புல் புல் பறவையும் நினைவுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புல் புல் பறவையும் நினைவுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஜூன், 2017

பாடிப் பறந்த பறவை ( புல் புல்)


காகங்கள்  விடாமல்  கரைந்து கொண்டு இருந்தன. என்ன என்று பால்கனி வழியாக எட்டிப்பார்த்தால் புல்புல் பறவை கீழே இறந்து கிடந்தது. 

அன்று காலையில் கூட பறந்து பறந்து தன் இணையுடன் குதூகலமாய் விளையாடிக் கொண்டு இருந்தது. எதிர்வீட்டு மாடிக்கு வருவதும், கேபிள் ஒயரில் அமர்வதும் எங்கள் வீட்டில் வைத்து இருக்கும் உணவைக் கொத்தி விட்டுச் செல்வதும்  என்று குதூகலமாய்ச் சுற்றிப்பறந்த புல்புல் பறவை தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து வருத்தமாய் இருந்தது.




                                                 பூச்சியை பிடித்து செல்கிறது.


மைனாக்கள் புல்புல் பறவையைக் கொத்திக் கொத்தி இழுத்துச் சென்றது. வளாகத்தைக் கூட்டும் பெண் அந்தப்  பறவையை ஓரமாய் ஒதுக்கி அதன் மேல் பழைய துணியைப் போட்டு மூடி வைத்தவுடன் காகம், மைனா எல்லாம் சிறிது நேரத்தில்  அந்த இடத்தை விட்டுச் சென்றன.

நேற்று வரை என்னை மகிழ்வித்த பறவை இன்று இல்லை என்று நினைக்கும் போது மனம் கனத்துப் போகிறது. ஏன் இப்படி ஆச்சு என்ற கேள்விகள் மனதில் . இணையைப் பிரிந்த மற்றொரு புல்புல் பறவையை இரண்டு நாளாகக்  காணோம்.

மாயவரத்தில் இருக்கும்போது புல்புல் பறவை நான் மொட்டைமாடியில் வைக்கும் உணவை எடுக்க வரும். அதிகாலை முதல் மாலை வரை அதனைப்பார்க்கலாம். பக்கத்து வீட்டு தென்னைமரத்தில் ஊஞ்சல்  ஆடும்.
கொடிக் கம்பியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும். எங்கள் குடியிருப்பில் மற்றொரு பக்கம் இருந்த மாடிப்படியின் அருகில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து குஞ்சுகளுக்கு உணவூட்டுவதை, காத்திருந்து காத்திருந்து என்று பதிவு போட்டு இருந்தேன் .அப்போது எல்லாம் சின்ன காமிரா. அதிக தூரம் ஜூம் செய்ய முடியாது.


அதிகாலையில் 
மதிய வேளையில்
மதியம் 
மதியம்
மாலை நேரம் தென்னை மர ஊஞ்சல்
மாலை நேரம் உல்லாசமாய் ஊஞ்சல் ஆடும்   புல்புல் 

வாழ்க வளமுடன்