ஹர்ஷவர்த்தனர் .கி.பி 606-647 வரை ஆட்சி செய்தார்
மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரியான ராஜ்யஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயை தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்.அதை அறிந்த ஹர்ஷவர்த்தனர் மற்றும் ராஜ்ஜியஸ்ரீயின் அண்ணனான ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான். அதன் பின் சூழ்ச்சியால் ராஜ்யவர்தனர் பேரரசர் கெளடப் பேரரசர் சசாங்கனால் கொல்லப்பட்டான்.
அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்; ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை பழிதீர்த்து, தன் சகோதரி ராஜ்யஸ்ரீயைமீட்க தீர்மானித்தார். ராஜ்யஸ்ரீ சிறையிலிருந்து தப்பி விந்திய மலைச்சாரலுக்கு ஓடி விட்டார். அவரை தேடி அழைத்து வந்தார் ஹர்ஷவர்த்தனர். அதன்பின் நாட்டின் நலத்தில் கவனம் செலுத்தினார்.
இந்தியாவிற்கு வந்த சீன யாத்திரிரிகர் யுவான் சுவாங் குறிப்புகளிலிருந்து ஹர்ஷர் ஆட்சி சிறப்பை அறியலாம்.
நாலந்தா பல்கலைகழகம் குமார குப்தரால் தோற்றுவிக்கப்பட்டது. ஹர்ஷர் காலத்தில் உலக புகழ் பெற்றது.
இவர் நாகானந்தம், ரத்னாவளீ, ப்ரியதர்சிகா என்ற மூன்று சமஸ்கிருத நாடகங்களை இயற்றியுள்ளார். இவை மன்னரின் அவைப் புலவர்களான பாணபட்டர் முதலியோரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு கருத்து உண்டு. இந்த நாடகங்களுக்கு சமஸ்கிருத இலக்கியத்தில் முக்கியப்பங்கு உண்டு.
பிராகையில் நடைபெற்ற திருவிழாவில் மக்களுக்கு வெகுமதிகளை அள்ளி அள்ளி கொடுத்து விட்டு அவை தீர்ந்து போன பின் , தன் பட்டாடைகளையும் தானம் அளித்து விட்டு தன் சகோதரியிடம் ஒரு ஆடையை வாங்கி அதை அணிந்து வந்ததாக என் சரித்திர ஆசிரியர் சொல்வார்.
ஹர்ஷர் முதலில் சிவன், சூரியன், புத்தர் ஆகிய கடவுளர்களை வணங்கினார். பிறகு மகாயான புத்த மததிற்குப் பேராதரவு அளித்தார். "பிராகையில் நடைபெறும் திருவிழாவிற்கு ஐந்து கண்டங்களிலுள்ள ஏரளமான வெகுமதிகளை அளித்தார் .
புத்தர், சிவன், சூரியன் ஆகிய திருவுருவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஹர்ஷர் எவ்வளவு நல்ல குணங்கள் உடையவராக இருந்தார் என்பதை ஹர்ஷர் சாதனைப்படைத்த பேரரசரின் சரித்திரம் என்ற நூலில் இருந்து கொஞ்சம் கீழே:-
விகடன் பிரசுரம் ஆசிரியர் அ. கணேசன் அவர்கள் நூலில் உள்ள சிறிய முன்னுரை. பகுதி 133 ரூபாய் என்று போட்டு இருக்கிறது.
//இந்தியாவை ஆட்சி செய்த முற்கால அரசர்களில் சிறந்தவர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின், தேசத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர் பேரரசர் ஹர்ஷர். ஹர்ஷரின் சாதனைகளை மட்டுமல்ல பண்டைய இந்தியர்களின் திறமைகளையும், கலைகளையும் இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் அ.கணேசன். ஹர்ஷர் போரில், நிர்வாகத்தில் மட்டும் சிறந்தவர் அல்ல கலைகளிலும் சிறந்தவர்.
கலைகளையும், இலக்கியத்தையும் மக்களுக்காகவே அவர் படைத்தார். தான் இயற்றிய நாகானந்தா நாடகத்தில் ஹர்ஷர் கீழ்க்காணும் வரத்தைத் தேவதையிடம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறார். ‘மேகங்கள், குறித்த காலத்தே மழைபொழியட்டும். மக்கள் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து பச்சை ஆடையை நிலத்துக்கு அணிவிக்கட்டும். எல்லா மக்களும் நற்செயல்களைச் செய்து குவிக்கட்டும். எல்லா அழிவிலிருந்தும் நாடு விடுபடட்டும். மக்கள் பொறாமையற்ற உள்ளங்களுடன் களிக்கட்டும். உறவினர், நண்பர்களால் இடையூறு அற்ற இன்பதைச் சுவைக்கட்டும்’. அதனால்தான் அவர் அரசர்களில் சிறந்தவராக இருந்தார்! கங்கை நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார். அரசாங்கப் படகுகளும், தனியார்ப் படகுகளும் அதிகமாகக் கங்கையில் காணப்பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன.
ஹர்ஷரின் ஆட்சி வலபி, ஒடிசாவின் சில பகுதிகள் வரை நீடித்தது. அரசாங்க, வணிக, போர்த் துறைகள், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்தன. ஹர்ஷப் பேரரசில் யானைப் படை முக்கிய நிலையில் இருந்தது. ஹர்ஷரின் விருப்பமான யானைகள் போர்க்களத்தில் பல பணிகளுக்கு உதவின என்பதை பாணர் விவரிக்கிறார். எதிரிகளின் கூடாரங்களை முட்டிக் குழப்பம் விளைவிக்கவும், தந்தத்தால் பகைவர்களை நசுக்கவும், வெறி பிடித்து ஓடிப் பகைவர்களைக் கொல்லவும் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி எண்ணற்றத் தகவல்களை விறுவிறுப்பான நடையில் ஆதாரங்களுடன் விளக்கிச் சரித்திரத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் நூல் ஆசிரியர்!//
இவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவராக இருந்ததால் இறைவன் 41 வது வயதிலேயே கூட்டி சென்று விட்டார் போலும்.
இதற்கு முன்பு போட்ட பதிவுகள்.
சரித்திரம் தொடரும்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. ஹர்ஷவர்த்தனர் வரலாறு பற்றிய தொகுப்பு நன்றாக உள்ளது.
அவர் தம் சகோதரியை அந்த சிறு வயதிலேயே காத்த அன்புள்ளம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு அதிகமாக நன்மைகள் செய்ததும், கலை, இலக்கியம், பண்பாடு என சிறப்பான ஆட்சியை தந்ததையும் படிக்கும் போது எவ்வளவு சிறந்த அரசர் என்பது புரிகிறது. அப்போது படித்ததும் நினைவுக்கு வருகிறது.
நீங்கள் அவர் குறித்த தகவல்களை பொக்கிஷ மாக சேர்த்து வைத்து காத்திருப்பது நல்ல விஷயம். படங்கள் நன்றாக உள்ளது. தங்கள் எழுத்தும் அழகாக இருக்கிறது. சிவன், புத்தர், சூரியன் போன்ற தெய்வ படங்களை கத்தரித்து ஒட்டி வரலாற்றுப் பாடத்தை சிறப்பாக செய்துள்ளீர்கள்.
சாதனை படைத்த பேரரசர் என்ற நூலிலிருந்து நீங்கள் தந்த ஹர்சரை பற்றிய செய்தியையும் படித்தறிந்தேன். கலை, இலக்கியத்தை போற்றி சாதுவான மனம் படைத்த அவர் போர் என்று வரும் போது, யானைப்படை போரிலும் அவர் சிறந்ததாக இருந்தது பிரமிக்க வைக்கிறது. சுவாரஸ்யமாக தொடரும் அடுத்த பகிர்வுக்கும் காத்திருக்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. ஹர்ஷவர்த்தனர் வரலாறு பற்றிய தொகுப்பு நன்றாக உள்ளது.//
நன்றி கமலா
//அவர் தம் சகோதரியை அந்த சிறு வயதிலேயே காத்த அன்புள்ளம் மெய்சிலிர்க்க வைக்கிறது.//
அந்தக்கால படங்களில் இவர்களின் அன்பை வைத்து கதை செய்து இருப்பார்கள்.
//அவரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு அதிகமாக நன்மைகள் செய்ததும், கலை, இலக்கியம், பண்பாடு என சிறப்பான ஆட்சியை தந்ததையும் படிக்கும் போது எவ்வளவு சிறந்த அரசர் என்பது புரிகிறது. அப்போது படித்ததும் நினைவுக்கு வருகிறது.//
ஆமாம். மக்களின் அன்பை பெற்ற அரசர். உங்களுக்கும் படித்தது நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.
//நீங்கள் அவர் குறித்த தகவல்களை பொக்கிஷ மாக சேர்த்து வைத்து காத்திருப்பது நல்ல விஷயம். படங்கள் நன்றாக உள்ளது. தங்கள் எழுத்தும் அழகாக இருக்கிறது. சிவன், புத்தர், சூரியன் போன்ற தெய்வ படங்களை கத்தரித்து ஒட்டி வரலாற்றுப் பாடத்தை சிறப்பாக செய்துள்ளீர்கள்.//
இப்போது பதிவு போட எடுத்து எடுத்து பார்த்ததில் கொஞ்சம் கிழிய ஆரம்பித்து விட்டது. அதுதான் இதில் சேமித்து விடுகிறேன், என்ற மன திருப்தி உள்ளது. அனைத்தையும் குறித்து நீங்கள் பாராட்டி கருத்து சொன்னது மகிழ்ச்சி.
//சாதனை படைத்த பேரரசர் என்ற நூலிலிருந்து நீங்கள் தந்த ஹர்சரை பற்றிய செய்தியையும் படித்தறிந்தேன். கலை, இலக்கியத்தை போற்றி சாதுவான மனம் படைத்த அவர் போர் என்று வரும் போது, யானைப்படை போரிலும் அவர் சிறந்ததாக இருந்தது பிரமிக்க வைக்கிறது. சுவாரஸ்யமாக தொடரும் அடுத்த பகிர்வுக்கும் காத்திருக்கிறேன். நன்றி சகோதரி.//
ஆமாம், அவர் சிறந்த அரசர் என்பதாக நூல் ஆசிரியர் குறிப்பிடுவது அவரின் அன்பான பிரார்த்தனை.
அவரின் பிரார்த்தனை எனக்கு பிடித்து இருந்தது. நாம் எல்லோரும் அந்த பிரார்த்தனையை தினம் செய்யலாம். நீங்கள் எப்போதும் செய்வீர்கள்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. ஹர்ஷவர்த்தனர் வரலாறு பற்றிய தொகுப்பு நன்றாக உள்ளது.//
நன்றி கமலா
//அவர் தம் சகோதரியை அந்த சிறு வயதிலேயே காத்த அன்புள்ளம் மெய்சிலிர்க்க வைக்கிறது.//
அந்தக்கால படங்களில் இவர்களின் அன்பை வைத்து கதை செய்து இருப்பார்கள்.
//அவரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு அதிகமாக நன்மைகள் செய்ததும், கலை, இலக்கியம், பண்பாடு என சிறப்பான ஆட்சியை தந்ததையும் படிக்கும் போது எவ்வளவு சிறந்த அரசர் என்பது புரிகிறது. அப்போது படித்ததும் நினைவுக்கு வருகிறது.//
ஆமாம். மக்களின் அன்பை பெற்ற அரசர். உங்களுக்கும் படித்தது நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.
//நீங்கள் அவர் குறித்த தகவல்களை பொக்கிஷ மாக சேர்த்து வைத்து காத்திருப்பது நல்ல விஷயம். படங்கள் நன்றாக உள்ளது. தங்கள் எழுத்தும் அழகாக இருக்கிறது. சிவன், புத்தர், சூரியன் போன்ற தெய்வ படங்களை கத்தரித்து ஒட்டி வரலாற்றுப் பாடத்தை சிறப்பாக செய்துள்ளீர்கள்.//
இப்போது பதிவு போட எடுத்து எடுத்து பார்த்ததில் கொஞ்சம் கிழிய ஆரம்பித்து விட்டது. அதுதான் இதில் சேமித்து விடுகிறேன், என்ற மன திருப்தி உள்ளது. அனைத்தையும் குறித்து நீங்கள் பாராட்டி கருத்து சொன்னது மகிழ்ச்சி.
//சாதனை படைத்த பேரரசர் என்ற நூலிலிருந்து நீங்கள் தந்த ஹர்சரை பற்றிய செய்தியையும் படித்தறிந்தேன். கலை, இலக்கியத்தை போற்றி சாதுவான மனம் படைத்த அவர் போர் என்று வரும் போது, யானைப்படை போரிலும் அவர் சிறந்ததாக இருந்தது பிரமிக்க வைக்கிறது. சுவாரஸ்யமாக தொடரும் அடுத்த பகிர்வுக்கும் காத்திருக்கிறேன். நன்றி சகோதரி.//
ஆமாம், அவர் சிறந்த அரசர் என்பதாக நூல் ஆசிரியர் குறிப்பிடுவது அவரின் அன்பான பிரார்த்தனை.
அவரின் பிரார்த்தனை எனக்கு பிடித்து இருந்தது. நாம் எல்லோரும் அந்த பிரார்த்தனையை தினம் செய்யலாம். நீங்கள் எப்போதும் செய்வீர்கள்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
அந்தக் காலத்திலேயே ஹர்ஷர் மாஸ் காட்டி இருக்கிறார் போல...
பதிலளிநீக்குதங்கைக் கணவனைக் கொன்றவர்களைப் பழி வாங்கி, தப்பிப்போன தங்கையை மீட்டு வந்து,
நல்லாட்சி தந்து...
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அந்தக் காலத்திலேயே ஹர்ஷர் மாஸ் காட்டி இருக்கிறார் போல...
தங்கைக் கணவனைக் கொன்றவர்களைப் பழி வாங்கி, தப்பிப்போன தங்கையை மீட்டு வந்து,
நல்லாட்சி தந்து...//
ஆட்சிக்கு வரும் போது ஹர்ஷருக்கு 16 வயது அதனால் ராஜ்யஸ்ரீ அவருக்கு அக்கா. (தமைக்கையார், சகோதரி என்றே வரலாறு சொல்கிறது)
இப்படி மாஸ் காட்டினால்தானே இளையவர்களுக்கு (ஸ்ரீராம்) பிடிக்கிறது .
நல்லாட்சி கொடுத்தால் தான் மக்களுக்கு பிடிக்கும்.
// இளையவர்களுக்கு (ஸ்ரீராம்) //
நீக்குஆஹா.. நன்றி அக்கா... :))
அதென்னவோ அந்தக் காலத்திலிருந்தே தங்கை என்றே மனதில் பதிந்து விட்டது.
நீக்குஅப்போது கடமைக்குப் படித்த வரலாறுகள் இப்போது சுவாரஸ்யம் காட்டுகின்றன. சில விஷயங்களை மறுபடி தேடிப் பார்க்கச் சொல்கின்றன. எத்தனை வகையான அரசர்களை பார்த்திருக்கிறது நம் நாடு!
பதிலளிநீக்கு//அப்போது கடமைக்குப் படித்த வரலாறுகள் இப்போது சுவாரஸ்யம் காட்டுகின்றன. சில விஷயங்களை மறுபடி தேடிப் பார்க்கச் சொல்கின்றன. எத்தனை வகையான அரசர்களை பார்த்திருக்கிறது நம் நாடு!//
நீக்குஆமாம், அப்போது மதிபெண் வாங்க படித்து எழுதியதை இப்போது சரியா என்று கூகுளில் தேடி பார்த்து மேலும் விவரங்கள் கிடைக்குமா என்று பார்க்க சொல்வது உண்மைதான். நீங்கள் சொல்வது போல நிறைய வகையான மன்னர்களை பார்த்து இருக்கிறது நம் நாடு.
நீங்கள் ஒட்டியுள்ள படங்களில் ஹர்ஷவர்தனர் படம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்.
பதிலளிநீக்கு//நீங்கள் ஒட்டியுள்ள படங்களில் ஹர்ஷவர்தனர் படம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்.//
நீக்குஅப்போது கிடைத்து இருந்தால் ஒட்டி இருப்பேன், இப்போதும் தேடினேன் கிடைக்கவில்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பழைய நோட்ஸை நீங்கள் இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வருவது ஆச்சர்யம்.
பதிலளிநீக்குகையெழுத்தும் நன்றாக இருக்கிறது.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//பழைய நோட்ஸை நீங்கள் இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வருவது ஆச்சர்யம்.//
முதலில் கணவரிடம் காட்ட எடுத்து வந்தேன், பின் பிள்ளைகளிடம் காட்டினேன், இப்போது பேரப்பிள்ளைகளும் , பேத்தியும் பார்த்தார்கள்.
நாங்கள் பிராஜட் ஒர்க் செய்வது போல நீங்கள் செய்து இருக்கிறீர்கள் அன்றே என்று சொன்னார்கள்.
//கையெழுத்தும் நன்றாக இருக்கிறது.//
என் கையெழுத்தை நன்றாக இருப்பதாக சொன்னதற்கு நன்றி.
ஹர்ஷவர்தனர் வரலாறு நிறைய திரைக்கதைக்கு உதவும். காலம்தான் அரசர்களை எப்படி உயர்வடையச் செய்கிறது.
பதிலளிநீக்கு//ஹர்ஷவர்தனர் வரலாறு நிறைய திரைக்கதைக்கு உதவும். காலம்தான் அரசர்களை எப்படி உயர்வடையச் செய்கிறது.//
நீக்குஅந்தக்காலத்தில் நிறைய திரைப்படங்களில் இவர் கதையை அடிப்படியாக வைத்து வந்தது.
நீங்கள் சொல்வது உண்மை காலம் தான் உயர்வடைய செய்தாலும்
அரசர்களை பற்றி எழுதி வைத்தவர்களால் தான் அவர்கள் உயர்வு நமக்கு தெரிகிறது.
அப்போதெல்லாம் எப்படித்தான் படங்களை வெட்டி ஒட்டிச் சேர்த்தீர்களோ.
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது.
//அப்போதெல்லாம் எப்படித்தான் படங்களை வெட்டி ஒட்டிச் சேர்த்தீர்களோ.
நீக்குஅருமையாக இருக்கிறது.//
பழைய பாடப் புத்தகங்கள், அம்புலிமாமா போன்றகதை புத்தகங்களில் இருந்து படங்கள் சேர்த்தேன், அப்புறம் பத்திரிக்கைகளில் இருந்து சேகரித்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஹர்ஷவர்த்தனர் வரலாறு எனக்கு புதிய விடயமாக சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்....
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//ஹர்ஷவர்த்தனர் வரலாறு எனக்கு புதிய விடயமாக சிறப்பாக இருக்கிறது.
தொடர்ந்து வருகிறேன்....//
பாடத்தில் படித்து இருப்பீர்கள் ஜி,
உங்கள் கருத்துக்கும் தொடர்ந்து வருவதாக சொன்னதற்கும் நன்றி.
ஹர்ஷவர்த்தனர் வரலாறு எத்தனையாவது வகுப்பு ?
நீக்குஹர்ஷவர்த்தனர் வரலாறு எத்தனையாவது வகுப்பு ?
நீக்கு10 ஆம் வ்குப்பு ஜி.நான் விருப்பபாடமாக வரலாறு எடுத்தேன் அதனால் எனக்கு உண்டு. உங்களுக்கு வந்து இருக்க வாய்ப்பு இல்லையோ என்னமோ தெரியவில்லை.
ஹர்ஷ வர்த்தனர் பற்றிய விரிவான வரலாற்றுத் தகவல்கள். சிறிய வயதிலேயே தீரராகத் திகழ்ந்திருக்கிறார். பாதுகாத்து வைத்துப் பாட நோட்டிலிருந்து பகிர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//ஹர்ஷ வர்த்தனர் பற்றிய விரிவான வரலாற்றுத் தகவல்கள். சிறிய வயதிலேயே தீரராகத் திகழ்ந்திருக்கிறார். பாதுகாத்து வைத்துப் பாட நோட்டிலிருந்து பகிர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு.//
ஆமாம், சிறிய வயதிலேயே பொறுப்புகளும், கடமைகளும் அவரை ஒரு தீரராக ஆக்கி இருக்கிறது.
பழைய சேமிப்பை பகிர்ந்ததில் எனக்கு மன திருப்தி.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2025 அன்று 6:14 AM
நீக்குஅக்கா, ஹர்ஷவர்த்தனர் பெயர் மட்டும் நினைவு இருந்தது. இப்ப உங்கள் பதிவு பார்த்ததும் ராஜ்யஸ்ரீ எல்லாம் பள்ளியில் படித்தவை நினைவுக்கு வந்தன.
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் அனைத்து பின்னூட்டங்களை "தொடரும் வரலாறு "பதிவில் பின்னூட்டங்கள் போட்டு இருக்கிறீர்கள்.
அந்த பின்னூட்டங்கள் அனைத்தையும் இங்கு எடுத்து போட்டு இருக்கிறேன்.
உங்களுக்கு பள்ளியில் படித்தவை நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.
Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2025 அன்று 6:14 AM
பதிலளிநீக்குஉங்க எழுத்து அச்சு போல அழகா இடப்பக்கம் சரிந்து சூப்பரா இருக்கு கோமதிக்கா
கீதா
//உங்க எழுத்து அச்சு போல அழகா இடப்பக்கம் சரிந்து சூப்பரா இருக்கு கோமதிக்கா//
நீக்குஎன் எழுத்து நன்றாக இருப்பதாக சொன்னதற்கு நன்றி கீதா.
Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2025 அன்று 6:17 AM
பதிலளிநீக்குயுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்தது, நாளந்தா பல்கலைக்கழகம்....உங்கள் குறிப்புகள் நீங்க ஒட்டி வைத்த நோட்புக் எல்லாம் பார்த்ததும் வரலாற்றுப் பாடத்தில் படித்தவை எல்லாம் மீண்டும் இப்ப ரிவிஷன் பார்த்தது போல, பரீட்சைக்குத் தயாராவது போன்ற ஒரு உணர்வு வந்தது!!!! ஹாஹாஹா
அக்கா இப்ப சின்னப் பிள்ளையாக, பள்ளி படிக்கும் மாணவி போல ஆயிட்டாங்க!!!! சூப்பர்!
கீதா
யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்தது, நாளந்தா பல்கலைக்கழகம்....உங்கள் குறிப்புகள் நீங்க ஒட்டி வைத்த நோட்புக் எல்லாம் பார்த்ததும் வரலாற்றுப் பாடத்தில் படித்தவை எல்லாம் மீண்டும் இப்ப ரிவிஷன் பார்த்தது போல, பரீட்சைக்குத் தயாராவது போன்ற ஒரு உணர்வு வந்தது!!!! ஹாஹாஹா//
நீக்குஅப்படியானால் பரீட்சைக்கு படித்து கொண்டு இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும்.
//அக்கா இப்ப சின்னப் பிள்ளையாக, பள்ளி படிக்கும் மாணவி போல ஆயிட்டாங்க!!!! சூப்பர்!//
ஆமாம், என் நினைவுகள் பின்னோக்கி போனது , நினைவுகளில் வகுப்பு, ஆசிரியர்கள், என் பள்ளி, பள்ளித்தோழிகள் எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள்.
Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2025 அன்று 6:19 AM
பதிலளிநீக்குஇவர் நாகானந்தம், ரத்னாவளீ, ப்ரியதர்சிகா என்ற மூன்று சமஸ்கிருத நாடகங்களை இயற்றியுள்ளார். இவை மன்னரின் அவைப் புலவர்களான பாணபட்டர் முதலியோரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு கருத்து உண்டு.//
வரலாற்றில் இதெல்லாம் சகஜமப்பா தான்!!!!
// இந்த நாடகங்களுக்கு சமஸ்கிருத இலக்கியத்தில் முக்கியப்பங்கு உண்டு..//
சமஸ்கிருத மொழியே எப்படி வந்தது என்று , சில ஆராய்ச்சிகள் சொன்னதை சமீபத்தில், - ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார் என்று நினைவு வாட்சப்பில் -வாசித்த நினைவு.
கீதா
வரலாற்றில் இதெல்லாம் சகஜமப்பா தான்!!!!//
நீக்குஅன்று முதல் இன்று வரை அப்படி இருக்கிறது போல.
திருவிளையாடல் புராணத்தில் சிவன் எழுதி கொடுத்த பாடலை பாண்டியன் அவையில் பாடி தருமி பரிசு பெற்றார் என்று இருக்கு.
//சமஸ்கிருத மொழியே எப்படி வந்தது என்று , சில ஆராய்ச்சிகள் சொன்னதை சமீபத்தில், - ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார் என்று நினைவு வாட்சப்பில் -வாசித்த நினைவு.//
ஓ சரி சரி.
Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2025 அன்று 6:20 AM
பதிலளிநீக்குமுதலில் சிவன் சூரியன்.....கடவுளர்களை வணங்கினார்.....அந்தக் குறிப்புகளில், பிராகைன்னு சொல்லியிருக்கீங்க இல்லையா அது பிரயாகையைத்தான் அப்ப அப்படிச் சொல்வாங்களோ?
கீதா
//முதலில் சிவன் சூரியன்.....கடவுளர்களை வணங்கினார்.....அந்தக் குறிப்புகளில், பிராகைன்னு சொல்லியிருக்கீங்க இல்லையா அது பிரயாகையைத்தான் அப்ப அப்படிச் சொல்வாங்களோ?//
நீக்குபிரயாகைதான் அன்றும் , இன்றும். நான் எழுத்து பிழை செய்து இருப்பேன் போலும் அந்த குறிப்பில். அதை பார்த்து வாசிக்க முடிகிறதோ இல்லையோ என்று எடுத்து எழுதி மாட்டி கொண்டேன் உங்களிடம் என்று நினைக்கிறேன்.
Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2025 அன்று 6:23 AM
பதிலளிநீக்குநாலந்தா பல்கலைக் கழகம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று.
//பிராகையில் நடைபெற்ற திருவிழாவில் மக்களுக்கு வெகுமதிகளை அள்ளி அள்ளி கொடுத்து விட்டு அவை தீர்ந்து போன பின் , தன் பட்டாடைகளையும் தானம் அளித்து விட்டு தன் சகோதரியிடம் ஒரு ஆடையை வாங்கி அதை அணிந்து வந்ததாக என் சரித்திர ஆசிரியர் சொல்வார்.//
ஓ! புதிய தகவல்.
ஆமாம் ஹர்ஷர் பற்றி ரொம்பவே பெருமையாகச் சொல்லப்பட்டு படித்த நினைவு இருக்கிறது.
நூல் ஆசிரியர் கணேசன் அவர்களின் குறிப்புகளும் பார்த்துக் கொண்டேன் அக்கா
கீதா
//நாலந்தா பல்கலைக் கழகம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று.//
நீக்குஆமாம், வெங்கட் கூட நாலந்தா பல்கலைக்கழகத்தைப்பற்றி போய் விட்டு பதிவு போட்டார்.
//ஆமாம் ஹர்ஷர் பற்றி ரொம்பவே பெருமையாகச் சொல்லப்பட்டு படித்த நினைவு இருக்கிறது.
நூல் ஆசிரியர் கணேசன் அவர்களின் குறிப்புகளும் பார்த்துக் கொண்டேன் அக்கா//
நல்லது கீதா.
Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2025 அன்று 6:26 AM
பதிலளிநீக்குஹர்ஷரின் குறிப்பாகத் தன் தங்கைக்காக அவர் செய்ததைப் பார்க்கறப்ப
அட நம்ம சினிமா இயக்குநர்கள் இதெல்லாம் படிச்சுத்தான் உருவி கதையை உருவாக்கறாங்க போல...மாஸ் ஹீரோ ....தன் தங்கைக்காகப் பழி வாங்குவது உருகுவது எல்லாம்!!! பாருங்க அப்பவே ஹர்ஷர் இப்ப உள்ள மாஸ் ஹீரோவா இருந்திருக்கிறார்...அதாவது நடைமுறை வாழ்க்கையில்!!!
கீதா
ஹர்ஷரின் குறிப்பாகத் தன் தங்கைக்காக அவர் செய்ததைப் பார்க்கறப்ப//
நீக்குதமக்கைக்காக
//அட நம்ம சினிமா இயக்குநர்கள் இதெல்லாம் படிச்சுத்தான் உருவி கதையை உருவாக்கறாங்க போல...மாஸ் ஹீரோ ....தன் தங்கைக்காகப் பழி வாங்குவது உருகுவது எல்லாம்!!! பாருங்க அப்பவே ஹர்ஷர் இப்ப உள்ள மாஸ் ஹீரோவா இருந்திருக்கிறார்...அதாவது நடைமுறை வாழ்க்கையில்!!!//
ஆமாம், அரசர்கள் எப்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். யானை போல நினைவாற்றலுடன் பகைவர்களை அழிக்க வேண்டும்.
தன் நாட்டு மக்களை காக்க என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்ய வேண்டும் இல்லையா?
Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2025 அன்று 6:27 AM
பதிலளிநீக்குஹர்ஷரின் அக்கான்னு வரணும்...தெரியாம தங்கைன்னு எழுதிட்டேன்...ஹர்ஷர் மிகச் சிறிய வயதிலேயே ஆட்சிக்கு வந்துவிட்டாரே////பருவ வயதில்....அதான் இப்படி அந்த வயதின் எனர்ஜி!!
கீதா
//ஹர்ஷரின் அக்கான்னு வரணும்...தெரியாம தங்கைன்னு எழுதிட்டேன்...//
நீக்குஓ சரி சரி.
//ஹர்ஷர் மிகச் சிறிய வயதிலேயே ஆட்சிக்கு வந்துவிட்டாரே////பருவ வயதில்....அதான் இப்படி அந்த வயதின் எனர்ஜி!!//
இளம் கன்று பயம் அறியாது இல்லையா? மன்னர்களுக்கு எப்போதும் போர் போர் என்று தோள்கள் தினவு எடுக்கும் என்பார்கள்.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி கீதா.