செவ்வாய், 25 நவம்பர், 2025

உனை நினைத்தே கழியும் என் ஆவி

 


உந்தன்  மலர்ந்த முகம் என்றும்  என் மனதில்


அன்று காலை அவர்கள் கையால் தேதி தாள் கிழிக்கப்படவில்லை, அந்தநாளை கிழித்து நான்  பத்திரப்படுத்தி வைக்கத்தான் போலும்

இன்று என் கணவர் இறைவனிடம் சென்ற நாள். (தேதிப்படி)

அன்று  வளர்பிறை ஏகாதசி திதி. கைசிக ஏகாதசி, மிகவும் சிறப்பான ஏகாதசி. அடுத்த மாதம்  1 ஆம் தேதி  நினைவு நாள் வருகிறது.

சைவ குடும்பத்தை சார்ந்தவர்  அவர் மறைந்த நாள் ஏகாதசி. 

ஒரு வருடம் ஆனி மாதம்  பன்னிருதிருமுறை பாராயணம் செய்ய ஆரம்பித்தால் அடுத்த ஆனி முடிப்பார்கள். 

 புரட்டாசி மாதம் முழுவதும் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்கள் பாராயணம் செய்து  நிறைவு செய்வார்கள். சஷ்டி ஆறு நாளும் விரதம் இருந்து 36 தடவை சஷ்டி கவசம் தினம் படிப்பார்கள்.

அவர்கள் இஷ்ட தெய்வம் சுவாமிமலை முருகனும், பழனி மலை முருகனும். 6 மாதத்திற்கு ஒரு முறை சுவாமிமலை போவோம், ஒரு வருடத்திற்கு ஒரு முறை  பழனி மலை போவோம்.

 தமிழ் வருடப்பிறப்புக்கு திருவாடுதுறை, ஆங்கில வருடப்பிறப்புக்கு கங்கை கொண்ட சோழபுரம்.

இவை பல காலம் மதுரை வரும் வரை கடைபிடித்தார்கள்.

அன்று சுவாமிமலை ஸ்ரீ முருகபெருமான் பஞ்ச மூர்த்திகளுடன்  வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தவர் அழைத்து சென்று விட்டார் தன் பக்தரை என்று  நினைத்துக் கொள்வேன்.



பத்ரிநாத் கோயிலையும், கைலையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்தோம். (சார் தம் யாத்திரை)



நிழல் போல தோடர்ந்தேன் 

நார்த்தான் மலை  ஏற்றம் போது எடுத்த படம்.


  நான் எங்கள் குடும்ப வாட்ஸப்  குழுவில் பதிவின்  தலைப்பில் போட்ட வரிகளை போட்டு இந்த படத்தை பகிர்ந்து இருந்தேன் இன்று காலை.  இந்த வரி மாணிக்கவாசகர்  சிவபெருமானை நினைத்து கழியும் தன் ஆவி என்று சொல்லி இருப்பார் திருவாசகப்பாடலில்.   அதைப்பார்த்து விட்டு மகள்
  இந்த   பாடல் வரிகளை  அனுப்பி இருந்தாள்.
 

//இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை~//


இந்த சினிமா பாடல்  பகிர்வை மகள் எனக்கு அனுப்பி வைத்தாள்  இந்த பாடல் உன் நினைப்புக்கு பொருத்தம் என்று.

 நான் சொல்வேன் அடிக்கடி அவளிடம் உன் அப்பா இருப்பது போல நினைத்து தினம் உரையாடி கொண்டு இருப்பதால் தனிமையில் இருப்பது போல உணர்வு இல்லை கடவுள் நம் அருகில் இருப்பது போல நினைத்து கொள்வது போல உன் அப்பா என்னுடம் இருப்பதாய் நினைத்து கொள்கிறேன் என்று சொல்வேன். 



மகள் தன் அப்பாவின் படம் போட்டு அவள் எழுதிய   சின்ன கவிதை பகிர்ந்து   இருந்தாள் 


//நீங்கள் எப்போதும் அவருடன் செல்வீர்களே. நீங்கள் எப்படி பள்ளிப்படை பார்க்காமல் விட்டீர்கள்?

நேரம் கிடைத்தால் அவர் கையேட்டை வைத்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி//


நெல்லை கேட்டு இருந்தார் அவர்  பதிவில்.  அதனால் கணவரின் நினைவு நாளில் அவர்களின்  கையேட்டை பதிவு செய்து விட்டேன்.

நெல்லைத்தமிழன் கேட்டுக் கொண்டதால் நானும்  வெகு நாள்  பதிய நினைத்து இருந்தேன் இன்று நினைவுகள் பகிர்வில் பகிர்ந்து விட்டேன். இன்னும் இருக்கிறது பின்னர் வரும். 

பழையாறை பற்றிய குறிப்பும் இருந்தது அதுவும் பார்த்து போடுகிறேன்.

  நெல்லைத்தமிழனுக்கு நன்றிகள் பல.

  என் கணவர் நான் அம்மா வீட்டுக்கு பேறுகாலத்திற்கு போய் இருக்கும் போது நிறைய கோயில்கள் போய் இருக்கிறார்கள். அப்புறம் குழந்தைகளை வைத்து கொண்டு பஸ்ஸில் பயணம் செய்ய முடியாத காலத்தில் அவர்கள் மட்டும் போய் வந்து இருக்கிறார்கள்.    அப்போது எல்லாம் போக்குவரத்து அவ்வளவு வசதி இருக்காது . சில கோயில்கள் சைக்கிளில் போவார்கள், நண்பர்களுடன் போவார்கள். நிறைய தூரம் பஸ்சைவிட்டு இறங்கி நடக்க வேண்டும் உன்னால் முடியாது பிள்ளைகளை வைத்து கொண்டு என்று அவர்கள் மட்டுமே போய் இருக்கிறார்கள்.

பின்னால்  காரில், ரயிலில், விமானத்தில் என்று  வசதியாக  பல கோயில்களுக்கு அவர்கள் என்னை   அழைத்து போகும் வாய்ப்பை இறைவன் அளித்தார். இறைவனுக்கு நன்றி.


நான் அவர்களுடன் கோயிலுக்கு போன தை டி.ஜி

இந்த பட்டியலில் நான் பார்த்தது , பிள்ளைகள் பார்த்தது, அவர்கள் டி.கே என்று இருக்கும்.


ஆங்கிலத்திலும் எழுதி இருப்பார்கள்.






சிவத்தல மஞ்சரி என் மாமனார் புத்தகம் இவர்களுக்கு கொடுத்து இருந்தார்கள்.

பாடல்  இடம்பெற்ற 274 கோயில் வரலாறு, போகும் வழி தடங்கள் ஆகியவை சொல்லும் புத்தகம்.

இப்போது  கூகுளில் தேடினால் கோயில் இருப்பிடம் செல்லும் தூரம் எந்த மாநிலம் என்று எல்லா விவரங்களும், தல வரலாறும் வந்து விடும் அப்போது எல்லாம் இந்த புத்தகத்தை வைத்து கொண்டு தான் போவார்கள்.





போன கோயில் பற்றி அழகாய் எழுதி வைத்து இருப்பார்கள்


அவர்களெ கோயிலின் தோற்றத்தை, மற்றும்  கோயிலில் தெய்வங்கள்  பற்றி குறிப்பு எழுதி வைத்து இருப்பர்கள்.





பாண்டிய நாட்டில் உள்ள  கோயில்கள்



இப்படி அன்பர்களுடன் இணைந்தும், தனியாகவும் , தன் சகோதர்கள், அம்மா, அப்பாவுடன் இணைந்தும் போவார்கள். 




















இன்னும் வரும் . கணினி டைப் செய்ய் ஒத்துழைக்கும் போது இன்று போட்டு விடுவோம் என்று போட்டு கொண்டு இருக்கிறேன். மகன்  நண்பரின்  அப்பாவிடம்   மடி கணினி புதிதாக வாங்கி கொடுத்து விட்டு இருக்கிறான் அது இன்னும் எனக்கு வந்து சேரவில்லை.  இறையருள் தகுந்த நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கும். 

அமெரிக்காவில் நன்றி சொல்லும் நாள்( உறவுகளுடன் கொண்டாடும் நாள்) விடுமுறை இப்போது .  அனைவருக்கும் நானும் நன்றி சொல்லி கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து எழுத வைக்கும் அனைத்து நட்புகளுக்கும்,   மற்றும் என்  அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி. 

இந்த பதிவை பதிய விட்ட என் மடி கணினிக்கும் நன்றி. 
அதற்கும் எனக்கு ஒத்துழைக்க மனம் இருக்கு.


வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!
- திருநாவுக்கரசர் தேவாரம்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக