புத்தாண்டு வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 டிசம்பர், 2013

புத்தாண்டே வருக!




அன்பு வலைத்தள அனபர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
---------------------

சனி, 31 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்



//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாய்
சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச்
செல்ல வேண்டும். //-- அன்னை


வலை அன்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புது வருட சிந்தனைகள்




ஆங்கில வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் இன்றுடன் முடிந்து புது வருடம் ஜனவரி ஆரம்பிக்கிறது.தேவர்களின் இரவு எனப்படும் மார்கழி மாதத்தின் நடுவில், நள்ளிரவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொர் ஆங்கில நாளும் நள்ளிரவில் தான் பிறக்கிறது. கடந்த வருடம் 2010 பலவித மாற்றங்கள், சாதனைகள், வேதனைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் நடந்து இருக்கிறது. வரும் 2011 எல்லாச் சிறப்பையும் பெற்றதாய் இருக்க வேண்டும். நம் நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும், பொருளாதார வளர்ச்சி எல்லோரையும் சென்றடைய வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் இருக்க வேண்டும். உழைக்காமல் பணம் சேர்க்கும் மனிதர்களிடம் உழைத்த பொருள்களைக் கொடுத்து ஏமாறும் கூட்டம் விழிப்போடு இருந்து நல்ல வழியில் பொருட்களைச் சேமிக்க வேண்டும்.


//நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா// கவியரசர் கண்ணதாசன்.

நல்லதை நினைக்க வேண்டும்.கெட்டதை மறக்கத் தெரிய வேண்டும்.

அன்னை எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்படி நினைக்க வேண்டும் என்கிறார்:

//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.ஒவ்வோர் புதிய உதயமும் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறை எடுத்து வருகிறது.எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அதிகம் சிந்திக்காமல்,அதை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ நல்லதோ அதை அமைதியாகச் செய்ய வேண்டும்.//

நம் வாழ்க்கையை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டால் சரியானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனதைக் கொடுத்து மன அமைதியைத் தருவார் எனத் தெரிகிறது.

வாழ்வு தொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி:

// ஏழ்மை நோய் விதியென்று எண்ணி ஏமாந்திருந்தேன்
என்னுள்ளுணர் வெனக்கு இயம்பியதென் தெரியுமோ
வாழ்வுதொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துளதே
வறுமை நோய் செயல் விளைவால் வந்தபயன் இவ்வுண்மை
ஆழ்ந்துண்ர்ந்து அனைவருமே அன்போடு வாழவெனில்
அரசு மதம் பொருள் துறைகள் அமைதி பெற முழுமை பெற
ஊழ்வினையை உணர்ந்ததற்கு ஒத்து திருத்தென்றதே
உலகோரே உண்மைநிலை உணர்ந்துவளம் பெற்றுய்வோம்.//

செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்.

“சென்றகாலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்க்காலத்தின் சிறப்பும்” அறிந்து நன்னெறியில் வாழ்வோம்.

வலைஉலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.