புதன், 21 மார்ச், 2012

நீரின்றமையாது உலகு





உலக தண்ணீர் தினத்திற்கு நம்மால் என்ன செய்யவேண்டும் என்று பார்க்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

நீர்ப் பங்கீட்டில் நாம் இன்னும் நாகரிகம் பெறவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் எல்லோரும் மாநிலம் மாநிலமாய்ப் பிரித்தே பார்க்கிறார்கள், மக்கள் சுயநலமாய். தண்ணீர் அதிகமாய் வந்து தங்கள் நாட்டுக்கு அழிவு ஏற்படும் பட்சத்தில் மட்டும் அண்டை மாநிலத்திற்கு தண்ணீர் தரும் மாநிலம், மற்ற நாட்களில் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது.


//’சோழநாடு கூட்டமைப்பு’ என்று ஒரு பத்திரிக்கை நடத்திவரும் ஆசிரியர் திரு.அரிமா வைரசேகர் மார்ச் 2012 இதழில், தனது கட்டுரையில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டு இருந்தார்.
அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

”காவிரி, முல்லை,பெரியாறு, பாலாறு வரிசையில் தற்போது இணைந்து இருப்பது தென்பெண்ணை ஆறு ஆகும். தென்பெண்ணை யாற்று நீரை தராமல் தடுக்க, கர்நாடகம் அதன் வேலையை ஆரம்பித்து விட்டது. போகிற போக்கில் தமிழகத்தை சகாராவாக மாற்றாமல் மற்ற மாநிலங்கள் விடாது போல தெரிகிறது. கர்நாடகம் நந்தி மலைத் தொடரில் பிறந்து ஹொசக் கோட்டை ஒரத்தூர் வழியாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி ஒசூர் அருகே கொடியா அணை, கெல்வரப்பள்ளி அணை, கே.ஆ.பி. அணை என்ற அணைகளின் மூலமும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 13 ஏரிகள் மூலமும் மொத்தம் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கர்நாடகத்திலிருந்து இந்த நீரை திருப்பி விட்டு அங்குள்ள ஏரிகளை நிரப்ப கர்நாடக அரசு புதிய திட்டத்தைப் போட்டுள்ளது. இதற்காக கர்நாடாக அரசு ரூ. 36 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் ஒட்டுமொத்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விவசாய நிலங்களும் பாலைவனமாக மாறும் அவலம் அரங்கேறும். தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அடுத்த போராட்டத்தை கர்நாடகம் ஆரம்பித்து வைத்துள்ளது. இதற்கு எல்லாம் ஒரே வழி அனைத்து நதிகளையும் தேசிய மயமாக மாற்ற வேண்டும்.”//

என்று தன் கட்டுரையில் அழகாய்க் குறிப்பிட்டு இருக்கிறார்.


இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனக்கே எல்லாம் என்றால் கஷ்டம்.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்.

நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. இத்திட்டத்தை அமுலாக்க என்ன வழி என்று எல்லா அரசியல் தலைவர்களும் ஆலோசித்து அதை
நடைமுறைப் படுத்த வேண்டும்.

தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி, மழை நீர் சேமிப்புப் பற்றி, ’மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்று எவ்வளவோ சொல்லி விட்டோம்.

ஏரி குளத்தைத் தூர் வாருவது, ஏரி குளங்களைத் துண்டுபோட்டு விற்று குடியிருப்புப் பகுதிகளாய் மாற்றும் அவலத்தைத் தடுப்பது என்று எல்லோரும் நிறைய பேசியாகி விட்டது ஆனால் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தான் சோகம்.

பிரமபுத்திரா நதி நீரை அதிகமாய் தன் நாட்டுக்கு திருப்பி விட முயலுகிறது சீனா என்கிறார்கள்.


ஒரு காலத்தில் வீதிகளில் ,வீடுகளில், நடை பாதைகளில் தண்ணீர் பந்தல் வைத்து வெயிலுக்கு தண்ணீர் அளித்து வந்தார்கள். இப்போது தண்ணீர் பாட்டில்களைக் காசு கொடுத்து வாங்கி கையில் எடுத்துச் செல்லும் காலம் ஆகி விட்டது.

வெயில் காலத்தில் மொட்டை மாடிகளில் தண்ணீரைக் கொட்டி, காலி செய்கிறார்கள். தங்கள் வீடு குளிர்ச்சியாக இருக்க! வேறு வழிகளில் வெயிலைப் போக்கிக் கொள்ளலாம். வெயில் காலத்திற்கு மட்டும் தென்னம்கீற்றுப் பந்தல் போட்டுக் கொள்ளலாம்.

