நள்ளிரவில் மாட்டுதொழுவமதில் பிறந்த பாலகனை கொண்டாடும் பண்டிகை
பேரன் கிறிஸ்தும்ஸூக்கு தயார் செய்த அற்புத நகரம்
உலகம் முழுவதும் உள்ள கிறித்துவ மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நல் வாழ்த்துகள்.
ஏழை எளிய மக்களுக்கு, குழந்தைகளுக்கு மற்றும் உற்றார் உறவுகள், நட்புகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சி படுத்தும் நாளாக, சாண்டாகிளாஸ் வருகையை எதிர்பார்க்கும் நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
ஏசு பாலனை வரவேற்க வீடுகளில் வண்ணவிளக்கு ,மற்றும் நட்சத்திரம்
தொங்கவிடுவது , குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்காரம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை. மதசார்பற்ற பண்டிகையாக இப்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் மகன், மகள் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ்மரம் மற்றும் பாடல்கள் இடம் பெறுகிறது.



