அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
-திருநாவுக்கரசர் தேவாரம்.
எல்லா உறவுகளமாய் இறைவன் இருக்கிறான். மாமன் , மாமி உறவு மிகவும் முக்கியமானது.
குடும்ப உறவுகள் பற்றி நிறைய பேசி இருந்தார் உறவுகள் என்ற தன் பதிவில் திரு. ஜி.எம் .பாலசுப்பிரமணியம் சார்.
//இரண்டு பதிவுகள் பெண்களை மையமாக வைத்து எழுதினேன் நகைச் சுவையே முக்கிய நோக்கம். ஆனால் நகைச் சுவையானாலும் பெண்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது இந்தப் பதிவு உறவுகளை நான் காணும் விதத்தில் முடிந்த அளவு விருப்பு வெறுப்பில்லாமல் யதார்த்த உலகில் காண்பவற்றை வைத்து எழுதி இருக்கிறேன். கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்தப் பதிவைத் தொடராக்க விரும்புகிறேன். பதிவுலகில் கோலோச்சும் என் மதிப்பிற்குரிய பெண்பதிவர்கள்
திருமதி.கீதா சாம்பசிவம்
திருமதி கோமதி அரசு,
திருமதி இராஜராஜேஸ்வரி
திருமதிகீத மஞ்சரி
திருமதிராஜலக்ஷ்மி பரமசிவம்//
குடும்ப உறவுகளைப் பற்றி பெண்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி எங்களை அழைத்து இருந்தார்.
இப்படி அழைத்து கேட்டால் எழுதாமல் இருக்க முடியுமா?
உறவுகள் தொடர் கதையே! என்ற தலைப்பில் பதிவை எழுதினேன்.
தாலாட்டு பாட்டில் உறவுகள்:-
//மாமன் அடித்தானோ
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே
போட்டு விளையாடப்
பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட
வைர கிலுகிலுப்பை
கட்டி விளையாடகாசிச் சிண்டுமணி
ஒட்டி விளையாட ஒயிலார ரயில் வண்டி
நெத்திக்கு சுட்டிநிழல் பார்க்க கண்ணாடி
காலுக்கு தண்டை கைக்கு கணையாழி
கொண்டு வந்து தருவார்கள் -
கோதை கிளிக்கு அம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால்
சந்தணர்வாய் நோகுமென்று
தங்கத்தினால் சங்கு செய்து
தருவார்கள் தாய்மாமன் - என்றும்
மாடுகட்டி போரடித்தால்
மாளாது சென் நெல் என்று
யானை கட்டி போரடிக்கும்
அம்மான்மார் சீமையிலே'- //
பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட
வைர கிலுகிலுப்பை
கட்டி விளையாடகாசிச் சிண்டுமணி
ஒட்டி விளையாட ஒயிலார ரயில் வண்டி
நெத்திக்கு சுட்டிநிழல் பார்க்க கண்ணாடி
காலுக்கு தண்டை கைக்கு கணையாழி
கொண்டு வந்து தருவார்கள் -
கோதை கிளிக்கு அம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால்
சந்தணர்வாய் நோகுமென்று
தங்கத்தினால் சங்கு செய்து
தருவார்கள் தாய்மாமன் - என்றும்
மாடுகட்டி போரடித்தால்
மாளாது சென் நெல் என்று
யானை கட்டி போரடிக்கும்
அம்மான்மார் சீமையிலே'- //
விளையாட்டில் கூட மாமா, அத்தை உறவை சேர்த்து பாடி விளையாடும் பாடல். பாண்டி விளையாட்டில். என் அம்மா அவர்கள் டைரி குறிப்பில் எழுதி வைத்து இருந்த பாடலில் இருந்து . ஓடி விளையாடு பாப்பா பதிவில் முழு பாடலும் கேட்கலாம். சிறு வயதில் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாம் இருக்கும் நேயர் விருப்பமாக ஓடி விளையாடு பாப்பா - 2 வது பகுதியும் போட்டேன்.
//மாமா நேற்று வாங்கித் தந்த
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ//
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ//
//உறவுகள் பலப்பட முன்னோர் செய்த ஏற்பாடுகள்:-
ஒரு திருமணம் என்றால் மணப்பெண்ணின் சகோதரனுக்கு, மணமகனின் சகோதரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்கள் பக்க வழக்கத்தின்படி பெண்ணின் நாத்தனார்க்குச் சடங்குகளில் முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது, கல்யாணத்திற்கு முன் செய்யும் சடங்கிலும், திருமணத்திற்கு பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை கட்டி விடுவது , மூன்று முடிச்சில் ஒரு முடிச்சு போடுவது, அதன் பின் வரும் அனைத்து சடங்கிலும் அவள் பங்கு பெரிது.
ஒரு திருமணம் என்றால் மணப்பெண்ணின் சகோதரனுக்கு, மணமகனின் சகோதரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்கள் பக்க வழக்கத்தின்படி பெண்ணின் நாத்தனார்க்குச் சடங்குகளில் முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது, கல்யாணத்திற்கு முன் செய்யும் சடங்கிலும், திருமணத்திற்கு பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை கட்டி விடுவது , மூன்று முடிச்சில் ஒரு முடிச்சு போடுவது, அதன் பின் வரும் அனைத்து சடங்கிலும் அவள் பங்கு பெரிது.
சொந்தநாத்தனார் இல்லையென்றாலும், சின்னமாமனார் அல்லது பெரியமாமனாரின் பெண் அந்த சடங்குகளுக்கு வருவாள். மறுநாள் அவளுக்கு ’நாத்தனார் பலகாரம்’ என்று தனியாகக் கொடுக்கப்படும். ஒவ்வொரு சடங்கையும் அவள் செய்யும் போது அவளுக்கு ’நாத்தனார் சுருள்’ என்று பெண்வீட்டாரால் பணம் கொடுக்கப்படும்.
