புதன், 31 டிசம்பர், 2025

மார்கழி கோலமும் , இனிய புத்தாண்டு நல் வாழ்த்தும்.

 

முதல் நாள் போட்ட விளக்கு கோலம்

இரண்டாம் நாள் போட்ட கோழி குஞ்சு


மூன்றாம் நாள் போட்ட கோலம்


இந்த மார்கழியில் மூன்று நாட்கள் சின்னதாக கோலம் போட்டேன். வளாக பிள்ளையாரை காலை வணங்கி வந்தேன்.

 நான்காவது நாள் அமாவாசை என்று கோலம் போடவில்லை .  அன்று பக்கத்தில் இருக்கும் ஐயனார் கோயிலுக்கு   போனேன்  அங்கே  கீழே விழுந்து விட்டேன்.     ஏற்கனவே கால்வலி  அதனுடன் கீழே விழுந்ததும் மேலும் வலி   அதிகமாகி விட்டது.  மருத்துவரிடம் தம்பியும், தம்பி மனைவியும் அழைத்து போனார்கள்.  அப்புறம் அவ்வளவுதான் கோலம்  . 



ஒருவாரம் கழித்து இப்படி அச்சு கோலங்கள் போட்டேன். இந்த வருடம் மார்கழி மாத கோலங்களை பதிவில் சேர்த்து விட்டேன்.

"கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டு உடம்பு முடியாமல் ஏன் கோலம் போடுகிறாய்?" என்று உறவினர்கள் கேட்கிறார்கள்.   ஸ்டிக்கர் ஒட்ட விரும்பம் இல்லை. சின்னதாக கோலம் போட்டு இருக்கிறேன்.


மாயவரத்தில் இருந்த பொது திண்ணையில் போட்ட கோலங்கள். 2014 ல் நான் வரைந்த கோலங்கள் புள்ளியில்லாமல் சில படம் பார்த்து வரைவேன்.  புத்தாண்டை வரவேற்று செய்தி சொல்லும் கோலங்கள் நேரம் இருந்தால் பாருங்களேன்.


பழைய கோலங்கள்  பழைய கோலங்கள் சேகரிப்பிலிருந்த சில உங்கள் பார்வைக்கு. இந்த பதிவில் இருக்கும் முடிந்தால் பாருங்கள்.


//மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி?   அதற்குள் என்ன இருக்கிறது?  என்று நினைக்கிறீர்களா? அந்த கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல  சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.

பொக்கிஷத்தை  பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன். நான் சின்ன வயதில்  கோலங்கள் போட்ட நோட்டு தொட்டாலே கிழிவது போல் உள்ளது.   வார மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள்  சேகரித்து வைத்து இருக்கிறேன்.

என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள்  என்று இருக்கிறது.  இப்போது  இணையத்தில் கோலங்களை பார்த்து  பிடித்த கோலத்தை போடுகிறேன்.//


மார்கழி கோலங்கள்  கோலங்களும் சிறுவயது  நினைவுகள் இருக்கும். 


வருங்காலம் ஒளிமயமாக இருக்க  இணையத்திலிருந்து புத்தாண்டு கோலம் பகிர்வு. கோலம் போட்ட அகிலாவிற்கு நன்றிகள்.

வயதானவர்  மிக அழகாய் தென்னம்கீற்றில்  வருடத்தை   முடைந்து இருக்கிறார், வருங்காலம்  பசுமை நிறைந்து இருக்கட்டும். 

எங்கள் வளாகத்தில்   அனைவருக்கும்  புதுவருடத்திற்கு கேக் கொடுத்து வாழ்த்து சொல்லி போனார்கள்.



கேக் எடுத்து கொள்ளுங்கள். 




திருத்தொண்டர் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்த நாயனார் புராணம்


"சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருளுடையேம்"


அனைவருக்கும் இனிய  புதுவருட நல் வாழ்த்துக்கள்.

சென்ற ஆண்டுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லி இந்த வருடம் அனைவருக்கும்  நல்ல வருடமாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.  

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்


வாழ்த்துகள்.


எல்லா வளமும் , நலமும் பெற  இறைவன் அருள்புரிவார்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக