திங்கள், 27 அக்டோபர், 2025

வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா



கந்த சஷ்டி சிறப்பு பதிவாக    தொடர்  பதிவு செய்து கொண்டு

இருக்கிறேன்.  

இன்று   கந்த சஷ்டி - ஆறாம் நாள் 

இன்று ஆறாம் படை வீடு  பழமுதிர்ச்சோலை இடம் பெறுகிறது.  

மதுரை வந்த பின் நிறைய தடவை பழமுதிர்ச்சோலை முருகனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது,  ஆங்கில புத்தாண்டு, மற்றும் கிருத்திகை தோறும் தரிசனம் செய்து வருவோம்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

திருத்தணி முருகா தென்னவர் தலைவா !


     திருத்தணி   சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன்   - நன்றி கூகுள்


குன்றுதோறாடலில் இந்த திருத்தணிகை

முருகம்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணிகை. சுவாமியை  தணிகாச்சலம்  என்றும் அழைப்பர்.



அழகான கோபுரம். நன்றி - கூகுள்



அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத்   தணிக்கும்  இடமாக இந்த தணிகைமலை விளங்குகிறது.

வள்ளியை மணந்த இடம் திருத்தணி

இந்த பதிவில் திருத்தணிகை திருப்புகழ் இடம்பெறுகிறது.

இதற்கு முந்திய பதிவுகள்

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் -கந்த சஷ்டி முதல் நாள் பதிவு

திருப்பரங்குன்றம் திருப்புகழ் கந்த சஷ்டி  - இரண்டாம் நாள்  நாள் பதிவு

வேலை வணங்குவது எமக்கு  வேலை - மூன்றாம்  நாள்  பதிவு

சுவாமிமலை வாழும் குருநாதா சரணம் !-  நான்காம் நாள் பதிவு

சனி, 25 அக்டோபர், 2025

சுவாமிமலை வாழும் குருநாதா சரணம் !



சுவாமி மலை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் - கந்த சஷ்டி இராண்டாம் நாள் பதிவு


வேலை வணங்குவது எமக்கு வேலை  - கந்த சஷ்டி   மூன்றாம் நாள்   பதிவு 


இன்று நான்காம்  நாள் கந்த சஷ்டி விழாவில் சுவாமி மலை திருப்புகழ் இடம் பெறுகிறது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் இந்த கோயில் நான்காம் படை வீடு .

வெள்ளி, 24 அக்டோபர், 2025

வேலை வணங்குவது எமக்கு வேலை


பழனி  மூலவர் தங்கவிமானம்


திருப்பரங்குன்றம் திருப்புகழ் - கந்த சஷ்டி இராண்டாம் நாள் பதிவு

இன்றைய பதிவில் பழனி திருப்புகழ்  இடம்பெறுகிறது.

வியாழன், 23 அக்டோபர், 2025

திருப்பரங்குன்றம் திருப்புகழ்




கந்தசஷ்டி சிறப்பு பதிவாக  நேற்று கந்தசஷ்டி முதல் பதிவாக 

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் கோயில் வந்தது . படிக்காதவர்கள் படிக்கலாம்.  இன்று  கந்த சஷ்டி இரண்டாம் நாள்  இந்த பதிவில்  திருப்பரங்குன்றம் திருப்புகழ்  பாடல்கள் இடம்பெறுகிறது.

புதன், 22 அக்டோபர், 2025

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம்


இந்த ஆண்டு திருசெந்தூர் சுப்பிரமணிய கோயிலில் கந்த சஷ்டி விழா 22.10. 25 ம் தேதி  தொடங்கி  12 நாட்கள் நடை பெற உள்ளது. முதல் 6 நாட்கள்  வரை சஷ்டி  விரதம்.  27 ம் தேதி சூரசம்ஹாரம்  நடைபெறும்.  28 ம் தேதி  முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணமும் அதை அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.  

வாய்ப்பு உள்ளவர்கள் திருச்செந்தூர் போய் முருகனை தரிசனம் செய்யலாம்.

வீட்டிலிருந்தும்  முருகனை சிந்திக்கலாம்.

இந்த பதிவில் கோவை  நீலிக்கோணாம்பாளையம் என்ற இடத்தில்  உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் இடம்பெறுகிறது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்



பட உதவி - கூகுள்

தீபமங்கள ஜோதி நமோ நம!

இனிய தீபாவளி  நல்  வாழ்த்துகள்

உறவினர் , நட்புகள் வந்தால்  (வீட்டு முறைப்படி)  சாப்பாடு கொண்டு வந்து தரும் இடத்தில் பலகாரங்கள் பாதுஷா , மிச்சர்  ஆர்டர் செய்து வாங்கி கொண்டேன்.