புதன், 13 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில் பகுதி- 2




  இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

சைவ, வைணவக்  கதைகளைக் கூறும் சிற்பங்கள் அழகாய் உள்ள கோபுரம் என்று முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். போன பதிவில் வைணவ கதைகள் கோபுரங்களில் இருந்ததைப் பார்த்தோம்.
இந்த பதிவில் சைவகதைகள் உள்ள கோபுரக்காட்சிகள்.

 இன்னும் வரும் ,அய்யனார் கோவில் சிற்பங்கள் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். கீழே வருவது அய்யனார் கோவில் பிரகாரத்தில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள கதை சொல்லும் சிற்பங்கள் , கோபுரம் தாங்கும் பொம்மைகள் காலத்தைச் சொல்கிறது.  கேரளத்தினர், வட மாநிலத்தவர், நாடோடிகள் (குறவர்கள்)  ஆகியோர் கோபுரத்தில் இருக்கிறார்கள்.

ஆலமர் கடவுள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் - கேரள ஆண், பெண்

ஞாயிறு, 10 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில்

புத்தகவெளியீடு   இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

அடுத்த பதிவில்  இந்த சமணர் மலை என்று அழைக்கப்படும்  கீழ்க் குயில்குடியில்  உள்ள அய்யனார் கோவில் . என்று சொல்லி இருந்தேன்.

கீழக்குயில்குடி அய்யனார் கோவில்- கோவில் பின்புறம் சமணர் மலை, முன்புறம் தாமரைத் தடாகம்

வெள்ளி, 8 மார்ச், 2019

புத்தக வெளியீடு


கீழக்குயில்குடியில் "செட்டிப்புடவு" என்னூம் குகை வாசலில் ஆரம்பமானது 100வது  பசுமைநடை விழா. முதலில் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு உரை  ஆற்றினார்கள். அப்புறம் தொல்லியல்  பேராசிரியர் சொ. சாந்தலிங்கம் உரையாற்றினார்.   அவர் சொன்ன செய்திகள் அடுத்த பதிவில். என்று குறிப்பிட்டு இருந்தேன், அவைகளைத் தொடர்ந்து பார்க்கலாம் இந்த பதிவில்.

முத்துக்கிருஷ்ணன் அவர்களின் 9 ஆண்டு பசுமை நடைக்கு. 100 வது வகுப்பறை இது.  100 நடைகளின் தொடர்ச்சி பெருமிதம், இளைஞர்கள் குழுவின் சாதனை  என்றார்.

                                                    பேசுவது முத்துக்கிருஷ்ணன்
திரு. சொ. சாந்தலிங்கம் தொல்லியல் அறிஞர்

திங்கள், 4 மார்ச், 2019

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!


மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்.
அவன் அருளால் அவன் 
தாள் வணங்குவோம்.


சிவன் ராத்திரிக்கு நாம் சிவனின்  பெருமைகளை அவரின் கருணையை ப்பேசி நினைத்து வணங்கி மகிழ்வோம். இன்று என்ன செய்யலாம் என்று  யோசித்த போது கிடைத்த படங்கள் (அவன் அருளால் கிடைத்தது.) 

அதில் திருக்கச்சூர்   கோவிலுக்குப் பல வருடங்களுக்கு முன்  போனபோது எடுத்த சில படங்கள் கிடைத்தன. அந்த கோவில் மஹா சிவராத்திரி பதிவுக்கு ஏற்ற கதை கொண்ட தலவரலாறு அமைந்த கோவில். இந்தப் பதிவில் இடம்பெறுகிறது.

மற்றும் அலைபேசியில்  நான் எடுத்து சேமித்த படங்கள்  வாட்ஸ் அப்பில் வந்த படங்கள் கலந்த கலவையான பதிவு.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

இராசிபுரம் அம்மன் கோயில்கள்


தம்பி மகள் (மறுவீட்டுக்கு 20. 2. 2019 )மாப்பிள்ளை வீட்டில்  திருமண வரவேற்பு வைத்து இருந்தார்கள். மாப்பிள்ளையின் ஊரான  இராசிபுரத்திற்குப் போய் இருந்தோம். மருமகளுக்கு அலங்காரம் செய்துகொண்டு இருந்தார்கள்.

உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கோவில்களைப் பற்றி விசாரித்தேன்.  வரவேற்பு ஆரம்பிக்கும் முன்  வரும் வழியில் பார்த்த அனுமன் கோவில் போய் வருகிறோம் என்றோம், (வரவேற்பு நேரம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை- நாங்கள் மீண்டும் ஊர் திரும்ப வசதியாக வைத்து இருந்தார்கள்.) அவர்கள் அந்தக் கோவில் சீக்கிரம்  அடைத்து விடுவார்கள், அதனால் நித்தியசுமங்கலி மாரியம்மன் கோவில் போய் வாருங்கள் அருமையான கோவில் என்றார்கள். அப்படியே  அங்காளபரமேஸ்வரி கோவிலும் போய் வாருங்கள் என்றார்கள், மாப்பிள்ளையின் அப்பா. எங்களை அழைத்துச் சென்று கோவில்களைக் காட்ட அவர் தம்பியை உடன் அனுப்பினார்கள்.
கிளம்பி விட்டோம் கோவிலுக்கு
நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில்

திங்கள், 11 பிப்ரவரி, 2019

100வது பசுமைநடையின் தொல்லியல் திருவிழா





பசுமை நடையின் 100 வது பயணம், தொல்லியல் விழாவாக நடந்தது. 10 .2. 2019 ம் தேதி. கீழ்க்குயில்குடி சமணர் மலையில்.  மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் பத்து கி.மீ தொலைவில் சமணர் மலை அமைந்துள்ளது. காலை 6.30க்கு ஆரம்பித்தது விழா. மாலை 3.30 மணியிலிருந்து  மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கக் கலை அரங்கத்தில் இரவு 9 மணிவரை நடந்து நிறைவு பெற்றது.

முதலில் இந்த விழா  இரண்டு மூன்று முறை தேதி மாற்றப்பட்டதாம். ஆனால் விழாவிற்கு அழைத்த அன்பர்கள் மாற்றப்படவில்லை அவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புச் செய்து இருக்கிறார்கள்.


நான்  எப்போது 100வது நடைப்பயணம் வரும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று நடைப்பயணத்தில் கணுக்கால் வலியால் கலந்து கொள்ள முடியவில்லை. முகநூல் சகோதரி மீரா பாலாஜி அவர்கள் சொன்ன வைத்தியத்தைப் பின்பற்றினேன். அதனால் கால்வலி குறைந்து வருகிறது.  அவருக்கு நன்றி.

ஆண்டவன் சித்தம் நானும் இந்த 100வது நாள் விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து இருக்கிறார்.  


இந்தப் பதிவில் சமணர் மலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப்  பகிர்கிறேன்.

ஐயனார் கோவிலும் தாமரைத் தடாகமும் அழகாகக் காட்சி அளிக்கும் கீழக்குயில்குடி

திங்கள், 4 பிப்ரவரி, 2019

அபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி





திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை சேர்ந்தது.  திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக கொண்டது. தேவர்களும்அசுரர்களும்  பாற்கடல் கடைந்த போது வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர் இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம். அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.