
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடக்கிறது. இறைவன் நடத்திய 64 திருவிளையாடல் நிகழ்ச்சியாக நடத்திக் காட்டப்படும். போன வருடம் வளையல் திருவிழா, புட்டுக்கு மண்சுமந்த திருவிழா பார்த்தோம்.
64 திருவிளையாடல்களில் 32 வது திருவிளையாடல்.
தாருகாவனத்து முனிவர்கள் மனைவியர் சாபம் நீங்க வளையல் விற்கும் வணிகராய் வந்து அவர்களுக்கு வளையல் அணிவித்து அவர்கள் சாபம் நீக்கி பலரும் காணும்படி விண்ணில் மறைந்தார்.
இன்று சோமசுந்தரக் கடவுள் வளையல் விற்ற திருநாள்.
நாங்கள் மீனாட்சி அம்மன் கோவில் போன போது வளையல் எல்லாம் அணிந்து சோமசுந்தரப்பெருமான் வளையல் விற்கப் போக ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.

மீனாட்சி அம்மன் கையில் வளையல் சரம்.

சுவாமி கையில் வளையல் சரம். ”வளையல் வாங்குவீர், வளையல் வாங்குவீர் “

சுவாமி பல்லாக்கு எல்லாம் வல்ல சித்தர் சன்னதி அருகிலிருந்ததால் சரியாக படம் எடுக்க முடியவில்லை மூங்கில் கம்பு கட்டி இருந்தார்கள் அருகில் போக முடியாமல் இருக்க.

தங்கவளை, வைரவளை விற்க வந்து இருக்கிறார்.

பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கும், நாங்கள் போன போது இவர்கள் மட்டும் இருந்தார்கள், முருகன், சண்டேஸ்வரர் எல்லாம் இனிமேல்தான் வருவார்கள்.

முரசு முதுகில் - இறைவன் வருவதைக் கட்டியம் கூற
வளையல் வணிகர் வந்தார்(இது போனவருஷப்படம்)
இறைவன் வளையல் வணிகராக வருவதால் குடை உபசாரம்(போனவருஷப்படம்)

கோவிலுக்குள்ளே பெரிய சந்தனக்கல்லில் சந்தனம் அரைத்துக் கொண்டு இருந்தார்கள், நான் எட்டிப் பார்த்தவுடன் சந்தனம் அரைக்கிறீர்களா ? நாளை இறைவனுக்கு தேவைபடும் சந்தனம் என்றார்கள். சந்தோஷமாய் நானும் , என் கணவரும் அரைத்தோம்.
அரைக்க போகும் முன் அவர்கள் சொன்னது நம் கையை துடைத்து விட வேண்டும் கையில் ஒட்டி இருந்தால், நெற்றியில் அணிந்துவிட கூடாது,முகர்ந்து பார்த்து விட கூடாது என்பதுதான். பெரிய சந்தனகட்டை என்பதால் அரைக்கும் போது நம் கையில் படவில்லை.
போன வருடம் இன்மையில் நன்மை தருவார் கோவிலில் எடுத்த படம் இந்த படம்..
இந்த கோவில் வாசலில் வளையல் விற்றதை போன வருடம் பார்த்தோம். பக்தர்கள் டப்பா டப்பாவாய் வளையல் கோவிலில் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அங்கு இருக்கும் மக்களுக்கு.
இம்மையில் நன்மைதருவார் கோவிலில் உள்ளே மூலவர் இருக்கும் இடத்தில் உள்ளே போகும் அன்பர்கள் எல்லோருக்கும் குருக்கள் இரண்டு வளையல் கொடுத்தார்.
வாழ்கவளமுடன்.