ஞாயிறு, 18 மார்ச், 2018

புட்டுத் தோப்பு



"புட்டுத்தோப்பு" பெயர் போட்ட வாயிலைத் தாண்டி உள்ளே வந்தால்  அழகான மண்டபம்.

சென்ற இராமாயணச்சாவடி பதிவில் புட்டுத்தோப்பில்  பார்க்கலாம் என்றேன்.
வந்து விட்டீர்கள் தானே ! புட்டுத்தோப்பு. புட்டுத்தோப்பு மண்டபம் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ளது.

அங்கு சென்றவுடன் பசுமைநடையின் கையேடு கொடுக்கப்பட்டது அனைவருக்கும். முன்பு பார்த்த இராமாயணசாவடி பற்றியும், புட்டுத்தோப்பு பற்றியும் குறிப்புகள் அடங்கிய கையேடு.


படிக்கமுடிகிறது தானே படித்துப் பாருங்கள் இந்த மண்டபத்தின் வரலாறை


இப்போது புதிதாக  பசுமை நடை அலுவலகத்தில் வாரம் தோறும்  புதன்கிழமை புத்தகங்கள் சார்ந்த உரையாடல் நிகழ்கிறது என்று சொன்னார்கள்.

மண்டபத்தின் நடுவில் பேசுவதைக் கேட்க அமர்ந்து விட்டோம். நடுவில் பிள்ளையார் கோவில்

முத்துக்கிருஷ்ணன் அவர்கள்  தலமைஉரையாற்றி  பேச்சாளர்களைப் பேச அழைத்தார்.
பக்கத்து விழாநடக்கும் வீட்டில் ஒலி பெருக்கியைச் சற்று நேரம் பேச்சாளர்கள் பேசி நிறைவு செய்யும் வரை  நிறுத்தி வைக்க சம்மதம் பெற்று வந்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த திரு. வரதராஜன் அவர்களுக்குப் பசுமைநடை இயக்க வெளியீடு புத்தகம்  எழுத்தாளர் எஸ்.ரா அவர்களால் பரிசளிக்கப்பட்டது.

                           திரு. சுந்தர் காளி அவர்கள் கட்டிடக்கலையைப் பற்றிப் பேசினார்

ஆறு நன்றாக ஓடிக் கொண்டு இருந்த காலத்தில் நடைபெற்றது புட்டுக்கு மண் சுமந்த கதை. அது எல்லோருக்கும் தெரியும்.

 "வைகை  ஆற்றின் பெருமை சிலப்பதிகாரத்தில், திருவிளையாடல் புராணத்தில், பரிபாடலிலும் சொல்லப்பட்டதைப்படித்தபின் இப்போது இப்படி வறண்டு கிடப்பதைப்பார்த்தால் மனது சங்கடப் படுகிறது" என்றார்.


"முதல் முதலில் வந்த  தலபுராணம் பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருஆலவாய் உடையார் திருவிளையாடல் புராணம் .

 அடுத்து பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்.

நாம் நிற்கும் கட்டிடத்தைத் தள்ளி நின்று பாருங்கள்  இஸ்லாமிய
கட்டிடக் கலையும் நம் திராவிடக் கலையும் சேர்ந்தது என்றும் , இஸ்லாமிய கலை என்று  திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட  அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்" என்றார்.

சேர ,சோழ  பாண்டியர்களும் அவ்வாறே கலை அம்சமுள்ள கட்டிடங்கள், கோயில்களை க்கட்டினார்கள் என்றார்.சோழ, பல்லவர்கள் சாளுக்கிய தேசத்திலிருந்து எல்லாம் சிற்பிகளை அழைத்து  கலையம்சம் உள்ள கோயில்களைக் கட்டியதாகச்  சொன்னார்.
சித்திரைத் திருவிழாவில் திருவிளையாடல் புராணக்கதைகள் அந்த அந்த இடத்தில் நடித்துக் காட்டப்படும் .

இந்த புட்டுத் தோப்பில்   புட்டுக்கு மண் சுமந்த கதை நடித்துக் காட்டப்படும். இங்கு முன் கோயிலைச்சுற்றி புட்டு விற்பார்கள்.

மண் வெட்டி  ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும் காட்சிக்குக்   குளம் போல் வெட்டி அதற்கு  வேலி போடுபவர்கள் இஸ்லாமியர்கள், பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். இன்றும் மத ஓற்றுமைக்குச் சான்று என்றார்.



இவர் பெயர் உதயகுமார். இவர் புட்டுக்கு மண் சுமந்த கதை, மதுரையில் வெள்ளம் வரக் காரணம் எல்லாம்  சொன்னார். இவர் சிறு வயதாக இருக்கும்போது அவர் ஐயா சொன்ன கதையை அழகாய்ச் சொன்னார். கதை சொல்லிகள் குறைந்து விட்டார்கள்.
கதை சொல்லிகளை இழந்து வருகிறோம் என்று சொன்னார்.

மாடு கட்டிப் போர் அடித்து மாளாது என்று  யானை கட்டிப் போர் அடித்த காரணத்தை சொன்னார். அப்படி இருந்த நாட்டில் மழை இல்லாமல் செல்வ செழிப்பாய் இருந்த ஊர்  வரண்டு போனதால் வருணபகவானிடம்  சேர சோழ, பாண்டிய மன்னர்கள் போகிறார்கள்,அவரை வணங்கிப் பணிவுடன் கேட்கிறார்கள், சேர, சோழராஜாக்கள், ஆனால் பாண்டியர் பணிவு இல்லாமல் அகந்தையால் கேட்கவில்லை. அதனால் வருணபகவான் மேகங்களைச்சேர சோழ நாட்டுக்கு அனுப்பி விட்டதாகவும்   அப்படிப் போகும்  குட்டி மேகம் மட்டும் மனம் இறங்கி மழை பொழிந்தது என்றும்
இறைவன் பாடம் கற்பிக்க வைகையில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கி விட்டார் என்றும் கூறினார்.

திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதையை  அவர் ஐயா  மாற்றி,கதையில் கடைசியில்  பணிவு வேண்டும் பணிவு இல்லாமல் அகந்தையால்  நாட்டில் மழை இல்லாமல் போனதாகச் சொன்னார்.

அரசனின் ஆணை வீட்டுக்கு ஒருவர் வெள்ளத்தைத் தடுக்க மண் கொட்ட வேண்டும். புட்டு விற்கும் வந்திப் பாட்டிக்கு  முடியாது. மண் அள்ளிப் போட முடியாத காரணத்தால்
 இறைவன் வந்து புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கதையை அழகாய்ச் சொன்னார்.


அடுத்து எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் அவர்கள் பேசினார்கள்.

"மதுரையின் சிறப்பை ஆயிரம் பகுதிகளாக எழுதலாம்.

'1001 அரேபிய இரவுகள்' கதையை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை, பாக்தாத் என்ற ஊரை மையமாகக் கொண்டு நடக்கும் கதை.
 கதை நாயகன் அலிபாபா.  உலகத்தில் தொன்மையான புத்தகம் -அதிகமாய் வாசிக்கப்பட்ட புத்தகம்.
அதில் உள்ள கதைதான் 'அலிபாபாவும் 40 திருடர்களும்'  எம்.ஜி.ஆர் நடித்தபடம். அப்போது 1001 அரேபிய இரவு கதை என்பது எல்லாம் தெரியாது.


 மதுரை பக்கத்தில் மல்லாகிணறு என்ற  சிறு கிராமத்தில் வாழ்ந்த நான் மல்லிகைப்பூவை மதுரைக்கு விற்கும் நண்பர்களுடன் 10 வயதில்
 மாட்டு வண்டியில் பயணம் செய்து  வந்து மாட்டி வண்டியை வண்டிபேட்டையில் விட்டு விட்டு  மதுரை ஊர் முழுவதும் போய் இருக்கிறேன், இங்குதான் படித்தேன். இந்த நகரம் என் வாழ்வில்மிக முக்கியமான அங்கம். தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசபட்ட ஊர்.

இந்த நகரத்தை சேர, சோழர்கள் , பாண்டியர்கள் ஆண்டு இருந்தாலும்  பாண்டியர்கள் மட்டும தான் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள்.கவிஞர்களை ஆதரித்து அருகில் வைத்துக் கொண்டார்கள்.

தமிழ்ப் படைப்பிலக்கியங்களைப்  படைக்கப் பெரும் உதவி செய்தார்கள்.. தென் மாவட்டம்  தமிழ் இலக்கியத்திற்குக் கொடுத்த கொடை  என்று சொல்லலாம்.  பாரதி உட்படப் பல்வேறு இலக்கியவாதிகள் தென்பகுதிதான்.

 இறைவனே தான் கவிஞன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கடவுளே தன்னை அங்கீரிக்க வந்த  ஊர்.

பாக்தாத் ஆயிரம் இரவுகளிய எழுதியது போல மதுரையின் ஆயிரம் பகுதிகளை எழுத விரும்புகிறேன். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள மக்களின் மனிதநேயம், அவர்கள்பேசும் தமிழின் இனிமை,மதுரை மக்களின் வரவேற்பு, உபசரிப்பு, மதுரையின் சிறப்பு. அரசியல், கலை, சினிமா, வரலாறு படைத்தது மதுரை என்றார்.
தற்போது அரசியல் தலைவர் யார் என்று தீர்மானிக்கும் ஊராகவும் இருக்கிறது

இது தூங்காநகரம். ஒரு பாதி தூங்கினாலும் இன்னொரு பகுதி விழித்துக் கொண்டு இருக்கும். பகலும், இரவும் இயங்கிக் கொண்டே இருக்கிறது இந்த நகரம்.

இப்படித் தொன்மை வாய்ந்த ஊர் தன் பெருமையைத் தூக்கிப் பிடிக்காமல் தன் ஊரின் பெருமையைச்  சிறப்பு வாய்ந்த வரலாறை தெரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருகிறது"என்றார்.

வெளிநாட்டவர், வெளியூரை சேர்ந்தவர்களை அழைத்து வந்து

"இந்த இராமாயணச்சாவடியைக் காட்டினால் சரி , இங்குள்ளவர்களையே அழைத்து காட்டுவது என்பது நகைப்புக்குரியது.

வெளி நாட்டவருக்குத் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, நம் ஊரிலுள்ளவர்களுக்குத் தெரியவில்லை என்று இருக்கக் கூடாது. நகரத்தின் தொன்மை தெரிந்து கொள்வது  நம் கடமை என்றார். தொலைக்காட்சியில் இந்த இராமாயண சாவடி பார்த்து விட்டால் இங்கு வரமாட்டார்கள். தொலைக்காட்சியை விட்டு வெளியே வாருங்கள்"என்றார்.
 இந்த நகரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நம் ஊரைப் பற்றி 1000 தகவல்கள் தெரிய வேண்டும்.

"மதுரையைப்பற்றித் தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது சினிமாவில்.

பரிசோதனை மய்யமாய் இருந்து இருக்கிறது. உதாரணம்  சினிமாவில் படம் எடுத்து விட்டால் படம் ஓடுமா ஓடாதா என்பதை  மதுரையில் ஓடுவதை வைத்துக் கணிப்பார்கள்.
மதுரையில் ஓடி விட்டால் எல்லா இடங்களிலும் ஒடும் என்ற நம்பிக்கை. இப்போதும் அப்படித்தான்.

தனி மனிதனின் இந்த ஊர் மக்கள் வைத்து இருக்கும் அன்பு அதை அவர்கள் வெளிகாட்டும் மாண்பு எல்லாம் வியக்க வைக்கும்.

நடிகர்களுக்கு மன்றங்கள் இங்குதான் முதன் முதலில் ஆரம்பிக்கபட்டது.
நான் படிக்கும் காலத்தில் புரூஸ்லிக்கு கூட இங்கு மன்றம் இருந்தது.
ஜாக்கி சானுக்கு, பப்பிலகரிக்கு எல்லாம் மன்றம் இருந்தது."


"அந்தக் காலத்தில் ஆறில் பூவாய் ஓடுமாம்.  ஆற்றில் படகில் போகும் மக்கள், கரையில் நிற்கும் மக்கள், ஆண், பெண்களின் உடைகள், அவர்களின் உற்சாகம், கொண்டாட்டத்தின் ஊராகப்  பொலிவுடன் காட்சி அளித்தது என்று மதுரை காஞ்சி கூறுகிறது"  என்றார்.

"இந்த நகரத்தின் இரவு, பகலை எழுத வேண்டும்  . டீக்கடையில் பகலில் குடிக்கும் டீக்கும், இரவு குடிக்கும் டீக்கும் வித்தியாசம் இருக்கும்" என்றார்.

"இந்த நகரம் இந்து, இஸ்லாமியர், கிறித்தவர்கள் நிறைந்த பண்பாட்டு மையமாக இருக்கிறது.

கிறித்துவ தேவாலயங்கள், கிறித்துவ பள்ளிகள் ,மிஷனரி ஆஸ்பத்திரிகள் எல்லாம்  சிறப்பு வாய்ந்தவை. அதையும் போய்ப் பாருங்கள் . இடைக்காட்டூர் தேவாலயம் நன்றாக இருக்கும் என்றார்.

