுத்தி விடுகின்றனர்.

பூர்ணாவதி கங்கா, உத்தார்சதி கங்கா என்ற பெயருடைய
இரண்டு ஆறுகள் இந்த இடத்தில் ஒன்றாகச் சேர்கின்றன.



பூர்ணாவதி கங்கா




உத்தார்சத்தி கங்கா



கங்கா


இந்த இடத்தில் ஜ்வாலாமுகி கோயில் இருக்கிறது.கட்டி
விடப்பட்ட வெண்கல மணிகள் கொத்துக்கொத்தாக
உள்ளன.சிங்கம் போன்ற விலங்குகளின் வெண்கல
உருவச்சிலைகளையும் வழிபடுகின்றனர்.இறைவியின்
மீது குங்குமம் அரிசி போன்றவற்றைத் தூவுகிறார்கள்


இங்குள்ள மக்கள் தங்கள் உபயோகத்திற்கு மூங்கில்
கூடைகளைப் பயன்படுத்துகின்றனர். அதில் வீட்டுக்கு
வேண்டிய பொருட்களை வாங்கி முதுகில் சுமந்து
வருகிறார்கள்.



மலைப் பகுதியில் அப்போது தான்
பாரத்தை எளிதாக கொண்டு வர முடியும் என
நினைக்கிறேன். கடைகளில் அந்த மூங்கில் கூடைகள்
சின்னது , பெரியது என்று கிடைக்கிறது. மேலே
அகன்று கீழே குறுகி இருக்கும் அந்த மூங்கில் கூடை.
பெண்கள் நல்ல பலம் பொருந்தியவர்களாய்
இருக்கிறார்கள். கேஸ் சிலிண்டர்களைக் கூட
முதுகில் சுமந்து பஸ்ஸில் ஏறி இறங்குகிறார்கள்.



வெண்கலச்சிலைகள்





வழிபாடு


பொரி, அவல், கொண்டக்கடலை போன்றவற்றை
தக்ஷிணகாளிக்குப் படைப்பார்களாம். இவற்றை இங்கு
கடைகளில் வாங்கிக் கொண்டு மேலே செல்லலாம்.



மணிகள்




மழையிலும் பூ வியாபாரம்




கடைகள்






மீண்டும் மலையேறல்




மேலும் கொஞ்சதூரம் ஏறிச்சென்றால் தக்ஷிணகாளி
கோயிலை அடையலாம். வழியில் இருபக்கங்களிலும்
அடர்த்தியான மரங்கள்.





நெருங்கிவிட்டோம்கோயிலை





மூலஸ்தானம்





சிறிய கோயில். சுற்றிவரலாம்.அம்பாளின் உருவம் ஒரு
சிவப்புத்துணியால் மூடப்பட்டுள்ளது. பாதங்கள்,முகம்
தெரிகின்றன. இங்கு வரக்கூடிய பக்தர்கள் மெழுகுவர்த்தி
ஏற்றி வழிபடுகிறார்கள். இதற்காக அங்கு மெழுகு
வர்த்திகள் விற்கப்படுகின்றன.

காளி அசுரரைகளைக் கொன்று அவர்களின் இரத்தத்தைக்
குடித்த இடமாம் இது. அமைதியான இடத்தில் அமைந்த
அக்கோயிலில் காளிதேவியை வணங்கினோம்.

இங்கு புறாக்கூண்டுகள் உள்ளன. இங்கும் பெரியதும்
சிறியதுமான பலவேறு மணிகள் கட்டப்பட்டுள்ளன.
பூனைகள், குரங்குகள் உள்ளன.



புறாக்கூண்டு













மணிகள்














கோயில்



மலையிலிருந்து கீழே இறங்கும்போது மழை நின்று
விட்டது. டாக்ஸியில் ஏறி மதியநேரத்தில் காத்மாண்டு
வந்து சேர்ந்தோம்.

_________________________

திங்கள், 9 ஜனவரி, 2012

திருக்கயிலை யாத்திரை -பகுதி -5



09.09.2012

மறுநாளும் மழையும் மேகமூட்டமுமாகவேயிருந்தது.இன்று
முழுதும் கயிலை மலை கண்ணுக்குத் தெரியவேயில்லை.
காலையில் ஏரிக்கரையில் டெண்ட்கள் அடித்து அதற்குள்
வெந்நீர் வைத்துக் குளிக்கத் தந்தார்கள்.அந்தக்குளிர் நேரத்தில்
வெந்நீரில் குளிப்பது சுகமாக இருந்தது.இருந்தாலும் குளித்து
முடித்து ஆடை உடுத்துகிறபோது முன்னைவிடக் குளிர்ந்து நடுக்கியது.



மழை குறைந்திருந்த நேரத்தில் மானசரோவர் ஏரிக்கரையில்
நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு யாகத்தை நடத்தினோம்.
நாங்கள் கொண்டு சென்றிருந்த வேள்விப் பொருட்கள்
அனைத்தையும் தொகுத்து வேள்வியைச் செய்தோம். மூன்று
முறை கயிலை சென்று வந்த அனுபவம் நிறைந்த இளமுருகு
ஐயா வேள்வியை நடத்திவைத்தார். வேள்வி சமித்துகளை
எல்லோர் கையிலும் கொடுத்து வேள்வியில் சேர்க்க வைத்தார்.

வேள்வி நிறைவு பெற ஒருமணி நேரத்திற்கு மேலாகியது.
அதுவரை மழை இல்லை. திருமுறைகள் ஓதப்பட்டன.
பூசைகள் நிகழ்த்தப்பட்டன. கேசரி மாதிரி ஒரு இனிப்பு,
பழங்கள், அவல், முந்திரி, கல்கண்டு, உலர்ந்த திராட்சை,
பாயாசம் போன்ற பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
கல்கண்டு, உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் எல்லாம் பூஜை
செய்து பின் எடுத்து வைத்துக் கொண்டோம். ஊருக்கு வந்து
உறவினர், நண்பர்களுக்குக் கொடுக்க.

மதிய உணவுக்குப்பின்னர் அங்கிருந்து தார்ச்சென் என்னும்
ஊரை நோக்கிப்( dharchen)நோக்கிப் புறப்பட்டோம். மானசரோ
வருக்குச் சற்றுத் தொலைவில் ’இராட்சஸ்தல்’ என்னும் ஏரி
உள்ளது.அங்கு இராட்சதர்கள் வந்து குளிப்பதாக ஐதீகம். இராவணன்
அங்கு வந்து குளித்ததாகவும் கூறுகிறார்கள்.

மாலையில் கயிலையின் அடிவாரத்தில் உள்ள தார்ச்சென் என்னும்
சிற்றூருக்கு வந்து சேர்ந்தோம். மிகக் குளிர். கடல் மட்டத்தில்
இருந்து 15000 அடி உயரம்.



”தார்ச்சென் கெஸ்ட் ஹவுஸ் ”என்னும் விடுதியில் தங்கினோம்.






பெரும்பாலும் இங்கு உள்ள ஊர்களில்
சோலார் விளக்குகள் தான் .



மாலை 6 மணிமுதல் சுமார் 9 மணி வரைதான் அது எரியும்.
அதன் பிறகு இருள்தான். ஊர்ப்பொது விளக்குகளும் சோலார்தான்.



ஜெனெரேட்டர் சில சமயங்களில் தான் போடுகிறார்கள்.இரவு
வழிபாடு செய்தோம்.

திருச்சியிலிருந்து வந்திருந்த இரண்டு பெண் பயணிகள் தங்களில்
ஒருவருக்கு உடல் நலம் குறைந்ததால் ஜீப் ஏற்பாடு செய்து
காட்மாண்டு சென்று பின் இந்தியா திரும்பினர். கயிலைப்
பயணத்தைத் தொடர முடியவில்லை.

10.09.11

இன்று எங்களில் நால்வரைத் தவிர மற்றவர்கள் கயிலையைச்
சுற்றிவரும் பாதையான பரிக்கிரமாவுக்குப் புறப்பட்டுச்
சென்றார்கள். நாங்கள் இந்தியாவிலிருந்து கிளம்பும் போதே
பரிக்கிரமா வேண்டாம்,யமத்வாரிலிருந்து பார்க்கும் தரிசனம்
போதும் என்று முடிவு செய்து விட்ட படியால் பரிக்கிரமா
செல்லவில்லை.

நாங்களும் ’யமத்வார் ’என்ற இடம் வரை பேருந்தில் சென்றோம்.
யமத்துவாரில் கயிலையின் மேற்கு முகம் சற்று தெரிகிறது.

மலை சற்று அருகில் தெரிகிறது. அழகான காட்சி.






யமத்வாரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதன் ஒரு வழியாகச்
சென்று மறுவழியில் வெளியே வரவேண்டும். அப்படி சென்று
வந்தால் யமபயம் கிடையாதாம்.



உள்ளே மணியொன்று உள்ளது. அதை அடித்தோம்.. அந்த
கோயிலின் உள்ளே நிறைய துணிகள் கிடந்தன. வந்தவர்கள்
அவர்கள் அணிந்து வந்த ஆடைகளில் ஒரு சிலதை அங்கு
விட்டிருந்தனர் ஏன் என தெரியவில்லை. நான் இங்கு ஏன்
இப்படி துணிகளைப் போட்டு இருக்கிறார்கள் என்று கேட்டுக்
கொண்டு இருந்தேன். யாருக்கும் காரணம் தெரியவில்லை.
காற்றில் என் தலையில் கட்டி இருந்த ஸ்கார்ப் பறந்து போய்
விட்டது.( பஸ்ஸில் ஏறிய பின் தான் ஸ்கார்ப் காணவில்லை
எனத் தெரிந்தது.)என் துணிகளில் ஒன்றும் அங்கு இருக்க
வேண்டும் என்பது இறைவனின் எண்ணம் போலும்.

பலவண்ணக்கொடித் தோரணங்கள் அங்கு கட்டப்பட்டுள்ளன.
திபெத்தின் பல இடங்களில் அப்படிக் கட்டியிருந்தார்கள்.சில
இடங்களில் கற்களை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி
அதன் மேல் எருமைக் கொம்புடன் உள்ள தலையை வைத்து
இருந்தார்கள்.



அது அவர்களின் வழக்கம் போலும்.



பரிக்கிரமா செல்பவர்களுக்கு அங்கு குதிரைகள் ஒதுக்கிக்
கொண்டிருந்தார்கள்.பயணத்திற்குப் பயன்பட யாக் எருமைகளும்
நின்றுகொண்டிருந்தன.






சுமார் 1 1/2 மணி நேரம் அங்கிருந்த பின் பரிக்கிரமா செல்லாத
நாங்கள் பஸ்ஸில் திரும்பிவிட்டோம். அந்த இடத்தில் நிறைய
மக்கள்அங்கு தங்கள் தங்கள் வழக்கப்படி பூஜைகள் செய்து
திரும்புகிறார்கள்.

பரிக்கிராமாவை முன்னிட்டுச் சில பயணிகள் கம்பு ஊன்றியவாறு
நடந்து சென்று கொண்டிருந்தனர்.



யமத்துவாருக்கும் அவர்கள் நடந்தேவந்தனர். அருகில் நீரோடை
சலசலத்து ஓடிக்கொண்டு இருந்தது.காகங்கள் ஆங்காங்கே
காணப்பட்டன. அவை சற்றுப் பெரிதாக உள்ளன. அவற்றின்
குரல்களில் உள்ள கரகரப்பு இல்லை.சீனமொழியில் கத்துவது
போல் மூக்கொலியில் ஒலிக்கின்றன. மிக அருமையான சாலை
ஒன்று யமத்வார் வரை போடப்பட்டு வருகிறது.



அங்கு அரசாங்க அலுவலகங்கள் இருப்பதால் அதனை
முன்னிட்டுச் சாலைகள் நன்றாகப் போடப்பட்டு வருவதாகக்
கூறுகின்றனர். கயிலை மலையைச் சுற்றிலுமே சாலை போடச்
சீன அரசு தயாராக இருப்பதாகவும் ஆனால் தங்கள் வாழ்க்கை
பாதிக்கும் என்று குதிரைக்காரர்கள் கூறுவதால் போடவில்லை
என்றும் கூறப்படுகிறது. அவர்கள், மக்கள் கயிலை யாத்திரை
வரும் போது தான் பொருளஈட்டுகிறார்கள்.

எங்கள் நால்வருக்காக ஒரு சமையல் ஆள் எங்களுடனே தங்கி
எங்களைக் கவனித்துக் கொண்டார்.

இவர்தான் எங்களை கவனித்துக் கொண்டவர். அவர் பெயரை
திரும்ப உங்களிடம் சொல்ல முடியவில்லை. பெயரில் என்ன
இருக்கிறது! அன்பானவர்.
நேரா நேரத்திற்கு உணவு அளித்து நன்கு கவனித்துக் கொண்டார்.
விடுதியின் அருகிலிருந்து பார்த்தால் கயிலைக் காட்சி தெரிகிறது.
நாங்கள் அங்கிருந்தே கயிலைக் காட்சியை மீண்டும் மீண்டும்
கண்டோம்.

11.09.11






இன்று தார்ச்சென் ஊரைச்சுற்றிப் பார்த்து வந்தோம்.இன்று
மதியம் பரிக்கிரமா சென்றவர்களில் 7 பேரைத் தவிர மற்றவர்கள்
கயிலையின் வடக்கு முகத் தரிசனத்தோடு திரும்பி விட்டார்கள்.
மூச்சுத்திணறல்,முதலிய காரணக்களால் அவர்கள் முழுதும்
சுற்றாமல் திரும்பினராம்.

எங்களுடன் வந்த சூலூர் ஆர்.வி.எஸ் குழுவினர் மானசரோவில்
கயிலையைப் பார்த்த கையோடு காரில் காட்மண்டு திரும்பினர்.
(கல்லூரி மற்றும் அறக்கட்டளை ஸ்தாபனர்)

நாங்கள் மாலை மீண்டும் கயிலைமலை தரிசனம் செய்தோம்

12.09.11

இன்று பரிக்கிரமா சென்றவர்கள் அனைவரும் திரும்பினர்.
காலை 6 மணிக்குக் கயிலை தரிசனம் செய்துவிட்டுப்
புறப்பட்டோம்.கயிலையை விட்டுப் பிரிய மனமில்லை.



பிரியாவிடை பெற்றோம்.திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே
வந்தோம்,எங்கள் கண்பார்வையில் இருந்து மறையும் வரை.
வழியில் zongba வில் தங்கினோம்.'மட் ஹவுஸ்'.இங்கு
நல்ல வேளையாக இரவு முழுதும் விளக்குகள் எரிந்தன.

அடுத்த பகுதியில் கயிலை யாத்திரைக் கட்டுரை நிறைவடையும்.