செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

திறமைக்கு விருது




திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் எனக்கு இந்த விருதை அளித்து இருக்கிறார்கள். http://jaghamani.blogspot.in/
அவர்கள் நல்ல திறமையும் ஆற்றலும் உள்ளவர்கள்.
அவர்களுக்கு நன்றி.






எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்.

1. எனக்கு நல்ல இசையைக் கேட்கப் பிடிக்கும்.
2. எனக்கு சினிமா பாடல்கள் பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.
புதுப் பாடலும் நல்ல பாடலாய் இருந்தால் பிடிக்கும்.
3. இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.
4. நல்ல புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.
5. கள்ளமில்லா குழந்தைகளோடு விளையாடப் பிடிக்கும்.
6 .இறைவனைத் துதிக்கப் பிடிக்கும்.
7. தொலைக்காட்சி, இணையம் , பாடல், புத்தகங்கள் என்று இவற்றோடும்,
உறவினர்கள் மற்றும் நண்பர்களோடும் உரையாடியபடி இருக்கவேண்டும்.
(இது எதுவும் இல்லை என்றால் தனியாய் துண்டிக்கப்பட்டது போல் உணர்வேன்.)

நான் இவர்களுக்கு விருது வழங்க விரும்புகிறேன்:-

1.திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள். http://naachiyaar.blogspot.in



2.திருமதி. துளசி கோபால் அவர்கள்.http://thulasidhalam.blogspot.in




3.திருமதி. ஹுஸைனம்மா அவர்கள்.
http://hussainamma.blogspot.in

4.திருமதி. ராமலக்ஷ்மி அவர்கள். முத்துச்சரம் http://tamilamudam.blogspot.in

5. திருமதி. கீதாசாம்பசிவம் அவர்கள். எண்ணங்கள்.http://sivamgss.blogspot.in


இவர்கள் எல்லோரும் என்னை விட மிக சிறந்த பல்கலை வித்தகர்கள்.

பதிவுலகில் எல்லோருக்கும் இந்த விருது கொடுக்கலாம் அவ்வளவு சிறப்பாய் எல்லா துறைகளைப் பற்றி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஐந்து பேருக்கு அளிக்க வேண்டும் அதனால் ஐந்து பேருக்கு வழங்குகிறேன். இவர்கள் எல்லாம் மற்ற வித்தகர்களுக்கு வழங்குவார்கள்.

30 கருத்துகள்:

  1. வாழ்த்த வந்த இடத்தில் எனக்கும் காத்து நின்ற விருதை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டேன். மிக்க நன்றி கோமதிம்மா.

    தங்களுக்கும் தங்களால் விருது வழங்கப்பட்ட மற்றவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்!

    பிடித்தவற்றைப் பற்றிய பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  2. விருது பெற்ற உங்களுக்கும் விருதினை உங்களிடம் இருந்து பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் அம்மா....


    திருமண நாள் வாழ்த்துகள் அம்மா....

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராமலக்ஷ்மி, உங்களுக்கு அளித்த விருதைபற்றி சொல்வதற்குள் நீங்கள் வந்து மகிழ்வுடன் பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வாங்க வெங்கட், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    திருமணநாள் வாழ்த்துக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  5. \\ வெங்கட் நாகராஜ் said...
    விருது பெற்ற உங்களுக்கும் விருதினை உங்களிடம் இருந்து பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் அம்மா....


    திருமண நாள் வாழ்த்துகள் அம்மா....\\

    முதல்ல ஒரு ரீப்பிட்டே ;-))

    2வது வாழ்த்துக்கு ஒரு ஸ்பெசல் ரீப்பிட்டேய் ;-))

    பதிலளிநீக்கு
  6. விருது பெற்றுக்கொண்டதுக்கும், விருது அளித்ததுக்கும், என்னோடு சேர்ந்து பெற்றுக்கொண்டவர்க்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துகள். உங்களுக்குப் பிடித்தவை அனைத்தும் எனக்கும் பிடித்தவையே. பகிர்வுக்கும் நன்றி. இங்கே இன்று தைப்பூசம். உங்களுக்கெல்லாம் முடிந்திருக்கும், இங்கே இப்போ. ஆகவே எனக்கும் தைப்பூசத்திலேயே கிடைத்துள்ளதுக்கு இறைவனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா.........நேற்றுத் திருமணநாள் கொண்டாடிய கோமதி அரசு தம்பதிகளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

    விருந்துக்கு வந்த இடத்தில் விருது கொடுத்து அமர்க்களப்படுத்திட்டீங்க.
    அஞ்சு 'பஞ்ச்' ரத்தினங்கள்!!!!!

    மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

    தங்களுக்கு விருது அளித்தவருக்கு நன்றிகள்.

    தங்கள் மூலம் இன்று விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பு கோமதி, இத்தனை அன்புக்கு நான் என்ன சொல்லமுடியும். மனம் நிறைந்த மகிழ்ச்சி. பூக்களின் பிம்பம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.
    நீங்கள் பகிர்ந்துகொண்டிருக்கும் அனைத்தும் நம் எல்லோருக்கும் பொருந்தும்.
    இறைவனை வணக்குகிறேன் இது போலத் தோழமை கிடைத்ததற்கு.நன்றிமா.

    பதிலளிநீக்கு
  10. கோபிநாத், உங்கள் இரண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //எனக்கும் தைப்பூசத்திலேயே கிடைத்துள்ளதுக்கு இறைவனுக்கு நன்றி.//

    வாங்க கீதா சாம்பசிவம், உங்களுக்கும், தைப்பூசத்தில் விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சியே.

    //உங்களுக்குப் பிடித்தவை அனைத்தும் எனக்கும் பிடித்தவையே.//

    மிகவும் மகிழ்ச்சி.

    விருதை பெற்றுக் கொண்டதற்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. //விருந்துக்கு வந்த இடத்தில் விருது கொடுத்து அமர்க்களப்படுத்திட்டீங்க.
    அஞ்சு 'பஞ்ச்' ரத்தினங்கள்!!!!!//

    வாங்க துளசி, நீங்கள் சொல்வது உண்மைதான்.
    அஞ்சு பேரும், பஞ்ச ரத்தினங்கள் தான்.

    விருதைப் பெற்றுக் கொண்டதற்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார்,

    உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க வல்லி அக்கா, விருதைப் பெற்றுக் கொண்டதற்கு மகிழ்ச்சி.

    //இறைவனை வணக்குகிறேன் இது போலத் தோழமை கிடைத்ததற்கு.நன்றிமா.//

    நானும் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. விருது பெற்ற உங்களுக்கும், தாங்கள் விருது வழங்கியுள்ளவர்களுக்கும் வாழ்த்துகள் அம்மா....

    தாமதமாக வந்து திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களை போன்றவர்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    விருதினை உங்களிடம் இருந்து பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    இனிய திருமணநன்நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. "விருது பெற்ற உங்களுக்கும் விருதினை பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்"

    பதிலளிநீக்கு
  18. விருது கொடுத்து என்னைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். பெரியவர்களுக்கேயுரிய பெருந்தன்மை சிறியவர்களையும் வாழ்த்தி ஊக்குவிப்பது. மிகவும் மகிழ்கிறேன். என் பெயருக்கருகில் உள்ள பூங்கொத்தும் மிகவும் அழகாக, "versatile" ஆக எனக்குப் பிடித்த மாதிரி உள்ளது அக்கா.

    மிக மிக நன்றி. சீக்கிரமே எடுத்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. விருதுக்கு வாழ்த்துகள் கோமதிம்மா..

    பதிலளிநீக்கு
  20. விருது பெற்ற உங்களுக்கும் விருதினை உங்களிடம் இருந்து பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
    Here another parisu.
    அன்பின் சகோதரி தங்களுக்கு தரப்பட்ட விருது பற்றிய தகவலை இங்கு காணுங்கள்.
    http://kovaikkavi.wordpress.com/2012/02/11/23-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-liebster-blog/

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. தங்களை போன்றவர்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும்.//

    வாங்க ஆதி, உங்களுக்கு நிச்சியம் எப்போதும் எங்கள் ஆசிகள் உண்டு.

    இதேவிருது உங்களுக்கு கிடைத்து இருப்பதற்கு வாழ்த்துக்கள் ஆதி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க மாதேவி, உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க வியாபதி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஹுஸைனம்மா, விருதினை பெற்றுக் கொண்டதற்கும், மலர் கொத்து உங்களுக்கு பிடித்து இருப்பத்ற்கும் மிகுந்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க அமைதிச்சாரல், உங்கள் வாழ்த்துக்கு ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க வேதா, உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் விருதுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. உங்கள் பகிர்வு அருமை.விருது பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. "
    திருமண நாளில்
    திறமைக்கு விருது பெற்ற
    திருமதி பக்கங்களுக்கு
    சிறப்பான வாழ்த்துகளும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
  29. தங்களிடம் விருது பெற்ற திறமையானவர்களுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  30. விருது பெற்றமைக்கும் அளித்தமைக்கும் பாராட்டுக்கள். மேலும் வளமும் பெருமையும் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு