புதன், 30 ஏப்ரல், 2014

கழுகுமலைத் திருக்கோயில்


திருநெல்வேலிக்கு  அருகே உள்ள கோவில்பட்டியிலிருந்து  சங்கரன் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபது கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.

கழுகுமலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை:-


1. அருள்மிகு கழுகாசலமூர்த்தி  திருக்கோயில்

2.வெட்டுவான் கோயில் என்று கூறப்படும் குடைவரைக் கோயில்


3. சமணதீர்த்தங்கரர்களினசிற்பங்கள்,சமணர்கல்வெட்டுக்கள் .


கழுகுமலையைப்பற்றி முன்பே பதிவு போட்டு இருக்கிறேன். 2013ல் எழுதிய பதிவில் வெட்டுவான் கோயில், குடைவரைக்கோயில், சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள், சமணர்கல்வெட்டுக்கள் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். படிக்கவில்லையென்றால் படிக்கலாம். 

இந்தப் பதிவில் கழுகாசலமூர்த்தி திருக்கோயிலைப் பற்றி எழுதியுள்ளேன், அக்கோயிலில் வரைந்து இருந்த ஓவியங்களையும், காமதேனு, மயில் வாகனங்களையும், அங்கு உள்ள முருகனின் உற்சவ மூர்த்தியையும் எடுத்த படங்களைப் பகிர்ந்து இருக்கிறேன் .

இவ்வூர், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் பற்றி மூன்று திருப்புகழ்ப் பாடல்கள் உள்ளன. முத்துசுவாமி தீட்சிதர் அவர்களும் கழுகாசலமூர்த்தி மீது கீர்த்தனை இயற்றி இருக்கிறார்.

 அண்ணாமலை ரெட்டியார்   காவடிசிந்து பாடி இருக்கிறார். கோவில்பட்டி நீலமணி அவர்கள் ’கழுகுமலை கந்த கவசம்’ பாடி இருக்கிறார்.
கழுகுமலை முருகனுக்கு  ஒரு விளக்கம் சொல்லி இருக்கிறார் புலவர் கீரன் அவர்கள் :-  

ஒருமுகமும் ஆறு கைகளும்
கைகள் இரண்டில் சக்தியும்
ஏனையகைகளில் அட்சமாலை
வரதம் அபயம் சின் முத்திரை
விளங்க, சிவன்(இங்கு அகத்தியர் என்பது நியதி)
எதிரில் மாணவராகக்
கைகட்டி வாய் புதைத்து
நிற்க, பிரணவஉபதேசம்
செய்பவர்.

அருணகிரிநாதரின்  திருப்புகழில் இருந்து  இரண்டு வரிகள் மட்டும் பகிர்ந்து இருக்கிறேன்:-

“வேண்டும் அடியர், புலவர் வேண்ட அரிய பொருளை
 வேண்டும் அளவில் உதவும் பெருமாளே”

1989 ல் கோவில்பட்டி நீலமணி எழுதிய கவசத்திலிருந்து  ஒரு பாடல்:-

வணங்கிடத் தலையும் தந்தாய்
வாழ்த்திட வாயும் தந்தாய்
இணங்கிட மனமும் தந்தாய்
இசைத்திட தமிழும் தந்தாய்
மணங்கமழ் மாலை கொஞ்சும்
மார்பனே ! காக்க காக்க
அணங்கொடு வந்தே காக்கும்
அழகனே! காக்க காக்க

கோவிலில் முருகன் சன்னதி முன் நல்ல கூட்டம் அபிஷேகம் முடிந்து அலங்காரம் அப்போதுதான் செய்து இருந்தார்கள் . கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள் பார்த்து விட்டு போய்விடுகிறோம், என்று முன் இருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டு கழுகாசல மூர்த்தியைத் தரிசனம் செய்து வந்தோம்.