வட மாநிலங்களுக்கு சுற்றுலா போனபோது மக்கள் தண்ணீருக்காக எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று பார்த்தோம். அங்கு பல இடங்களில் அருவி கொட்டுகிறது, நதி நுங்கும், நுரையுமாய் துள்ளிப் பாய்ந்து ஒடுகிறது. ஆனால் மக்களுக்குப் பயன் இல்லை. அவர்கள் வெகு தூரம் தண்ணீருக்காக நடந்து சென்று எடுத்து வருகிறார்கள்.

அருவிகள், ஆறுகள், குளங்கள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரை எப்படி எல்லோருக்கும் பயன்படக்கூடியதாக நம்மால் மாற்ற முடியும் என்று பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் குடிநீர் வசதி செய்து த்ரப்பட வேண்டும்.


டாக்டர்.ப. முத்தையா மனோகரன் அவர்கள் 1996ல் ’விஞ்ஞானச்சுடர்’ என்ற (திரு அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படும்) அறிவியல் மாத இதழில்
நீர் நிர்வாகப்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி அருமையான கட்டுரை எழுதி இருக்கிறார்.

//” நீர் தற்போது கிடைத்தற்கரிய அரிய பொருளாகக் கருதப்படுகிறது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பருவச் சூழலுக்கேற்ப மழை பெய்யும் அளவு நிச்சயமற்றதாக இருப்பதும், கிடைக்கின்ற நீரை நாம் சரிவர உபயோகிக்காமல் இருப்பதும் நம்மை எதிர்நோக்கும் அபாயங்களாகக் கருத வேண்டும். அதற்கு ஒரே வழி தகுந்த பயிற்சி வாயிலாக நீரை சரிவர நிர்வாகிக்க வேண்டும்.”

”நீர் நிர்வாகம் என்பது நீர் குறைந்த அளவில் இருக்கும் போது நிர்வகிப்பது மட்டுமல்லாமல் அதிக அளவில் இருக்கும் போது சிக்கனமாக, சரிவர உபயோகிக்கும் முறையாகும்.”

”நீர் நிர்வாகத்தைப் பொதுவாக மூன்று நிலைகளில் கையாளுவது நல்லது. அவை
1. அன்றாடத் தேவைகளுக்காக நீர் நிர்வாகம், (water Management Domestic level)
2. விவசாயத்தில் நீர் நிர்வாகம் (at Farm level)
3 .தேசிய அள்வில் நீர் நிர்வாகம் (Water maanagement at National level)

”விவசாயத்தில் நீரைப் பயிர்களின் வேரின் ஆழத்தைப் பொறுத்துப் பாய்ச்சினால் விரயமாவதைத் தடுக்கலாம், கணக்கிடப்பட்ட நீரைப் பயிரில் முக்கிய வளர்ச்சிப் பருவங்களில் பாய்ச்சுவதாலும் பல்வேறு நவீன பாசன முறைகளைக் கையாளுவதாலும் குறைந்த நீரில் அதிக உற்பத்தி இலக்கை எட்ட முடியும்” என்கிறார்.

எவ்வளவு மழை பெய்கிறது என்பதை விட பல வழி முறைகளில் சரியான நீர் நிர்வாக முறைகளை கையாண்டு உபயோகிக்க வேண்டும் என்கிறார்.

மக்கள் தொகை அதிகரித்தால் அவர்களின் தேவைக்கேற்ற நீர் கிடைப்பது அரிதாகி விடும் என்கிறார்.

தொண்டு நிறுவனங்கள், விரிவாக்கப் பணியாளர்கள் நீர் நிர்வாகப் பயிற்சியில் பயன்பெற்று மக்களுக்கு குறிப்பாக கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீர் நிர்வாக மேம்பாட்டு வழி முறைகளைச் சொல்லிச் செயல்படுத்த வேண்டும் என்கிறார்.//

நாளைய சந்ததியினருக்கு சொத்துச் சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமை அல்ல, நீர் வளத்தை மேம்படுத்திக் கொடுப்பதும் நம் கடமை ஆகும்.
இன்று நமக்கு மட்டும் என்பது போல் தண்ணீரை அதிகமாய் செலவழித்தால் நாளை நம் குழந்தைகள் தான் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். அதை மனதில் கொண்டு தண்ணீரை சிக்கனமாய் செலவு செய்து அவர்கள், அவர்களின் குழந்தைகள் என்று எல்லோரும் வளமாய் வாழ வழி செய்வோம். ஏரி, குளங்களில் அமைத்த மனைகளையோ, வீடுகளையோ வாங்குவது இல்லை என்று இந்த ஆண்டு உறுதி மொழி எடுத்துக் கொள்வோம் . அப்படி உறுதி மொழியை நாம் நிறைவேற்றினாலே வரும் சந்ததியினர் நலமாக, வளமாக வாழ்வார்கள்.

நாம் மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம். நீர் வளம் பெற்று வளமாக இருப்போம்.
நீர் வளம் பெற வாழ்த்துவோம்.

வாழ்க வளமுடன்!

* * * * *

மண் மரம், மழை என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. வின்சென்ட் அவர்கள் உலக நீர் நாளுக்காக அவரவ்ர்கள் பதிவு எழுதி விழிப்புண்ர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். போன முறை எழுதி அனுப்பினோம்.

அவர் அழைப்புக்கு இணங்க, பதிவர்கள் எழுதிய கட்டுரைகள் கீழே இருக்கும் சுட்டியில் படிக்கலாம்.

http://maravalam.blogspot.in/2010/03/blog-post_10.html



நீர் சிக்கனத்தைப் பற்றிய காணொளியை திரு.வின்சென்ட்
இதில் போட்டு இருக்கிறார் அவசியம் பாருங்கள்.

நீர் மேலாண்மை பற்றிய பதிவு படியுங்கள்
தண்ணீர் தூய்மைக்காக 17,000 கி,மீ நடந்த 63 வயது பெண்மணியைப் பற்றி எழுதி இருக்கிறார் படியுங்கள்.


ஜீவனிழந்து கிடக்கும் யமுனை நதி என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார் படித்துப் பாருங்கள்.
எல்லாமே சுற்றுசூழல், நீர் மேலாண்மை தான்.

கோமதி அரசு: ’திருமதி பக்கங்கள்’ என்ற வலைத்தளம்

தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’


உலக தண்ணீர் தினம் என்ற தலைப்பில் மணிராஜ் என்ற வலைதளம் வைத்து இருக்கும் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் அருமையான படங்களுடன் நிறைய செய்திகள் சொல்லும் கட்டுரை படியுங்கள்.



மழை நீரைச் சேமிப்பது காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் பெட்டகம் என்ற வலைத் தளம் வைத்து இருக்கும் திரு முகமத் அலி அவர்கள் எழுதிய கட்டுரை படியுங்கள்.

39 கருத்துகள்:

  1. பயனுள்ள கருத்து..
    பகிர்விற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள செய்திகளுடன் கூடிய அழகான கட்டுரை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நீரின்றி அமையாது உலகு. நீரின் முக்கியத்துவம் அதனைப் பகிர்தல் போன்ற பல நல்ல விசயங்கள் சொல்லியிருக்கிறீர்கள். தேசிய அளவில் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க அனைத்துக்கட்சிகளும் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. / வெயில் காலத்திற்கு மட்டும் தென்னம்கீற்றுப் பந்தல் போட்டுக் கொள்ளலாம்./

    கவனிக்க வேண்டிய ஒன்று.

    அனைத்துத் தகவல்களும் ஆலோசனைகளும் மிக நன்று. நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  5. தண்ணீர் பற்றி நன்கு சொன்னீர் வாழ்த்துப் பன்னீர் தெளிக்கிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. வெகு அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.அவசியமான பகிர்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க மாதவன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க,வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க கோபி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ராமல்க்ஷ்மி, நாங்கள் முன்பு இருந்த வீட்டில் கோடை காலம் வந்து விட்டால் பந்தல் போடும் ஆள் வந்து விடுவார். சித்திரை, வைகாசி, ஆடி மாதம் வரை தென்னகீற்று பந்தல் இருக்கும் பின் வந்து பிரித்து போவார்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க வேதா.இலங்கதிலகம், உங்கள் பன்னீர் தெளிப்பில் நனைந்தேன், மகிழ்ந்தேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ஸாதிகா, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க விச்சு,

    // தேசிய அளவில் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க அனைத்துக்கட்சிகளும் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்.//

    நீங்கள் சொன்னது போல் அனைத்து கட்சிகளும் முயற்சி எடுத்தால் நன்மைதான்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க வெங்கட், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு , இணைப்புகள்.

    இதை பற்றி கவலைப்படுவர்கள் மட்டுமே , எழுதுவதோ, பேசுவதோ, சரி.

    நீரை வீணாக்காமல் , எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை , மக்களிடமும் , குழந்தைகளிடமும், எடுத்து சொல்ல வேண்டியது மிக அவசியம்.

    பட்டு புடவை , வைர நகை வாங்குவதைப் பற்றி, சொல்லிக்கொடுக்கும் தாய்மார்கள், நீரை வீணாக்குவதை பற்றியும் எடுத்து சொல்வது முக்கியம் இல்லையா?

    நமது தொகுதியில் உள்ள தலைவர்கள் , நீர் சேமிப்பு பற்றி என்ன செய்கிறார்கள் என்று கண்டறிவதும் நல்லது.

    பதிலளிநீக்கு
  16. இன்றைய உலகிற்கு இது அவசியமான பகிர்வும்மா. எல்லோருமே சிக்கன நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. ரொம்பவும் அவசியமான அருமையான பகிர்வு..

    பதிலளிநீக்கு
  18. ”நீர் நிர்வாகம் என்பது நீர் குறைந்த அளவில் இருக்கும் போது நிர்வகிப்பது மட்டுமல்லாமல் அதிக அளவில் இருக்கும் போது சிக்கனமாக, சரிவர உபயோகிக்கும் முறையாகும்.”

    சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  19. "நாளைய சந்ததியினருக்கு சொத்துச் சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமை அல்ல, நீர் வளத்தை மேம்படுத்திக் கொடுப்பதும் நம் கடமை ஆகும்".

    மிகவும் பயனுள்ள கருத்து. எனது பதிவைகளை எடுத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க vetrimagal, உங்கள் கருத்துக்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீர் சிக்கனத்தை எடுத்து சொல்லவேண்டும் தான்.

    என் அம்மா எப்போதும் சொல்லும் வார்த்தை தண்ணீர் அதிகம் செலவழித்தால் பின்னால் தண்ணீருக்கு கஷ்டபடுவாய் என்பது தான். என் மாமியார் சொல்வது தண்ணீர் அதிகம் செலவழித்தால் பணம் அது மாதிரி செலவாகும் என்று.

    தண்ணீர் சிக்கனத்தை கடைபிடித்தால் எல்லோருக்கும் நன்மைதானே!

    நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஆதி, நீங்கள் சொல்வது போல் உலகம் முழுமைக்கும் தண்ணீர் சிக்கனம் அவசியம்.
    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க அமைதிச்சாரல், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க வின்சென்ட்,
    உங்கள் பதிவுகள் எல்லோரும் படிக்க வேண்டிய மிக அவசியமான பதிவுகள் அல்லவா! எல்லோரும் படித்து இருப்பார்கள் இருந்தாலும் இந்த வருடம் மறுபடியும் ஒரு நினைவூட்டல்.
    நன்றி உங்கள் வ்ருகைக்கும், கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  25. எல்லோரும் படித்து பயன் பெற வேண்டிய பதிவு.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. பொதுக் கவலையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ஊர் கூட தேர் இழுக்க வேண்டும்.
    உண்மை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க ஜீவி சார், ஊர் கூடிதான் தேர் இழுக்க வேண்டும் உண்மை.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. நீர் என்ற சொத்து நம் சந்ததியருக்கு இனிவரும் ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் வருகிறது..பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  29. அவசியமான கட்டுரை.
    பயனுள்ள பல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

    சிந்தித்துச் செயல் படவேண்டியது நமது கைகளில்தான்.

    பதிலளிநீக்கு
  30. நீரை வீணாக்காமல் , எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை , மக்களிடமும் , குழந்தைகளிடமும், எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமையுமாகும். நீரைப்பற்றிய பல தகவல்களைத் திரட்டித் தந்துவிட்டீர்கள். சமூக நலனில் அக்கரையுடன் எழுதப்பட்டுள்ள பதிவு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  31. வாங்க பாசமலர், நம் சந்த்தியருக்கு தண்ணீர் பற்றாக் குறை ஏற்படக் கூடாது என்பதற்கு தான் நாம் எல்லோரும் சேர்ந்து சிக்கனத்தை கடை பிடித்து , நீர் வளத்தை மேம்படுத்தி எதிர்கால சந்த்தியருக்கு கொடுப்போம்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க மதேவி, நீங்கள் சொல்வது போல் சிந்தித்து செயல்பட வெண்டிய நேரம் இது.

    நான் ஊருக்கு போய் விட்டதால் கால தாமதம் ஆகி விட்டது பதில் போட மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  33. வாங்க வியாபதி, நீர் சேமிப்பை பற்றி நீங்கள் சொல்வது போல் மக்களிடமும் , குழந்தைகளிடமும், எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமையுமாகும்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. நீர் அமையாது உலகு எவ்வளவு அருமையாக பகிர்ந்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  35. வாங்க ஆசியா, உங்கள், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.
    வலைச்சரத்தில் அறிமுக படுத்தபட்ட பதிவை படித்து பின் அவர்களுக்கு வாழ்த்தும் சொல்வது மிகவும் பாராட்டப்படவேண்டிய வேண்டிய விஷயம்
    நன்றி யாதவன் நம்பி.

    பதிலளிநீக்கு