வெள்ளி, 11 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல் !


பொங்கல் வாழ்த்து படம் வரைந்தவர் என் கணவர்


பொங்கிடுவோம்  உயிர் உணர்ந்து  புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம்  நாடனைத்தும்  பொறுப்பாட்சி  வளம் கண்டு
பொங்கிடுவோம்  சமுதாயப் பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம்  மக்கள் குலம் போர் ஒழித்து அமைதி பெற.

                                                        ---வேதாத்திரி மகரிஷி

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

                                                      ---- திருவள்ளுவர்.


முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச்சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

                                                       ------திருவெம்பாவை

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

                                                    ------- திருப்பாவை 

இந்த இரு பாவைப்பாடல்களைப் பாடினால் மழை பொழியும்
என்பது நம்பிக்கை.


பொங்கல் திருநாள் இந்த ஆண்டு  முன்பு போல்   இல்லை.  பயிர் பச்சை செழிப்பாக வளரவில்லை.  தண்ணீர் இல்லை, மழை இல்லை என்று மக்களின் மனக்குறை. இதைப் போக்க என்ன வழி என்று தானே பார்க்க வேண்டும்.

திருநெல்வேலியில் சமீபத்தில் ஜானகி ராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். அவர்கள் வைத்து இருக்கும் மாருதி ஓட்டலில் தான் உணவு உண்டோம். அங்கு எழுதி இருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது.

அது :  துணிப்பை என்பது எளிதானது.
            தூரஎறிந்தால் உரமாவது
            பிளாஸ்டிக் என்பது அழகானது
           விட்டு எறிந்தால் விஷமாவது 

என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

   பெய்யும் மழை பூமியில் சென்று ,தங்கி, நிலத்தடி நீராக மாறினால் தான் மக்களுக்குப் பயன்படமுடியும்.  மழை நீரை நிலத்துக்குள் புக விட மாட்டேன் என்கிறது பாலிதீன் பைகள்.   அதை அரசு தடை செய்தாலும் , மக்கள் பயன்படுத்துவது குறையவில்லை.  சில கடைகளில் பிளாஸ்டிக் பை கிடையாது, தயவு செய்து வீட்டில் இருந்து பை கொண்டு வரவும் ,என்று போட்டு இருக்கிறார்கள்.

தரிசு  நிலங்களில் கொண்டு போடும் குப்பைகளில் பெரும்பாலும் பாலிதீன் பைகள் தான்.   மரம், செடி கொடியெல்லாம் பிளாஸ்டிக் பூ பூத்தது போல்  இருக்கிறது. இந்த கவர்கள் தான் மரம் ,செடி, கொடிகளை அலங்கரிக்கிறது.

தூர் வாரப்படாத குளம், குட்டைகளில் குடிநீர் பாட்டில்களும்,  பாலீதீன் கவர்களும்தான் மிதக்கிறது.  அல்லியும்,  தாமரையும் வளர வேண்டிய குளத்தில் பாலீதீன் பைகள் நிரம்பிக் கிடக்கிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில்  ஒரு பெரிய கிணறு இருக்கிறது அதில்  முன்பெல்லாம் மீன்களுக்குப் பொரி   போட்டுவிட்டு அந்தகவரை அப்படியே அதில் போட்டு விடுவார்கள்.  அப்படியே குடிநீர் பாட்டிலையும் போட்டுவிடுவார்கள். இந்த ஜனவரி 1ஆம்தேதி அங்கு போனபோது  அந்த



கிணற்றை பச்சை துணி வலையால் போட்டு மூடி  இருந்ததைப் பார்த்தோம்..  தண்ணீர் தூய்மையாக இருந்தது. அதைப் பார்த்தவுடன்  நீர் நிலைகளை இப்படிதான் காப்பாற்றவேண்டுமோ என்ற எண்ணம் வந்து விட்டது.

 நீர் ஆதாரத்தை பெருக்க, பாலீதீன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவோம்.

மழைக்காக கூட்டு பிராத்தனைகள்  ,. மழை தவம் எல்லாம் நடக்கிறது.
இறைவனின் கருணை மழை பொழிந்து  உழவர்களின் கஷ்டங்கள் நீங்கி
மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.

உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் இனிமை சேர்த்து, இன்பம் பெருக செழிப்புடன் வாழ்க வளர்க! வாழ்க வளமுடன்!

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
                                                                ________

38 கருத்துகள்:

  1. விழிப்புணர்வைத் தரும் விஷயங்களைச் சொல்லியுள்ளீர்கள். மழை பொழிய, பயிர் செழிக்க கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள்.

    பகிர்ந்த பாவைப்பாடல்கள் அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. சரியான சேதி சொல்லும் பகிர்வு. மக்களுக்குப் புரிந்து விட்டால் நல்லது.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல உபயோகமான பதிவு.
    பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
    நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு.

    உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .

    ராஜி

    பதிலளிநீக்கு
  4. நல்ல யோசனை நாமும் மற்றவரிடம் சொல்லி உழவனுக்கு உதவி செய்வோம்

    பதிலளிநீக்கு
  5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;)

    பதிலளிநீக்கு
  6. தங்கள் கணவர் வரைந்துள்ள படம் அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. முன்னேற்றம் என்பதே ஒரு மாதிரி நாசமாப்போவதுதான். அது கலாச்சாரமாக இருந்தாலும் சரி தொழில்வள முன்னேற்றங்களா இருந்தாலும் சரி.

    Non-biodegradable poly ethylene products ஒரு மாதிரி உபத்திரவம்தான். அவைகளை பொறுப்பாக ரிசைக்கிள் செய்யணும். போகி அன்று போட்டு எரிப்பதுகூட தவறான ஒரு செயல்.

    அந்தக்காலத்து பலசரக்குக் கடைகளும், அதில் செய்தித்தாள்களில் பொருள்களை கட்டிக்கொடுப்பதும், நகைக்கடையில் கொடுக்கப்பட்ட மஞ்சள் பைகளும்தான் சுகாதாரத்துக்கு நல்லது.

    ஆனால் இன்னைக்கு இருக்க இணையதள உலகில் வாழும் இளவயது கன்னியர், காளையர்களுக்கு (அரைவேக்காடுகளுக்கு) அதை எல்லாம் யோசிக்க நேரம் இல்லை! :(

    ------

    உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்ங்க, கோமதி அரசு!

    பதிலளிநீக்கு
  8. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    இங்கு மழையே இல்லை. எங்கு போனாலும் மக்கள் மழை இல்லை என்று அழாக்குறையாக பேசுகிறார்கள்.

    மதுரை போன்ற இடங்களில் தண்ணீர் கஷ்டம்.
    நான்கு வழி சாலைக்கு மரங்கள் வெட்டப்பட்டு எங்கும் வெயில் தகிக்கிறது. போன ஊர்களில் எல்லாம் இந்த பாலீதீன் பைகள் பறந்து பரவிக் கிடக்கும் அவலம். அந்த கவலையில் தோன்றிய பதிவு.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க வெங்கட்நாகராஜ், வாழ்கவளமுடன்.

    மக்களுக்கு புரிகிறது ஆனால் பாலீதின் , பிளாஸ்டிக் உபயோகம் அவர்களை விட மாட்டேன் என பிடித்து இருக்கிறது. உதற மனதிடபம் வேண்டும்.
    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  11. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.

    நாம் செய்யும் உதவி உழவருக்கும் நமக்கும் உதவிதான். நம் எல்லோருக்கும் நலம்பயக்கும்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க கோபிநாத், வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பொங்கல் வாழ்த்து மடல் மிக அழகு.பகிர்ந்த செய்திகள் அருமை.
    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  14. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், கணவர் வரைந்த படத்தை பாராட்டியதற்கு நன்றி.
    உங்கள் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க வருண், வாழ்க வளமுடன்.

    //Non-biodegradable poly ethylene products ஒரு மாதிரி உபத்திரவம்தான். அவைகளை பொறுப்பாக ரிசைக்கிள் செய்யணும். போகி அன்று போட்டு எரிப்பதுகூட தவறான ஒரு செயல்.

    அந்தக்காலத்து பலசரக்குக் கடைகளும், அதில் செய்தித்தாள்களில் பொருள்களை கட்டிக்கொடுப்பதும், நகைக்கடையில் கொடுக்கப்பட்ட மஞ்சள் பைகளும்தான் சுகாதாரத்துக்கு நல்லது.//

    நீங்கள் சொல்வது போல் ரிசைக்கிள் செய்தால் நல்லது தான். போகி அன்று ரப்பர் டியூப்பை எரித்து சுற்றுப்புறத்தை கெடுப்பார்கள் ஒவ்வொரு முறையும் போகியில் கண்டதை எரிக்காதீர்கள் என்று கரடியாக கத்தினாலும் கேட்பவர்கள் தான் கேட்கிறார்கள்.

    அந்தக்கால கடைகளில் தாள்பைகள், பழைய பேப்பர்களில் பொட்டலம் போட்டுக் கொடுப்பது என்பது எல்லாம் மலரும் நினைவுகளாய் போச்சு.

    என் கணவர் இன்னும் மஞ்சள்பை பயன்படுத்துகிறார்கள்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  16. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம். வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    இங்கள் இதயம்கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ஆசியா, வாழ்கவளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  19. பொங்கல் வாழ்த்துக்களுடன் கவலை தரும் போக்கை எடுத்துக்காட்டும் பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. விழிப்புணர்வு தரும் பதிவும்மா. எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.

    தங்கள் குடும்பத்தாருக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.
    ஆம் சார், நீங்கள் சொல்வது சரி எங்கு பார்த்தாலும் பாலீதின் கவர் குப்பைகள் கொடுத்தக் கவலை தான் இந்த பதிவு.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஆதி, வாழ்கவளமுடன்.

    எல்லாம் நல்லதாக நடக்க வாழ்த்தும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    உங்கள் பொங்கல் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பாவைப்பாடல்கள் அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  24. உச்சத்தை தொட்டவர்களே லேட்டா வந்துட்டுட்டு லேடஸ்டு ன்னு சாக்கு போக்கு சொளுறாங்க ..........
    நீங்க சொல்ல வேண்டிய செய்தியை சரியான நேரத்தில் சொல்லி அசத்தி விட்டீர்கள் ...
    மண்ணின் மனமும் மண்ணின் மைதரின் மனமும் குளிர செய்த உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
    அழகிய படம் வரைந்த அன்பு அண்ணனுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் ,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  25. பொங்கல் வரை படம் சூப்பர். உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. இனிய பதிவு. கிணற்றில் துணி போட்டு மூடியிருப்பது நல்ல விஷயம். சொல்லிக் கொண்டு மட்டும் இராமல், அவர்களால் முடிந்த நடவடிக்கையும் எடுத்திருப்பது மகிழ்ச்சி; நல்ல வழிகாட்டுதல்.

    உங்களுக்கும் எங்களது பொங்கல் வாழ்த்துகள்.

    படம் நல்லாருக்கு. கம்ப்யூட்டரில் வரைந்ததா? வட்டங்கள் துல்லியமா இருக்கு!! :-)))

    பதிலளிநீக்கு
  27. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க விஜி, வாழ்க வளமுடன்.
    பொங்கல் வாழ்த்து படத்தை பாராட்டியதற்கு நன்றி.
    பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க விஜி, வாழ்க வளமுடன்.
    பொங்கல் வாழ்த்து படத்தை பாராட்டியதற்கு நன்றி.
    பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன். உங்கள் பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.
    படம் நல்லாருக்கு. கம்ப்யூட்டரில் வரைந்ததா? வட்டங்கள் துல்லியமா இருக்கு!! :-)))//
    என் கணவர் கம்ப்யூட்டரில் வரைந்தது
    நன்றி உங்கள் பாராட்டுக்கு.

    பதிலளிநீக்கு
  31. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  32. வாங்க கே.பி ஜனா சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. பொங்கல் திருநாள் வாழ்த்துகளுடன் சுற்றுச்சூழல் பற்றிய அழகான செய்தியையும் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள், கோமதி.

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  34. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.
    உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. அழகும் அவசியமும் நிறைந்த இடுகை!

    உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  36. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  37. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  38. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    உங்கள் பொங்கல் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு