காவேரி அம்மன்
நேற்று கார்த்திகை முதல் சோமவார சங்காபிஷேகம்
அம்மா வீட்டுக்கு அருகில் இருக்கும் கோகர்ணேஸ்வர்ர் கோயிலில் நடந்த சங்காபிஷேகம் நிகழ்வை மதினி அனுப்பி வைத்தார்கள்.
வீட்டிலிருந்தே தரிசனம் செய்து விட்டேன்.
மதினி வீட்டு காவேரி அம்மன் படமும் இருக்கிறது . தங்கை மதினி வீட்டு பூஜையில் கலந்து கொண்டு காவேரி அம்மன் படம் அனுப்பி வைத்தாள்.
ஜப்பசி மாதம் முழுவதும் காவேரிஅம்மன் கொலு இருப்பாள் மதினி இல்லத்தில் , நிறைவு நாளில் எடுத்த படம் .
இந்த பதிவில் மதினி அனுப்பிய சங்காபிஷேக படங்கள் இடம்பெறுகிறது அவர்கள் வீட்டு காவேரி அம்மன் படங்களும் இடம் பெறுகிறது.
மதினி ( என் அண்ணன் மனைவி ) ஐப்பசி முப்பது நாளும் காவேரி அம்மன் வைத்து வழிபடுவார்கள், கடைசி நாள் அன்று உறவு, நட்புகளை அழைத்து உண்வு அளிப்பார்கள். அம்மன் கிளம்புவதால் கட்டுசாதங்கள் இருக்கும். அவை பிரசாதமாக வைத்து இருக்கிறார்கள்.
தினம் அபிஷேகம் செய்து வித விதமாக ஆடை அணிவிப்பார்கள்.
மேலே உள்ளது ஒரு நாள் எடுத்தது, அண்ணன் மகன் தினம் வாட்சப்பில் படம் அனுப்பி வைப்பான்.
மதினியிடம் கோயிலுக்கு போக முடியவில்லை முன்பு சங்காபிஷேகம் பார்க்காமல் இருக்க மாட்டேன், இப்போது எல்லா விழாக்களையும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் கோயிலுக்கு போனால் படம் எடுத்து அனுப்புங்கள் என்றேன். அனுப்பி வைத்தார்கள் நேரில் தரிசனம் செய்தது போல இருந்தது.
அதன் பின் மயிலாடுதுறை வந்தபின் மயூரநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் , வாரம் ஒரு கோயில் பக்கத்தில் இருக்கும் திருவிடை மருதூர் , திருக்கடையூர், என்று அழைத்து சென்று காட்டினார்கள். அப்புறம் மயிlலாடுதுறை புனுகீஸ்வரார் கோயிலில் வாரா வாரம் சங்காபிஷேகம் பார்த்து விடுவோம்.
அதன் பின் மதுரை வந்த பின் பல கோயிலில் பார்த்தோம் இப்போது வீட்டில் தொலைகாட்சியில் , யூடியூப் மூலம் பார்த்து கொண்டு இருக்கிறேன். அண்ணி அனுப்பி வைத்த படங்கள் காணொளி மூலம் இந்த முறை நன்றாக தரிசனம் செய்து விட்டேன். கால் வலி குறைந்து விட்டால் ஏதாவது ஒரு வாரம் பக்கத்தில் இருக்கும் கோயில் போய் பார்க்க வேண்டும் . அவன் அருள் இருந்தால் நடக்கும்.
என் கணவரின் அண்ணா வீட்டில் அவர்கள் நாள் தோறும் சிவபூஜை செய்யும் சிவனுக்கு சங்காபிஷேகம்
நேற்று சோமாவார விரதம் இருந்து மாவிளக்கு பார்த்தது. மாவிளக்கு எரியும் போது போட்டோ எடுக்க மறந்து விட்டேன் பூஜை முடிந்ததும் எடுத்த படம்.
விரதங்களும், உடல்நலமும் :- பதிவில் என் அம்மாவும் விரதங்களும் என்று எழுதி இருப்பேன். விரதங்களும் அதன் பலன்களும் எழுதி இருப்பேன் படிக்கவில்லை என்றால் படிக்கலாம். கார்த்திகை மாதம் சோமாவார விரதம் பற்றி எழுதி இருப்பேன். என் அம்மாவும் விரதங்களும்: எப்படி விரதம் இருக்க வைத்தார்கள் எப்படி கடைபிடித்தோம் என்பதையும் விரதங்களால் ஏற்படு நன்மைகள் விரத பலன்கள் எல்லாம் எழுதி இருப்பேன் படிக்கவில்லை என்றால் நேரம் இருந்தால் படிக்கலாம்.
//கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்)
வீட்டில் என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைபிடிக்க வைத்தார்கள். காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு.
பள்ளி சென்று வந்தபின் குளித்து பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் பஜனை.அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு தருவார்கள் என்று இருக்கும்.பூஜை முடிந்தபின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின் தான் எங்களுக்கு உணவு.
அப்பாதான் ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’ என்பார்கள். //
இந்த ஆண்டு தமிழ் சங்கத்தில் நடந்த தீபாவளி பண்டிகை விழா சரவெடி என்ற விழாவில் மகனின் தமிழ்ச்சங்க சேவைக்கு பரிசு அளித்து கெளவரவப் படுத்தி இருக்கிறார்கள்
சாக்லேட் கொடுத்து இருக்கிறார்கள் "இனிப்பு எடு கொண்டாடு" என்று.
சரவெடி விழாவில் பணி செய்த தன்னார்வலர்கள், தமிழ் சங்கத்தில் ஆசிரியர்கள்
தமிழ் பள்ளியில் ( உதவி ஆசிரியர்) ஆசிரியர்களுக்கு உதவியளாராக இருக்கிறான் கவின். மற்ற குழந்தைகளும் தாம்.
நவம்பர் மாதம் என் இரு பிள்ளைகளுக்கும் பிறந்த நாள் வரும். மகள் கார்த்திகை சூரசம்ஹாரம் அன்று பிறந்தாள். (தேதிப்படி நவம்பர் 19 இந்திராகாந்தி பிறந்த தேதியில் பிறந்தாள்.)
கண்ணே கண் உறங்கு
செல்ல பெண்ணே நீ கண் உறங்கு
பூவே கண் உறங்கு
பூவின் தேனே நீ கண் உறங்கு
பொண்ணே கண் உறங்கு
தங்க பொண்ணே நீ கண் உறங்கு
மானே கண் உறங்கு
மானின் விழியே நீ கண் உறங்கு
விழியே கண் உறங்கு
கயல்விழியே நீ கண் உறங்கு
செல்ல பெண்ணே நீ கண் உறங்கு
பூவே கண் உறங்கு
பூவின் தேனே நீ கண் உறங்கு
பொண்ணே கண் உறங்கு
தங்க பொண்ணே நீ கண் உறங்கு
மானே கண் உறங்கு
மானின் விழியே நீ கண் உறங்கு
விழியே கண் உறங்கு
கயல்விழியே நீ கண் உறங்கு
என்று மகளுக்கு நானே தாலாட்டு பாடல் எழுதி எல்லாம் வைத்துக் கொள்ளாமல் பாடினேன், வேறு சில சினிமா பாட்டுக்களும், கடவுள் பாட்டுக்களும் பாடியது இருக்கும். மகள் பிறந்தாள் சமயம் பதிவு போட்டேன்.
ஸ்ரீராம் //என் பாஸ் கூட நவம்பரில் பிறந்தவர்தான்! என் அம்மா பாடிய சில தாலாட்டுப் பாடல்கள் மங்கலாக நினைவில் இருக்கின்றன. எனக்குப் பாடியது என்னவென்று தெரியாது. என் தங்கைக்கு பாடும்போது கேட்டது! //
என்று பின்னூட்டம் போட்டு இருப்பார். எவ்வளவு பேர்கள் இந்த பதிவை படித்து பின்னூட்டம் போட்டு இருக்கிறார்கள்.
அந்தக்காலம் இனிமையானது.
பிறகு பேரனுக்கு(கவினுக்கு) தாலட்டு பாடியது எல்லாம் இருக்கும் படித்து இருக்க மாட்டீர்கள் படித்துப்பாருங்கள்.
இதே பாடல்களை அவர்கள் குழந்தைகளுக்கு பாடினேன்.
செல்ல தங்கமே செல்ல குட்டியே
செல்ல தங்கமே செல்லம் செல்லம்
வைர தங்கமே வைர குட்டியே
வைர தங்கமே வைரம் வைரம்
பொண்ணு குட்டியே பொண்ணு தங்கமே
பொண்ணு தங்கமே தங்கம் தங்கம்
செல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்
விழுந்து விழுந்து சிரிப்பான்.
செல்ல தங்கமே செல்லம் செல்லம்
வைர தங்கமே வைர குட்டியே
வைர தங்கமே வைரம் வைரம்
பொண்ணு குட்டியே பொண்ணு தங்கமே
பொண்ணு தங்கமே தங்கம் தங்கம்
செல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்
விழுந்து விழுந்து சிரிப்பான்.
மகன் தஞ்சை ராஜராஜசோழன் பிறந்த அன்று பிறந்தான்.
மகனுக்கு பிறந்த நாள் முடிந்து விட்டது, மகளுக்கு நாளை உங்கள் வாழ்த்துகளும் தேவை வாழ்த்துங்கள் நட்புகளே!
சதயத்திருநாள் என்ற பதிவில் ராஜராஜனைப்போல கோயில் கட்ட ஆசைப்பட்டு சாக்பீஸ் கோயில் கட்டினான் என்று பதிவு போட்டு இருப்பேன்.
இது மகன் பிறந்தநாள் சமயம் போட்ட பதிவு.
மேலும் படங்கள் அந்த பதிவு சுட்டியில் பார்க்கலாம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------




.jpg)
.png)
சங்காபிஷேக படங்கள் சிறப்பு. தகவல்களும் மனதைக் கவரும் விதமாக....
பதிலளிநீக்குசக பதிவரும் உங்கள் மகளுமான முத்துலெட்சுமிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....
வணக்கம் வெங்கட் நாகராஜ்,வாழ்க வளமுடன்
நீக்கு//சங்காபிஷேக படங்கள் சிறப்பு. தகவல்களும் மனதைக் கவரும் விதமாக....//
என் அண்ணியால் இந்த பதிவு போட முடிந்தது . பிள்ளைகளின் பிறந்த நாளும் சேர்ந்து கொண்டது.
//சக பதிவரும் உங்கள் மகளுமான முத்துலெட்சுமிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....//
அவள் கவிதைகளும், இற்றைகளும், பதிவுகளும் எழுதிய காலங்கள் மீண்டும் வர வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். நீங்கள் சகபதிவர் என்றது மகிழ்ச்சி வெங்கட் .பதிவர் சந்திப்பு டெல்லியில் நடந்தது என்றும் மனதில்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
சோமவார சங்காபிஷேகம் புத வாரத்தில் தரிசனம்! நன்றி.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//சோமவார சங்காபிஷேகம் புத வாரத்தில் தரிசனம்! நன்றி.//
தரிசனம் இப்போது எப்போது வேண்டுமென்றாலும் செய்யமுடிவது நமக்கு கிடைத்த நன்மைதான்.
ஐப்பசி முப்பது நாளும் காவேரி அம்மனை வீட்டியில் வைத்து பூஜை செய்து வழிபடுவது பாராட்டுக்குரியது. நவராத்திரி ஒன்பது நாட்கள் கடப்பதற்கே மூச்சு வாங்கும்போது முப்பது நாள் பூஜை சூப்பர். முப்பதாவது நாள் கட்டுசாதத்துடன் உணவு அளிப்பது.. ஆஹா... நீங்களும் முன்பு பூஜை செய்து வந்தீர்களோ...
பதிலளிநீக்கு//ஐப்பசி முப்பது நாளும் காவேரி அம்மனை வீட்டியில் வைத்து பூஜை செய்து வழிபடுவது பாராட்டுக்குரியது. //
நீக்குமதினி நிறைவு நாள் அன்று எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்த ம்மனுக்கு நன்றி சொல்லி பெருமூச்சு விடுவார்கள்.
//நவராத்திரி ஒன்பது நாட்கள் கடப்பதற்கே மூச்சு வாங்கும்போது முப்பது நாள் பூஜை சூப்பர். முப்பதாவது நாள் கட்டுசாதத்துடன் உணவு அளிப்பது.. ஆஹா..//
நவராத்திரி கொலுவுக்கு வருவது போல தினம் ஆட்கள் வரமாட்டார்கள் யாராவது உறவினர் வருவார்கள் அனன்று செய்யும் பிரசாதம் கொடுத்து விடுவார்கள். நிறைவு நாள் அன்று மட்டுமே எல்லோரையும் அழைப்பார்கள்.
//நீங்களும் முன்பு பூஜை செய்து வந்தீர்களோ... //
நான் ஆடி மாதம் மட்டும் காவேரி அம்மனை பூஜை செய்வேன். ஆற்றுக்கு போவேன் முன்பு
நவராத்திரி ஒன்பது நாட்கள் கடப்பதற்கே மூச்சு வாங்கும்போது முப்பது நாள் பூஜை சூப்பர். முப்பதாவது நாள் கட்டுசாதத்துடன் உணவு அளிப்பது.. ஆஹா... நீங்களும் முன்பு பூஜை செய்து வந்தீர்களோ...
முகநூலிலும் பார்த்தேன். விமர்சையாக, சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார்கள். அண்ணா வீட்டில் தினம்தோறும் சங்காபிஷேகமும் சிறப்பு.
பதிலளிநீக்கு//முகநூலிலும் பார்த்தேன். விமர்சையாக, சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார்கள். அண்ணா வீட்டில் தினம்தோறும் சங்காபிஷேகமும் சிறப்பு.//
நீக்குதினம் சிவபூஜை செய்வார்கள், சங்காபிஷேகம் சோமாவாரத்தில் மட்டும்.
விரதங்களும் பூஜைகளும், பஜனையும் என்று நல்ல முறைகளை கடைப்பிடித்து இருக்கிறீர்கள். வணங்குகிறேன்.
பதிலளிநீக்கு//விரதங்களும் பூஜைகளும், பஜனையும் என்று நல்ல முறைகளை கடைப்பிடித்து இருக்கிறீர்கள். வணங்குகிறேன். //
நீக்குஒவ்வொரு ஞாயிறும் வீட்டில் பஜனை உண்டு. சின்மயா மிஷன் பாலவிஹாரில் சேர்ந்து கற்ருக் கொண்ட பாடல்கள், பகவத்கீதை 14 வது அத்தியாயம், பஜ கோவிந்தம் பாடல் நைத்தும், சிறு சிறு பஜனை பாடல் உண்டு.
சோமாவராம் என்றால் சிவன் , முருகன் பாடல்கள் பாடப்படும். அப்பா சின்மயா மிஷனில் கோவையில் வைஸ் பிரசிடெண்ட்டாக இருந்தார்கள் அப்பா நன்றாக பாடுவார்கள். அம்மா பாட்டு கற்றுக் கொண்டவர்கள் நன்றாக பாடுவார்கள் ஆர்மோனியம் வாசிப்பார்கள்.
அப்பா, அம்மா அளவு எங்களுக்கு பாட வராது. இப்போது என் தோழியால் தினம் மாலையில் கூட்டு பிரார்த்தனையில் தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, மற்றும் பல பாடல்கள் தேதி படி ஒரு மணி நேரம் பாடி வருகிறேன்.
மகனின் தமிழ்சேவைக்கு பாராட்டு - வாழ்த்துகளும், பாராட்டுகளும். மகனும் பேரனுமாய் கலக்குகிறார்கள்.
பதிலளிநீக்கு//மகனின் தமிழ்சேவைக்கு பாராட்டு - வாழ்த்துகளும், பாராட்டுகளும். மகனும் பேரனுமாய் கலக்குகிறார்கள்.//
நீக்குநன்றி உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும்
உங்கள் மகன், மகளுக்கு - முக்கியமாக இன்று பிறந்தநாள் காணும் மகளுக்கு - பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//உங்கள் மகன், மகளுக்கு - முக்கியமாக இன்று பிறந்தநாள் காணும் மகளுக்கு - பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.//
நீக்குநன்றி ஸ்ரீராம்
என் பின்னூட்டம் நினைவூட்டியிருப்பது சந்தோஷம் தருகிறது. பேரனுக்கான உங்கள் தாலாட்டைப் படிக்கும்போது "பிள்ளைச்செல்வமே.. பேசும் தெய்வமே.." பாடல் மனதில் ஓடுகிறது!
பதிலளிநீக்கு//என் பின்னூட்டம் நினைவூட்டியிருப்பது சந்தோஷம் தருகிறது. பேரனுக்கான உங்கள் தாலாட்டைப் படிக்கும்போது "பிள்ளைச்செல்வமே.. பேசும் தெய்வமே.." பாடல் மனதில் ஓடுகிறது!//
நீக்குநீங்கள் குறிப்பிட்ட பாடல் எனக்கும் பிடிக்கும், பேசும் தெய்வம் படத்தில் இடம்பெற்ற பாடல்.
சாக்பீஸ் கோவில் நான் மதுரையில் உங்கள் இல்லம் வந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன்!
பதிலளிநீக்கு//சாக்பீஸ் கோவில் நான் மதுரையில் உங்கள் இல்லம் வந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன்!//
நீக்குஆமாம், என் கணவரும் எல்லோரும் பேசி மகிழ்ந்தது நினைவுகளில் வந்து போகிறது.
கடந்த ஞாயிறன்று வீட்டில் ஹோமம் செய்தோம். அதில் லிங்கத்துக்கும் தேவிக்கும் அபிஷேகமும் இடம்பெற்றது.
பதிலளிநீக்கு//கடந்த ஞாயிறன்று வீட்டில் ஹோமம் செய்தோம். அதில் லிங்கத்துக்கும் தேவிக்கும் அபிஷேகமும் இடம்பெற்றது.//
நீக்குஅந்த ஹோமத்திற்கு பெயர் என்ன?
ஹோமம் செய்து வழிபட்டது மகிழ்ச்சி. நல்லதே நடக்கட்டும்.
வாழ்த்துகள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்களும், காணொளிகள் உள் கண்டு காவேரி அம்மனை தரிசித்து கொண்டேன்.
பதிலளிநீக்குதங்களது மகன், மகளுக்கு எமது வாழ்த்துகளும்கூடி....
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களும், காணொளிகள் உள் கண்டு காவேரி அம்மனை தரிசித்து கொண்டேன்.
தங்களது மகன், மகளுக்கு எமது வாழ்த்துகளும்கூடி....//
நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.
பெயரன் கவிஞனுக்கு (உதவி ஆசிரியர்) பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு//பெயரன் கவிஞனுக்கு (உதவி ஆசிரியர்) பாராட்டுக்கள்.//
பதிலளிநீக்குபேரன் கவினை கவிஞன் ஆக்கி விட்டீர்கள் , நல்லது கவிதைகள் படைக்கட்டும் கவின்.
உதவி ஆசிரியரை பாராட்டியதற்கு நன்றி
உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
"கவி(ஞ)னுக்கு"
நீக்குஇப்படி அடைப்புக்குறியிட மறந்து விட்டேன்.
//"கவி(ஞ)னுக்கு"
நீக்குஇப்படி அடைப்புக்குறியிட மறந்து விட்டேன்//
அதுவும் நன்றாக இருந்தது, இதுவும் நன்றாக இருக்கிறது.
மதினி ( என் அண்ணன் மனைவி ) ஐப்பசி முப்பது நாளும் காவேரி அம்மன் வைத்து வழிபடுவார்கள், கடைசி நாள் அன்று உறவு, நட்புகளை அழைத்து உண்வு அளிப்பார்கள். அம்மன் கிளம்புவதால் கட்டுசாதங்கள் இருக்கும். அவை பிரசாதமாக வைத்து இருக்கிறார்கள்.//
பதிலளிநீக்குஓ ஐப்பசி மாசம் காவிரி அம்மனுக்குப் பூஜை இல்லையா. அம்மன் அழகு. மிக நேர்த்தியாகப் பூஜை எல்லாம் செய்து வழிபடுவது சிறப்பு, கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குஜப்பசி மாதம் துலா கட்டத்தில் தினம் குளித்து காவேரி ஆற்றில் மண் எடுத்து பிள்ளையார் மாதிரி பிடித்து காவேரி அம்மனை வழிபட்டு மீண்டும் அந்த மண்ணை கரைத்து விட்டு வருபவர்கள் உண்டு.
மதினி வீட்டில் 30 நாட்களும் காவேரி அம்மனை வழிபடுவார்கள். அவர்கள் சொல்கிறார்கள் 30 நாட்களும் நல்ல சுறு சுறுப்பாய் நன்றாக இருந்தது, இப்போது டல் அடிக்கிறது என்று.
மதினியும் நீங்கள் சொன்னதும் உங்களுக்கு அனுப்பி வைத்ததும் இதை எல்லாம் வாசிக்கும் போது மனசுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது கோமதிக்கா.
பதிலளிநீக்குலிங்க வடிவில் பூ அமைப்பு கவர்கிறது.
முகநூல் காட்சி வரவில்லை அக்கா.
மாமாவின் அண்ணா வீட்டில் தினமும் பூஜை என்று நீங்கள் முன்னரே சொல்லியிருப்பதும் நினைவுண்டு. சங்காபிஷேகம் பார்த்துக் கொண்டேன்.
அம்மாவும் விரதங்களும் வாசித்திருப்பது போன்று நினைவு பார்க்கிறேன் அக்கா.
கீதா
//மதினியும் நீங்கள் சொன்னதும் உங்களுக்கு அனுப்பி வைத்ததும் இதை எல்லாம் வாசிக்கும் போது மனசுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது கோமதிக்கா.//
நீக்குஅந்த கோயிலில் நடக்கும் விழாக்களை எல்லாம் படம் பிடித்து எனக்கு அனுப்பி விடுவார்கள் கீதா.
லிங்க வடிவில் பூ அமைப்பு கவர்கிறது.//
லிங்க வடிவில் சங்குகளை வைத்து இருக்கிறார்கள் கீதா அதை சுற்றி பூக்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒவ்வொன்றாக எடுத்து அபிஷேகம் செய்யும் காணொளிதான் இதில் வரவில்லை. முகநூலில் இடம் பெறு விட்டது கணினியில் ஏற மறுப்ப்பது ஏன் என்று தெரியவில்லை.
//மாமாவின் அண்ணா வீட்டில் தினமும் பூஜை என்று நீங்கள் முன்னரே சொல்லியிருப்பதும் நினைவுண்டு. சங்காபிஷேகம் பார்த்துக் கொண்டேன்//
மாமானார் போல அவர்கள் சிவதீட்சை பெற்றுக் கொண்டு சிவபூஜை நாளும் செய்வார்கள்..
//அம்மாவும் விரதங்களும் வாசித்திருப்பது போன்று நினைவு பார்க்கிறேன்
அக்கா.//
பார்த்து இருப்பீர்கள் கீதா.
இந்த ஆண்டு தமிழ் சங்கத்தில் நடந்த தீபாவளி பண்டிகை விழா சரவெடி என்ற விழாவில் மகனின் தமிழ்ச்சங்க சேவைக்கு பரிசு அளித்து கெளவரவப் படுத்தி இருக்கிறார்கள்//
பதிலளிநீக்குமகிழ்வான விஷயம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் உங்கள் மகனுக்குச் சொல்லிடுங்க.
//தமிழ் பள்ளியில் ( உதவி ஆசிரியர்) ஆசிரியர்களுக்கு உதவியளாராக இருக்கிறான் கவின். மற்ற குழந்தைகளும் தாம்.//
கவினுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள், அவருக்கும் சொல்லிடுங்க கோமதிக்கா.
நவம்பர் மாதம் என் இரு பிள்ளைகளுக்கும் பிறந்த நாள் வரும். மகள் கார்த்திகை சூரசம்ஹாரம் அன்று பிறந்தாள். (தேதிப்படி நவம்பர் 19 இந்திராகாந்தி பிறந்த தேதியில் பிறந்தாள்.)//
இன்று உங்கள் மகள் பிறந்த நாள் இல்லையா. மனமார்ந்த பிறந்த நாள்வாழ்த்துகள் அவங்களுக்கு.
எங்கள் வீட்டிலும் நவம்பர் பிறந்த நாள் உண்டு.
உங்க தாலாட்டுப் பாடல் சூப்பர் கோமதிக்கா. எழுதி வைக்காமலேயே பாடியது. நானும் என் மகனுக்குப் பாடியிருக்கிறேன் நானாகவே சில ராகங்களில் இட்டுக்கட்டி. கிட்டத்தட்ட இதே போலதான் பொன், வைரம் தங்கம், கிளியே குருவியே நிலாவெ சூரியனே மழையே அருவி என்றெல்லாம் என்னென்னவோ பாடியது முழு வார்த்தைகளும் என்ன ராகத்தில் பாடினேன் என்பதையும் மூளைக்குள் எந்த ந்யூரானில் சேமித்து இருக்கு என்று தேட வேண்டும்!!!
கடைசிப்படம் மிக அழகு , கோமதிக்கா
கீதா
//மகிழ்வான விஷயம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் உங்கள் மகனுக்குச் சொல்லிடுங்க.//
நீக்குகண்டிப்பாய் சொல்லி விடுகிறேன்.
//கவினுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள், அவருக்கும் சொல்லிடுங்க கோமதிக்கா.//
கண்டிப்பாய் சொல்கிறேன்.
//இன்று உங்கள் மகள் பிறந்த நாள் இல்லையா. மனமார்ந்த பிறந்த நாள்வாழ்த்துகள் அவங்களுக்கு.//
நன்றி கீதா
//எங்கள் வீட்டிலும் நவம்பர் பிறந்த நாள் உண்டு.//
ஓ அப்படியா மகிழ்ச்சி.
//உங்க தாலாட்டுப் பாடல் சூப்பர் கோமதிக்கா.//
நன்றி.
//எழுதி வைக்காமலேயே பாடியது. நானும் என் மகனுக்குப் பாடியிருக்கிறேன் நானாகவே சில ராகங்களில் இட்டுக்கட்டி. கிட்டத்தட்ட இதே போலதான் பொன், வைரம் தங்கம், கிளியே குருவியே நிலாவெ சூரியனே மழையே அருவி என்றெல்லாம் என்னென்னவோ பாடியது முழு வார்த்தைகளும் என்ன ராகத்தில் பாடினேன் என்பதையும் மூளைக்குள் எந்த ந்யூரானில் சேமித்து இருக்கு என்று தேட வேண்டும்!!!//
என் கையில் கொடுக்கும் எல்லா குழந்தைகளையும் தூங்க வைக்க இந்த பாடலை இப்போதும் பாடுவதால் மறப்பது இல்லை வரிகள்.
//கடைசிப்படம் மிக அழகு , கோமதிக்கா//
அந்த சுட்டியில் சென்று பார்த்தால் அனியத்தையும் ரசிக்கலாம்.
உங்கள் கருத்துக்கள் அத்தனைக்கும் நன்றிகள்.
சங்காபிஷேகப் படங்களை ரசித்தேன்
பதிலளிநீக்குநீங்கள் அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்றுவரும்படி உடல்நலம் இருக்கவேண்டும்
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//சங்காபிஷேகப் படங்களை ரசித்தேன்//
நன்றி.
//நீங்கள் அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்றுவரும்படி உடல்நலம் இருக்கவேண்டும்//
அருகில் உள்ள கோயில்களுக்கும் ஆட்டோவில் தான் போகிறேன், சிறிது தூரம் கூட நடக்கமுடியவில்லை வலி, வெகு நேரம் நிற்க முடிவதுஇல்லை.
கால்கள் கெஞ்சுகிறது உட்காரு என்று. பார்த்தவரை போதும் இனி இறைவனை வீட்டிலிருந்து கும்பிட்டால் போதும் என்று உடலும் கோயிலுக்கு போக வேண்டும் என்று மனமும் நினைக்கிறது.
உங்கள் பிரார்த்த்னைக்கு நன்றி.
மதுரையில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். கோயில்கள் உலா. திருப்பரங்குன்றம் செல்லவில்லை. பழமுதிர் சோலை சென்றுவந்தோம்
பதிலளிநீக்குநீங்கள் திருமணமான புதிதில் பல கோயில்களுக்கும் திருநாவுக்கரசு சார் அழைத்துப்போனார்கள் என எழுதியிருப்பது மகிழ்ச்சி. அந்த லிஸ்டில் நான் இன்னும் செல்லாத கோயில்கள் உள்ளன
//மதுரையில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். கோயில்கள் உலா. திருப்பரங்குன்றம் செல்லவில்லை. பழமுதிர் சோலை சென்றுவந்தோம்//
நீக்குவந்து இருக்கலாமே வீட்டுக்கு. எங்கு தங்கி இருந்தீர்கள்?
அழகரை சேவித்து விட்டு பழமுதிர் சோலை போய் இருப்பீர்கள்.
//நீங்கள் திருமணமான புதிதில் பல கோயில்களுக்கும் திருநாவுக்கரசு சார் அழைத்துப்போனார்கள் என எழுதியிருப்பது மகிழ்ச்சி. அந்த லிஸ்டில் நான் இன்னும் செல்லாத கோயில்கள் உள்ளன//
நான் அவர்களுடன் கோயில் கோயிலாக தான் போய் இருக்கிறேன். ஊட்டி, கொடைக்கானல் போன போதும் கோயில்கள் தான் போய் இருக்கிறோம்.
எல்லா கோயில்களூம் சென்று வாருங்கள் . உடலில் வலு இருக்கும் போது கோயில்கள் பார்த்து விட வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. கார்த்திகை சோமவார விரதமும், சங்காபிஷேக விரதங்கள் குறித்த பதிவு அருமை.
நேற்று பிறந்தநாளை கொண்டாடிய தங்கள் மகளுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்கள் மகனுக்கும் என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். இருவரும் தங்கள் இனிதான குடும்பங்களோடு சீரும் சிறப்புமாக வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நேற்று கொஞ்ச பிஸியாக வேலைகள் காரணமாக பதிவுலகிற்கு பகலில் வர இயலவில்லை. இரவு படுக்கும் போது கைப்பேசியில் அனைவரின் பதிவுகளை பார்த்தேன். உடனே பதில் அளிக்க முடியாமல் உறக்கம் வென்று விட்டது. இப்போது பார்க்கும் போது நேற்றுப்பார்த்த படங்களை தங்கள் பதிவில் காண இயலவில்லை. எனினும் படங்கள் நேற்றுப் பார்த்ததில் அழகாக இருந்தன. இறைவன் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.நீங்கள் மறுபடி பதிவை சீர் செய்ததும் பார்க்கிறேன்.
முந்தைய சோமவார விரதங்கள் பதிவையும் மற்ற பதிவையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. கார்த்திகை சோமவார விரதமும், சங்காபிஷேக விரதங்கள் குறித்த பதிவு அருமை.//
நன்றி.
//நேற்று பிறந்தநாளை கொண்டாடிய தங்கள் மகளுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்கள் மகனுக்கும் என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். இருவரும் தங்கள் இனிதான குடும்பங்களோடு சீரும் சிறப்புமாக வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
உங்கள் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
//நேற்று கொஞ்ச பிஸியாக வேலைகள் காரணமாக பதிவுலகிற்கு பகலில் வர இயலவில்லை. இரவு படுக்கும் போது கைப்பேசியில் அனைவரின் பதிவுகளை பார்த்தேன். உடனே பதில் அளிக்க முடியாமல் உறக்கம் வென்று விட்டது. இப்போது பார்க்கும் போது நேற்றுப்பார்த்த படங்களை தங்கள் பதிவில் காண இயலவில்லை. எனினும் படங்கள் நேற்றுப் பார்த்ததில் அழகாக இருந்தன. இறைவன் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.நீங்கள் மறுபடி பதிவை சீர் செய்ததும் பார்க்கிறேன்.//
நேற்றுப்பார்த்த படங்கள் இருக்கே கமலா, காணொளி மட்டும் ஒன்று வரவில்லை அது எவ்வளவோ முயன்று வலை ஏற்ற முடியவில்லை. நான் எடுத்த வீடியோ என்றால் யூடியூடிப் செய்து போட்டு விடுவேன், இது மதினி அனுப்பியது. அதனால் செய்யமுடியவில்லை
//முந்தைய சோமவார விரதங்கள் பதிவையும் மற்ற பதிவையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
நல்லது படித்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
நீக்குஇப்போது பதிவில் படங்களையும், மற்ற காணொளியையும் பார்த்துக் கொண்டேன். காலையில் என்னவோ நான் பார்க்கும் போது ஒன்றும் இல்லை.
காவேரி அம்மனின் அலங்காரம் அருமையாக உள்ளது. லிங்க வடிவில் உள்ள படம் மனதை பக்தியால் கவர்ந்தது. தரிசனம் பெற்றுக் கொண்டேன். மாவிளக்குமா பூஜை படமும் அருமை. அது உங்கள் வீட்டில் பூஜை செய்த போது எடுத்த படமா? சங்காபிஷேகம் படங்களும், உங்கள் மைத்துனர் வீட்டு பூஜை படங்களும் கண்டு கொண்டேன்.
உங்கள் மகனுக்கு அங்கு (அரிசோனாவில்) தமிழ் சங்கத்தில் கிடைத்த பரிசளிப்பிற்கு என் வாழ்த்துகள்.தங்கள் மகனும், மகன் குடும்பத்தில் அனைவரும் அங்கு தமிழை வளர்க்க செய்யும் பணிகள் மிகச் சிறப்பாக உள்ளது. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இப்போது பதிவில் படங்களையும், மற்ற காணொளியையும் பார்த்துக் கொண்டேன். காலையில் என்னவோ நான் பார்க்கும் போது ஒன்றும் இல்லை.//
நீக்குநெட் சரியாக இருந்து இருக்காது சில நேரம்.
//காவேரி அம்மனின் அலங்காரம் அருமையாக உள்ளது. லிங்க வடிவில் உள்ள படம் மனதை பக்தியால் கவர்ந்தது. தரிசனம் பெற்றுக் கொண்டேன். //
ஆமாம் அதனால்தான் பகிர்ந்தேன்.
மாவிளக்குமா பூஜை படமும் அருமை. அது உங்கள் வீட்டில் பூஜை செய்த போது எடுத்த படமா? //
ஆமாம் சோமவாரம் விரதம் இருந்து மாவிளக்கு பார்த்தேன்.
.சங்காபிஷேகம் படங்களும், உங்கள் மைத்துனர் வீட்டு பூஜை படங்களும் கண்டு கொண்டேன்.//
நன்றி.
//உங்கள் மகனுக்கு அங்கு (அரிசோனாவில்) தமிழ் சங்கத்தில் கிடைத்த பரிசளிப்பிற்கு என் வாழ்த்துகள்.தங்கள் மகனும், மகன் குடும்பத்தில் அனைவரும் அங்கு தமிழை வளர்க்க செய்யும் பணிகள் மிகச் சிறப்பாக உள்ளது. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றி கமலா ஹரிஹரன்.
மீண்டும் வந்து பதிவை படித்து, பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மாவிளக்குமா படம் நன்றாக உள்ளது. இப்போதும் நீங்கள் தொடர்ந்து விரதமிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.
உங்களின் பதிவில் விரதங்கள் பகுதிக்குச் சென்று உங்கள் அம்மா அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்திருந்த விரதமுறைகளைப் படித்தேன். அப்போது அந்த பதிவுகளுக்கு நான் உங்களுக்கு அறிமுகமாகவில்லை.போலும் போலும். நீங்கள் அனைவரும் அம்மாவுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் விரதத்திற்கும், பூஜைகளுக்கும் பக்கபலமாக இருந்துள்ளீர்கள். உண்மையில் அந்த பக்குவந்தான் உங்களை இப்போதும் விரதங்கள் இருக்கவும், பல கோவில்களுக்கு ஆர்வத்துடன் சென்று ஆன்மீக வாழ்க்கை வாழவும் வழிவகுத்து தந்திருக்கிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.
நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு அவ்வழி முறைகளை பின்பற்றி நடக்கச் செய்தது சிறப்பு.
எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் பாட்டி தவறாது எல்லா விரதங்களும் கடைப்பிடிப்பார்கள். மாதமிருமுறை ஏகாதசி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை, சோமவார விரதமென அத்தனை விரதங்களும் அவர்கள் இருவரும் இருப்பார்கள். (அம்மாவும் உடன் கலந்து கொள்வார்கள்.) ஆனால் எங்களை விரதமிருக்க அனுமதிக்கவில்லை. (சில விரதங்களை தவிர்த்து..) சித்திரையில் சித்ரகுப்தநயினார் விதம் கடைப்பிடிக்க விடுவார்கள். வைகுண்ட ஏகாசிக்கு அது போல் அனுமதி உண்டு.
புகுந்த வீட்டிலும் விரதங்களுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில் நான்தான் அத்தனை வேலைகளும் பார்க்க வேண்டும். (கூட்டுக்குடும்பம்)
பிறகு ஒரு வருடகாலம் கணவரின் அனுமதி பெற்று வியாழன்தோறும் (ராகவேந்திரருக்கு) மௌனவிரதம் இருந்தேன். நாளடைவில் அதுவும் நிரந்தரமாகவில்லை. இப்போதும் இப்படியாக தினமும் நாட்கள் வெறும் இறைபக்தியுடன் கழிகிறது. ஏதோ உங்களிடம் இதை சொல்ல வேண்டுமென தோன்றியது. சொல்லி விட்டேன்.
தங்களின் இன்னொரு சுட்டி எனக்கு வரவில்லை. ஆனால் உங்கள் மகனின் சாகபீஸ் ஏற்கனவே பதிவொன்றில் அந்த அழகான மண்டபம் பார்த்தாக நினைவு. அவரின் திறமைக்கு பாராடுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலாஹரிஹரன் வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. மாவிளக்குமா படம் நன்றாக உள்ளது. இப்போதும் நீங்கள் தொடர்ந்து விரதமிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.//
நன்றி.
//நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு அவ்வழி முறைகளை பின்பற்றி நடக்கச் செய்தது சிறப்பு.//
ஞாயிறு விரதம் மட்டும் கடைபிடிக்க வைத்தேன்.
//எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் பாட்டி தவறாது எல்லா விரதங்களும் கடைப்பிடிப்பார்கள். மாதமிருமுறை ஏகாதசி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை, சோமவார விரதமென அத்தனை விரதங்களும் அவர்கள் இருவரும் இருப்பார்கள். (அம்மாவும் உடன் கலந்து கொள்வார்கள்.) ஆனால் எங்களை விரதமிருக்க அனுமதிக்கவில்லை. (சில விரதங்களை தவிர்த்து..) சித்திரையில் சித்ரகுப்தநயினார் விதம் கடைப்பிடிக்க விடுவார்கள். வைகுண்ட ஏகாசிக்கு அது போல் அனுமதி உண்டு.//
//சித்ரகுப்தநயினார் விதம் கடைப்பிடிக்க விடுவார்கள். //
என் கணவரின் அத்தை இந்த விரதம் கடைப்பிடிப்பார்கள்.
வைகுண்ட ஏகாதசி டிபன் விரதம், கண் விழித்து விளையாண்டு என்று பொழுதை போக்கினோம் சிறு வயதில்.
//புகுந்த வீட்டிலும் விரதங்களுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில் நான்தான் அத்தனை வேலைகளும் பார்க்க வேண்டும். (கூட்டுக்குடும்பம்)//
வேலை செய்ய தெம்பு வேண்டுமே! விரதம் கடைபிடிக்காமல் இருந்தது நல்லது.
இரண்டு மெளனவிரதம் கடை[பிடித்த விவரம் இருக்கும் படித்து பாருங்கள் நேரம் இருக்கும் போது.
//உங்களின் பதிவில் விரதங்கள் பகுதிக்குச் சென்று உங்கள் அம்மா அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்திருந்த விரதமுறைகளைப் படித்தேன். அப்போது அந்த பதிவுகளுக்கு நான் உங்களுக்கு அறிமுகமாகவில்லை.போலும் போலும். //
நீங்கள் அறிமுகம் ஆகி இருந்தால் அழகான விரிவான கருத்தை கொடுத்து இருப்பீர்கள் .
நீங்கள் அனைவரும் அம்மாவுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் விரதத்திற்கும், பூஜைகளுக்கும் பக்கபலமாக இருந்துள்ளீர்கள். உண்மையில் அந்த பக்குவந்தான் உங்களை இப்போதும் விரதங்கள் இருக்கவும், பல கோவில்களுக்கு ஆர்வத்துடன் சென்று ஆன்மீக வாழ்க்கை வாழவும் வழிவகுத்து தந்திருக்கிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.
அம்மா விரதம் கடைபிடிக்க சொன்ன போது கொஞ்சம் கடினமாக இருந்ததுதான். ஆனால் அதனால் அடைந்த நனமை பின்னால் அனுபவித்தேன். இப்போது அனுபவித்து படித்து பாராட்டி விட்டீர்கள். நன்றி.
//பிறகு ஒரு வருடகாலம் கணவரின் அனுமதி பெற்று வியாழன்தோறும் (ராகவேந்திரருக்கு) மௌனவிரதம் இருந்தேன். நாளடைவில் அதுவும் நிரந்தரமாகவில்லை. இப்போதும் இப்படியாக தினமும் நாட்கள் வெறும் இறைபக்தியுடன் கழிகிறது. ஏதோ உங்களிடம் இதை சொல்ல வேண்டுமென தோன்றியது. சொல்லி விட்டேன்.//
நானும் மெள்னம் இருந்தேன், விடாமல் 15 வருடம். பின் காலபோக்கில் அதை கடைபிடிக்க முடியவில்லை. இப்போது நிறைய நேரம் மெள்னமாக கழிகிறது.
இறை பக்தி போதும் கமலா , மனதில் அனுதினமும் எந்த வித இடையூறும் இல்லாமல் கடைபிடிக்கலாம். அது உண்களை வழிநடத்தும். மன, உடல் தெம்பை தரும்.
//தங்களின் இன்னொரு சுட்டி எனக்கு வரவில்லை. ஆனால் உங்கள் மகனின் சாகபீஸ் ஏற்கனவே பதிவொன்றில் அந்த அழகான மண்டபம் பார்த்தாக நினைவு. அவரின் திறமைக்கு பாராடுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
பார்த்து இருப்பீர்கள். பாராட்டுக்கு நன்றி. கீழே என் மெள்ன விரத கதையை பதிவு ஆக்கி இருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஆர்வமாக எழுத வைக்கிறது. உடல் துன்பளை பெரிதாக நினைக்காமல் எழுத வைக்கும் உங்கள் உற்சாக பின்னூட்டம்.
நன்றி நன்றி.
https://mathysblog.blogspot.com/2012/07/blog-post.html
மெளனம் பதிவு.-1
https://mathysblog.blogspot.com/2012/07/2.html -2
மெளனம் பதிவு -2
உடனடி பதிலுக்கு நன்றி சகோதரி. கண்டிப்பாக நீங்கள் தந்த சுட்டியில் சென்று படிக்கிறேன். நன்றி சகோதரி இன்றைய என் பதிவுக்கும் வந்ததற்கு.
நீக்குவணக்கம் கமலா , வாழ்க வளமுடன் மெதுவாக படிங்க நேரம் கிடைக்கும் போது.
நீக்குஇங்கு வந்து நன்றி சொன்னதற்கு நன்றி கமலா