                           
                நுழைவு வாயில் கோபுரம் கிடையாது மலையே கோபுரம்


வண்ணத்தில் மின்னும் தூண், மேல் விதானக் காட்சி
பத்தாயம் எனும் நெற்குதிர் மேல் வைத்து இருக்கும் முரசு
மயில் வாகனம்
காமதேனுவின் ஜடை அழகு
கழுகாசலமூர்த்தி உற்சவர்
கோவிலைச் சுற்றி அழகான ஓவியங்கள்

இது கழுகரசன் சம்பாதி முக்தி பெற்ற திருத்தலம்

ஒரு முகமும் ஆறு கைகளும், இடதுபுறம் மயிலின் தலையும் அமைந்த  சிறப்பு அம்சம் , அருணகிரியார் கூப்பிய கைகளுடன்.

இது குடைவரைக் கோயில் - குகையை குடைந்து கோவில் கட்டப்பட்டுள்ளதால் கோவிலை சுற்றி வர ,கிரிவலம் வர வேண்டும்.
பெளர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷம்

கோவிலில் நடந்த திருமணவிழா ஒன்று - பாண்டு வாத்தியம்
பெண்ணும் மாப்பிள்ளையும்
வண்ணத்தாள் வாணவெடி மழை எனப் பொழியும் காட்சி

கோவிலில் இருந்து வெளியில் வரும்போது வாசலில் ஒரே ஆரவாரம் திருமண விழாவுக்கு  வெடி வெடித்து  பாண்ட் வாத்தியம்  முழங்க மணமக்கள் வாசலில் நின்று இருந்தார்கள்.

கோவிலில் கல்யாணம் கோவில் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு அந்தக்கால பாடல் ஸ்பீக்கரில் ,”மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா” என்று ஒலிக்க,பெண்ணை  ஆரத்தி எடுத்து  வரவேற்றார்கள். இன்னும்  இந்த ஊர்களில் இந்த பழைய பாடல் கல்யாணவீடுகளில் ஒலிப்பது   மகிழ்ச்சியாக இருந்தது. 

அதிகாலையில் நடந்த பங்குனி உத்திரத் தேர்
நிலையில் நிற்கும் தேர்

தேரோடும் வீதி
கிரிவலம் வந்த போது எடுத்தபடங்கள்




மலையுச்சியில் பிள்ளையார் கோயில்

போனமுறை  கந்தசஷ்டி சமயம் போனோம், இப்போது பங்குனி உத்திரம் சமயம் போனோம்.தங்கை மகளை புகுந்தவீட்டில் விட்டு விட்டு கழுகாசல மூர்த்தி தரிசனம் செய்து வந்தோம்.

உறவினர் வீட்டில் எடுத்த படம்:-


 குழந்தைகள் விளக்கைப் பிடித்து இழுத்துப் போட்டுவிடாமல் இருக்க விளக்கு மாடத்திற்கு அழி( கம்பிக் கதவு) எங்கள் பக்கத்தில் இப்படி எல்லோர் வீட்டிலும் இருக்கும்.  

பம்பரம் விடும் சிறுவர்கள்:-






அந்தக்காலம் போல் மரத்தில் அழகிய வண்ணத்தில் இருக்கும் பம்பரங்கள் இல்லை. பிளாஸ்டிக் பம்பரங்கள்! தேரோடும் வீதியில் வெயிலை பொருட்படுத்தாமல் நாலைந்து சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிறுவனிடம் சென்று ”அபீட்” எடுத்துக்காட்டு என்ற உடன் எடுத்துக்காட்டினான். சிறுவனுக்கு நன்றி சொல்லிப்  படம் எடுத்தவுடன் மகிழ்ச்சி,

அவர்களுக்கும் எனக்கும்.

வாழ்கவளமுடன்.
-------------------

32 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன் கழுகுமலை தரிசனம்.
    கழுகாசல மூர்த்தியைத் தரிசிக்கும் பேறு இன்னும் வாய்க்கவில்லை.