நகரத்தின் தொன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் பதிவு செய்யுங்கள்

வீதிகளை நினைவு கொள்ளுங்கள் ' தாத்தா பேரனைப் பார்த்து நீயாவது என்னை நினைவு வைத்துக் கொள்' என்று கேட்பது போல் இந்த நகரம் நான் எப்படி இருந்தேன்  முன்பு சீரும், சிறப்புமாய்  என்று கேட்பது போல்  தோன்றுகிறது.

ஒவ்வொரு தெருவின்  பெயர்க்கும்  பெயர் காரணம் உண்டு.

ஒரு மனிதன் இறக்கும் போது அவன் நினைவுகளும் அவனுடன் இறந்து போவது எவ்வளவு கொடுமை ?  இந்த ஊர் பற்றிய நினைவுகளை உங்கள் குழந்தைகளிடம், உங்கள் நண்பர்களிடம் பதிவு செய்யுங்கள்.

என் நினைவுகள் என் வருத்தங்க்கள், என் மகிழ்ச்சிகளை உங்களுக்கு சொன்னால் பகிர்ந்து கொண்டால்தான் தெரியும் என் நினைவுகள் அப்படியே கடத்துவது என்பது முடியாது.

இந்த ஊரில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார்.

இந்த ஊரின் தொன்மையை இப்போது உள்ள நிலையை நாவலாக எழுத ஆசை. கண்டிப்பாய் செய்வேன் என்றார்.

மிக நன்றாக பேசினார்.  என்னால் முடிந்தவரை அவர் பேச்சை பதிவு செய்து இருக்கிறேன்.

 நான் குறிப்புகள் எடுத்து இருந்தேன் என்றாலும் திரு. சுந்தர்காளி அவர்கள் பேசிய பேச்சையும்,  எழுத்தாளர் திரு . ராமகிருஷ்ணன் அவர்கள் பேசிய உரையை எம்,பி.3 ஒலிவடிவாய் அன்பர் ரகுநாத் அவர்கள் கொடுத்தார்  . அதில் கேட்டு கொஞ்சம் குறிப்பு எடுத்துக் கொண்டேன். ரகுநாத் அவர்களுக்கு நன்றி.

பேச்சு முடிந்து உணவு இடைவேளையில் ராமகிருஷ்ணர் அவர்களிடம் பேசினேன் மகன் வீட்டுக்குப் போய் இருந்தபோது அவரின் சிறுகதைத் தொகுப்பை "100 சிறந்த சிறுகதைகள்" இரண்டு பாகம் (பழைய எழுத்தாளர்கள் 200 பேர் கதைகள்)  படித்ததைச் சொன்னேன். விகடனில் தேசாந்திரி என்று அவர் எழுதியதை படித்ததையும் சொன்னேன். மகிழ்வுடன் கேட்டுக்  கொண்டார்.

செவிக்கு உணவு அளித்தபின் வயிற்றுக்கும் உணவு அளித்தார்கள். வழக்கமாய் உள்ளூர் என்றால் உணவு கிடையாது, ஆனால் காரியாபட்டியிலிருந்து 'இன்பம்' உணவகத்தின் சார்பாகப் பழையகஞ்சி 150 பேருக்குத் தயார் செய்யப்பட்டு அதன் பாரம்பரியம் மாறாமல் தரப்பட்டது.

முகநூலில் அன்பர் விஜயகுமார் அவர்கள் பகிர்ந்தவை கீழே:-

//காரியாபட்டியிலிருந்து இன்பம் உணவகத்தின் சார்பாக பழையகஞ்சி 150 பேருக்கு தயார் செய்யப்பட்டு அதன் பாராம்பரியம் மாறாமல் தரப்பட்டது,
பசுமைநடையை நடத்திவரும் தோழர் முத்துகிருஷ்ணனுக்கும் எனக்கும் சிறு ஐயம் இருந்தாலும் அவர் எங்களுக்கு அனுமதி அளித்தது பெருமகிழ்ச்சி,,,,
நேற்று இரவே பழைய பொன்னி அரிசி நம்மஊர்ல அவித்ததை வாங்கிப் பக்குவமா ஆக்கிப் பதமா தண்ணிஊத்தி தொட்டுக்கிற கத்தரிக்காய்,முருங்கைக்காய் புளிக்கூட்டு.மோர் வத்தல்.மிதுக்கவத்தல்.சுண்ட வத்தல் தயார் செய்து அதிகாலை எழுந்து பழையகஞ்சி காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு பறந்தது,,,
நிகழ்ச்சியின் முடிவில் சஸ்பென்ஸாக இன்று வித்தியாசமாக பழைய கஞ்சி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் கைதட்டல்,,,அகைவருக்கும் பாக்குமட்டை தட்டில் கஞ்சியும்.தொன்னையில் கத்தரிக்காய் கூட்டும்,,ஓரத்தில்வத்தலும் - வைகைக்கரையில் புட்டுத்தோப்பில்,,,
ஏறக்குறைய 150 பேர் கலாச்சாரம் காக்க மதுரையில் ஒரே இடத்தில் பழையகஞ்சி குடித்த சரித்திர சாதனை நிகழ்வு,,குறிப்பாக எஸ்,ரா,,கஞ்சி குடித்துவிட்டு பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது,அனைவரும் வந்து வந்து பாராட்டியது,,ஒரு நண்பர் இன்று தான் வாழ்க்கையிலேயே பழைய கஞ்சி குடிக்கிறேன் என்றதும்,,,,,,அருமையான
நிகழ்ச்சியாக அமைந்தது,,
கடைசியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கஞ்சியும் காயும் காலியாகிவிட்டது,,,,
அனைவர் முகத்திலும் ஒரு திருப்தி,,
,,,,,எங்களுக்கு இந்த வாய்ப்பினையும் சந்தோஷத்தையும் அளித்த தோழர் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு எங்களது நன்றிகள்,,
கலாச்சாரம் காக்க கைகோர்ப்போம்,,
நன்றியுடன்
பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம்
காரியாபட்டி
9443467379 //

போன பதிவில் உணவு கொடுக்கப்பட்டது நாம் மறந்து விட்ட பழைய உணவு என்று குறிப்பிட்டு இருந்தேன்.

  //புட்டுத் தோப்பில் 'புட்டு ' என்று நினைப்பீர்கள் ஆனல் அது இல்லை , வேறு பழைய உணவு நாம் மறந்த உணவு கொடுக்கப்பட்டது .
அடுத்த பதிவில் பார்ப்போம்.//

நம் அதிரா :- //புட்டுத்தோப்பில் பழையசாதம்:).. வரகுக்கஞ்சி:).. குழைசாதம்:)..... சும்மா எதுக்கும் சொல்லி வைப்போம்:))//

என்று முதலில் பழைய சாதம் என்று சரியான பதிலைச் சொல்லிவிட்டார். அவருக்குப் பாராட்டுக்கள்.

நம் ஏஞ்சல் :- //அநேகமா கைக்குத்தரிசி கவுனி அரிசி நீர் மோர் சாதம் கம்பங்களி ராகி இவற்றில் உணவு அளித்திருப்பாங்க//

நானும் என் கணவரும் ஞாபிறு விரதம் என்பதால் இந்த  கஞ்சி குடிக்கும் வாய்ப்பை இழந்தோம்.

Image may contain: one or more people and food

மண்டபத்தைச் சுற்றி இருந்த கஷ்டபடும் மக்களும் மன மகிழ்ச்சியுடன் கஞ்சியை வாங்கி வாழ்த்திச் சென்றார்கள்.
வேப்பமரமும் நாகரும்.

புட்டுத்தோப்பில் உள்ள இந்த  வேப்பமரத்தில்  மாடு போன்ற தோற்றம் ஒரு பகுதியில் இருந்தது.  மாடு முகம் கண் எல்லாம் இருந்ததால் கொம்புக்கு மேல் இரண்டு கிளைகளை வெட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Image may contain: tree and outdoor

Image may contain: 1 person, standing and outdoor
நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் கொடுத்த அறுகம்புல்லை மாட்டுக்குக் கொடுப்பது போல் கணவரைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுத்தேன்.
இந்த இடத்தில் தான் சிவன் ஆற்றின் கரைக்கு மண் வெட்டிப் போடும் லீலை நடித்துக் காட்டப்படும்.

நடு மண்டபத்தில் நடு மையத்தில்
 பிள்ளையாருக்குச் சின்ன கோவில் உள்ளே இருக்கிறது.
நடு மண்டபத்தில் உள்ள தூணில் உள்ள சிற்பங்கள்.

அழகர் திருவிழாவில் நிறைய பேர் இந்த மாதிரி உடை அணிந்து கொண்டை வைத்து விழாவில் வருவார்கள்.

மதுரைக் காஞ்சியில் சொன்ன வைகை ஆறு இல்லை இப்போது.  ஆனால் அதில் சொன்னது போல் பூக்கள் மிதந்து கொண்டு இருந்தது, கரைகளில் பூத்துக் குலுங்கி கொட்டிய பூக்கள் இல்லை, யாரோ மனிதர் இறைவனிடம் போன போது அவர் இறுதி அஞ்சலி பூக்கள் .  காசு போடுவார்கள் போல இருவர் ஆற்றுக்குள் காசை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். (புதிதாகக் கட்டப்பட்ட பாலம்)

கொஞ்சம் தண்ணீரில் துணியை நல்ல வெண்மையாக துவைத்துக் கொண்டு இருக்கும் சலவைத் தொழிலாளி


மேல்தளம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை இந்த முறை.
Image may contain: 7 people, people standing
நிறைவுப் பகுதியில் எல்லோரும் மண்டபப் படிகளில் படம் எடுத்துக் கொண்டோம்.

கார்த்திகேயன் பிச்சுமணி அவர்களுக்கு நன்றி ( இந்த படங்கள் உதவி)
Image may contain: one or more people and outdoor
புட்டுதோப்பு முன்புறம் உள்ள  புட்டு சொக்கநாதர் கோவிலைத் தரிசனம் செய்து  பயணத்தை நிறைவு செய்தோம். அனைவரிடமும் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தோம்.


                                                                   வாழ்க வளமுடன்.














43 கருத்துகள்:

  1. /பக்கத்து விழாநடக்கும் வீட்டில் ஒலி பெருக்கியைச் சற்று நேரம் பேச்சாளர்கள் பேசி நிறைவு செய்யும் வரை நிறுத்தி வைக்க சம்மதம் பெற்று வந்தார் //

    உண்மையில் சொன்னதும் சம்மதித்த அவர்களும் பாராட்டுக்குரியவர்கள் .

    // இந்த ஊர் பற்றிய நினைவுகளை உங்கள் குழந்தைகளிடம், //

    100 % அருமையான உண்மை சமீபத்தில் ஊரிலிருந்து வந்த உறவினர் ஒருவர் என் அப்பா பற்றிய நாங்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய நினைவுகளை எங்க மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் .அவளுக்கு ஆச்சர்யம் .
    இனி நானும் நினைவுகளை கடத்தப்போகிறேன் :)

    பழைய சாதமும் மிதுக்கு வற்றல் செம காம்பினேஷனாச்சே .மிதுக்குவற்றல் /மினுக்குவற்றால் சுக்கங்காய் நும் சொல்வாங்க

    பதிலளிநீக்கு
  2. விரிவான கதைகளும், நிகழ்வுகளும், அழகிய புகைப்படங்களும் சொல்லிச் சென்ற விதமும் அருமை சகோ.

    திரு. எஸ்.இரா அவர்கள் சொன்னதுபோல புரூஸ்லீக்கு மன்றம் அமைத்தது மட்டுமல்ல அனைவருக்குமே மன்றம் தொடங்கியது மதுரையே.... இதனைக் குறித்து நான் எழுத நினைத்து இருந்தேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.











    //100 % அருமையான உண்மை சமீபத்தில் ஊரிலிருந்து வந்த உறவினர் ஒருவர் என் அப்பா பற்றிய நாங்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய நினைவுகளை எங்க மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் .அவளுக்கு ஆச்சர்யம் .
    இனி நானும் நினைவுகளை கடத்தப்போகிறேன் :)//

    பசுமைநடை இஅயக்கத்திற்கு கிடைத்த வெற்றி உங்கள் பதில்.
    திரு. எஸ்.ராவின் பேச்சுக்கு வெற்றி.
    இதைதான் அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.


    /பக்கத்து விழாநடக்கும் வீட்டில் ஒலி பெருக்கியைச் சற்று நேரம் பேச்சாளர்கள் பேசி நிறைவு செய்யும் வரை நிறுத்தி வைக்க சம்மதம் பெற்று வந்தார் //

    உண்மையில் சொன்னதும் சம்மதித்த அவர்களும் பாராட்டுக்குரியவர்கள் //

    மதுரை மக்கள் அன்பானவர்கள், பண்பானமக்கள் ,பாராட்டுக்குரியவர்கள் தான் என்பதும் இதிலிருந்து விளங்குது.

    நல்லவர், கெட்டவர் எல்லா இடத்திலும் இருப்பார்கள். "எங்கள் பிளாக் " நல்ல செய்திகளை சொல்லி வருவது போல் நாம் நல்லவைகளை பதிவு செய்வோம்.

    //மிதுக்குவற்றல் /மினுக்குவற்றால் சுக்கங்காய் நும் சொல்வாங்க//

    ஓ! எங்கள் ஊரில் கல்யாணவீடுகளில் உப்புக்கு அடுத்ததாய் இந்த மிதுக்குவற்றல் இடம்பெறும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.




