ஒரே கொம்புதான் வீடு கட்டப்படும் இடம்.
.
ஒரு கொம்பைச் சுற்றி சுற்றிக் கட்டி முதலில் சிறிதாக ஆரம்பிக்கும் சுற்று ,வர வர குறுகி. சிறுதுவாரமாய் மாறுகிறது.
பாதாம் காய்கள் கொத்து கொத்தாய்
வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு ஓட்டலில் பாதாம் மரத்தில் இந்த கூடு இருந்தது. பச்சை நாரால் கட்டப்பட்டு இருந்தது கூடு இன்னும் முடிவடையவில்லை அங்கு இருந்த காவல்காரரிடம் கேட்டேன் இது எந்த பறவை கூடு கட்டுகிறது என்று பார்த்தீர்களா? என்று அவர் தெரியாது அம்மா என்றார். அடுத்த பத்து நாள் கழித்து மறுபடியும் வைத்தீஸ்வரன் கோவில் போன போது இந்த கூட்டைப் பார்க்கவே அந்த ஓட்டல் போனோன் ஆனால் என்ன ஏமாற்றம் ! கூட்டைக் காணோம் ஒரு நாள் காற்று மழையில் கூடு கலைந்து போய் விட்டது . ஐயோ! பறவைக் கூடு கலைந்து விட்டதே ! பறவையின் உழைப்பு அவ்வளவும் வீணாகி விட்டதே !என்று வருத்தமாய் இருந்தது.
நான் நினைத்துப் போனது, எந்தப் பறவைக் கூடு கட்டி இருக்கிறதோ அது அங்கு வரும், அப்போது பார்த்து அதைப் படம் எடுத்து விட்டுச் சேர்த்து பதிவு போடலாம் என்று நினைத்த நினைப்பு ஏமாற்றம் ஆனது.
உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் இது எந்த பறவையின் கூடு என்று. கூட்டின் அடியில் அதன் வாயிலை அமைத்து இருப்பதால் தூக்கணாங் குருவியாக இருக்குமோ என்ற நினைப்பு.
வாழக வளமுடன்
------------------------