    தங்கள் பதிவில் கண் குளிரக் கண்டேன்.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அம்மா

    மிக அருமையாக பதிவை எழுதியுள்ளீர்கள் படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. மகிழ்வான தருணங்களைத் தனதாக்கிக் கொண்டு சென்ற திருமண விழா வாழ்வில் மறக்க முடியாத சந்தோசத்தை வழங்கி நிற்கும் மணமக்களும் நீடூழி வாழ வாழ்த்துகின்றேன் தேரோடும் வீதியும் தெருவில் விளையாடும் சிறுவர்களும் கடந்த காலங்களை நினைவில் மீட்டுச் செல்கின்றன அருமை !வாழ்த்துக்கள் தோழி .த.ம .1

    பதிலளிநீக்கு
  4. கழுகுமலை பற்றிய இரு பதிவுகளும் நிறைவான பதிவுகள் கோமதி அம்மா. தாங்கள் பகிர்ந்த தகவல்கள் மூலமும் அழகிய படங்கள் மூலமும் கழுகுமலையை ஒரு வலம் வந்தது போல் ஆகிவிட்டது. குறிப்பாக
    காமதேனுவின் ஜடை அழகு, இடதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் முருகப்பெருமான், பாறை மலைகளின் விதவிதமான அழகு, பங்குனி உத்திரத் தேரழகு, உங்கள் கணவர் வரைந்த வெட்டுவான்கோயில் ஓவியம் என எல்லாமே அழகு. இவை அனைத்தையும் ஒருசேரப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கோமதி அம்மா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் தயவில் அருமையான தரிசனம்
    படங்கள் மிக மிக அற்புதம்
    சூழலையும் ரசித்துப்பதிவு செய்தது
    எங்களுக்குமந்தச் சூழலை ரசிக்க வைத்தது
    குறிப்பாக பொண்ணும் மாப்பிள்ளையும்
    பம்பரம் விடும் பையனும்..
    பயணமும் பதிவும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. தங்கள் தயவில் அருமையான தரிசனம்
    படங்கள் மிக மிக அற்புதம்
    சூழலையும் ரசித்துப்பதிவு செய்தது
    எங்களுக்குமந்தச் சூழலை ரசிக்க வைத்தது
    குறிப்பாக பொண்ணும் மாப்பிள்ளையும்
    பம்பரம் விடும் பையனும்..
    பயணமும் பதிவும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அழகழகான படங்களுடன் அற்புதமான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான தரிசனம் அழகான படங்கள் இனிய காட்சிகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  9. ஏராளமான படங்கள். எனக்கு அவை ஓபன் ஆக நீண்ட நேரம் எடுக்கிறது. காத்திருந்து எல்லாப் படங்களும் திறந்த பிறகு பார்த்தேன். பழைய பதிவிலும் படங்கள் அசத்தல். (அப்போதே படித்திருக்கிறேன்)

    கழுகுமலை என்றதும் ஏ கந்தசாமி அவர்கள் நினைவு வருகிறது!

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் சுட்டிய உங்களது பழைய பதிவினுக்கும் சென்று வந்தேன்.

    நான் கழுகுமலை – கழுகு என்றதும் கருடபகவான் கோயிலாக இருக்கும் என்று நினைத்து இருந்தேன். உங்கள் பதிவின் மூலம் அது முருகன் கோயில் என்று தெரிந்து கொண்டேன்! பம்பரம் விடும் சிறுவர்களைப் பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்தன. அபீட் – இன்றும் மறக்க முடியாததுதான்.

    த.ம.3

    பதிலளிநீக்கு
  11. அன்பு கோமதி. வண்ணமிகுக் கோலங்களும் காட்சிகளும் கண்ணைக் கவருகின்றன. ஒரு முகமும் ஆறுகரங்களும் கொண்ட முருகன் அதிசயம் தான்,. வீதி அழகும் பம்பரம் விடும் சிறுவர்களும் எனக்குக் காணக்கிடைக்காத காட்சி.அருமை..திரு முருகன் உருவம் கண்ணிலேயே நிற்கிறது. மிகா நன்றி கோமதி.