அது போல் பெண்ணின் சகோதரனுக்கு மாப்பிள்ளை அழைத்து வருவது, கல்யாணப் பந்தலில் பொரி இடுவது, மற்றும் இரவு நலுங்கு வைப்பது,மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவது என்ற சடங்குகள் உண்டு, அதற்கு மாப்பிள்ளை வீட்டில் துணிமணிகொடுத்து மோதிரம் போடுவார்கள். பெண்ணிற்கு உடன்பிறந்தவன் இல்லையென்றால், பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் உதவுவார்கள். இதற்கு குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் முடியும்.
அடுத்து, குழந்தைப் பேறு. இதில் முதல் உரிமை கணவனின் சகோதரிக்கு. குழந்தைக்கு அத்தை காப்பிடவேண்டும். அப்புறம் தான் மற்ற உறவுகள் நகை அணிவிப்பார்கள்.
அதற்கு அடுத்து மொட்டையடித்து காது குத்துதல் . அதற்குப் பெண்ணின் சகோதரனுக்கு முதல் உரிமை. அவனுடைய மடியில் அமர்த்தித்தான் மொட்டையடித்தல், காது குத்துதல். அவனுக்குத்தான் முதல்மரியாதை. அப்புறம் தான் மற்றவர்கள்.
பின். பெண்குழந்தை பூப்பு அடையும் போது, கணவனின் சகோதரி முதல் தண்ணீர் விடுவாள், சடங்கின் போது மாமன் தரும் புடவை, அல்லது சிற்றாடையைத் தான் முதலில் கட்டுவாள் . மாமன் சீர் முக்கியம். அத்தைமகள், அல்லது அத்தையை மாப்பிள்ளை மாதிரி பக்கத்தில் உட்கார்த்தி வைத்து சடங்குகள் செய்வார்கள்.
பெண்க்கு பிறப்பு முதல் இறப்பு வரை இரு வீட்டு உறவுகளும் வேண்டும். அதன் படி தான் சடங்குகளை அமைத்து ஒற்றுமையாக இருக்கவைத்திருக்கிறார்கள்.
தன் அக்காள், தங்கைகளுக்கு பொங்கல், தீபாவளி , கார்த்திகை என்றும் செய்ய வேண்டும். அவளின் புகுந்த வீட்டில் நல்லது , கெட்டதுகளுக்கும் உடன்பிறப்பின் பங்கு இருக்கிறது.
நா. பார்த்தசாரதி அவர்கள் ”வலம்புரிச்சங்கு” என்ற கதையில் பெண்ணின் சகோதருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி எழுதியிருப்பார்.
அந்தக் கதையில் கடலில் மூழ்கி வலம்புரிச் சங்கு எடுப்பவர் கடலில் ஆழமாக போகவேண்டும் .சங்கை எடுக்கப் போகும்
ஆளின் வயிற்றில் கயிறைக் கட்டி கயிறின் மறுமுனையை மேல் இருக்கும்
ஆளிடம் கொடுப்பார்களாம். அது யார் என்றால் சங்கு எடுக்கப்போயிருக்கும் ஆளின் மச்சினன் தான். தன் சகோதரியின் வாழ்வு அவன் கையில் தான் இருக்கிறது. சகோதரியின் வாழ்வை எண்ணி அவன் அதைப் பத்திரமாய் பிடித்துக்கொள்வான் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.//
ஆளின் வயிற்றில் கயிறைக் கட்டி கயிறின் மறுமுனையை மேல் இருக்கும்
ஆளிடம் கொடுப்பார்களாம். அது யார் என்றால் சங்கு எடுக்கப்போயிருக்கும் ஆளின் மச்சினன் தான். தன் சகோதரியின் வாழ்வு அவன் கையில் தான் இருக்கிறது. சகோதரியின் வாழ்வை எண்ணி அவன் அதைப் பத்திரமாய் பிடித்துக்கொள்வான் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.//
மீதி பகுதியை கீழே சகோதரர் தேவகோட்டை ஜி கொடுத்து இருக்கும் சுட்டியில் போய் படித்து பாருங்களேன்
அபாட்னபோத் தட்லோ வலைச்சர சுட்டி
மனித வாழ்வுக்கு மிகமிக உறுதுணை உறவுகள் அதன், அன்பு, அரவணைப்பு, ஆசாபாசங்கள் இல்லையெனில் அதுவும் இன்றைய பாழும் சமூகத்தில் எந்த பிடிப்புணர்வுடன் வாழமுடியும் ஆகவே உறவுகள் என்று தொடர்கதையே என முழக்கமிடுகிறார் இந்த வலைப்பதிவர் அப்படி உறவைப்பற்றி என்னதான் சொல்கிறார் வாருங்கள் மரியாதைக்குறிய திருமதி. கோமதி அரசு அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்கவும்.
சகோதரர் தேவகோட்டை ஜி அவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியப்பொறுப்பு ஏற்று இருந்த போது வலைத்தள அறிமுகத்தில் என் இந்த பதிவை அறிமுகப்படுத்தி இருந்தார். உறவுகள் பதிவை தேடிய போது இந்த பதிவை வலைத்தளத்தில் அறிமுகபடுத்தி இருக்கிறேன் என்று பின்னூடத்தில் சொல்லி இருந்தார். சகோ தேவகோட்டை ஜி. அன்பர் ரூபன் சுட்டி அனுப்பி இருந்தார்.
இந்த பதிவுகளை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் . பிப்ரவரி 27 ஆம் தேதி என் தம்பிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் கலந்து கொண்டேன். உறவுகள், நண்பர்கள், உடன்பணிபுரிந்தவர்கள் எல்லாம் பேசினார்கள்.
கடைசியில் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் என்னை பேச சொன்னார்கள். திடீர் என்று பேச அழைத்தபோது முதலில் திகைப்பு ஏற்பட்டது, அடுத்து வருத்தம் ஏற்பட்டது. என் கணவர் இருந்து இருந்தால் அவர்கள்தான் பேசி இருப்பார்கள், தம்பியின் குணநலன்கள் பற்றி.
