புதன், 24 டிசம்பர், 2025

அமைதியான இரவு பாலன் பிறந்த இரவு




நள்ளிரவில் மாட்டுதொழுவமதில் பிறந்த பாலகனை கொண்டாடும்  பண்டிகை

பேரன் கிறிஸ்தும்ஸூக்கு தயார் செய்த அற்புத நகரம்

உலகம் முழுவதும் உள்ள கிறித்துவ மக்கள்  அனைவருக்கும்  கிறிஸ்துமஸ் பண்டிகை நல் வாழ்த்துகள்.


ஏழை எளிய மக்களுக்கு,  குழந்தைகளுக்கு மற்றும் உற்றார் உறவுகள், நட்புகளுக்கு   பரிசு பொருட்களை வழங்கி  மகிழ்ச்சி படுத்தும்  நாளாக, சாண்டாகிளாஸ்  வருகையை எதிர்பார்க்கும் நாளாக  கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
  
 ஏசு பாலனை  வரவேற்க வீடுகளில் வண்ணவிளக்கு ,மற்றும் நட்சத்திரம் 
தொங்கவிடுவது  ,  குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்காரம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை.  மதசார்பற்ற பண்டிகையாக இப்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் மகன், மகள்  வீட்டில் அலங்கரிக்கப்பட்ட  கிறிஸ்துமஸ்மரம் மற்றும் பாடல்கள் இடம் பெறுகிறது. 

திங்கள், 15 டிசம்பர், 2025

கார்த்திகை தீபங்களும், சோமவார சங்காபிஷேகமும்



1 ஆம் தேதி மதுரை  "இம்மையிலும்  நன்மை தருவார்" திருக்கோயிலுக்கு போய் இருந்தேன். அன்று 3 வது சோமவாரம் . காலையே சங்குகள் தரிசனம் கிடைத்தது, மாலை அபிஷேகம் நடக்க  ஹோமம்   ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. 

செவ்வாய், 25 நவம்பர், 2025

செவ்வாய், 18 நவம்பர், 2025

கார்த்திகை சோமாவார சங்காபிஷேகம்



காவேரி அம்மன்


நேற்று கார்த்திகை முதல் சோமவார சங்காபிஷேகம்
அம்மா வீட்டுக்கு அருகில் இருக்கும் கோகர்ணேஸ்வர்ர் கோயிலில் நடந்த சங்காபிஷேகம் நிகழ்வை மதினி அனுப்பி வைத்தார்கள்.
வீட்டிலிருந்தே தரிசனம் செய்து விட்டேன்.
மதினி வீட்டு காவேரி அம்மன் படமும் இருக்கிறது . தங்கை மதினி வீட்டு பூஜையில் கலந்து கொண்டு காவேரி அம்மன் படம் அனுப்பி வைத்தாள்.

ஜப்பசி மாதம் முழுவதும் காவேரிஅம்மன் கொலு இருப்பாள் மதினி இல்லத்தில் , நிறைவு நாளில் எடுத்த படம் .

இந்த பதிவில் மதினி அனுப்பிய சங்காபிஷேக படங்கள் இடம்பெறுகிறது அவர்கள் வீட்டு காவேரி அம்மன் படங்களும் இடம் பெறுகிறது.

வெள்ளி, 31 அக்டோபர், 2025

ஹாலோவீன் கொண்டாட்டம்





வெளி நாட்டில் அக்டோபர் மாதம் கடைசி நாள் கொண்டாட படும் பண்டிகை  "ஹலோவீன்" புனிதர்" அல்லது "புனிதமானது" என்று பொருள்படும். "ஹாலோ என்பது  "அனைத்து புனிதர்களின் மாலை" என்று பொருள் முன்னோர்கள் வழிபாடாகவும் நடக்கிறது. 

திங்கள், 27 அக்டோபர், 2025

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா



கந்த சஷ்டி சிறப்பு பதிவாக    தொடர்  பதிவு செய்து கொண்டு

இருக்கிறேன்.  

இன்று   கந்த சஷ்டி - ஆறாம் நாள் 

இன்று ஆறாம் படை வீடு  பழமுதிர்ச்சோலை இடம் பெறுகிறது.  

மதுரை வந்த பின் நிறைய தடவை பழமுதிர்ச்சோலை முருகனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது,  ஆங்கில புத்தாண்டு, மற்றும் கிருத்திகை தோறும் தரிசனம் செய்து வருவோம்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

திருத்தணி முருகா தென்னவர் தலைவா !


     திருத்தணி   சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன்   - நன்றி கூகுள்


குன்றுதோறாடலில் இந்த திருத்தணிகை

முருகம்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணிகை. சுவாமியை  தணிகாச்சலம்  என்றும் அழைப்பர்.



அழகான கோபுரம். நன்றி - கூகுள்



அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத்   தணிக்கும்  இடமாக இந்த தணிகைமலை விளங்குகிறது.

வள்ளியை மணந்த இடம் திருத்தணி

இந்த பதிவில் திருத்தணிகை திருப்புகழ் இடம்பெறுகிறது.

இதற்கு முந்திய பதிவுகள்

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் -கந்த சஷ்டி முதல் நாள் பதிவு

திருப்பரங்குன்றம் திருப்புகழ் கந்த சஷ்டி  - இரண்டாம் நாள்  நாள் பதிவு

வேலை வணங்குவது எமக்கு  வேலை - மூன்றாம்  நாள்  பதிவு

சுவாமிமலை வாழும் குருநாதா சரணம் !-  நான்காம் நாள் பதிவு