    பதிலளிநீக்கு
  12. அருமையான படங்கள். கழுகுமலைக்கு எங்களையும் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியதற்கு நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. சிறு வயதில் சென்றிருக்கிறேன்... இப்போது நிறையவே மாறியிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.
    இந்த பதிவையும் , நான் முன்பு எழுதிய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    என் கணவர் ஓவியத்தை ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. கழுகாசல் மூர்த்திக் கோவில் பற்றி மிக விரிவாக சொல்லியிருக்கிறீர்கள் கோமதி. உங்களுடையா மகிழ்ச்சியான தருணங்களை எங்களுடன் பகிர்வது எங்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் அழகான கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்களுக்கு மட்டும் படங்கள் திறக்கம் நேரம் ஆவது ஏன் என்று தெரியவில்லை. இருந்தாலும் எல்லா படங்களையும் பார்த்து விட்டது மகிழ்ச்சி. பழைய பதிவையும் பாராட்டியதற்கு நன்றி.

    கழுகுமலை என்றது ஏ.கந்தசாமி அவர்கள் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.

    நீங்கள் பழைய பதிவையும் படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
    பம்பரம் சிறுவயது நினைவுகளை மீட்டுத்தரும் என்று தான் பகிர்ந்து கொண்டேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் கவியாழிகண்ணதாசன். வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    பதிவில் ஒவ்வொன்றையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் வெங்கட் நாகராஜ்,வாழ்க வளமுடன்.
    கழுகுமலை நன்கு பார்த்து விட்டீர்களா?
    ஆதி, ரோஷ்ணியை அழைத்து போய் வாருங்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஸ்கூல் பையன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் முன்பு போல் இல்லாமல் மாறி விட்டது.
    இப்போது அது தொல்லியல் துறைக்கு சென்று விட்டதால் சுற்றுலா வரும் அன்பர்கள் வசதிக்கு பாறை மேல் ஏற கம்பிகள் வைத்து இருக்கிறார்கள். தோட்டங்கள் வைத்து மிகவும் தூய்மையாக பராமரிக்க படுகிறது.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது போல் கழுகுமலை பயணம் மகிழ்ச்சியான தருணம் தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. பங்குனி உத்திரத் தேரை எங்களுக்கும் காணத் தந்திருக்கிறீர்கள். அருமையான பகிர்வுக்கு நன்றி.

    கோடை விடுமுறையில் வெயிலைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் வெளியில் விளையாடுகிறார்கள் எங்கும். நல்ல விஷயம்தான். மரத்தில் செய்த பம்பரங்கள் தனி அழகு. சிறுவன் அப்பீட் எடுத்துக் காட்டியிருக்கும் படம் நன்றாக உள்ளது:)!

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    பங்குனி தேர் கோவில்பட்டியிலும் செண்பகவல்லி கோயில்தேர் நடந்து கொண்டு இருந்தது நாங்கள் போன அன்று. ஆனால் அதை பார்க்க முடியாமல் எங்கள் கார்களை மாற்றுபாதையில் போகும் படி செய்து விட்டார்கள் போக்குவரத்து காவலர்கள்.

    கழுகுமலைக்கு மறுவீடூ போக வேண்டும், கோவில்பட்டியில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும் அதனால் செண்பகவல்லி அம்மன் தேரை பார்க்க முடியவில்லை.

    கழுகுமலையிலும் அதிகாலை முடிந்து விட்டது.

    வெயிலை பொருட்படுத்தாமல் விளையாடும் சிறுவர்கள் படம் உங்களை கவரும் என்று நினைத்தேன் அது போல கவர்ந்து விட்டது.
    உங்கள் கருத்துக்கு நன்றி ராமல்க்ஷமி.

    பதிலளிநீக்கு
  29. ராஜபாளையத்தில் படிக்கும் பொது ஒரு முறை சென்றுள்ளேன்...

    படங்கள் அனைத்தும் அற்புதம்... நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி
    தமிழ்மண வாக்குக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  31. அழகிய படங்களுடன் கழுகுமலை தரிசனம்.

    பதிலளிநீக்கு