முதலில் பேச ஆரம்பித்த போது கொஞ்சம் அழுகை வந்தது, பின் என்மனதை திடப்படுத்தி கொண்டு, குடும்ப உறவில் சகோதரன் பங்கும் அதை அவன் திறம்பட , குறைவின்றி அனைத்து சகோதரிகளுக்கு செய்தது பற்றியும் பேசினேன். என் தம்பி மனைவியின் நல்ல குணத்தைபற்றியும் (அனைவருக்கும் உதவும் நல்லகுணத்தையும்) பேசினேன். வீட்டுக்கு வரும் அனைவரையும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று உபசாரம் செய்து அனுப்புவாள். அவளிடம் என்ன உதவிகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம் தட்டாமல் செய்வாள்.
அப்பன் நீ அம்மை நீ, ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ என்ற பாட்டில் வருவது போல அன்புடைய மாமனும், மாமியும் நீங்கள் என்று பேசினேன். தலைப்பு வந்து விட்டதா?
பாலசுப்பிரமணியம் சார் அழைத்த உறவுகள் தொடரில் எழுதிய மேற்கோள் பகிர்வு திரு. நா பார்த்தசாரதி அவர்களின் கதை "வலம்புரி சங்கு" அதிலிருந்து எடுத்து பேசினேன். அதை வீடியோ எடுத்தாள் தம்பி மகள், மைக் இல்லாத காரணத்தால் என் குரல் மிக சன்னமாக கேட்கிறது, அதனால் அதை இங்கு பகிரவில்லை.
அவன் நண்பர்கள்,
உடன்பணிபுரிந்தவர்கள் அவன் சிரித்த முகத்தை அனைவரிடமும் பழகும் தன்மையை பாராட்டி பேசினார்கள். அது எனக்கு மனமகிழ்ச்சியை, பூரிப்பை தருவதாக சொல்லி வந்து இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து என் பேச்சை நிறைவு செய்தேன்.
அடுத்து தம்பியின் மூத்த மகள் பேசினாள். அப்பா சங்கபணிகளில் ஈடுபட்டது. காலை வேலைக்கு செல்ல அப்பா காட்டும் பரபரப்பு பற்றியும் பேசினாள். எல்லோரிடமும் பணிவாய், அன்பாக இருக்க சொல்லிக் கொடுத்தது என் அன்பான அப்பா என்று சொல்லி வந்தவர்கள் அனைவருக்கும் தன் நன்றியை வணக்கத்தை தெரிவித்தாள்..
தீராதபக்கங்கள் வலைத்தளம் வைத்து இருக்கும் மாதவராஜ் பழைய பதிவர் இன்னும் எழுதி கொண்டு இருக்கிறார். முன்பு அவர் பக்கங்களை படித்து இருக்கிறேன். எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்களின் மருமகன்
விமலன் விமலன் என்று இப்போது முகநூலில் பதிவுகள் போட்டுக் கொண்டு இருக்கிறார். நிறைய எளிமையான மனிதர்களை பற்றி கதைகள் எழுதுவார், பழைய பதிவர்.போன வருடம் ஓய்வு பெற்று இருந்தார் , ஓய்வுக்கு பின் "ஈரச்சுவடு" என்ற நூலை எழுதி இருந்தார், அந்த நூலை சகோ கரந்தை ஜெயக்குமார் விமர்சனம் செய்து இருந்தார். "காக்கைசோறு" என்ற சிறு கதை தொகுப்பை எனக்கு அனுப்பி இருந்தார் பல வருடங்களுக்கு முன்.
இவர் வலைத்தளத்தின் பேர் மறந்து விட்டேன். இப்போது முகநூலில்
மட்டும் எழுதி வருகிறார்.
மட்டும் எழுதி வருகிறார்.
அரிசோனா ஆண்டு மலரில் என் பதிவு இளமையின் ரகசியம் - தீராகற்றல் இதிலும், உறவுகள், நட்புகளைப்பற்றி எழுதி இருக்கிறேன்.
மகன் பாலைப்பூவுக்கு ஏதாவது ஒரு கட்டுரை கொடுங்கள் என்றான், என் இந்த பழைய பதிவை கொடுத்தேன்.
என் கணவர் வரைந்து தந்த படத்தோடு
இதற்கு முன் ஆண்டு மலர் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றேன். குடந்தை சக்கரபாணிகோயில் உள்மண்டப படம் அனுப்பினேன்.
என் மகன் வடிவமைப்பாளர்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
__________________________________________________________________________
ஆமாம் அக்கா உறவுகளில் முதன்மை இடம் தாய்மாமா, அத்தை. இப்படியும் சொல்வதுண்டு நிகழ்வுகளில் மாமா முழுச்சீர் அத்தை அரைச்சீர் என்று.
பதிலளிநீக்குஇப்படிக் கொடுக்கல் வாங்கல்களில் உறவுகளில் பிணக்கும் ஏற்படுவதுண்டு. ஒருவர் நல்ல ஸ்திதியில் இருந்து மற்றொருவர் கொஞ்சம் குறைவாக இருந்தால் கொடுக்க முடியாமல் தன்னால் இயன்றதைக் கொடுத்தால் அது சொல்லிக்காட்டப்பட்டு மனக் கசப்புகளும் ஏற்படுவதுண்டு.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆமாம் அக்கா உறவுகளில் முதன்மை இடம் தாய்மாமா, அத்தை. இப்படியும் சொல்வதுண்டு நிகழ்வுகளில் மாமா முழுச்சீர் அத்தை அரைச்சீர் என்று.//
ஆமாம், கேள்வி பட்டு இருக்கிறேன் கீதா.
//இப்படிக் கொடுக்கல் வாங்கல்களில் உறவுகளில் பிணக்கும் ஏற்படுவதுண்டு. ஒருவர் நல்ல ஸ்திதியில் இருந்து மற்றொருவர் கொஞ்சம் குறைவாக இருந்தால் கொடுக்க முடியாமல் தன்னால் இயன்றதைக் கொடுத்தால் அது சொல்லிக்காட்டப்பட்டு மனக் கசப்புகளும் ஏற்படுவதுண்டு.//
நீங்கள் சொல்வது போல கொடுக்கல், வாங்கல்களில் உறவுகளில் பிணக்கு ஏற்படுவது உண்டுதான். குடும்பங்களில் இந்த பிணக்கும் வரும் தான்.
விதிவிலக்குகள் இருக்கலாம், குடும்பத்தில் பகைமை பாராட்டிக்
கொண்டு அண்ணன், தம்பி வரப்பு தகராறு, மாமன், மச்சான் சொத்து பிரச்சினை என்று. சகோதர சகோதரிகளுக்கு இடையில் உறவு சுமுகம் இல்லாமல். அதை ஏன் நாம் பேச வேண்டும்? அது மாதிரியான செய்திகள் மகாபாரத, இராமாயண காலத்திலும் உண்டு. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் உறவுகளின் மேன்மையை புரிந்து கொள்வார்கள்.
ஆமாம் பெண்ணின் நாத்தனாருக்கு முக்கிய பங்குண்டு. பெண்ணின் சகோதரனுக்கும் உண்டு. நீங்கள் சொல்லியிருப்பதுதான்...
பதிலளிநீக்குஆமாம் ஒன்றுவிட்ட என்று சொல்லப்படும் உறவுகள் செய்வார்கள்.
ஆமாம் அத்தைக் காப்பு உண்டு.
நா பா அவர்களின் கதையில் சொல்லிய விஷயம் புதிது அக்கா. இப்ப தெரிந்து கொண்டேன் வலம்புரி சங்கு
கீதா
//ஆமாம் பெண்ணின் நாத்தனாருக்கு முக்கிய பங்குண்டு. பெண்ணின் சகோதரனுக்கும் உண்டு. நீங்கள் சொல்லியிருப்பதுதான்...//
நீக்குஎல்லா சமூகத்தினரிடமும் உண்டு சடங்கு முறைகள் மாறி இருக்கலாம். நாத்தனார் உறவு முக்கியம். பெண்ணின் சகோதரன் முக்கியம் தான்.
குழந்தைக்கு குடல் ஏறி விட்டால் மாமன் வேஷ்டியில் போட்டு உருட்டுவார்கள் குழந்தையை இருவர்.
//ஆமாம் அத்தைக் காப்பு உண்டு//
தான் தான் முதன் முதலில் நகை அணிவிக்கிறோம் என்று அத்தையின் முகத்தில் ஏற்படும் பெருமிதம் அளவிட முடியாது.
//ஆமாம் ஒன்றுவிட்ட என்று சொல்லப்படும் உறவுகள் செய்வார்கள்.//
என் மருமகளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் தான் எல்லாம் செய்தார்கள் சகோதர சடங்குகளை.
//நா பா அவர்களின் கதையில் சொல்லிய விஷயம் புதிது அக்கா. இப்ப தெரிந்து கொண்டேன் வலம்புரி சங்கு//
அந்த கதை கல்லூரியில் பாடமாக இருந்தது. சகோ துரை செல்வராஜூ அவர்கள் கூட சொல்லி இருப்பார் பதிவின் பின்னூட்டத்தில்.
படித்துப்பாருங்கள் நன்றாக இருக்கும்.
இது பற்றி சொல்வது முன்னுரை எதற்கு என்று புரிந்துவிட்டது கோமதிக்கா.
பதிலளிநீக்குஉங்கள் படத்தையும் பார்த்துவிட்டேன்.
//குடும்ப உறவில் சகோதரன் பங்கும் அதை அவன் திறம்பட , குறைவின்றி அனைத்து சகோதரிகளுக்கு செய்தது பற்றியும் பேசினேன். //
நீங்கள் அழகா பேசியிருப்பீங்க. இப்படிக் கலந்து கொண்டு பேசியது எவ்வளவு மகிழ்வான விஷயம் இல்லையாக்கா.
தம்பி மனைவி பற்றிச் சொன்னது நல்ல மகிழ்வான விஷயம். இப்படி அமைவதும் சிறப்பானது.
தலைப்பே வசீகரம். அருமையாகத் தலைப்பை இணைத்து விட்டீர்கள்.
நீங்கள் பேசிய விஷயம் அருமை
கீதா
//இது பற்றி சொல்வது முன்னுரை எதற்கு என்று புரிந்துவிட்டது கோமதிக்கா.
நீக்குஉங்கள் படத்தையும் பார்த்துவிட்டேன்.//
உங்களுக்கு புரியாமல் இருக்குமா கீதா?
//நீங்கள் அழகா பேசியிருப்பீங்க. இப்படிக் கலந்து கொண்டு பேசியது எவ்வளவு மகிழ்வான விஷயம் இல்லையாக்கா.//
விழா மண்டபத்தில் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தித்த மகிழ்ச்சியில் பேசிக் கொண்டு இருந்தார்கள் நேரம் ஆகி விட்டதால் உணவருந்த போய் விட்டனர் எல்லாம் அந்த ஹாலில் தான்.
அதனால் நான் பேசியாது முன் இருக்கையில் அமர்ந்தவர்களுக்கு மட்டுமே கேட்டு இருக்கும்.
//தம்பி மனைவி பற்றிச் சொன்னது நல்ல மகிழ்வான விஷயம். இப்படி அமைவதும் சிறப்பானது.//
தம்பி மனைவி சிரித்த முகத்தோடு அனைவருக்கும் கேட்கும் உதவிகளை செய்வாள் திறமையானவள். நல்ல ஆலோசனைகள் சொல்வாள்.
//தலைப்பே வசீகரம். அருமையாகத் தலைப்பை இணைத்து விட்டீர்கள்.//
நன்றி கீதா.
//நீங்கள் பேசிய விஷயம் அருமை//
நன்றி.
தம்பி உடையவன் படைக்கு அஞ்சான் என்று சொல்வதுண்டு அது போல உங்கள் தம்பியை எல்லோரும் புகழும் போது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்கு//அது எனக்கு மனமகிழ்ச்சியை, பூரிப்பை தருவதாக சொல்லி வந்து இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து என் பேச்சை நிறைவு செய்தேன். //
சூப்பர்.
ஓ எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகனா திரு மாதவராஜ்!?
விமலன் அவர்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றித்தான் நிறைய எழுதுவார். அவரது நூல் பற்றி சமீபத்தில் கரந்தை சகோ எழுதியிருந்தார்.
//மகன் பாலைப்பூவுக்கு ஏதாவது ஒரு கட்டுரை கொடுங்கள் என்றான், என் இந்த பழைய பதிவை கொடுத்தேன்.//
அரிசோனா ஆண்டுமலரில் உங்கள் பதிவு வந்ததற்கும் வாழ்த்துகள் அக்கா
நல்ல கருத்துள்ள பதிவு . மாமாவின் ஒவியத்தோடு.
//இதற்கு முன் ஆண்டு மலர் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றேன். குடந்தை சாரங்கபாணிகோயில் உள்மண்டப படம் அனுப்பினேன்.//
ஆஹா!! அக்கா கலக்கறீங்க. வாழ்த்துகள் அக்கா!
உறவுகள் தொடர்கதை நினைவுகள் வளர்பிறை பாட்டுக்கு ஏற்ப நீங்க உறவுகள் தொடர்கதையில் தொடங்கி சொல்லி....நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை ன்னு வளர்பிறையாக....
கீதா
//தம்பி உடையவன் படைக்கு அஞ்சான் என்று சொல்வதுண்டு அது போல உங்கள் தம்பியை எல்லோரும் புகழும் போது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.//
நீக்குஆமாம், அப்போது ஒரு தாயின் மனநிலையில் இருந்தேன்.
//ஓ எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகனா திரு மாதவராஜ்!?//
ஆமாம்.
//விமலன் அவர்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றித்தான் நிறைய எழுதுவார். அவரது நூல் பற்றி சமீபத்தில் கரந்தை சகோ எழுதியிருந்தார்.//
ஆமாம், அதில் பின்னூட்டம் போட முடிந்ததா உங்களால் எனக்கு மறுமொழி கொடுக்கும் பெட்டி திறக்கவில்லை.
//அரிசோனா ஆண்டுமலரில் உங்கள் பதிவு வந்ததற்கும் வாழ்த்துகள் அக்கா
நல்ல கருத்துள்ள பதிவு . மாமாவின் ஒவியத்தோடு.//
நன்றி கீதா.
//உறவுகள் தொடர்கதை நினைவுகள் வளர்பிறை பாட்டுக்கு ஏற்ப நீங்க உறவுகள் தொடர்கதையில் தொடங்கி சொல்லி....நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை ன்னு வளர்பிறையாக....//
அருமையாக சொன்னீர்கள் கீதா.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி, நன்றி.
உறவுகளோடு சேர்ந்திருந்த காலம்போய் இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒற்றை ஒற்றைக் குழந்தைகளாக இருக்கிறார்கள். நாம் அனுபவித்த பல சந்தோஷங்களை அவர்கள் இழக்கிறார்கள்.
பதிலளிநீக்குஎதை இழக்கிறோம் என்று கூட அவர்களுக்குத் தெரியாது.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//உறவுகளோடு சேர்ந்திருந்த காலம்போய் இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒற்றை ஒற்றைக் குழந்தைகளாக இருக்கிறார்கள். நாம் அனுபவித்த பல சந்தோஷங்களை அவர்கள் இழக்கிறார்கள்.
எதை இழக்கிறோம் என்று கூட அவர்களுக்குத் தெரியாது.//
ஆமாம், அங்கு வந்த சிறு வயதினர்கள் கேட்ட கேள்வி எப்படி "எல்லோரும் ஒற்றுமையாக வந்து இருக்கிறீர்கள்?" என்று.
ஒரே ஊரில் இருந்தாலும் இப்போது அடிக்கடி சந்திக்க முடியவில்லை. இப்படி விழா, விருந்துகளில் தான் கலந்து கொள்ள முடிகிறது. அந்த வாய்ப்பை தவறவிடாமல் வந்து விட்டால் மகிழ்ச்சி. இல்லையென்றால் மன வருத்தம், பூசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் சகோதரர் பற்றி பேசும்போது அழுகை வந்ததது என்று குறிப்பிட்டீர்கள். படித்தபோது நானும் நெகிழ்ந்து விட்டேன். அன்பான சகோதரராக அவர் மட்டுமில்லை, நீங்களும் அதற்கு இணையான அன்பான சகோதரியாக இருக்கிறீர்கள் என்பதற்கு சான்று அது.
பதிலளிநீக்குஅதுவும் ஒரு வரம் - இருவருக்குமே. அவர் துணைவியும் அதே அளவு அன்புடன் பழகுகிறார் என்பதும் சிறப்பு.
//உங்கள் சகோதரர் பற்றி பேசும்போது அழுகை வந்ததது என்று குறிப்பிட்டீர்கள். படித்தபோது நானும் நெகிழ்ந்து விட்டேன். அன்பான சகோதரராக அவர் மட்டுமில்லை, நீங்களும் அதற்கு இணையான அன்பான சகோதரியாக இருக்கிறீர்கள் என்பதற்கு சான்று அது.//
நீக்குபேசவே முடியவில்லை என் மனதில் நிறைய விஷயங்கள் இருந்தது. அவன் அம்மாவை நன்கு பார்த்து கொண்டது , இப்போது தன் மனைவியின் அம்மாவையும் பார்த்து கொள்கிறான்.
//அதுவும் ஒரு வரம் - இருவருக்குமே. அவர் துணைவியும் அதே அளவு அன்புடன் பழகுகிறார் என்பதும் சிறப்பு.//
ஆமாம்,என் கணவருக்கும் தம்பியை, அவன் மனைவியை மிகவும் பிடிக்கும். என் குழந்தைகளிடமும் நல்ல நட்புடன் பழகுவார்கள்.
எங்கள் அலுவலகங்களில் இப்படி சிரத்தை எடுத்து ஓய்வு விழா நடத்தவில்லை. கடமைக்கு நடந்து முடிந்தது. என் மாமா உட்பட சில உறவுகள் வந்திருந்தனர். பேசச் சொன்னால் பேச தயாரான விஷயங்களோடு இருந்தார்கள். வாய்ப்பில்லாமல் போனது!
பதிலளிநீக்குஎங்கள் அலுவலக செட் அப் அப்படி!
//எங்கள் அலுவலகங்களில் இப்படி சிரத்தை எடுத்து ஓய்வு விழா நடத்தவில்லை. கடமைக்கு நடந்து முடிந்தது. என் மாமா உட்பட சில உறவுகள் வந்திருந்தனர். பேசச் சொன்னால் பேச தயாரான விஷயங்களோடு இருந்தார்கள். வாய்ப்பில்லாமல் போனது! //
நீக்குநிகழச்சியை தொக்குந்து வழங்கியவர்கள் சொன்னது மைக் ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டோம் மன்னிக்கவும் மன்னிக்கவும் என்று.
மற்றபடி எல்லாம் சரியாக செய்தார்கள். அவர்கள் கையில் லிஸ்ட் வைத்து கொண்டு யாரை கூப்பிட வேண்டுமோ அவர்களை வரிசையாக அழகாய் அழைத்து பேச வைத்தார்கள். அலுவலகம், நட்பு, உறவுகள் என்று அழகாய் தொகுத்தார்கள்.
தம்பியின் சிறு வயது பள்ளித்தோழன் மிக அழகாய் பேசினார்.
சாரின் ஓவியதோடு அச்சேறி இருப்பது சிறப்பு.
பதிலளிநீக்குஅப்போது வலைச்சர அறிமுககங்கள் ஒரு திருவிழா போல நடைபெறும்.
எங்களுக்கு எப்போது வாய்ப்பு வழங்கப்படும் என்று காத்திருந்து, வந்ததும் நான் பார்த்துக் கொண்டிருந்த பலப்பல வலைப்பக்கங்களை எண்களிட்டு அறிமுகப்படுத்தினோம்.
நான் கேஜிஜிக்கு அனுப்பி விடுவேன். அவர் அங்கு ப்ரசன்ட் செய்தார்.
//சாரின் ஓவியதோடு அச்சேறி இருப்பது சிறப்பு. //
நீக்குமகன் தான் பதிவில் பகிர்ந்ததை அப்படியே எடிட் செய்யாமல் அப்படியே அச்சேற்றி விட்டான்.
//அப்போது வலைச்சர அறிமுககங்கள் ஒரு திருவிழா போல நடைபெறும். //
நிறைய படித்தோம் பகிர்ந்தோம். இப்போது நாலு பேர்கள் பதிவை படிக்க நேரம் ஒதுக்க வேண்டி இருக்கிறது.
மாமன் அடித்தானோ என்று படித்ததும் மனதில் தானாக ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் நீருறங்க என்று பாடல் வரி ஓடுகிறது. அழகான அந்த நாட்டுப்படலை இந்த திரைப்படலில் உபயோகபப்டுத்தி இருப்பார்கள்.
பதிலளிநீக்கு//மாமன் அடித்தானோ என்று படித்ததும் மனதில் தானாக ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் நீருறங்க என்று பாடல் வரி ஓடுகிறது. அழகான அந்த நாட்டுப்படலை இந்த திரைப்படலில் உபயோகபப்டுத்தி இருப்பார்கள்.//
நீக்குஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் நீருறங்க வரிகள் காதல், காதலி பாடுவது போல நிறைய படங்களில் இடம்பெற்று இருக்கிறது.
கவலை இல்லா மனிதன் படத்தில் சோகமாய் ஒற்றையாய் பெண் பாடுவாள்.
என்னிடம் தாலாட்டு என்று ஒரு புத்தகம் இருந்தது. பல்வேறு பழைய தாலாட்டுப் பாடல்கள் இருந்தன. இப்போது எங்கே அதைத் தேடி எடுப்பது!
பதிலளிநீக்கு//என்னிடம் தாலாட்டு என்று ஒரு புத்தகம் இருந்தது. பல்வேறு பழைய தாலாட்டுப் பாடல்கள் இருந்தன. இப்போது எங்கே அதைத் தேடி எடுப்பது!//
நீக்குதேடி எடுங்கள், பேரனோ, பேத்தியோ பிறந்தால் தாத்தா தாலாட்டு பாடி தூங்க வைக்கலாம். விளையாட்டு காட்ட பாடல் இருக்கு.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நன்றி.
உறவின் முக்கியத்துவத்தை மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதிருமணத்தில் மணமகளுக்கு சகோதரன் பல இடங்களில் கடமையாற்றுவான். பொரி போடும் சடங்கு, ஏன் மறுநாள் முதலிரவு படுக்கையை மடித்து வைப்பது வரை. அதுபோல காலம் முழுவதும் வருடா வருடம் இரு தினக்களில் பணம் அல்லது சீர் செய்வது. மணமகனின் சகோதரிக்கும் அதே முக்கியத்துவம். என்ன ஒண்ணு, அவள் வேற்று வீடு சென்றுவிடுவதால் சீர் அனுப்பும் வழக்கம் இல்லை.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//உறவின் முக்கியத்துவத்தை மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//
நன்றி .
//திருமணத்தில் மணமகளுக்கு சகோதரன் பல இடங்களில் கடமையாற்றுவான். பொரி போடும் சடங்கு//
ஆமாம்.
, //ஏன் மறுநாள் முதலிரவு படுக்கையை மடித்து வைப்பது வரை. //
அது மணமகனின் சகோதரிக்கு தான். அதற்கு "பள்ளியறை சுருள்" என்று மணமகளின் தாயார் பணம் கொடுப்பார்கள்.
முதல் நாளிரவு மண்மகளின் சகோதரர் நலுங்கு வைப்பார்கள் அதற்கும் பொரி இட உதவியதற்கும் அவனுக்கு ஆடை, மற்றும் மோதிரம் போடுவார்கள்.
//அதுபோல காலம் முழுவதும் வருடா வருடம் இரு தினக்களில் பணம் அல்லது சீர் செய்வது. மணமகனின் சகோதரிக்கும் அதே முக்கியத்துவம். என்ன ஒண்ணு, அவள் வேற்று வீடு சென்றுவிடுவதால் சீர் அனுப்பும் வழக்கம் இல்லை.//
ஆமாம், சீர் செய்வதில் சில நடைமுறைகளை வைத்து இருக்கிறார்கள்.
