பாரதியார் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 டிசம்பர், 2010

கண்ணம்மா என் குழந்தை

இன்று நம் தேசிய கவிக்கு பிறந்த நாள். அவர் பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லியப் பாட்டு.

1. சின்னஞ் சிறுகிளியே,கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏறற்ம் புரியவந்தாய்!

2. பிள்ளைக் கனியமுதே,-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே!

3. ஓடி வருகையிலே,-கண்ணம்மா!
உள்ளங் குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் -உன்னைப்போய்
ஆவிதழுவுதடீ

4. உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடீ;
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

5. கன்னத்தில் முத்தமிட்டல்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ;
உன்னைத் தழுவிடிலோ,- கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ.

6. சற்றுன் முகஞ்சிவந்தால்-மனது
சஞ்சல மாகுதடீ
நெற்றி சுருங்க்கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ.

7. உன் கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டுதடீ;
என் கண்ணில் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்னதன்றோ?

8. சொல்லு மழலையிலே,-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

9. இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே -உன்னைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?

10. மார்பிலணிவதற்கே -உன்னைப்போல்
வைரமணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப்போல
செல்வம் பிறிதுமுண்டோ?

என்ன அருமையானப் பாட்டு!7வது ’என்னுயிர் நின்னதன்றோ’ வரை குழந்தைகளை தூங்க வைக்க பாடுவேன். 6,8,9,10 எல்லாம் ராகம் தெரியாது பாடமாட்டேன்.எப்போது பாடினாலும் கண்ணில் நீரை வரவழைக்கும் பாட்டு. எந்த குழந்தையை கண்டாலும் குறிப்பாய் பெண் குழந்தையைக் கண்டால் என் மனதுக்குள் ஓடும் பாட்டு. M.L.வசந்தகுமாரி அவர்கள் குரலில் இந்த பாட்டைக் கேட்கும் போது மனதுக்கு இதமாய் இருக்கும். சுதாரகுநாதனும் தன் குரு மாதிரி இந்தப் பாட்டை பாடுகிறார்கள். இந்த மார்கழி உற்சவத்தில் பாடகர்கள் இந்தப்பாட்டை பாடுவார்கள் கேட்கலாம். அந்தக் கால பழைய சினிமா படங்களில் எப்படியும் ஒரு பாரதியார்ப் பாட்டு இருக்கும்.புகழ்ப் பெற்ற பாடகர்கள் எல்லாம் பாடி இருப்பார்கள்.கேட்கவே நல்லா இருக்கும்.


இதேமாதிரி சின்மயி பாடிய ஒரு ’தெய்வம் தந்தபூவே’ பாட்டும் எப்போது கேட்டாலும் கண்ணில் நீரை வரவழைக்கும்.

தேசிய கவிக்கு வணக்கங்கள்.





.