சனி, 15 மார்ச், 2025

சிவப்பு நிலா

ஹோலி பண்டிகை அன்று சந்திர கிரகணம் நிகழும் என்று பேரன் சொன்னான் இரவு 10.30 க்கு எடுக்க ஆரம்பித்து காட்டிக் கொண்டு இருந்தான். பின்  இரவு 12.30 வரை  குளிரை பொருட்படுத்தாமல் படி படியாக நிலா நிறம் மாறுவதை எடுத்து எனக்கு அனுப்பி விட்டான்.


இங்கே பார்க்க முடியாது ஆச்சிக்கு அனுப்பி வை என்றேன் , அனுப்பி வைத்தான். 24 படங்கள் அனுப்பி வைத்தான். அதில் சில படங்களை தேர்வு செய்து இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

திங்கள், 10 மார்ச், 2025

ஹர்ஷவர்த்தனர்


ஹர்ஷவர்த்தனர் .கி.பி 606-647 வரை ஆட்சி செய்தார்

மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரியான ராஜ்யஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயை தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்.அதை அறிந்த ஹர்ஷவர்த்தனர் மற்றும் ராஜ்ஜியஸ்ரீயின் அண்ணனான ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான். அதன் பின் சூழ்ச்சியால் ராஜ்யவர்தனர் பேரரசர் கெளடப் பேரரசர் சசாங்கனால்    கொல்லப்பட்டான்.

அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்; ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை   பழிதீர்த்து, தன் சகோதரி ராஜ்யஸ்ரீயைமீட்க  தீர்மானித்தார். ராஜ்யஸ்ரீ சிறையிலிருந்து தப்பி விந்திய மலைச்சாரலுக்கு ஓடி விட்டார். அவரை தேடி அழைத்து வந்தார் ஹர்ஷவர்த்தனர். அதன்பின்  நாட்டின் நலத்தில் கவனம் செலுத்தினார்.




இந்தியாவிற்கு வந்த சீன யாத்திரிரிகர் யுவான்  சுவாங் குறிப்புகளிலிருந்து  ஹர்ஷர்  ஆட்சி சிறப்பை அறியலாம்.
நாலந்தா பல்கலைகழகம் குமார குப்தரால்  தோற்றுவிக்கப்பட்டது. ஹர்ஷர் காலத்தில் உலக புகழ் பெற்றது.

இவர் நாகானந்தம், ரத்னாவளீ, ப்ரியதர்சிகா என்ற மூன்று சமஸ்கிருத நாடகங்களை இயற்றியுள்ளார். இவை மன்னரின் அவைப் புலவர்களான பாணபட்டர் முதலியோரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு கருத்து உண்டு. இந்த நாடகங்களுக்கு சமஸ்கிருத இலக்கியத்தில் முக்கியப்பங்கு உண்டு.


பிராகையில்  நடைபெற்ற  திருவிழாவில் மக்களுக்கு வெகுமதிகளை அள்ளி அள்ளி கொடுத்து விட்டு அவை தீர்ந்து போன பின் , தன் பட்டாடைகளையும் தானம் அளித்து விட்டு தன் சகோதரியிடம் ஒரு ஆடையை வாங்கி அதை அணிந்து வந்ததாக என் சரித்திர ஆசிரியர் சொல்வார்.


ஹர்ஷர் முதலில் சிவன், சூரியன், புத்தர் ஆகிய கடவுளர்களை வணங்கினார். பிறகு மகாயான  புத்த மததிற்குப் பேராதரவு அளித்தார். "பிராகையில் நடைபெறும் திருவிழாவிற்கு ஐந்து கண்டங்களிலுள்ள ஏரளமான  வெகுமதிகளை  அளித்தார் .

புத்தர், சிவன், சூரியன் ஆகிய திருவுருவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.


ஹர்ஷர் எவ்வளவு நல்ல குணங்கள் உடையவராக இருந்தார்  என்பதை  ஹர்ஷர்  சாதனைப்படைத்த பேரரசரின்  சரித்திரம் என்ற நூலில் இருந்து  கொஞ்சம்  கீழே:-   

விகடன் பிரசுரம் ஆசிரியர்  அ. கணேசன் அவர்கள் நூலில் உள்ள சிறிய முன்னுரை.  பகுதி  133  ரூபாய் என்று போட்டு இருக்கிறது.


//இந்தியாவை ஆட்சி செய்த முற்கால அரசர்களில் சிறந்தவர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின், தேசத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர் பேரரசர் ஹர்ஷர். ஹர்ஷரின் சாதனைகளை மட்டுமல்ல பண்டைய இந்தியர்களின் திறமைகளையும், கலைகளையும் இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் அ.கணேசன். ஹர்ஷர் போரில், நிர்வாகத்தில் மட்டும் சிறந்தவர் அல்ல கலைகளிலும் சிறந்தவர்.

கலைகளையும், இலக்கியத்தையும் மக்களுக்காகவே அவர் படைத்தார். தான் இயற்றிய நாகானந்தா நாடகத்தில் ஹர்ஷர் கீழ்க்காணும் வரத்தைத் தேவதையிடம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறார். ‘மேகங்கள், குறித்த காலத்தே மழைபொழியட்டும். மக்கள் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து பச்சை ஆடையை நிலத்துக்கு அணிவிக்கட்டும். எல்லா மக்களும் நற்செயல்களைச் செய்து குவிக்கட்டும். எல்லா அழிவிலிருந்தும் நாடு விடுபடட்டும். மக்கள் பொறாமையற்ற உள்ளங்களுடன் களிக்கட்டும். உறவினர், நண்பர்களால் இடையூறு அற்ற இன்பதைச் சுவைக்கட்டும்’. அதனால்தான் அவர் அரசர்களில் சிறந்தவராக இருந்தார்! கங்கை நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார். அரசாங்கப் படகுகளும், தனியார்ப் படகுகளும் அதிகமாகக் கங்கையில் காணப்பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன.

 ஹர்ஷரின் ஆட்சி வலபி, ஒடிசாவின் சில பகுதிகள் வரை நீடித்தது. அரசாங்க, வணிக, போர்த் துறைகள், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்தன. ஹர்ஷப் பேரரசில் யானைப் படை முக்கிய நிலையில் இருந்தது. ஹர்ஷரின் விருப்பமான யானைகள் போர்க்களத்தில் பல பணிகளுக்கு உதவின என்பதை பாணர் விவரிக்கிறார். எதிரிகளின் கூடாரங்களை முட்டிக் குழப்பம் விளைவிக்கவும், தந்தத்தால் பகைவர்களை நசுக்கவும், வெறி பிடித்து ஓடிப் பகைவர்களைக் கொல்லவும் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி எண்ணற்றத் தகவல்களை விறுவிறுப்பான நடையில் ஆதாரங்களுடன் விளக்கிச் சரித்திரத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் நூல் ஆசிரியர்!//

இவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவராக இருந்ததால் இறைவன் 41 வது வயதிலேயே  கூட்டி சென்று விட்டார் போலும்.



இதற்கு முன்பு போட்ட பதிவுகள்.

சரித்திரம் தொடரும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 4 மார்ச், 2025

அன்புடைய மாமனும், மாமியும் நீ

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

-திருநாவுக்கரசர் தேவாரம்.

எல்லா உறவுகளமாய் இறைவன் இருக்கிறான். மாமன் , மாமி உறவு மிகவும் முக்கியமானது.

குடும்ப உறவுகள் பற்றி நிறைய பேசி இருந்தார்  உறவுகள் என்ற தன் பதிவில் திரு. ஜி.எம் .பாலசுப்பிரமணியம் சார்.

//இரண்டு பதிவுகள் பெண்களை மையமாக வைத்து எழுதினேன் நகைச் சுவையே முக்கிய நோக்கம். ஆனால் நகைச் சுவையானாலும் பெண்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது இந்தப் பதிவு உறவுகளை நான் காணும் விதத்தில் முடிந்த அளவு விருப்பு வெறுப்பில்லாமல் யதார்த்த உலகில் காண்பவற்றை வைத்து எழுதி இருக்கிறேன். கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்தப் பதிவைத் தொடராக்க விரும்புகிறேன். பதிவுலகில் கோலோச்சும் என் மதிப்பிற்குரிய பெண்பதிவர்கள்

திருமதி.கீதா சாம்பசிவம்
திருமதி கோமதி அரசு,
திருமதி இராஜராஜேஸ்வரி
திருமதிகீத மஞ்சரி
திருமதிராஜலக்ஷ்மி பரமசிவம்//

வியாழன், 13 பிப்ரவரி, 2025

உலக வானொலி தினம்

 

பிப்ர்வரி 13  உலக வானொலி நாள்


உலக வானொலி தினம் 2011 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று யுனெஸ்கோ சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. 


(மார்ச்,5,2012) ல் போட்ட பதிவை மீள் பதிவாக 


2017   பிப்ரவரி 13 ல் போட்டு இருக்கிறேன்.

பின்னூட்டம் எல்லாம் படித்து பாருங்கள்.


தமிழகத்தில் மின்சாரம்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போது வானொலிப் பற்றி கட்டுரை எழுதி இருந்தேன் , அதை இன்று உலக வானொலி தினத்தில் மீள் பதிவாய் பதிவிடுகிறேன்.

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின் வெட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. இணையதளத்தில் இணைய முடியவில்லை. இன்வெர்ட்டருக்கோ, சார்ஜ் ஆகும் அளவு மின்சாரம் இல்லை. இப்படி இருக்கும் போது நமக்கு கை கொடுப்பது பாட்டரி போடும்வசதி
 உள்ள   டிரான்ஸ்சிஸ்டர்தான்..

நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தும் இடையூறுகளால் , முன்பு நாம் தெளிவாக கேட்டுக்கொண்டு இருந்த மத்திய அலை வரிசை, சிற்றலை வரிசையில் வானொலி 
நிகழ்ச்சிகளை சரிவர கேட்க முடியாமல் இருந்தது. பண்பலையில் மட்டுமே கேட்க முடிந்தது.
 இப்போது மின்சாரத் தடையால் மற்ற மின்சாதனங்கள் இயங்காததால் மத்திய அலை
 வரிசையை நன்கு கேட்கமுடிகிறது. மின் பற்றாக்குறையால் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இது !

முன்பெல்லாம் ,வானொலியில் காலை ‘வந்தே மாதரம்’, ‘மங்கள இசை’, ‘பக்தி பாடல்’, ‘
நேயர் விருப்பம்’, சினிமா பாடல், நாடகம், ‘இசை விருந்து’ என்று, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒலித்துக் கொண்டே
 இருக்கும். அந்த நாளும்இப்போது மீண்டும் வந்து விட்டது 
மின்சாரப் பற்றாக்குறையால.




வெகு நாட்களுக்குப் பிறகு டிரான்ஸிஸ்டருக்கு சென்ற வெள்ளிக்கிழமை யன்று பேட்டரி 
போட்டு காலை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தேன்.

குறள் அமுதம், சான்றோர் சிந்தனை, மங்கள இசை ஆங்கிலத்தில் செய்திகள் முடிந்து பக்தி இசை தொடங்கியது. எனக்கு பிடித்த பாடல்கள் ‘முருகனுக்கு ஒருநாள் திருநாள் ‘ என்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல், எல்.ஆர். ஈஸ்வரியின் ‘இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே ! அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே! எல்லாம் கிடைக்குமே!’ என்ற பாடலும் ,பி. லீலாவின் ‘வரவேண்டும் எனது அரசே! அருணோதய ஒளி பிரகாசா!’ என்றபாடலும், ‘யா அல்லா!ஈடில்லா ஏகாந்தம் நீயே அல்லா! யார் இங்கே வேறே கதியே! மாமறையே போற்றும் நீதியே! நாடியே வேண்டினேன்’ என்று உருகி பாடினார் நாகூர் ஹனிபா. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு கொஞ்சம் நில்லு எங்கள் திருநபியிடம் போய் சொல்லு சலாம் சொல்லு , என்ற பாடலும் நாகூர் ஹனீபா பாடினார். இந்த பாடலும் மிக நன்றாக இருக்கும். எனக்கு தெரியாத இன்னொரு பாடகர் ‘இறை தூதர் நபியே! மறை தூதர் நபியே! ‘என்று பாடினார். 

எல்லா மதத்திற்கும் உள்ள பாடலை வானொலிதான் இன்றும் இணைத்துத் தந்துகொண்டு
 இருக்கிறது.


வானொலி நிலயம்.டில்லி படம் - கூகிள்

பாடல் முடிந்து ‘விவசாய நிகழ்ச்சி’, ‘நலம் நேரம்’ என்று டாக்டரின் ‘ஆலோசனை நேரம்’, மாநிலச் செய்திகள்:
அடுத்து ‘பாடும் பண்பலை’,அடுத்து ‘தகவல் நேரம்’,என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

மீடியம் அலை வரிசையும் நன்கு கேட்பதால் அதில் 
வெள்ளிக்கிழமை வைக்கும் ‘காந்திய சிந்தனை’யை கேட்க முடிகிறது. ‘வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ! ‘பாடலை இசை அரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் தேன்குரல் இழைய இழைய பாடிய பாடலைக் கேட்டு ரசித்தேன். சத்திய சோதனையிலிருந்து சிலபகுதிகளைப் படித்தார்கள். அன்று காந்தி மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற அதில் பயணித்து காசி சென்றதை காசி பயணம் என்ற தலைப்பில் எழுதியதைப் படித்தார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று மகளிர் சங்கத்தின் பல்சுவை நிகழ்ச்சி, வைத்தார்கள். கஸ்தூரிபாய் மகளிர்சங்கம் தொகுத்துஅளித்த பல்சுவை நிகழ்ச்சி. பாரதியார் பாட்டு, ஹோலி பண்டிகை பற்றிய செய்தி, நாடகம் முதலியவை இருந்தன. நாடகத்தில் கொடுக்கப் பட்ட சிறிது நேரத்தில் படிப்பினை ஊட்டும் கதை ஒன்றைச் சொல்லி விட்டார்கள், நாடகத்தைக் காட்சி காட்சியாய் விவரித்த போது மிக நன்றாய் இருந்த்து.

மீரா பஜன், சமையல் குறிப்பு, குழந்தைப் பாதுகாப்பு என்று பல நிகழ்ச்சிகள் இருந்தன. வெயிலில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வாராமல் பாதுகாப்பது, பரீட்சை நேரத்தில் குழந்தைகளை நன்கு சாப்பிட வைத்துச் சரியான நேரத்தில் தூங்கவைப்பது, சரியான நேரத்தில் படிக்கவைப்பது என்று நிறைய டிப்ஸ்கள் வழங்கி அசத்தி விட்டாட்கள்.


மகளிர் தின வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று. . அதில் கணினி சாதனையாளர்


 கே. புவனேஸ்வரி அவர்கள் பேசினார்கள். கணினியின் சேவை குறித்து பேசினார். 
“கண் தெரியாதவர்களும் கணினியை இயக்கி திருக்குறளை படிக்கலாம் ; தமிழில் எழுதுபவர்கள் நிறைய நல்ல கட்டுரைகள எழுதுகிறார்கள், அதைப் படிக்கலாம் ; குழந்தைகள் கணினியில் யாரோடு பேசுகிறார்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனமாய் பார்த்து அவர்களை வழி நடத்த வேண்டும். பெண்கள் ஐ.டி துறையில் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வேலையை மனபூர்வாமாக் செய்யவேண்டும்.அழுகை, கோபம் இரண்டையும் பெண்கள் விட வேண்டும், மென்மை தனமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்று பெண்கள் முன்னேறுவதற்கான சில வழிகளைக் கூறினார்கள். 

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி அரசின் தலமைச் செயலர் சத்தியவதி அவர்கள் ‘பெண்மையைப் போற்றுதும்’ என்ற தலைப்பில் பேசினார்கள். 

“பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும், வறுமை காரணமாய் சிசுக்கொலையை செய்கிறவர்களை விட செல்வந்தர்கள் தான் இந்த செயலை அதிகமாய் செய்கிறார்கள். கீழ் மட்டத்து மக்களை விட உயர் மட்டத்து மக்கள், படித்த பணக்காரர்கள் தான் பெண்சிசுக் கொலையைச் செய்கிறார்கள். இதற்கு உதராணம் பஞ்சாப் என்றார்கள். அங்கு அதிகமாய் பெண் சிசுக் கொலை நடை பெறுகிறது ” என்றார்கள்..

பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாய் செயல் பட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் கணவர், சுற்றம் சொல்படி நடக்க வேண்டி உள்ளது. அவர்கள் சுத்ந்திரமாய் செயல்பட வேண்டும் “என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

“பெண்கள் ஆண்களுக்கு சமமாய், ஐ.டி துறையில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்யும் போது மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
அதற்கு ஆண்கள் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டும் ” என்றார்கள் 

“ஆண்கள் வீட்டு வேலை செய்ய கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இருபாலரும் மனமாற்றம் பெற வேண்டும். பெண்மை வாழ்க! என போற்றுவோம்” என்றார்கள்.

எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை இச்சமயத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன் 


வானொலி நிகழ்ச்சிகள் பற்றி மேலும் பார்ப்போம்:

முன்பு எல்லாம் வியாழக்கிழமைகளில் நாடகம், ஞாயிறுகளில் சினிமா ஒலிச்சித்திரம் என்று வானொலியில் நிகழ்ச்சிகள் தருவார்கள். 

‘மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித்தனம்’ என்ற நாடகம் நன்றாக இருக்கும்.


படம் -கூகிள்

நல்ல இசை கச்சேரிகள், ‘விரும்பிக் கேட்டவை’ என்ற சினிமா பாடல்கள் தொகுப்பு, ‘ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’ வழங்கும் குழந்தைகள் நிகழ்ச்சி, சேர்ந்திசை, நிலைய வித்வான் களின் வாத்திய இசை, எல்லாமே மறக்க முடியாதவை.



படம் - கூகிள்

வானொலியில் தர இருக்கும் நிகழ்ச்சிகளை ‘வானொலி’ என்ற பத்திரிகை மூலம் முன்னதாக அறிந்துகொள்ளலாம். அதை என் கணவர் வாங்குவார். நல்ல நிகழ்ச்சிகளை அடிக்கோட்டிட்டு வைத்து இருப்பார்கள் மறக்காமல் கேட்க.

இசைச்சாரலில்’ வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு கர்நாடக இசை கேட்கலாம்.



 டிரான்ஸ்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் போது என் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது விட்டது. 1970-ஆம் ஆண்டு. நானும் என் அண்ணனும் ‘விவிதபாரதி’யில் போட்டி போட்டுக் கொண்டு இந்திப் பாடல், ‘தேன் கிண்ணம்’ கேட்டு மகிழ்ந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.கிரிக்கெட் நடக்கும் காலங்களில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வானொலி என்றால் இலங்கை வானொலியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வர்த்தக ஒலிப்பரப்பை எல்லோரும் விரும்பிக் கேட்பார்கள். தமிழ்நாட்டில் ஒலிக்காத இடம் இருக்காது. 
இலங்கை வானொலி என்றால் திரு. மயில்வாகனன் அவர்களை மறக்கமுடியாது என்று என் கணவர் கூறுவார்கள்.


இலங்கை வானொலியில் தேசிய ஒலிபரப்பில் சிவன் ராத்திரி சமயம், கோயில் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்வார்கள். கந்த சஷ்டி சமயம் சஷ்டி கவசம், ஒலிபரப்புவார்கள்.

அது ஒரு பொற்காலம் !

முன்பு மழைக்காலத்தில் டிரான்சிஸ்டருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் , வெயில் வரும் போது டிரான்சிஸ்டரை காயவைத்து எடுப்போம். விடாத மழையால் மின்சாரம் தடைபடும் போது வானொலி கேட்க முடியாது. டிரான்சிஸ்டர்மட்டுமே கதி. அதனால் அப்போது வரும் பாட்டரி விளம்பரங்கள் நிறைய வரும் வாரப்பத்திரிக்கையில்.


ரேடியோ விளம்பரங்கள், இப்போது குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போல ரேடியோ கேட்ட காலங்கள்.


 அம்மாவின் கதை சேமிப்பில் இடையில் வரும் விளம்பரங்க்கள்.


சென்னை, மதுரை, கோவை போன்ற நகரில் நிறைய எஃப் எம் ஒலிபரப்புகள் கேட்கிறது. எங்கள் மயிலாடுதுறையில் சில எஃப் எம் கள்தான் கேட்கும். காரைக்கால் பண்பலை நன்கு கேட்கும் அதில் இன்று ஒரு தகவல் அளித்து வந்த திரு.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களை மறக்க முடியாது.

தினம் ஒரு தலைப்பில் நேயர்களை பேச வைப்பது, விடுகதை நேரம் அது இது என்று 

இப்போதும் நாள்தோறும் காரைக்கால் வானொலி நிலையம் புதுச் செய்திகளை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. 


அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள்.

அதில் பத்தாவது கேள்வி தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? என்று அதற்கு என் பதில் இனிய பாடலகள் கேட்பது தான் .


10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

//தனியாக இருந்தால்  பாடல் கேட்பது பிடிக்கும்,  அதுவும் நல்ல பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.  தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள், அதில் பாடல்கள்,  கேட்பேன் தனிமையை இனிமை ஆக்குவது இசைதான். மன அமைதி தருவது இசை. தனிமையை போக்குவது இசைதான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் பாடல்கள் கேட்டுக் கொண்டு செய்வது எனக்கு பிடித்த ஒன்று.//


வானொலி கேட்பதையும்,. புத்தகம் வாசிப்பதையும், தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தவுடன் மக்கள் மிகவும் குறைத்துக் கொண்டார்கள். இப்போது மறுபடியும், வானொலி கேட்பதும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமும் வந்து கொண்டு இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் விற்கும் புத்தகங்கள் அதற்கு சாட்சி. 

மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டதும் பழைய நினைவுகள் வந்து இளமை திரும்பியதில் மகிழ்ச்சிதானே! 


அம்பாள்டியாளுக்கு நான் கொடுத்த பதில்களை படித்துப்பாருங்கள்.

9 வது கேள்விக்கு நான் கொடுத்த பதில் :-

 9 .உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பிறருக்கு துக்கம் என்றால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது நம் பண்புதானே!

அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்களை தைரிய படுத்துவேன். அவர்கள் எங்கும் போக வில்லை உங்களுடன் தான் இருக்கிறார்கள் கவலை படாதீர்கள்  என்று. முன்பு நம் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள் எண்ணெய் முந்தியா? திரி முந்தியா என்று  யார் முந்தி செல்வார்கள் யார் பிந்தி செல்வார்கள் என்று தெரியாது. இறைவன் எப்போது நாம் இந்த உலகத்திற்கு வர வேண்டும், எப்போது அவனிடம் வரவேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து விடுகிறார்.  இருக்கும் வரை அவர் நினைவுகளுடன் வாழுங்கள் என்று ஆற்றுப்படுத்துவேன்.


முன்பு அம்பாள்டியாளுக்கு  சொன்ன பதில்தான் அது இப்போது எனக்கு பொருந்துகிறது.

10 வது கேள்விக்கு நான் கொடுத்த பதில் இப்போது பொருந்துகிறது.

 இப்போது தனியாக இருக்கும் போது  நான் செய்வது. மகன் வாங்கி கொடுத்த  ரேடியோவில்  நிறைய எஃப் எம் ஒலிபரப்புகள், மற்றும் கர்நாடக இசை, பக்தி பாடல்கள், இசை அமைத்தவர்கள்  பாட்ல்கள், பின்னணி பாடியவர்கள் , இந்தி பாடல்கள் அனைத்தும் கேட்டு வருகிறேன்.  


வானொலி தின வாழ்த்துகள்.

                               வாழ்க வையகம் !  வாழ்க வையகம்! வாழ்கவளமுடன் ! 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 10 பிப்ரவரி, 2025

தொடரும் வரலாறு





சேர, சோழ , பாண்டிய நாடுகள்

வரலாறு முக்கியம்  முந்திய பதிவு  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன். இந்த பதிவில் மேலும் வரலாறு  தொடர்கிறது . 

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

வரலாறு முக்கியம்


அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்  இந்த பதிவில் பதிவு செய்யப்பட்ட  படங்கள் பல வருடங்களாக நான் பாதுகாத்து வைத்து இருப்பது.  நான் 10 வது படிக்கும் போது(1971)விருப்பபாடமாக வரலாற்றை தேர்ந்து எடுத்தேன். அப்போது தயார் செய்தது.

நம் சக பதிவர் நெல்லைதமிழன் அவர்கள்  எங்கள் ப்ளாக்கில் 

நாங்கள் தரிசனம் செய்த  கோயில்கள் என்று ஒவ்வொரு ஞாயிறும்    பதிவு போட்டு வருகிறார்.   வரலாறு  சொல்லி அவர் பார்த்த கோயில் படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த வார பதிவில்  சோழர் வரலாறு சொல்கிறார்.  யாருக்கு பின் யார் என்று  அவர்கள் ஆண்ட காலம் எல்லாம்   வரிசை படுத்தி இருந்தார்.

உங்கள் பதிவை படித்தவுடன் (அவருக்கு கொடுத்த பின்னூட்டத்தில்)  நான் 10ம் வகுப்பில் வரலாற்றை விருப்பபாடமாக எடுத்த போது இப்படி அரசர்கள்  ஆண்ட காலத்தை  இந்திய வரைபடத்தில் அவர்கள் ஆண்ட பகுதிகளை குறித்ததும், யாருக்கு பின் யார் என்று அட்டவணைபடுத்தியதும் நினைவுக்கு வந்து பகிர ஆசை என்றேன்.  நெல்லைத்தமிழன் அவர்கள் 

//நீங்கள் ஆவணப்படுத்தி வைத்திருப்பீங்க , நிச்சியம் பகிருங்கள்'// என்றார். அதுதான்  இந்த  பதிவு பிறந்த கதை.

செவ்வாய், 21 ஜனவரி, 2025

கோவை பழனி ஆண்டவர் திருக்கோயில்




கோவை   பழனியாண்டவர் 




நவம்பர் 20 ம் தேதி மகனுடன் கோவை போய் இருந்தோம்.  உறவினர்கள் வீடு, மற்றும்   சில கோவில்கள் போய் வந்தோம்.
அதில்  கோவை பழனி என்ற இடத்திற்கு அழைத்து போனார்கள் .  (மகனின் சித்தப்பா  குடும்பத்தினருடன் சென்று வந்தோம்) இன்று தை செவ்வாய் என்பதால் இந்த  முருகன் ஆலயம் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
கோவையில்  கண்ணம்பாளையம்  என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்து இருக்கிறது.