எல்லாம் ஒற்றுமையாக வாழ .
அக்கா பெண், மாமன் மகன்/மகள் திருமண உரிமை உண்டே
பதிலளிநீக்குஅக்கா பெண், மாமன் மகன்/மகள் திருமண உரிமை உண்டே
நீக்குதாய் மாமனை திருமணம் செய்ய மாட்டார்கள் எங்கள் பக்கம்.
இப்போது மருத்துவர்கள் நெருங்கிய உறவுகளில் திருமணம் வேண்டாம் என்பதால் குறைந்து வருகிறது.
சிலர் செய்கிறார்கள்.
அதுபோல வீட்டின் பல சடங்குகளில் மாமன் பங்களிப்பு உண்டு. நம் முன்னோர்கள் உறவை அப்படி பின்னிப் பிணைந்திருக்குமாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
பதிலளிநீக்கு//அதுபோல வீட்டின் பல சடங்குகளில் மாமன் பங்களிப்பு உண்டு. நம் முன்னோர்கள் உறவை அப்படி பின்னிப் பிணைந்திருக்குமாறு ஏற்பாடு செய்துள்ளனர்.//
நீக்குஆமாம் ,"உறவுகள் தொடர்கதை" பதிவை முழுதாக வாசித்தால் இந்த கருத்தை சொல்லி இருப்பேன். பெண்ணுக்கு தாய்வீட்டு உறவு எப்போதும் அவசியம்.
உங்கள் தம்பியின் பணி நிறைவுக்கு அப்புறமான வாழ்வு சிறக்கட்டும்.
பதிலளிநீக்கு//உங்கள் தம்பியின் பணி நிறைவுக்கு அப்புறமான வாழ்வு சிறக்கட்டும்.//
நீக்குநன்றி, உங்கள் வாழ்த்தை தம்பிடம் சொல்கிறேன்.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நெல்லைத்தமிழன்.
வணக்கம் சகோ
பதிலளிநீக்குஉறவுகள் குறித்த விளக்கப் பதிவு அருமையாக உள்ளது.
வலைச்சரத்தில் தங்களை அறிமுகம் செய்ததை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அபாட்னபோத் தட்லோ (43) தங்களது வரிசை எண் தகாலன் மொழியில் சொல்லி இருந்தேன்.
இதைக் கண்டதும் மகிழ்ச்சி.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குவணக்கம் சகோ
//உறவுகள் குறித்த விளக்கப் பதிவு அருமையாக உள்ளது.//
நன்றி.
//வலைச்சரத்தில் தங்களை அறிமுகம் செய்ததை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அபாட்னபோத் தட்லோ (43) தங்களது வரிசை எண் தகாலன் மொழியில் சொல்லி இருந்தேன்.
இதைக் கண்டதும் மகிழ்ச்சி.//
ஆமாம், எனக்கு பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.
தகாலன் மொழியா? நல்லது உங்களுக்கு நான் 43 வது ஆளா வலைத்தள பகிர்வில் சரி சரி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
சிறப்பான பகிர்வு. உங்களுடைய இந்த தொடர் பதிவு, வலையுலகின் சிறப்பான காலகட்டங்களையும், அப்போது இருந்த பதிவர்களின் நினைவுகளையும் தந்தன. எத்தனை எத்தனை பதிவுகள் தினம் தினம் வந்து கொண்டிருந்தன. இப்போது பதிவர்கள் பலரும் எழுதுவதில்லை என்பதில் வருத்தம் உண்டு. பலர் முகநூல் பக்கம் சாய்ந்து விட்டார்கள் என்றாலும் இங்கேயும் எழுதலாம் என்று தோன்றும்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//சிறப்பான பகிர்வு. உங்களுடைய இந்த தொடர் பதிவு,//
நன்றி
//வலையுலகின் சிறப்பான காலகட்டங்களையும், அப்போது இருந்த பதிவர்களின் நினைவுகளையும் தந்தன. எத்தனை எத்தனை பதிவுகள் தினம் தினம் வந்து கொண்டிருந்தன. இப்போது பதிவர்கள் பலரும் எழுதுவதில்லை என்பதில் வருத்தம் உண்டு. பலர் முகநூல் பக்கம் சாய்ந்து விட்டார்கள் என்றாலும் இங்கேயும் எழுதலாம் என்று தோன்றும்.//
ஆமாம், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று போய் விட்டார்கள்.
உறவுகள் தொடரை படித்தவர்கள் 2000க்கு கிட்ட .
இப்போது பதிவுகளை படிப்பவர்கள் குறைவு. குட்டி குட்டியாக விஷயங்கள் வேண்டும் நீண்ட பதிவை படிக்க நேரமும், பொறுமையும் இல்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. உறவுகளில் பெண் வழியில் தாய்மாமாவும், (அண்ணா, இல்லை தம்பி) ஆண் வழியில் நாத்தனார், (தங்கை இல்லை அக்கா) ஆகிய இருவருக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் தருவார்கள் என்பது உண்மைதான். நீங்கள் பதிவின் வழி அழகாகவும், விபரமாகவும் சொல்லியுள்ளீர்கள்.
பழைய உறவுகள் பதிவிற்கான சகோதரர் கில்லர்ஜி வழியாக வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு பாராட்டுக்கள். தொடர் பதிவுக்கு நீங்களும் அழைக்கப்பட்டு, நல்லதோர் பதிவை எழுதியமைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்போது நடைபெற்ற உங்கள் தம்பியின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டு மேடையில் சிறப்பாக பேசியமைக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
ஆம்.. நானும் எங்கள் அப்பாவுக்கு பிறகு எங்கள் அண்ணாவைத்தான் தகப்பனார் ஸ்தானத்தில் வைத்து மரியாதை செலுத்தினேன். சிறுவயதிலேயே எங்கள் அண்ணாவை ஒருமையில் அழைக்க கூடாதென உத்தரவு போட்டு "நீங்கள்" என அழைக்க வைத்தவர் என் அம்மாதான்...! எங்கள் அண்ணா இருந்த வரை எனக்கு பிறந்த வீட்டு சீர் வருடந்தோறும் வந்தது. இப்போதும் எங்கள் மன்னி அங்கு போனால், பணம், புடவை என வைத்துத் தருவார்கள். உங்கள் தம்பியின் மனைவியை போலத்தான் எங்கள் மன்னியும். என்னிடம் இன்று வரை மிகுந்த் பாசமாக இருக்கிறார்.
உங்கள் தம்பியின் பணி நிறைவு விழா நன்றாக நடைபெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தம்பியும், அவர் மனைவியும் நன்றாக சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//பதிவு அருமையாக உள்ளது. உறவுகளில் பெண் வழியில் தாய்மாமாவும், (அண்ணா, இல்லை தம்பி) ஆண் வழியில் நாத்தனார், (தங்கை இல்லை அக்கா) ஆகிய இருவருக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் தருவார்கள் என்பது உண்மைதான். நீங்கள் பதிவின் வழி அழகாகவும், விபரமாகவும் சொல்லியுள்ளீர்கள்.//
நன்றி.
//பழைய உறவுகள் பதிவிற்கான சகோதரர் கில்லர்ஜி வழியாக வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு பாராட்டுக்கள். தொடர் பதிவுக்கு நீங்களும் அழைக்கப்பட்டு, நல்லதோர் பதிவை எழுதியமைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//
உங்கள் பாராட்டுக்கு நன்றி. அப்போது அடிக்கடி என் பதிவுகள் வலைச்சரத்தில் இடம்பெறும். திண்டுக்கல் தன்பாலனும், ரூபனும் தகவல் சொல்வார்கள் வந்து. அப்போது மிகவும் சுறு சுறுப்பாக இருந்தது வலைதளங்கள். அதுவொரு கனாகாலம் போல் உள்ளது.
ஒரு அண்ணா இறைவனடி சென்று விட்டார்கள் சிறு வயதில். அண்ணியும் எப்போது போனாலும் நல்ல உபசரிப்பு செய்வார்கள். இப்போது போன போது அவர்கள் போட்ட கூழ்வற்றல் கொடுத்தார்கள். இன்னொரு தம்பியும் தம்பி மனைவியும் மிகவும் பிரியமாக இருப்பார்கள் .
இந்த தம்பிதான் மதுரை என்பதால் நெருக்கம் அதிகம்.
உங்கள் அண்ணாவின் நினைவுகளை, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அண்ணி பிரியமுடன் இருப்பது மகிழ்ச்சி.
//உங்கள் தம்பியின் பணி நிறைவு விழா நன்றாக நடைபெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தம்பியும், அவர் மனைவியும் நன்றாக சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கும், அன்பான கருத்துக்கும் , பிரார்த்தனைக்கும் நன்றி நன்றி.
உறவுகளைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். தலைப்பைக் கொண்டு வந்த விதம் அழகு. அரிசோனா ஆண்டு மலரில் தங்கள் கட்டுரை சார் வரைந்த படத்துடன் வெளியாகி இருப்பதற்கு வாழ்த்துகள். இந்தப் பதிவுக்கு பொருத்தம். புகைப்படப் போட்டியில் வென்ற குடந்தை சாரங்கபாணிகோயில் உள்மண்டப படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கலாமே. இங்கே சேமித்திடுங்கள். வடிவமைப்பாளராக தங்கள் மகன் இருக்கையில் சிறப்பாக வந்திருக்கும் ஆண்டுமலர். தமிழ்ச் சங்க அனைத்து செயல்பாடுகளிலும் பங்கெடுத்து வருவது பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//உறவுகளைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். தலைப்பைக் கொண்டு வந்த விதம் அழகு. அரிசோனா ஆண்டு மலரில் தங்கள் கட்டுரை சார் வரைந்த படத்துடன் வெளியாகி இருப்பதற்கு வாழ்த்துகள்.//
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
//புகைப்படப் போட்டியில் வென்ற குடந்தை சாரங்கபாணிகோயில் உள்மண்டப படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கலாமே. இங்கே சேமித்திடுங்கள்.//
நான் தவறாக சாரங்கபாணி என்று சொல்லி விட்டேன், சக்கரபாணி கோயில். நீங்கள் சொன்னதும் தேடி எடுத்து பகிர்ந்து விட்டேன்.
சேமித்து விட்டேன். உங்களுக்கு நன்றி.
//வடிவமைப்பாளராக தங்கள் மகன் இருக்கையில் சிறப்பாக வந்திருக்கும் ஆண்டுமலர். தமிழ்ச் சங்க அனைத்து செயல்பாடுகளிலும் பங்கெடுத்து வருவது பாராட்டுக்குரியது.//
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
சக்கரபாணி கோயில் உள் மண்டபப் படம், சிறப்பான கோணம். அருமை. Frame within a frame - சட்டத்துக்குள் சட்டம், என்பது ஒளிப்படத்திற்காகக் கோணம் அமைக்கையில் கையாளப்படும் ஒரு உத்தி. அது இந்தப் படத்தில் அருமையாக வெளிப்பட்டுள்ளது. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். படத்தைக் காணத் தந்ததற்கு நன்றி.
நீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//சக்கரபாணி கோயில் உள் மண்டபப் படம், சிறப்பான கோணம். அருமை. Frame within a frame - சட்டத்துக்குள் சட்டம், என்பது ஒளிப்படத்திற்காகக் கோணம் அமைக்கையில் கையாளப்படும் ஒரு உத்தி. அது இந்தப் படத்தில் அருமையாக வெளிப்பட்டுள்ளது. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். படத்தைக் காணத் தந்ததற்கு நன்றி.//
உங்கள் அளவு காமிரா உத்தி தெரியாது ராமலக்ஷ்மி.
படத்தை பாராட்டி மீண்டும் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.நீங்கள் சொன்னதும் பதிவில் சேர்த்து விட்டேன் நன்றி.