    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    //திரு. எஸ்.இரா அவர்கள் சொன்னதுபோல புரூஸ்லீக்கு மன்றம் அமைத்தது மட்டுமல்ல அனைவருக்குமே மன்றம் தொடங்கியது மதுரையே.... இதனைக் குறித்து நான் எழுத நினைத்து இருந்தேன்.//

    தனிமனித வழிபாடு, தனிமனிதனுக்கு மன்றங்கள் முதன் முதலில் தொடங்க்கியது மதுரையே என்றும் அனைவருக்கும் முதன் முதலில் மன்றங்கள் இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது இங்கு தான் என்று சொன்னார்.

    புரூஸ்லீ வெளிநாட்டவர் அவருக்கு கூட அன்பு மிகுதியால் மன்றம் அமைத்து இருக்கிறார்கள் என்றார்.

    நீங்களும் எழுதுங்கள் படிக்கிறோம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.







    பதிலளிநீக்கு
  5. //இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்"//

    உண்மை.

    பதிலளிநீக்கு
  6. எஸ்ரா மதுரைக்காரர் என்பது அறிவேன். அதனாலேயே அவர் மேல் ஒரு பாசம் உண்டு!! விகடனில் அவர் முதலில் எழுதிய துணையெழுத்து மிகவும் பிடிக்கும். பொதுவாக மதுரைக்காரர் ரசனைக்காரர்கள்.

    பதிலளிநீக்கு
  7. மரத்தில் மாடு போல - அற்புதம். ஸார் நன்றாக போஸ் கொடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  8. மேல்தளத்துக்குப் போக வழி இருக்கிறதா என்ன? நான் அந்த இடத்தை பார்த்ததே இல்லை. ஆரப்பாளையம் அதிகம் சென்றதில்லை. அங்கிருந்த ராம் தியேட்டரில் ஒருமுறை நி இ படம் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் விழா முடியும்வரை ஸ்பீக்கரை அணைத்து வைட்த்ஹ பக்கத்து வீட்டுக்காரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  10. மதுரைக்கே வந்த நிறைவு. மிதுக்கு வத்தல் மதுரைக்குப் பிறகு ருசிக்கவில்லை.
    எத்தனை வகையான உணவுகள் ஊரில்.
    இந்த நடை மிக அழகாக நடைப் பெற்று இருக்குகிறது.
    படங்களும் விவரங்களும் அற்புதம். எஸ்ரா போன்ற யாத்திரை அனுபவம் பெற்றவர்கள்
    வந்து பேசுவதும் அருமை. வாழ்க வளமுடன் கோமதி.





    பதிலளிநீக்கு
  11. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    மிதுக்கு வத்தலின் சுவை நினைவுக்கு வந்து விட்டதா?
    மதுரை தெருவிற்கு தெரு பழவகையான உணவுகள் கடைதான்,
    அத்தனை கடைகளிலும் மக்கள் கூட்டம்தான்.


    //எஸ்ரா போன்ற யாத்திரை அனுபவம் பெற்றவர்கள்
    வந்து பேசுவதும் அருமை. //

    அவர் மடை திறந்த வெள்ளம் போல் மதுரையின் அனுபவங்களை பேசிக் கொண்டு இருந்தார். பேச்சு நன்றாக இருந்தது.

    பசுமைநடை இயக்கத்தினர் அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்து வந்து தான் பேச வைக்கிறார்கள்.
    அழைத்துப் போகும் இடத்திற்கு ஏற்றது போல் உள்ளவர்களை பேச வைக்கிறார்கள்.
    நான் அவர்களுடன் மூன்றாவது பயணம். 85 நடை பயணம் மேற் கொண்டு இருக்கிறார்கள்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்"//

    திரு. சுந்தர்காளி அவர்கள் பேச்சு பிடித்தது மகிழ்ச்சி.

    //எஸ்ரா மதுரைக்காரர் என்பது அறிவேன். அதனாலேயே அவர் மேல் ஒரு பாசம் உண்டு!! விகடனில் அவர் முதலில் எழுதிய துணையெழுத்து மிகவும் பிடிக்கும். பொதுவாக மதுரைக்காரர் ரசனைக்காரர்கள்.//

    ஓ! அதுதான் மதுரை என்றவுடன் ஓடி வந்து விட்டீர்கள் காலையில் .
    எஸ்.ரா எழுதிய துணையெழுத்து படித்தது இல்லை. படிக்க வேண்டும்.
    ஆமாம் , மதுரைக்காரர்கள் வாழ்வை ரசித்துதான் வாழ்கிறார்கள்.

    மரத்தில் மறைந்தது மாமத யானை “ என்பது போல் இந்த வேப்பமரத்தில் மாடு மறைந்து இருக்கிறது.
    என்று முகநூலில் போட்டபடத்தை பார்க்கவில்லையா ஸ்ரீராம்.
    சாரை பாராட்டியதற்கு நன்றி.

    //மேல்தளத்துக்குப் போக வழி இருக்கிறதா என்ன? நான் அந்த இடத்தை பார்த்ததே இல்லை. ஆரப்பாளையம் அதிகம் சென்றதில்லை. அங்கிருந்த ராம் தியேட்டரில் ஒருமுறை நி இ படம் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்!//

    போனமுறை போன போது மேல்தளம் போனார்களாம் . ஏதோ குறுபடம் மேல்தளத்தில் எடுக்கப்பட்டதாய் சொன்னார். மேலே எப்படி போவார்கள் என்று கேட்க மறந்து விட்டேன்.

    //உங்கள் விழா முடியும்வரை ஸ்பீக்கரை அணைத்து வைட்த்ஹ பக்கத்து வீட்டுக்காரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.//

    கண்டிப்பாய் பாரட்டவேண்டும் .நிகழ்ச்சி முடிந்தவுடன் பாட்டைப் போட்டு விட்டார்கள்.
    நல்ல மக்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.






    பதிலளிநீக்கு
  13. இவ்வாறான பயணங்கள் நம்முடைய கலை மற்றும் பண்பாட்டினை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அத்துடன் இக்காலகட்ட இளைஞர்களுக்கிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்கவும் கூட உதவும். அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மை சார்.
    கலை மற்றும் பண்பாட்டினை அறிந்து கொள்ள உதவுகிறது என்பது உண்மை.
    இளைஞர்கள் நிறைய வந்தார்கள், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதும் உண்மை.

    உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  15. நாம் வசிக்கம் பகுதியின் வரலாற்றை, பெருமையை, தொணமையினை அனைவரும் அறிந்து கொள்வது மிக முக்கியம்.
    இவ்வாறான பயணங்கள் அனைத்துப் பகுதிகளிலும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    //நாம் வசிக்கம் பகுதியின் வரலாற்றை, பெருமையை, தொணமையினை அனைவரும் அறிந்து கொள்வது மிக முக்கியம்.
    இவ்வாறான பயணங்கள் அனைத்துப் பகுதிகளிலும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்//


    நீங்கள் சொல்வது சரிதான் சகோ.

    உங்கள் நல்ல கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. பதிவு வெளியானதுமே படித்து விட்டேன்..
    ஆனாலும் இணைய வேகம் குறைந்ததால் பிரச்னை..

    இவ்வளவு அழகான படங்களுடன் விரிவான செய்திகள்...

    தங்களையன்றி வேறு யார் இப்படி தரக்கூடும்!..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    பதிவு கொஞ்சம் பெரிதாகி விட்டது.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அருமையான நிகழ்ச்சி...

    வேப்பமரத்தில் மாடு போன்ற தோற்றம் வியக்க வைத்தது...

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    அருமையான நிகழ்ச்சி தான்.

    //வேப்பமரத்தில் மாடு போன்ற தோற்றம் வியக்க வைத்தது...//

    ஒவ்வொரு மரத்தையும் கூர்ந்து பார்த்தால் அதில் தோற்றங்க்கள் தெரியும்.
    இதில் நன்றாக தெரிந்தது மாடு உருவம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. புட்டுத்தோப்பு பற்றியும் பசுமை நடை அமைப்பு பற்றியும் அறிந்து கொண்டேன்! கொஞ்சம் விரிவான பதிவு! இரண்டு பகுதிகளாக பிரித்து போட்டிருக்கலாம். படங்கள் தெளிவாகவும் அழகாகவும் இருந்தன! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    இரண்டு பதிவாய் பிரித்து போட்டுஇருக்கலாம் தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஆவ்வ்வ்வ் கோமதி அக்காவைத்தேடி.. அங்கின ஓடி இங்கின ஓடி கடசியில ராமாயணச் சாவடிக்கு ஓடினேன்.. இப்போதான் புட்டுத்தோப்புக்குப் போயிருக்கிறா பழைய சாதம்:) சாப்பிட எனச் சொன்னார்கள்[ஹையோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன்:)]].. அது எங்க இருக்கெனக் கேட்டேன் மதுரையிலயாமே.. இப்போதான் கூகிள் மப் மூலம் கண்டு பிடிச்சு வந்தேன்:)..

    அந்த புட்டுத்தோப்பு மண்டபம்.. பழசாஅ இருப்பினும் என்னா ஒரு அழகு.. அந்தப் அப்டியில இருந்து கதை பேசினாலே சொர்க்கம் தெரியுமே...

    உள்ளே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பவர் பிள்ளையாரோ?:).. நான் வைரவர் ஆக்கும் என நினைச்சேன்.. ஊரில் வைரவர் கோயில்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  24. நிறையப்பேர் பேசியிருக்கிறார்கள்.. சின்னவர்களும் பொறுமையாக இருந்து ஸ்பீஜ் கேட்கிறார்கள்..

    ஓ புட்டுக்கு மண் சுமந்த கதை நடந்த இடம் மதுரைதானா?.. அதனால்தான் புட்டுச் சாவடியோ? அப்போ அக்காலத்திலேயே புட்டு மதுரையில் பேமஸ் ஆக இருந்திருக்கே.. பிறகு எதுக்கு புட்டை மறந்து இட்லி ஓசைக்கு:) மாறினார்கள்?:)

    பதிலளிநீக்கு
  25. ஓ மதுரைக்கு தூங்காநகரம் எனவும் ஒரு பெயர் இருக்கோ?

    கோமதி அக்கா மதுரையிலயோ இருக்கிறீங்க...

    //"அந்தக் காலத்தில் ஆறில் பூவாய் ஓடுமாம். //
    படிக்கவே கற்பனையில் இனிக்குது... அப்படி எனில் சொர்க்கம் தெரியுமே..

    //"இந்த நகரத்தின் இரவு, பகலை எழுத வேண்டும் . டீக்கடையில் பகலில் குடிக்கும் டீக்கும், இரவு குடிக்கும் டீக்கும் வித்தியாசம் இருக்கும்" என்றார்//

    ஹா ஹா ஹா .. இப்பூடி ஒரு வித்தியாசம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே:)..

    பதிலளிநீக்கு
  26. //நம் அதிரா :- //புட்டுத்தோப்பில் பழையசாதம்:).. வரகுக்கஞ்சி:).. குழைசாதம்:)..... சும்மா எதுக்கும் சொல்லி வைப்போம்:))//

    என்று முதலில் பழைய சாதம் என்று சரியான பதிலைச் சொல்லிவிட்டார். அவருக்குப் பாராட்டுக்கள்.///

    ஆவ்வ்வ்வ் அப்போ மீ கரீட்டூஊஊஊஊஊஊஊஊஊ பரிசு எனக்கே:)), அஞ்சுவுக்கு இல்லையாக்கும்:)).

    //நானும் என் கணவரும் ஞாபிறு விரதம் என்பதால் இந்த கஞ்சி குடிக்கும் வாய்ப்பை இழந்தோம்.///
    ஆச்சச்சோ இது என்ன அநியாயம்.. வீட்டில் எப்படிச் செய்து குடிச்சாலும் இப்படி கூட்டத்தோடு குடிப்பதில் இருக்கும் சுவையே தனிதானே...

    பதிலளிநீக்கு
  27. //புட்டுத்தோப்பில் உள்ள இந்த வேப்பமரத்தில் மாடு போன்ற தோற்றம் ஒரு பகுதியில் இருந்தது.///

    ஹா ஹா ஹா கர்:) ஒரு மரம் ஆசிக்கு ஒரு கொப்பு வைக்க விடமாட்டினம்:) .. உடனே அதுக்கு கண் மூக்கு வச்சு பால் ஊத்தத் தொடங்கிடுவார்கள்... ஹா ஹா ஹா.

    //நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் கொடுத்த அறுகம்புல்லை மாட்டுக்குக் கொடுப்பது போல் கணவரைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுத்தேன்.///

    ஹா ஹா ஹா கர்ர்ர்:))

    படங்கள் அனைத்தும் அருமை..

    ஒன்று கேட்கிறேன் கோமதி அக்கா.. கோபிச்சிடாதீங்க.. எனக்கு இப்போவரை புரியவில்லை எதுக்காக நீங்க இங்கு பொனீங்கள் என?.. ஏதும் கிளப்பில் சேர்ந்து அவர்களோடு இப்படி வரலாற்று இடங்களுக்குச் சுற்றுலா போய் வாறீங்களோ?..

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //அந்த புட்டுத்தோப்பு மண்டபம்.. பழசாஅ இருப்பினும் என்னா ஒரு அழகு.. அந்தப் அப்டியில இருந்து கதை பேசினாலே சொர்க்கம் தெரியுமே...//

    ஆமாம் , அதிரா மாலை நேரத்தில் வேப்பமர காற்று வாங்கி கொண்டு அந்த படியில் அமர்ந்து கதை பேசினாலே சொர்க்கம் தான்.

    அந்தக் கால மக்கள் அப்படித்தான் படியில் அமர்ந்து காற்று வாங்கி இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  29. அதிரா , குழந்தைகளும் கேட்டார்கள் கதை கேட்க பிடிக்கும் தானே!

    பிட்டும் மட்டும் சாப்பிட்டு கொண்டு இருக்க முடியுமோ சொல்லுங்கள்.
    மாற்றம் வேண்டும் தானே!

    பதிலளிநீக்கு
  30. அதிரா,தூங்காநகரம் என்ற பெயர் பெற்ற நகரத்தில் தான் இப்போது இருக்கிறோம்.
    இங்கு வந்து 2 வருடம் ஆச்சு. முன்பு மாயவரம்.

    /"அந்தக் காலத்தில் ஆறில் பூவாய் ஓடுமாம். //
    படிக்கவே கற்பனையில் இனிக்குது... அப்படி எனில் சொர்க்கம் தெரியுமே..

    சொர்க்கமாய் இருந்த ஊர்தான்.


    //"இந்த நகரத்தின் இரவு, பகலை எழுத வேண்டும் . டீக்கடையில் பகலில் குடிக்கும் டீக்கும், இரவு குடிக்கும் டீக்கும் வித்தியாசம் இருக்கும்" என்றார்//


    ஹா ஹா ஹா .. இப்பூடி ஒரு வித்தியாசம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே:)..

    அவர் அனுபவபட்டவர் சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
  31. ஆவ்வ்வ்வ் அப்போ மீ கரீட்டூஊஊஊஊஊஊஊஊஊ பரிசு எனக்கே:)), அஞ்சுவுக்கு இல்லையாக்கும்:)).

    பரிசு உங்களுக்கே! வாருங்கள் மதுரைக்கு.


    //நானும் என் கணவரும் ஞாபிறு விரதம் என்பதால் இந்த கஞ்சி குடிக்கும் வாய்ப்பை இழந்தோம்.///
    ஆச்சச்சோ இது என்ன அநியாயம்.. வீட்டில் எப்படிச் செய்து குடிச்சாலும் இப்படி கூட்டத்தோடு குடிப்பதில் இருக்கும் சுவையே தனிதானே...


    ஆமாம் அதிரா, எல்லோருடனும் கூடி உணவருந்தும் மகிழ்ச்சி அளவிட முடியாது தான்,
    சுவையும் கூடும் தான், ஆனால் என்ன செய்வது பல வருட விரதம் விட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  32. ஹா ஹா ஹா கர்:) ஒரு மரம் ஆசிக்கு ஒரு கொப்பு வைக்க விடமாட்டினம்:) .. உடனே அதுக்கு கண் மூக்கு வச்சு பால் ஊத்தத் தொடங்கிடுவார்கள்... ஹா ஹா ஹா.//

    எல்லாவற்றிலும் தெய்வங்களை தேடும் உள்ளம். கோமாதா தெரிந்து இருக்கு இந்த மரத்தில்.

    //நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் கொடுத்த அறுகம்புல்லை மாட்டுக்குக் கொடுப்பது போல் கணவரைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுத்தேன்.///

    ஹா ஹா ஹா கர்ர்ர்:))//

    மாட்டுக்கு அகத்திகீரை, புல் கொடுத்தால் புண்ணியம் அதனால் அருகபுல் கொடுக்கிறார்கள்.

    ஹா ஹா ஹா.

    //ஒன்று கேட்கிறேன் கோமதி அக்கா.. கோபிச்சிடாதீங்க.. எனக்கு இப்போவரை புரியவில்லை எதுக்காக நீங்க இங்கு பொனீங்கள் என?.. ஏதும் கிளப்பில் சேர்ந்து அவர்களோடு இப்படி வரலாற்று இடங்களுக்குச் சுற்றுலா போய் வாறீங்களோ?..//

    எதற்கு கோபம் தங்கையிடம்? எத்தனை முறையோ பார்த்து இருக்கிறோம் திருவிழாவின் போது புட்டுத்தோப்பை.

    அனால் பசுமை நடை இயக்கத்தினருடன் போன போது வரலாற்று சான்றுகளுடன் அவை பாதுகாக்கபட வேண்டும், அதன் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
    இனிய வரலாற்று சுற்றுலாதான் அதிரா.
    இவர்கள் இப்படி வரலாற்று சிறப்பு பெற்ற 85 இடங்களுக்கு அழைத்து சென்று ஆவணபடுத்தி உள்ளார்கள்.
    நாங்கள் மூன்று இடங்களுக்கு இவர்களுடன் போய் இருக்கிறோம்.
    உங்கள் பின்னூட்டங்க்களுக்கு நன்றி, நன்றி,நன்றி நன்றி.


    பதிலளிநீக்கு
  33. மிக அருமையான பதிவு மா,,..

    மகிழ்ந்து வாசித்தேன்..படங்களும் தகவல்களும் மிக சிறப்பு...

    உண்மையில் நம் ஊரின் தொன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்து மிக அழகு...அந்த தொன்மையை நாம் தொலைத்து கொண்டு இருக்கிறோம் ..அதை மீட்கும் பணி தான் இவர்கள் செய்கிறார்கள்...


    தொடரட்டும் இவர்களின் அரிய, இனிய, எளிய பணி...அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்..

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.

    //உண்மையில் நம் ஊரின் தொன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்து மிக அழகு...அந்த தொன்மையை நாம் தொலைத்து கொண்டு இருக்கிறோம் ..அதை மீட்கும் பணி தான் இவர்கள் செய்கிறார்கள்...


    தொடரட்டும் இவர்களின் அரிய, இனிய, எளிய பணி...அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்..//

    ஆமாம் அனு, அவர்கள் மீட்கும் பணிதான் செய்கிறார்கள் ஞாயிறு என்றால் வீட்டில் ஒய்வு, தொலைக்காட்சியில் மூழ்கி நேரத்தை போக்குவதை விட்டு இப்படி காலாற நடந்து வரலாற்று இடங்களை பார்க்க வைப்பது சாதனைதான்.

    அவர்களை பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் நானும் சேர்ந்து கொள்கிறேன் உங்களுடன்.

    உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. //இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்"//

    முதலில் இதைச் சொல்லத் தோன்றியது...அருமை!!

    பக்கத்து வீட்டில் ஸ்பீக்கர் நிறுத்திவைக்கபப்ட்டது குறித்து அவர்களைப் பாராட்ட வேண்டும்...

    வைகையின் நிலைமை வேதனை...எல்லா ஆறுகளின் நிலையும் அபப்டியாகிவிட்டதே அக்கா..

    பழங்கஞ்சி இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு...கேரளத்துக் கஞ்சியும் செய்வோம்....இப்படித்தான்...உங்கள் பதிவில் நீங்கள் பகிர்ந்தது போலத்தான்....

    மாடு போன்ற அந்த மரம் செம அழகு!!! படங்கள் எலலமே அழகு அக்கா....

    வெளிநாட்டவரைக் கூட்டி வந்து காட்ட வேண்டிய இடங்கள் உள்ளூர்க்காரர்களுக்கே என்பது ஆமாம் ல.நம்மக்கே நம் ஊர் பற்றித் தெரிவதில்லை என்பது வேதனைதான். நம் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு காட்ட வேண்டும்...

    எஸ்ரா அவர்களின் பேச்சு ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியில் சில பகுதிகள் வாசித்ததுண்டு. அருமை...

    இப்படி அருமையான பகுதிகளுக்குக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தும் பசுமை நடை குழுவிற்கு வாழ்த்துகள் அருமையாக இருக்கு அக்கா....

    கீதா

    பதிலளிநீக்கு
  36. உங்களை ஃபோட்டோவில் கண்டுபிடிக்க முடிஞ்சுசே...தேடிப்பார்த்து...

    கீழிருந்து நான்காவது படி...கருப்பு பேன்ட் போட்டவரின் அருகில் குழந்தைகளை அவர் வலப்பக்கம்...அவர்கள் இருக்கும் படியின் மேல் படியில் ...

    நல்ல பதிவு....

    கீதா

    பதிலளிநீக்கு
  37. /இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்"//

    இப்போது வீடுகள் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறி வருகிறது அல்லவா அது போல் தான்.

    //பக்கத்து வீட்டில் ஸ்பீக்கர் நிறுத்திவைக்கபப்ட்டது குறித்து அவர்களைப் பாராட்ட வேண்டும்//

    கண்டிப்பாய் பாராட்ட வேண்டிய குணம்.

    //வைகையின் நிலைமை வேதனை...எல்லா ஆறுகளின் நிலையும் அபப்டியாகிவிட்டதே அக்கா..//

    ஆறுகள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தால் வேதனைதான் மிஞ்சும்.

    //பழங்கஞ்சி இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு...கேரளத்துக் கஞ்சியும் செய்வோம்....இப்படித்தான்...உங்கள் பதிவில் நீங்கள் பகிர்ந்தது போலத்தான்....//

    எங்கள் வீட்டிலும் அம்மா கேரள கஞ்சியும் பச்சைபயிறு சுண்டலும் காலை உணவாக செய்வார்கள்.

    //மாடு போன்ற அந்த மரம் செம அழகு!!! படங்கள் எலலமே அழகு அக்கா.//

    முதலில் என் கண்ணில் பட்டது மாடு, நான் எடுப்பதைப்பார்த்து ஓரு சிலர் எடுத்தார்கள்.

    //நம் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு காட்ட வேண்டும்...//

    ஆமாம், குழந்தைகளுக்கு வரலாற்று சின்னங்க்களை காட்டி அதன் கதை சொல்ல வேண்டும்.

    //எஸ்ரா அவர்களின் பேச்சு ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியில் சில பகுதிகள் வாசித்ததுண்டு. அருமை..//

    ஆமாம், நல்ல எழுத்தாளர், நல்ல பேச்சாளராகவும் இருக்கிறார்.

    //இப்படி அருமையான பகுதிகளுக்குக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தும் பசுமை நடை குழுவிற்கு வாழ்த்துகள் அருமையாக இருக்கு அக்கா...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.


    //உங்களை ஃபோட்டோவில் கண்டுபிடிக்க முடிஞ்சுசே...தேடிப்பார்த்து...

    கீழிருந்து நான்காவது படி...கருப்பு பேன்ட் போட்டவரின் அருகில் குழந்தைகளை அவர் வலப்பக்கம்...அவர்கள் இருக்கும் படியின் மேல் படியில்//

    கண்டுபிடித்து விட்டதற்கு நன்றி.
    பதிவைப் படித்து அருமையான கருத்துக்களை சொன்னத்ற்கு நன்றி.








    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரி

    தங்கள் பசுமை நடை பயணத்தின் விளைவாய் நீங்கள் பெற்ற அனுபவங்களை பதிவில் விரிவாக பகிர்ந்திருப்பதை படித்ததும்,உங்களுடன் நாங்களும் புட்டுத்தோப்புக்கு பயணித்த அருமையான உணர்வினை அடைந்தோம். எவ்வளவு விரிவான எழுத்துக்கள். படிக்க,படிக்க மிகவும் இனிமையாக இருந்தது.எஸ் ரா அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. மதுரையின் சிறப்புகள் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. மண்டபத்தின் சிற்பங்களும் இயற்கை தோற்றமும் கண்களுக்கு விருந்து.மரத்தில் மாடு போன்ற தோற்றம் அதிசயமாக அமைவது. அதை நீங்கள் படமாக்கி இருப்பது மிகவும் நன்றாகவிருந்தது. மற்றும் அனைத்துப் புகைப்படங்களும் அருமைாக இருந்தது. வைகை நதியில் தண்ணீரின்றி வற்றி இருப்பது மனதிற்கு வேதனையாகத்தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருந்த பழைய உணவுக்கு நிகர் வேறெதுவும் இல்லைதான்.சுவையான உணவு.

    நிறைவான பயணம். சுவையான தகவல்கள்.பகிர்ந்த.தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    தாமத வருகைக்கு மன்னிக்கவும்.என் தளம் வந்து பதிவுகளுக்கு கருத்திடுவதற்கு மிக்க நன்றி.
    நானும் இனி தங்களைதவறாது தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் கமலா ஹரிகரன், வாழ்க வளமுடன்.

    விரிவான பதிவாக இருந்தாலும் அனைத்தையும் படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
    மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் , முடிந்த போது வந்து படித்து கருத்து சொல்லுங்கள் போதும்.'
    தொடர்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. படங்கள், தகவல்களுடன் அருமையான பகிர்வு. பசுமை நடை இயக்கத்தினருக்கு வாழ்த்துகள். ஒலி வடிவில் கிடைத்தாலும் உரைகளை, குறிப்புகளை வைத்து மிகக் கவனமாகவும் அழகாகவும் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    பசுமை நடை இயக்கத்தினரை வாழ்த்தியதற்கு நன்றி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. புட்டுத் தோப்புப்பக்கம் போயே பல வருஷங்கள்! அருமையான பதிவு! பசுமை நடை இயக்கத்தினரின் தொண்டு சிறக்க வாழ்த்துகள். படங்கள், தகவல்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    ஊரிலிருந்து வந்து பழைய பதிவுகளை படித்துக்
    கருத்து சொல்வது மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு